Jump to content

குவாட் உச்சி மாநாட்டை ஏற்று நடத்தும் அமெரிக்கா


ஏராளன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், செப்டம்பர் 21ஆம் திகதி, ‘குவாட்’ எனப்படும் நான்கு நாடுகள் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு இடையிலான உச்சநிலை மாநாட்டை ஏற்று நடத்தவிருக்கிறார்.

டெலவேர் நகரில் இந்த மாநாடு நடைபெறும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது.

அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் ‘குவாட்’ கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ளன.

நான்காவது முறையாக நடைபெறும் இந்த மாநாடு உத்யோகபூர்வ ஒருங்கிணைப்பு, தடையற்ற, வெளிப்படையான இந்தோ – பசிஃபிக் வட்டாரம் குறித்த ஒருமித்த கருத்து ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என்று கூறப்பட்டது.

அவுஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோரை வரவேற்க அமெரிக்க ஜனாதிபதி ஆவலாக இருப்பதாக வெள்ளை மாளிகை அறிக்கை குறிப்பிட்டது.

‘குவாட்’ தலைவர்கள் நேரடியாகக் கலந்துகொள்ளும் இந்த மாநாட்டை பைடன் ஏற்று நடத்துவது இதுவே முதல்முறை. அவர்களுடனான தமது ஆழமான உறவுகளையும் ‘குவாட்’ அமைப்பின் முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கும் வகையில் அவர் இந்த மாநாட்டை ஏற்றுநடத்துவார் என்று வெள்ளை மாளிகை அறிக்கை கூறியது.

சுகாதாரப் பாதுகாப்பு, இயற்கைப் பேரிடர்களைக் கையாளுதல், கடல்துறைப் பாதுகாப்பு, உயர்தர உள்கட்டமைப்பு, பருவநிலை மாற்றமும் பசுமை எரிசக்தியும், இணையப் பாதுகாப்பு போன்றவற்றைக் குறித்துத் தலைவர்கள் இந்த உச்சநிலை மாநாட்டில் கலந்துரையாடுவர் எனக் கூறப்பட்டது.

அடுத்த ‘குவாட்’ உச்சநிலை மாநாட்டை இந்தியா ஏற்று நடத்தும்.

https://thinakkural.lk/article/309411

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த குவாட் கூட்டமைப்பை மறக்கவே முடியாது. சிவாஜிலிங்கம் ஒரு தடவை இந்த குவாட் கூட்டமைப்பிடம் தான் சில கோரிக்கைகளை முன் வைப்பதாக ஒரு பேச்சில் சொல்லியிருந்தார். இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு, சர்வதேச விசாரணை போன்ற கோரிக்கைகள்.

'நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்..........' என்ற வடிவேலு மீம்ஸும் குவாட்டுடன் சேர்ந்து மனதில் நிற்கின்றது........🤣.

 

spacer.png

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எல்லோருக்கும் உங்கள் கருத்துக்கும், அது பொருத்தமோ பொருத்தம் இல்லா விட்டாலும் , வரலாற்றையும் உண்மையையும் சிந்திக்கா விட்டாலும், எனது நன்றிகள் ! ஒரு தொடக்கம், பல  கருத்து, கட்டாயம் யாரோ சிலரை சிந்திக்க , திரும்பி பார்க்க ஒரு முறையாவது வைக்கும்!!  மீண்டும் நன்றிகள் எல்லோருக்கும் !!!
    • தேர்தல் வாக்குறுதிகளைப் பார்க்கிலும் வரலாறே முக்கியம் எம்.எஸ்.எம்.ஐயூப் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் 38 வேட்பாளர்கள் (கடந்த 22 ஆம் திகதி காலஞ்சென்ற டொக்டர் ஐ.எம். இல்யாசைத் தவிர) போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் அவர்களில் பெரும்பாலானோர் இது வரை ஒரு பிரசார கூட்டமேனும் நடத்தவில்லை எனத் தெரிய வந்துள்ளது. தெற்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட சர்வஜன கட்சியின் வேட்பாளர் திலித் ஜயவீர ஆகியோரும் வடக்கில் தமிழ் பொது வேட்பாளர் பி.அரியநேத்திரனும் மட்டுமே பிரசார கூட்டங்களை நடத்துவதாக தெரிகிறது. மேலும் சில வேட்பாளர்கள் தாமும் களத்தில் இருப்பதைக் காட்டுவதற்காக ஏதாவது செய்கிறார்கள். இதேவேளை இவ்வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களையும் வெளியிட்டு இருக்கிறார்கள். ஒருபோதும் இல்லாதவாறு இம் முறை இந்த தேர்தல் விஞ்ஞாபனங்களில் பொருளாதார பிரச்சினையே குறிப்பாக பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வது எவ்வாறு என்பதே முன்னுரிமை பெற்றுள்ளது. தற்போதைய் பொருளாதார நெருக்கடியே அதற்கான காரணமாகும். இந்த விடயத்தில் மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினை என்னவென்றால் தேர்தல் விஞ்ஞாபனங்கள் என்று முன்வைக்கப்பட்டுள்ள வாக்குறுதி பட்டியல்களை எவ்வாறு நம்பவுது என்பதேயாகும். ஏனெனில் பல தசாப்தங்களாக ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல்வாதிகள் வழங்கிய வாக்குறுதிகளை அவர்கள் பதவிக்கு வந்து நிறைவேற்றவில்லை. அல்லது அவர்கள் ஒருசில வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கலாம். ஆனால் அவர்களது வாக்குறுதிகளின் பொதுவான நோக்கமான வளமான வாழ்க்கை என்பதற்கு எதிராகவே அவர்கள் பதவிக்கு வந்து செயற்பட்டுள்ளனர். 1970 ஆண்டுக்கு பின்னரான 45 ஆண்டு கால வரலாற்றை எடுத்துக் கொண்டால் மக்கள் எவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. 1960 களில் நாட்டில் பெரும்பான்மையான ஏழைகளுக்கு வாரமொரு முறை ஒரு நபருக்கு இரண்டு கொத்து (சுமார் ஒரு கிலோ) வீதம் அரிசி மானிய விலைக்கு வழங்கப்பட்டு வந்தது. 1965 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த பிரதமர் டட்லி சேனாநாயக்கவின் அரசாங்கம் அதில் ஒரு கொத்து அரிசியை மட்டும் இலவசமாக வழங்கி மற்றைய ஒரு கொத்து மானிய அரிசியை இரத்துச் செய்தது. இது பெரும்பாலான மக்களை வெகுவாக பாதித்தது. 1970 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினதும் அதன் தலைமையில் போட்டியிட்ட ஐக்கிய முன்னணி என்ற கூட்டணியினதும் தலைவியான சிறிமா பண்டாரநாயக்க 'சந்திர மண்டலத்திலிருந்தேனும்' கொண்டு வந்து முன்னர் போல் இரண்டு கொத்து அரிசியை மானிய விலையில் வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்தார். இது இலங்கையின் தெர்தல் வரவாற்றில் முக்கிய வாக்குறுதியொன்றாக இன்னமும் பேசப்படுகிறது. ஐக்கிய முன்னணி அத்தேர்தலில் வாரலாற்றில் முதன்முறையாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் பெற்று பதவிக்கு வந்த போதிலும் அவ்வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. சிறிமா பண்டாரநாயக்கவின் அந்த ஆட்சிக் காலத்தில் நாட்டில் வiலாறு காணாத உனவுப் பஞ்சமும் ஏற்பட்டது. எனவே 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இந்த வாக்குறுதி மீறலை கடுமையாக விமர்சித்த ஐக்கிய தேசிய கட்சி தாம் பதவிக்கு வந்தால் வாரத்துக்கு ஒரு நபருக்கு எட்டு இறாத்தல் (அக்காலத்தில் இலங்கையில் மெற்றிக் அளவீட்டு முறை அமுலில் இருக்கவில்லை) வீதம் தானியம் மானிய விலையில் வழங்குவோம் என்று வாக்குறுதியளித்தது. ஐதேக அத்தேர்தலில் ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்துடன் பதவிக்கு வந்தது. ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. மாறாக, ஐதேக பொதுத் தேர்தலை நடத்தர்து தொடரந்து 17 வருடங்களாக மோசமான கொடுங்கொள் அட்சியொன்றை நடத்தியது. எனவே வயிற்றுப் பசியைப் பார்க்கிலும் ஜனநாயக உரமைகள் முன்னிலை பெற்றது. அதன் விளைவாக 1994 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது ஸ்ரீலசுக உள்ளிட்ட பொதுஜன ஐக்கிய முன்னணி என்ற கூட்டணி நிறைவேற்று ஜனாதிபதி முறைறை ஒழிப்பதை தமது முதன்மை வாக்குறுதியாக முன்வைத்தது. 62 வீத வாக்குகளைப் பெற்று பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைவி சந்திரிகா குமாரதுங்க அத்தேர்தலில் ஜனாதிபதியானார். ஜனாதிபதித் தேர்தலொன்றில் அந்தளவு மக்கள் ஆதரவு பெற்றவர் சந்திரிகா மட்டுமே. எனினும் அவர் தமது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. 1999 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் அவர் அதே வாக்குறுதியை வழங்கினார். ஆயினும் அதனை நிறைவேற்றவும் இல்லை அதற்கான நாடாளுமன்ற பெரும்பான்மை அவரிடம் இருக்கவும் இல்லை. அதனை அடுத்து 2005 மற்றும் 2010 ஆம் ஜனாதிபதரித் தேர்தல்களின் போது மஹிந்த ராஜபக்ஷவும் இதே வாக்குறுதியை வழங்கினார். 2010 ஆம் ஆண்டு அதற்காக அவரது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருந்தும் அவர் அதனை நிறைவேற்றாது தமது அதிகாரங்களை மேலும் அதிகரித்துக்கொள்ளும் வகையில் அந்த பெரும்பான்மை பலத்தை பாவித்தார். இவ்வாறே 2015 ஆம் ஆண்டு நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதாக மைத்திரிபால சிறிசேனவும், வளமான நாட்டை (சௌபாக்கியயே தெக்ம) உருவாக்குவதாக 2019 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ஷவும் வாக்குறுதியளித்தனர். இவ்வாறு தொடர்ந்து பல தலைவர்கள் வாக்றுதிகளை வழங்கி இறுதியில் 2022 ஆம் ஆண்டு நாடு வங்குரோத்து நிலையை அடைந்தது. இந்த வரலாற்றை மறந்து தேர்தல் விஞ்ஞாபனங்களை நம்புவதா என்ற கேள்வி மக்கள் முன் உள்ளது. இன்றைய ஜனாதிபதித் தேர்தல் களத்தில் இருக்கும் பிரதான கடசிகளில் ஐதேகவின் வரலாறும் ஐக்கிய மக்கள் சக்தியின் வரலாறும் ஒன்றாகும். ஏனெனில் 2020 ஆண்டிலேயே ஐக்கிய மக்கள் சக்தி ஐதேகவிலிருந்து பிரிந்து சென்றது. அந்தப் பிளவும் கொள்கை ரீதியிலான வேறுபாடுகள் காரணமாக ஏற்படவில்லை. அது கட்சித் தலைமை பதவிக்காக ரனிலுக்கும் சஜித்துக்கும்; இடையே ஏற்பட்ட பலப் போரின் விளைவாகும். எனவே ஐதேகவின் கடந்த காலத்துக்கான பொறுப்பிலிருந்து தற்போதைய ஐதேகவுக்கோ ஐசமவுக்கோ தப்பிவிட முடியாது. அக்கட்சி இனப் பிரச்சினையைப் பற்றி இன்று எதைக் கூறினாலும் பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்கக் கூடிய நிலையில் இருந்த அப் பிரச்சினையை பாரிய யுத்தமாக மாற்ற ஜே.ஆர். ஜயவர்தனவின் தலைமையிலான ஐதேக அரசாங்கத்தின் கொடிய அடக்குமுறையே காரணமாகியது. சஜித்தின் தந்தையான ரணசிங்க பிரேமதாசவும் ரணில் விக்ரமசிங்கவும் அவ்வரசாங்கத்தின் முக்கிய தலைவர்களாக இருந்தனர். அவ்வரசாங்கம் உரிய முறையில் நடவடிக்கை எடுத்திருந்தால். 1977, 1981 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்திருக்கலாம். 1983 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் திகதி புலிகள் 13 இராணுவத்தினரை கொன்ற போது அவர்களில் உடல்களை அவரவரது கிராமங்களுக்கு அனுப்பாது அவற்றை கொழும்புக்கு கொண்டு வந்தமை பிரச்சினையை ஊதிப்பெருக்கி பெரும்பான்மை மக்களை தமிழர்களுக்கு எதிராக தூண்டிவிட்டதற்குச் சமமாகும். அதன் விளைவை நாடு பின்னர் அனுபவித்தது. இந்தப் போரின் போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை எங்கும் அறிக்கையிடப்படவில்லை. சில அறிக்கைகளின் படி இவ்வெண்ணிக்கை ஒரு இலட்சத்துக்கும் அதிகமாகும். அதேபோல் ஜனநாயக நீரோட்டத்தில் இருந்த மக்கள் விடுதலை முன்னணியை எவ்வித ஆதாரமுமின்றி கருப்பு ஜூலை கலவரத்தோடு தொடர்புபடுத்தி தடை செய்து அதனை மீண்டும் ஆயுதம் ஏந்தும் நிலைக்கு தள்ளியதும் ஐதேகவேயாகும். பின்னர் அக்கிளர்ச்சியை அடக்குவதில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 60,000க்கும் அதிகமாகும் என கூறப்படுகிறது. 1989 ஆம் ஆண்டு ரனசிங்க பிரேமதாச ஜனாதிபதியாக பதவியேற்றன் பின்னர் நாட்டில் பல பகுதிகளில் வீதிகளில் பிணங்கள் சிதறிக் கிடந்த காட்சி அக்காலத்தில் பத்திரிகைகளில் காணக்கூடியதாக இருந்தது. பட்டலந்த, எலியகந்த போன்ற சித்திர வதை முகாம்களை  பற்றி எத்தனையோ கட்டுரைகள் வெளிவந்துள்ளன. ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஆட்சியின் போது சுதந்திர வர்த்தக வலயங்கள், பாரிய நீர் தேக்கங்கள் அமைக்கப்பட்ட போதிலும் அதிகரித்து வந்த கடன் சுமைக்கு அது எவ்வகையிலும் பரிகாரம் ஆகவில்லை. அதன் பின்னர் 2021 ஆம் ஆண்டும் 2015 ஆம் ஆண்டும் ஐதேக ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஐதேக ஆட்சி அமைத்தது. சஜித்தும் அரசாங்கங்களில் அமைச்சராக இருந்தார். இன்று போலவே வாக்குறுதிகளை வழங்கி அவ்வாறு பதவிக்கு வந்தாலும் அபிவிருத்தி என்று எதுவுமே நடைபெறவில்லை. அக்காலத்திலும் அதிகரித்து வந்த கடன்களே 2022 ஆம் ஆண்டு நாட்டை பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளியது. பொதுஜன முன்னணியின் வரலாற்றைப் பற்றி இந்hநட்டு சிறுபான்மை மக்களுக்கு புதிதாக எதையும் கூறத் தேவையில்லை. மக்கள் விடுதலை முன்னணி சந்திரிக்காவின் காலத்தில் 14 மாதங்கள் அமைச்சுப் பதவிகளை ஏற்று முன்மாதிரியாக நடந்து காட்டியுள்ளது. வன்முறை அரசியலை கைவிட்டு சுமார் 35 ஆண்டுகளாக ஜனநாயக அரசியலிலும் முன்மாதிரியாக இருந்து காட்டியுள்ளது. தமது பழைய பிழையான நிலைப்பாடுகளையும் படிப்படியாக கைவிட்டு வந்துள்ளது. ஆயினும் அக்கட்சி பூரண அதிகாரத்துடன் இது வரை ஆட்சியில் இருந்ததில்லை. அவ்வாறான நிலையில் நிலைமை என்னவாகும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தேர்தல்-வாக்குறுதிகளைப்-பார்க்கிலும்-வரலாறே-முக்கியம்/91-343898
    • புட்டினின்... இனிப்பான செய்தியை பதிந்த 16 மணித்தியாலத்துக்கு இடையில்... 46 கருத்துக்களும், 1000 பார்வையாளர்களும் வந்து பிரித்து மேய்ந்து விட்டார்கள். 😂 ஜனாதிபதி தேர்தல்... அமளிக்குள், மக்களுக்கு கிளுகிளுப்பும் தேவைப்பட்டிருக்குது என்றால்... பாருங்கோவன். 🤣
    • பிரதான வேட்பாளர்களின் இறுதி பிரசாரக் கூட்டங்கள் கொழும்பில் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரக் காலம் இன்று (18) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ள நிலையில், பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க,சஜித் பிரேமதாச, அனுரகுமார திசாநாயக்க,  நாமல் ராஜபக்ஷ,  திலித் ஜயவீர, நுவன் போககே ஆகியோர் தலைநகரில் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை இன்று நடத்தவுள்ளனர். இதனால் கொழும்பு நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின்  தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கொழும்பு கிரான்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொஸ்கஸ் சந்தியில் இன்று பிற்பகல் 2 மணிக்க இடம்பெறவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின்  தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பஞ்சிகாவத்தை வீதி டவர் மண்டபத்துக்கு முன்பாக இன்று பி.ப. 2 மணிக்கு இடம்பெறவுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்கவின்  தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுகேகொட ஆனந்த சமரகோன் மைதானத்தில் இன்று பி.பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின்  தேர்தல் பிரச்சாரக் கூட்டம் பிலியந்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோமவீர சந்திரசிறி மைதானத்தில் இன்று பி.ப 2 மணிக்கு இடம்பெறவுள்ளது. சர்வஜன அதிகார ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று  பி.ப. 2 மணிக்கு கொட்டாவ பிரதான பேருந்து நிலையத்தில் இடம்பெறவுள்ளது. மக்கள் போராட்டம் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நுவன் போபகேவின்  தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கிரிபத்கொட பகுதியில் இன்று பி.ப.3 மணிக்கு இடம்பெறவுள்ளது.   http://www.samakalam.com/பிரதான-வேட்பாளர்களின்-இற/    
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.