Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(புருஜோத்தமன் தங்கமயில்)

ariyam%20suma%20ranil%20shri.jpg

“...தாயகத்தில் இனியும் சம்பந்தன் காலத்து அரசியலை அனுமதிக்க முடியாது. முள்ளிவாய்க்கால் முடிவுகளின் பின்னர் தாயக அரசியல் – சமூக செயற்பாடுகளில் புலம்பெயர் தரப்புக்கள் ஆளுமை செலுத்த விரும்பின; அதாவது, முடிவுகளை எடுக்கும் தரப்புக்களாக இருக்க நினைத்தன. ஆனால், சம்பந்தனும் சுமந்திரனும் அதற்கு பெரும் தடையாக இருந்தனர். அவர்களின் நிலைப்பாடுகளை தாண்டி தாயகத்தில் எதுவும் செய்ய முடியாத நிலை இருந்தது. ஆனால், சம்பந்தனின் மறைவுக்குப் பின்னர், தாயகத்திலுள்ள அரசியல்வாதிகளை இலகுவாக கையாள முடிகின்றது. அவர்கள் ஆளாளுக்கு ஒவ்வொரு பக்கமாக பிரிந்து நிற்கிறார்கள். இப்போது, தாயக அரசியலை சுமந்திரன் ‘ஆதரவு – எதிர்’ அரசியலாக மாற்றுவதன் மூலம், இலகுவாக பிரித்தாளும் நிலை இருக்கின்றது. அதனால்தான், தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரத்தில் பெரும் அணியொன்றை கட்ட முடிந்தது. புலம்பெயர் தேசத்தில் தங்களுக்குள் அடித்துக் கொள்ளும் தரப்பினரும் கூட, பொது வேட்பாளர் விடயத்தில் ஒன்றாகவே நிற்கின்றனர். அதன்மூலம், சுமந்திரனுக்கு எதிரான அரசியலை பலப்படுத்தி, தங்களின் ஆளுமையை தாயகத்தில் செலுத்தலாம் என்று நம்புகின்றன...” என்று கனடாவில் வதியும் (தமிழ்த் தேசியச் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபடும்) மூத்தவர் ஒருவர் இந்தப் பத்தியாளரிடம் குறிப்பிட்டார். 

 

ஓர் அரசியல் செயற்பாட்டினை முன்னெடுக்க நினைக்கும் தரப்பினர், தங்களின் தீர்க்கமான இலக்குகள் தொடர்பில் மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும். அதுதான், அந்த அரசியல் செயற்பாடு – அதன் செல்நெறி தொடர்பில் மக்களை வழிப்படுத்தும். ஆனால், தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பினரும், அவர்களின் ஜனாதிபதி வேட்பாளரும் அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் எந்தவித தெளிவூட்டல்களையும் செய்கிறார்கள் இல்லை. மாறாக, தனிநபர் ஒருவருக்கு எதிரான அரசியலை கட்டிக் கூட்டி முன்னெடுக்கும் வேலைகளையே முன்னெடுத்து வருகின்றனர். பிரச்சாரக் கூட்டங்களிலும் ஊடகங்களிலும் வழங்கப்படும் பேட்டிகளிலும் கூட பொதுக் கட்டமைப்பின் கட்சியினரும், பேச்சாளர்களும், பத்தியாளர்களும் அதனையே பிரதிபலித்து வருகின்றனர். கிட்டத்தட்ட தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் சுமந்திரனுக்கு எதிராக திரளும் தரப்பினரின் கருவியாக மாறிவிட்டது. தேர்தல் பிரச்சார மேடைகளில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஏன் அவசியம் என்று பேசுவதைக் காட்டிலும், சுமந்திரனுக்கு எதிரான விமர்சனங்களே அதிகம் முன்வைக்கப்படுகின்றன. ஏற்கனவே, பொதுக் கட்டமைப்பின் பேச்சாளர் ஒருவர், தன்னுடைய பத்தியொன்றில் ‘எம்.ஜி.ஆர் – நம்பியார்’ திரை பிம்பத்தினை பிரதிபலிக்கும் ‘நாயக – வில்லன்’  கட்டத்தினை ‘பொது வேட்பாளர் எதிர் சுமந்திரன்’ நிலையோடு நண்பர் ஒருவர்  ஒப்பிட்டு கூறியதாக எழுதியிருந்தார்.  

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த வேண்டும் என்ற விடயத்தை முதலில் அரங்கிற்கு தூக்கி வந்தவர்கள் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியினர். தமிழரசுக் கட்சியினர், ரெலோவையும் புளொட்டையும் வீட்டுச் சின்னத்தில் இனியும் அனுமதிக்க முடியாது என்ற நிலைப்பாட்டை எடுத்த தருணத்தில், புதிய அரசியல் கூட்டொன்றை  அவர்கள் கட்டினார்கள். அதில், ஏற்கனவே தமிழரசுக் கட்சியினால் கூட்டமைப்புக்குள் இருந்து வெளித்தள்ளப்பட்ட ஈபிஆர்எல்எப்பும் இணைந்து கொண்டது. அத்தோடு ஜனநாயகப் போராளிகள், ஏற்கனவே ரெலோவில் இருந்து பிரிந்து சென்ற சிறீகாந்தா – சிவாஜிலிங்கம் அணியும் இணைந்தது. இந்தப் புதிய கூட்டின் மீது முன்னாள் ஆயுதக் குழுவினர் என்ற அடையாளம் இருந்தது. அந்தப் புதிய கூட்டின் தலைமையை எதிர்பார்த்த விக்னேஸ்வரன், அது கிடைக்காது என்ற நிலை வந்த போது, முன்னாள் ஆயுதக் குழுவினரோடு இணைந்து இயங்க முடியாது என்று கூறிவிட்டு விலகினார். முன்னாள் ஆயுதக் குழுவினர் என்ற அடையாளத்தை வைத்துக் கொண்டு தேர்தல் அரசியலில் கோலோச்சுவது அவ்வளவுக்கு சாத்தியமில்லை என்பது, அவர்களுக்கு நன்கு தெரியும். அதன் போக்கில், தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயத்தை அவர்கள் முன்மொழிந்தார்கள். அதன்மூலம் தமிழரசுக் கட்சிக்கு எதிரான அனைத்துத் தரப்புக்களையும் ஓரணியில் திரட்ட முடியும் என்று நம்பினார்கள். அது, காலப்போக்கில் நடந்தும் விட்டது.

பொதுக் கட்டமைப்பின் திரட்சியை உறுதி செய்ததில் பல காரணிகள் தாக்கம் செலுத்துகின்றன. அதில், முதலாவது ரணிலின் ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக் கனவு. ராஜபக்ஷக்களுக்கு எதிராக ‘அரகலய’ வெற்றிபெற்றதும், ரணில் ஜனாதிபதியானார். அவர் ஜனாதிபதியானதும், அடுத்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அக்கறையோடு செயற்படத் தொடங்கினார். அதற்காக அவர் கட்சிகளைப் பிரித்தும் சேர்த்தும், அணிகளை புதிதாக கட்டத் தொடங்கினார். அதற்காக கொடுக்கல் – வாங்கல்களை தாராளமாகக் செய்தார். இன்றளவும் அதனை தயங்காமல் செய்கிறார். அதில், தமிழ்த் தேசியக் கட்சிகளும், சில பாராளுமன்ற உறுப்பினர்களும்கூட சேர்ந்து கொண்டுவிட்டார்கள். அதன் ஒருகட்டமாகவே, தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை முன்வைக்க வேண்டும் என்று ரணில் தங்களுக்கு அழுத்தம் வழங்கியதாக பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களில் மூத்தவர் ‘ஒருவர்’ தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியிருக்கிறார்.  தற்போது பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் முன்னாள் ஆயுத இயக்கங்களின் தலைவர்களில் அவர்தான் மூத்தவர். பொது வேட்பாளர் எண்ணக்கருவின் சூத்திரதாரி ரணில் என்பது அவரின் வாக்குமூலம்.

தமிழரசுக் கட்சிக்குள் எழுந்த தலைமைத்துவப் போட்டியும் அதன் பின்னரான உட்பிளவும், பொதுக் கட்டமைப்பினரை பலப்படுத்துவதில் இரண்டாவதாக தாக்கம் செலுத்தியது. தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவ தேர்வில் சிறீதரன் வெற்றிபெற்றாலும், அவரினால் செயலாளர் உள்ளிட்ட மத்திய குழுத் தெரிவில் எதிர்பார்த்த வெற்றியை அடைய முடிவில்லை. அதனால், அவர் பொதுக் குழுவின் தீர்மானத்துக்கு எதிராக கொல்லைப்புற தீர்மானங்களின் வழியாக தெரிவுகளை மாற்றியமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். ஆனால், அதனை நீதிமன்றங்களினூடாக தடுத்து நிறுத்திவிட்டார்கள். அத்தோடு, பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வே, கட்சியின் யாப்புக்கு எதிரானது, அதனால் புதிய தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இதனால், தமிழரசுக் கட்சியின் பிளவு அதிகரித்தது. இப்போதுள்ள கட்சியின் மத்திய குழுவை சுமந்திரன் ஆளுமை செலுத்துகின்றார் என்பது வெளிப்படையானது. அப்படியான கட்டத்தில், கட்சியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான கருவியாக அல்லது எதிர்காலத்தில் புதிய பயணத்துக்கான ஏற்பாடுகளின் போக்கில் பொது வேட்பாளர் விடயத்தினை சிறீதரன் கையாள்கிறார். அதுதான், தமிழரசுக் கட்சிக்குள் இருந்தே பொது வேட்பாளரை தேர்வு செய்வதற்கும், அதற்கான ஒத்துழைப்பை வழங்க ஒரு தரப்பினரையும் கட்சிக்குள் இருந்தே திரட்டவும் முடிந்திருக்கின்றது. பொதுக்கட்டமைப்பினரையோ, பொது வேட்பாளரையோ தமிழரசுக் கட்சி ஆரம்பத்தில் இருந்து எதிர்த்து வந்தது. அது, சுமந்திரனின் நிலைப்பாடுகளை பிரதிபலிப்பதாகவும் இருந்தது. அப்படியான கட்டத்தில் சுமந்திரனுக்கு எதிரான அணியைப் பலப்படுத்தும் கட்டத்தில் இணைய விரும்பிய தமிழரசுக்குள் இருக்கும் குழுவினர், பொதுக்கட்டமைப்பினை பலப்படுத்தினர்.

மூன்றாவது, ஏற்கனவே தேர்தல்களில் தோற்றவர்களும் அடுத்த தேர்தலில் எப்படி வெற்றிபெறுவது என்ற சிந்தனையோடு இருந்த தரப்பினருக்கும் பொது வேட்பாளர் விடயத்தினை இறுகப்பற்றினர். அதனால், பொதுக் கட்டமைப்பை அவர்களும் வரிந்து கொண்டார்கள். குறிப்பாக, முன்னாள் ஆயுத இயக்கங்களை, அவர்களின் இரத்தக்கறையை தன்னோடு பூசிக்கொள்ள முடியாது என்று கடந்த காலங்களில் வாதிட்ட விக்னேஸ்வரன் போன்றோர், பொதுக் கட்டமைப்புக்குள் அவர்களோடு கூடிக்குலாவும் நிலைக்கு வரவும் அது வித்திட்டது.

நான்காவது, தமிழ்த் தேசிய அரசியலில் ஆளுமை செலுத்த விரும்பிய மூத்த பத்தியாளர்கள் குழாத்தினர். தமிழ்த் தேசிய அரசியல் தங்களைக் கேட்டுத்தான்  செயற்பட வேண்டும். அதற்கு இணங்காத தரப்பினர், தமிழ்த் தேசிய அரசியலில் நீடித்திருப்பதற்கு இலாயக்கற்றவர்கள் என்பது, இந்த பத்தியாளர்களில் சிலரின் நிலைப்பாடு. அவர்களின் அரசியல் கொள்கை- கோட்பாடு – செல்நெறியில் பாரிய முரண்பாடுகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, சிலர் 13வது திருத்தச் சட்டத்தை தமிழ் மக்களின் அரசியல் தீர்வாக ஏற்க வேண்டும் என்று வாதிடுபவர்கள். இன்னும் சிலரோ, பொது வாக்கெடுப்பினூடாக சுயாதீன தேசம் அமைக்கப்பட வேண்டும் என்று எழுதுபவர்கள். (அதற்கான செல்நெறி – ஒழுங்கு பற்றி அவர்கள் ஒருபோதும் தெளிவுபடுத்தவில்லை). இன்னும் சிலரோ, எந்த அரசியல் நிலைப்பாட்டினை முன்னெடுப்பது என்று தெரியாமல் குழம்பிக் கொள்பவர்கள். ஆனால், இவர்கள் எல்வோரும் சம்பந்தன்– சுமந்திரன் எதிர்ப்புப் புள்ளியில் ஒருங்கிணைவார்கள்.

ஐந்தாவது, தாயக அரசியலில் ஆளுமை செலுத்தி முடிவுகளை எடுக்க நினைக்கும் புலம்பெயர் அமைப்புக்களும், தனி நபர்களும், சில வர்த்தகர்களும். இவர்களுக்குள்ளும் பல உள்முரண்பாடுகள் உண்டு. தாயக அரசியலில் ஆளுமை செலுத்துவதை சில தரப்பினர் ஒரு வரட்டு வாதத்துக்காக முன்னெடுக்கிறார்கள். அங்கும், சம்பந்தன் – சுமந்திரன் தங்களின் எதிர்பார்ப்பை ஒருபோதும் கண்டுகொண்டதில்லை என்ற எரிச்சல் பிரதானமானது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக கஜேந்திரகுமார் தலைமையிலான ‘முன்னணி’யை மாற்றுச் சக்தியாக கட்டமைக்க நினைத்தார்கள். அது தோற்றுப்போன தருணத்தில் தமிழ் மக்கள் பேரவை ஊடாக விக்னேஸ்வரனை மாற்றுத் தலைவராக முன்னிறுத்தினார்கள். ஜனவசியத் தலைவர் என்று சித்தரித்து கட்டுரைகள் எல்லாம் எழுதப்பட்டன. ஆனால், அதுவும் தோற்றுப்போனது. இப்போது பொதுக்கட்டமைப்பின் பின்னால் திரண்டிருக்கிறார்கள். புலம்பெயர் வர்த்தகர்கள் சிலர் தங்களின் வர்த்தக நடவடிக்கைகளுக்காக தமிழ்த் தேசியக் கட்சிகளை தங்களின் கைப்பாவையாக ஆட்டி வைக்க நினைக்கிறார்கள். அதற்கு இணங்காத சம்பந்தன் – சுமந்திரனை கடந்த பொதுத் தேர்தலிலேயே எப்படியாவது அகற்றிவிட வேண்டும் என்று துடியாய் துடித்தார்கள். கோடிகளில் பணத்தினை இறக்கி வேலையும் செய்தார்கள். ஆனால், அது சாத்தியமாகவில்லை. அப்படியான நிலையில், வேண்டா வெறுப்பாகவேனும் பொதுக் கட்டமைப்பின் பின்னால் அவர்களும் இப்போது நிற்கிறார்கள்.

மேற்கண்ட ஐந்து காரணிகளில் வெளிப்படுவது ரணிலை வெற்றிபெற வைக்கும் உத்திகளும், சுமந்திரனின் கட்டுப்பாட்டில் இருப்பதாக ‘அவர்கள்’ நம்பும் தமிழ்த் தேசிய அரசியலை தங்களின் கட்டுக்குள் கொண்டுவருவதுமாகும்.

தமிழ்த் தேசிய அரசியலை தங்களின் சுய இலாப நோக்கங்கள், பதவிப் போட்டிகள், வர்த்தக நலன்கள், தன்முனைப்பு (ஈகோ) மனநிலை உள்ளிட்ட காரணிகளுக்காக கையாள முயல்வது என்பது அறமற்ற அரசியல். தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்துக்கு முன்னால் இப்போது திரண்டிருப்பவர்களும், அவர்களின் நடவடிக்கைகளும் நாளுக்கு நாள் அதனையே பிரதிபலிக்கின்றன. இவ்வாறான நிலை, மக்கள் மீட்சியை ஒருபோதும் சாத்தியப்படுத்தாது. தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பினர், தங்களின் அரசியல் இலக்கு என்ன என்பது தொடர்பில் எந்தவித தெளிவுபடுத்தல்களையும் இதுவரை செய்தது இல்லை. அவர்கள் ஆரம்பத்தில், ஜனாதிபதித் தேர்தலை பொது வாக்கெடுப்பாக தமிழ்த் தேசிய அரசியல் களம் கையாள முடியும் என்ற வாதத்தை முன்வைத்தார்கள். ஆனால், அது அபத்தமானது என்ற விடயம் சுட்டிக்காட்டப்பட்டதும், அதனை கைவிட்டார்கள். சர்வதேசத்துக்கு செய்தி சொல்வோம் என்றும் கூறினார்கள். ஆனால், தமிழ் மக்களின் செய்தி என்ன என்பது, கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே குரலில் சொல்லப்பட்டுவிட்டது என்பதும், புதிதாக என்ன செய்தியை சொல்வது என்று கேள்வி எழுப்பியதும், அதனையும் கைவிட்டார்கள். இப்போது, இறுதியாக அவர்கள் எடுத்துக் கொண்டிருப்பது தமிழ்த் தேசிய வாக்குளை ஓரணியில் திரட்டுவது என்ற வாதம்.

தமிழ்த் தேசிய அரசியலில் நம்பிக்கையிழந்துள்ள மக்களை, மீண்டும் நம்பிக்கை அரசியலின் பக்கத்திற்கு நகர்த்துவது என்பது எப்போதும் முக்கியமானது. ஆனால், அந்த நம்பிக்கை அரசியலை எதன் மேல் கட்டமைக்கிறோம் என்ற தெளிவு இருக்க வேண்டும். மேம்போக்கான எந்த அரசியல் அணுகுமுறையும் எதனையும் பெற்றுத் தராது. தமிழ்த் தேசிய வாக்குகளை ஓரணியில் திரட்டுவதற்காக தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தியதாக சொல்லிக் கொள்ளும் பொதுக் கட்டமைப்பினர், தமிழரசுக் கட்சி என்ற பிரதான கட்சிக்குள் இருந்து நபர்களை உடைத்து எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. அது என்ன வகையிலான ஒற்றுமையை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை.

பொது வேட்பாளரை முன்னிறுத்துதல் என்பது அடிப்படையில் ரணிலின் வடக்கு கிழக்கு முகவர்களின் தேர்வாகவும், சுமந்திரனுக்கு எதிரான அரசியலை ஓரணியில் கட்டமைக்கும் நோக்கத்தையுமே இறுதிப்படுத்தியிருக்கின்றது. ஏனெனில், அந்த அணியினரின் நடவடிக்கைகளே அதனை அப்பட்டமாக பிரதிபலிக்கின்றன. கொள்கையும் இலக்குமற்ற ஒருங்கிணைவு என்பது, எந்தவித நல்ல மாற்றங்களையும் ஏற்படுத்தாது. கடந்த காலத்தில் தமிழ் மக்கள் பேரவை, எந்தவித இலக்குமற்று திரட்டப்பட்டு கைவிடப்பட்டு காணாமற்போனது. அது மாதிரியே, ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், பொதுக் கட்டமைப்பினரும் காணாமற்போவார்கள். அப்படியான ஒரு தரப்பினரை நம்பி தமிழ் மக்கள் வாக்களிப்பது என்பது அரசியல் தற்கொலைக்கு ஒப்பானது. தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது ஒரு அபத்தக்கனவு, அதனை நோக்கி திரள்வது 'தேசமாக திரள்வதாக' ஒருபோதும் கொள்ள முடியாது. ஏனெனில், அப்படியான காட்சிகளை பொதுக் கட்டமைப்பினரோ, அதற்குள் இருக்கும் கட்சியினரோ ஒருபோதும் பிரதிபலிக்கவில்லை.

காலைமுரசு பத்திரிகையில் செப்டம்பர் 15, 2024 வெளியான பத்தி.

http://maruthamuraan.blogspot.com/2024/09/blog-post_15.html

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ஸ்தான் பிரச்சனை என்றாகிப்போனது. 

🤣

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு வாக்குப்போடவும் முடியாது, இவர்  நாட்டிலுமில்லை, பிறகு ஏன் இவர் அரற்றுகிறார். நல்லாட்சி அரசாங்கம் அமைக்க வாக்குபோடும்படி மக்களை  கேட்டவர் யார்? எதைபெற்றார்கள் சம்பந்தனும் சுமந்திரனும்? சுமந்திரனுக்கு அன்று ரணில் வேண்டும், இன்று சஜித் வேண்டும் என்றால், மக்கள் என்ன அவரின் அடிமைகளா? அப்படி சுமந்திரன் என்ன பெரிய ராஜதந்திரி, செயல் வீரனா அவருக்கு எதிராக மற்றைய கட்சிகள் ஒன்று திரள? ஒன்றாக இருந்த கட்சிகளை வெளியேற்றினார், அதற்கான காரணங்களை முதலில் அவர்களுக்கு  தெரியப்படுத்தினரா சுமந்திரன்? கட்சிக்குள் இருந்தவர்களை முரண்டு பிடித்து வெளியேற்றியது யார்? இன்று கட்சி நீதிமன்ற படியேறி இருப்பது யாரால்? தங்கள் மேல் பிழையை வைத்துக்கொண்டு, முந்திக்கொண்டு மற்றவர்மேல் குற்றம் சுமத்துவது. இவருக்கு தமிழ் மக்கள் மேல் பாசம் இருந்தால் அவர்களோடு இருந்திருக்க வேண்டும். சுமந்திரன் மக்களோடு இல்லை, அவர்களுக்கு சேவை செய்யவில்லை, இப்போ சிங்களத்தோடு வந்து அவர்களுக்காக வாக்கு கேட்கிறார். மக்கள் ஏன் அவருக்கு செவி மடுக்க வேண்டும்? மக்களுக்கு பணி செய்யாதவர்கள் அவர்களை வாக்கு போடும்படி கேட்க உரிமையில்லை. வயதுக்கேற்ற அனுபவமுமில்லை, பகுத்தறிவுமில்லை. உன் நண்பனைப்பற்றி சொல், நான் உன்னைப்பற்றி சொல்கிறேன் என்பது எவ்வளவு உண்மை. சுமந்திரன், சஜித்துக்கு வாக்கு கேட்கிறார், கனடாக்காரர் ஏதோ சுமந்திரன் தேர்தலில் நிற்பது  போலவும் அதற்கு எதிராக தமிழ் மக்கள் ஒன்று திரளுகின்றனர் என்பது போலவும் கதையளக்கிறார். சுமந்திரன் இது வரையில் எதை செய்து சாதித்து விட்டார்? ஏதோ சிங்களத்துக்கு நாம் வாக்குபோடுவதுபோல் ஆளாளுக்கு துள்ளிக்குதிக்கிறார்கள், சிங்களவனே பேசாமல் இருக்கிறான்.  

  • கருத்துக்கள உறவுகள்

புருசோத்தமன் தங்க மயிலு நல்லா சுமத்திரனுக்கு காவடி எடுத்து ஆடுது .

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவிலேயே சுமந்திரனை பேச விட முடியவில்லை இவரால், சும்மா தனிப்பட்ட விசுவாசத்தை காட்டுகிறார் அவர்.  

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.