Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இமானுவேல் மக்ரோங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் ஐநா பேரவையில் உரையாற்றுகையில் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தார்
5 மணி நேரங்களுக்கு முன்னர்

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவை நிரந்தர உறுப்பினர் ஆக்கவேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வியாழனன்று (செப்டம்பர் 26) நடைபெற்ற ஐ.நா. பேரவையின் 79-வது கூட்டத்தில் மக்ரோங் உரையாற்றினார். பாதுகாப்பு சபையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அப்போது அவர் கோரிக்கை விடுத்தார். பாதுகாப்பு சபையில் இந்தியா, பிரேசில், ஜப்பான் ஆகிய நாடுகளை நிரந்தர உறுப்பினர்களாக ஆக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்கள் தங்கள் சொந்த நலன்களுக்காக ஒருவர் மற்றவரை (முன்மொழிவுகளை) நிறுத்தும் வரை முன்னேறுவது கடினம் என்று மக்ரோங் கூறினார்.

“இங்கே எல்லாம் சரியாக இருக்கிறதா? நான் அப்படி நினைக்கவில்லை. எனவே ஐக்கிய நாடுகள் சபையை பயனுள்ளதாக்க வேண்டும். ஆனால் இதற்கு அதிக உறுப்பினர்களை உருவாக்க வேண்டும். எனவே பாதுகாப்பு சபையின் விரிவாக்கத்தை பிரான்ஸ் ஆதரிக்கிறது,” என்று குறிப்பிட்டார்.

வெளிப்படையான ஆதரவு

“ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா, ஜப்பான், ஜெர்மனி, பிரேசில் ஆகிய நாடுகளை நிரந்தர உறுப்பினர்களாக்க வேண்டும். இதனுடன் ஆப்பிரிக்காவால் பரிந்துரைக்கப்பட்ட ஆப்பிரிக்க கண்டத்தின் இரண்டு நாடுகளையும் அதன் உறுப்பினர்களாக ஆக்க வேண்டும்,” என்று மக்ரோங் கூறினார்.

அடுத்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்டு 80 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆனால் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், மற்றும் அமெரிக்கா மட்டுமே நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன.

 
ஐ.நா., இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஜி-4 நாடுகளின் கூட்டத்தில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்துக்கான கோரிக்கை

இந்தியா உறுப்பினராக உள்ள ஜி-4 நாடுகளின் குழு என்ன கூறியது?

இந்தியா, பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகள் நீண்டகாலமாக பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர் பதவியைக் கோரி வருகின்றன.

இந்த நாடுகளின் அமைப்பான ஜி-4, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தை மீண்டும் கோரியுள்ளது.

இதனுடன் எல்-69 மற்றும் சி-10 நாடுகளின் குழுவும் இதற்கு ஆதரவளித்தன.

நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பேரவையின் 79-வது கூட்டத்தின் பின்னணியில் நடந்த ஜி-4 குழுவின் கூட்டத்தில், ஐ.நா. சபையில் செய்யப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் குறித்து இந்த நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

ஐக்கிய நாடுகள் சபையைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்ட பலதரப்பு அமைப்புகள் எதிர்கொள்ளும் தற்போதைய முக்கியமான சவால்கள் கவனத்தில் கொள்ளப்பட்டதாக இந்தச் சந்திப்பிற்குப் பிறகு இந்த நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த வாரத் தொடக்கத்தில் ஐ.நா-வின் 'எதிர்காலத்திற்கான உச்சி மாநாடு', ஐக்கிய நாடுகள் சபையில் தேவையான சீர்திருத்தங்களுக்கான அழைப்பை வரவேற்றது.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர்களுடன் கூடவே தற்காலிக உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று ஜி-4 நாடுகள் கேட்டுக்கொண்டுள்ளன. இந்த வார தொடக்கத்தில், ஐ.நா-வின் 'எதிர்காலத்திற்கான உச்சி மாநாடு' ஐக்கிய நாடுகள் சபையில் தேவையான சீர்திருத்தங்களுக்கான அழைப்பை வரவேற்றது.

 

தற்காலிக உறுப்பினர்களின் கோரிக்கை

நிரந்தர உறுப்பினர்களுடன், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் தற்காலிக உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும் என்று ஜி-4 நாடுகள் தெரிவித்துள்ளன. இதன் மூலம் வளரும் நாடுகளுடன் கூடவே சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் நாடுகளும் பிரதிநிதித்துவம் பெறமுடியும் என்று அந்த நாடுகள் கூறின.

ஆப்பிரிக்கா, ஆசிய-பசிஃபிக், லத்தீன் அமெரிக்கா, மற்றும் கரீபியன் நாடுகளுக்கு நிரந்தர மற்றும் தற்காலிக உறுப்பினர்கள் பிரிவில் அதிக பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று ஜி-4 நாடுகளின் குழு தெரிவித்துள்ளது.

வியாழனன்று செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் (Saint Vincent and the Grenadines) பிரதமர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எல்-69 நாடுகள் இந்தக் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தின.

இந்தியாவும் எல்- 69 இல் உறுப்பினராக உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளின் சி-10 குழுவும் இந்தக்கோரிக்கையை விடுத்தது.

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

'ஐ.நா. தன்னை புதுபித்துக் கொள்ளவில்லை'

எல்-69 மற்றும் சி-10 ஆகிய நாடுகளின் முதல் கூட்டுக் கூட்டத்தில் இந்தக் கோரிக்கைக்கு கூடுதல் ஆதரவு கிடைத்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ட்வீட் செய்துள்ளார்.

ஜி-20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்துகொண்ட 'பிரேசில் 2024' கூட்டத்தில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்த விஷயத்தை வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் எழுப்பினார்.

"ஐக்கிய நாடுகள் சபை கடந்த காலத்தின் கைதியாகவே உள்ளது. ஆனால் உலகளாவிய தெற்கு (குளோபல் சவுத்) அதன் உண்மையான முக்கியத்துவத்தை விடக் குறைவான முக்கியத்துவம் கொடுக்கும் முறை இந்த அமைப்பில் இனி தொடர முடியாது. ஐக்கிய நாடுகள் சபையின் சீர்திருத்தங்களின் கீழ் இந்த நாடுகளுக்கு நிரந்தர அந்தஸ்து வழங்குவது அத்தியாவசியமாகிவிட்டது,” என்று அவர் குறிப்பிட்டார்.

"இன்றைய உலகம் புத்திசாலித்தனமாகவும், ஒன்றோடொன்று இணைக்கப்பட்டதாகவும், பல் துருவ முறையிலும் உருவாகி வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டதிலிருந்து அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனாலும் கூட அது கடந்த காலத்தின் கைதியாகவே உள்ளது,” என்று ஜெய்சங்கர் தெரிவித்தார்.

சர்வதேச அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதில் ஐக்கிய நாடுகள் சபை திணறுவதாகத் தோன்றுவதற்கு இதுவே காரணம். இதன் காரணமாக, அதன் தாக்கம் மற்றும் நம்பகத்தன்மை குறைந்து வருகிறது என்று அவர் கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் புதன்கிழமை (செப்டம்பர் 25) நடைபெற்ற நிகழ்வில் பேசிய ஜெய்சங்கர், ஐ.நா., பாதுகாப்பு சபையின் நிரந்தர மற்றும் தற்காலிக உறுப்பினர்கள் பிரிவில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காவிட்டால், 15 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பின் தாக்கம் பலவீனமாகவே இருக்கும் என்று கூறினார்.

 
அன்டோனியோ குட்டரெஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் சபையின் தமைமை செயலர் அன்டோனியோ குட்டரெஸ், பாதுகாப்பு சபை 'காலத்திற்கு ஏற்புடையதாக இல்லை’ என்று கூறினார்

நிரந்தர உறுப்பினராக இந்தியாவின் முயற்சிகள்

ஐ.நா. பாதுகாப்பு சபையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என இந்தியா நீண்ட காலமாகக் கோரி வருகிறது. 15 உறுப்பினர்களைக் கொண்ட பாதுகாப்பு சபை 21-ஆம் நூற்றாண்டின் தேவைக்கு ஏற்றதாக இல்லை என்று இந்தியா கூறுகிறது. இன்றைய புவிசார் அரசியல் யதார்த்தங்களைக் கருத்தில் கொண்டு அதில் சீர்திருத்தம் அவசியம், என்று கூறுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையில் நிரந்தர உறுப்பினராகும் உரிமை தனக்கு உள்ளது என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்தியா கடைசியாக 2021-22-இல் தற்காலிக உறுப்பு நாடாக ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டத்தில் கலந்து கொண்டது.

ஒருதலைப்பட்சமான பாதுகாப்பு சபை இன்றைய உலகில் அமைதி மற்றும் பாதுகாப்பின் சவால்களை சமாளிக்கும் திறன் கொண்டதாக இல்லை என்று இந்தியா கூறுகிறது.

உதாரணமாக, ஐ.நா. பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் யுக்ரேன் போர் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்கள் விஷயத்தில் மாறுபட்ட கருத்தை கொண்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை செயலர் அன்டோனியோ குட்டரெஸ், பாதுகாப்பு சபை 'காலத்திற்கு ஏற்புடையதாக இல்லை’ என்று கூறினார். அதன் செல்வாக்கு தற்போது குறைந்து வருவதாகவும், அதன் செயல்பாட்டு முறைகளை மேம்படுத்தாவிட்டால் அதன் நம்பகத்தன்மையை இழக்க நேரிடும் என்றும் அவர் கூறினார்.

தாத்தா, பாட்டி காலத்து முறையில் செயல்பட்டு நம் பேரக்குழந்தைகளின் எதிர்காலத்தை உருவாக்க முடியாது என்று அவர் கூறியிருந்தார்.

இதே கருத்தை வலியுறுத்திய ஜெய்சங்கர், விதிகள் அடிப்படையிலான, பாரபட்சமற்ற, நியாயமான, திறந்தமனம் கொண்ட, உள்ளடக்கிய, சமத்துவமான மற்றும் வெளிப்படையான அமைப்பை இந்தியா விரும்புகிறது என்று கூறினார்.

 
ரவிசங்கர் பிரசாத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ரவிசங்கர் பிரசாத்

இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆகாததற்கு நேருதான் காரணமா?

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா உறுப்பினராக இல்லாமல் இருப்பதற்கு, முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவை பா.ஜ.க அடிக்கடி குற்றம் சாட்டி வருகிறது.

2022-ஆம் ஆண்டு ஒரு செய்தியாளர் சந்திப்பில், 2004-ஆம் ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி வெளியான 'தி இந்து' நாளிதழின் ஒரு நகலைக் காட்டிப் பேசிய முன்னாள் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், "இந்தியாவின் முதல் பிரதமர் நேரு பாதுகாப்பு சபையில் உறுப்பினர் பதவியை பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். சீனா அதை பெறுவதற்கு இது வழி வகுத்தது,” என்று கூறினார்.

காங்கிரஸ் தலைவரும், ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் துணைச் செயலருமான சசி தரூரின் 'நேரு - தி இன்வென்ஷன் ஆஃப் இந்தியா' புத்தகத்தை ’தி இந்து’ நாளிதழின் அறிக்கை மேற்கோள் காட்டியிருந்தது.

1953-ஆம் ஆண்டு வாக்கில், ஐநா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராகும் முன்மொழிவை இந்தியா பெற்றதாக சசி தரூர் இந்த புத்தகத்தில் எழுதியுள்ளார்.

நேருவின் மறுப்பு குறிப்பிடப்பட்டிருந்த கோப்புகளை இந்தியத் தூதரக அதிகாரிகள் பார்த்ததாக தரூர் எழுதியுள்ளார். உறுப்பினர் பதவியை தைவானுக்கு அளிக்குமாறும் அப்படி இல்லாவிட்டால் சீனாவுக்கு அதை வழங்குமாறும் நேரு பரிந்துரைத்தார் என்று அப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

சீனா இன்று ஐ.நா. சபையில் நிரந்தர உறுப்பினராக இருப்பதற்கு நேருவே காரணம் என்றும் அதன் விளைவுகளை இந்தியா அனுபவிக்க நேரிடுகிறது என்றும் ரவிசங்கர் பிரசாத் சொல்ல நினைத்தார்.

 
ஐக்கிய நாடுகள் சபை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் ஜவஹர்லால் நேரு

உண்மை என்ன?

இந்த விஷயத்தில் நேருவை விமர்சிப்பவர்கள் வேறு பல உண்மைகளை புறக்கணிக்கிறார்கள் என்று பலர் கருதுகிறார்கள். ஐக்கிய நாடுகள் சபை 1945-இல் உருவாக்கப்பட்டது. அப்போதுதான் அதனுடன் தொடர்புடைய அமைப்புகள் வடிவம் பெறத்தொடங்கியிருந்தன.

1945-இல் பாதுகாப்பு சபையில் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டபோது இந்தியா சுதந்திரம் பெற்றிருக்கவில்லை.

பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு எந்த முன்மொழிவையும் இந்தியா பெறவில்லை என்று 1955-ஆம் ஆண்டு செப்டெம்பர் 27-ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் நேரு தெளிவுபடுத்தினார்.

அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் டாக்டர். ஜே.என்.பாரேக்கின் கேள்விக்கு பதிலளித்த நேரு, "ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கான அதிகாரபூர்வ அல்லது அதிகாரபூர்வமற்ற எந்த முன்மொழிவும் வரவில்லை. சந்தேகத்திற்குரிய சில குறிப்புகள் மேற்கோள் காட்டப்படுகின்றன. அதில் எந்த உண்மையும் இல்லை,” என்றார்,

"ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை ஐ.நா. சாசனத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. சில குறிப்பிட்ட நாடுகளுக்கு அதில் நிரந்தர உறுப்பினர் பதவி கிடைத்தது. சாசனத்தில் திருத்தம் செய்யாமல் எந்த மாற்றமும் அல்லது புதிய உறுப்பினரையும் சேர்க்க முடியாது. இவ்வாறான நிலையில், இந்தியாவுக்கு இடம் வழங்கப்பட்டதா, இந்தியா அதனை ஏற்க மறுத்ததா என்ற கேள்விக்கு இடமே இல்லை. ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர் அந்தஸ்து பெறுவதற்கு தகுதியுடைய எல்லா நாடுகளையும் உள்ளடக்குவதே எமது அறிவிக்கப்பட்ட கொள்கையாகும்,” என்று குறிப்பிட்டார்.

1950-களில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் சீனா சேர்க்கப்படுவதற்கு இந்தியா பெரிய ஆதரவாக இருந்தது என்று கூறப்படுகிறது. அப்போது இந்த இடம் 'ரிப்பப்ளிக் ஆஃப் சைனா’ என்ற பெயர் கொண்ட தைவானிடம் இருந்தது.

1949-இல் சீன மக்கள் குடியரசு தோன்றியதில் இருந்து சீனாவை ஆளும் சியாங் கய்-ஷேக்கின் சீனக் குடியரசு பிரதிநிதித்துவப்படுத்தி வந்தது, மாவோவின் மக்கள் சீனக் குடியரசு அல்ல. இந்த இடத்தை சீன மக்கள் குடியரசிற்கு வழங்க ஐக்கிய நாடுகள் சபை மறுத்துவிட்டது. ஆனால் பின்னர் அந்த இடம் 1971-ஆம் ஆண்டு வாக்கெடுப்புக்குப் பிறகு சீன மக்கள் குடியரசிற்கு வழங்கப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

கனாடா வசாகா பீச்சில் வந்து கக்கா இருக்கிறவனுகளுக்கு பாதுகாப்பு சபையில் இடம் கேக்குது!😂

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, வாலி said:

கனாடா வசாகா பீச்சில் வந்து கக்கா இருக்கிறவனுகளுக்கு பாதுகாப்பு சபையில் இடம் கேக்குது!😂

ஏற்கனவே பாதுகாப்புச்சபை ஒருமாதிரி தான் .அதுக்குள்ளை இந்தியாவையும் சேர்த்தால் உருப்பட்டமாதிரி தான்

  • கருத்துக்கள உறவுகள்

உந்தாளுக்கு பழையதை மட்டுமே பிடிக்கும் 😋

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

இதே கருத்தை வலியுறுத்திய ஜெய்சங்கர், விதிகள் அடிப்படையிலான, பாரபட்சமற்ற, நியாயமான, திறந்தமனம் கொண்ட, உள்ளடக்கிய, சமத்துவமான மற்றும் வெளிப்படையான அமைப்பை இந்தியா விரும்புகிறது என்று கூறினார்.

மறைமுகமாக அமெரிக்காவின் Rule based world order  ஐ ஜெய்சங்கர் சுட்டிக்காட்டுகிறார்.😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.