Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடற்புலிகள் உத்தியோகபூர்வ அமைப்பாக யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு ஏற்றுக்கொண்டதை கண்டித்த மக்கள் விடுதலை முன்னணி

 

செவ்வாய்க்கிழமை, 22 சித்திரை 2003

JVP Press Conference 22.04.03

புலிகளின் கடற்பிரிவான கடற்புலிகளை இலங்கையரச கடற்படைக்குச் சமனாக யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு ஏற்றுக்கொண்டுள்ளதை மக்கள் விடுதலை முன்னணி கடுமையாகக் கண்டித்திருப்பதுடன் இதுகுறித்த விவாதம் ஒன்றிற்காக பாராளுமன்றத்தில் அனுமதி கோரி சபாநாயகருக்குக் கடிதம் ஒன்றினை அனுப்பியிருக்கிறது.

சமாதான ஊக்குவிப்பாளர்கள் என்கிற முகமூடிக்குள் ஒளிந்துநின்று கொண்டு நோர்வே அரசாங்கமும், யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் புலிகளின் இன்னொரு பிரிவாகவே செயற்பாடு வருகிறார்கள் என்று அக்கட்சியின் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச கூறினார். மேலும் சீனாவுக்குச் சொந்தமான மீன்பிடிக் கப்பல் மீதும், இலங்கை இராணுவத்திற்கான வழங்கற் கப்பல் மீதும் புலிகளின் கடற்புலிகள் நடத்திய தாக்குதல் குறித்து யுத்த நிறுத்தக் கண்கானிப்புக் குழு வெளியிட்டிருக்கும் அறிக்கை பக்கச்சார்பானது என்றும் அவர் கண்டித்தார். 

புலிகளின் கட்டுப்பாட்டுக் கடற்பிராந்தியத்திற்குள் செயற்பட்டுவரும் கடற்புலிகள் ஒரு நிழல் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ படையணி என்று கண்காணிப்புக் குழு ஏற்றுக்கொண்டுள்ளதனை ரணில் அரசு இதுவரை ஏன் மறுதலிக்கவில்லை என்றும் அவர் கேள்வி கேட்டார். 

மேலும் புலிகள் ஏழாம் கட்டப் பேச்சுக்களில் பங்குபற்றுவார்கள் என்று தான் நினைக்கவில்லை என்றும், யுத்தம் ஒன்றிற்குத் தயாராகி வருகிறார்கள் என்பதை தான் அனுமானிப்பதாகவும் கூறினார்.

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=8831

  • Replies 237
  • Views 13.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • குமாரசாமி
    குமாரசாமி

    அன்று தொடக்கம் இன்று வரைக்கும் இனத்துவேஷம் இல்லாமல் ஆட்சி செய்த ஒரு சிங்கள  ஆட்சியாளரை யாராவது சொல்ல முடியுமா? ஒரு சில  சிங்கள அரசியல்வாதிகள்  சிரித்த முகத்துடன் இனவாதம் செய்வர். மற்றும் சிலர் மு

  • Kavi arunasalam
    Kavi arunasalam

    ரஞ்சித், உங்கள் கருத்துக்களுக்கு எதிர் கருத்து வைத்தால் உங்களை ஒன்றும் செய்யாது என்று சொல்லும் நீங்கள் ஆதரவு தந்தால் புளகாங்கிதம் அடைகிறீர்கள். இதில் சொல்வதற்கு என்னிடம் எதுவும் இல்லை. இது ஒரு சாதாரண

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    ரஞ்சித் எழுதியது அத்தனையும் உண்மை தான்.நடந்தவைகள் தான். அப்போது அவர்களை வளர்த்துக் கொள்ள முழு இனவாதம் தேவைப்பட்டது. இப்போது வளர்ந்து அதிகாரத்துக்கும் வந்துவிட்டார்கள். முன்னர் இந்திய

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூதூரில் புலிகளின் நடவடிக்கைகளால் நாடு பிளவுடபப்போகிறது என்று கண்டிக்கும் மக்கள் விடுதலை முன்னணி

வெள்ளி, 25 சித்திரை 2003

Demonstrators

மூதூரில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளால் நாடுபிளவுபடப்போவதாகவும், ரணில் அரசாங்கமும் நோர்வே நடுநிலையாளர்களும் புலிகளின் நாட்டைப் பிளவுபடுத்தும் நடவடிக்கைகளுக்கு உதவிவருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

Anjana Umma and supporters

மேலும் கிழக்கில் முஸ்லீம்களின் பாதுகாப்பும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் முஸ்லீம் உறுப்பினரான அஞ்சான் உம்மா தெரிவித்தார்.

Demonstrators

மக்கள் விடுதலை முன்னணியும், தீவிரவாத சிங்கள பிக்குகள் அமைப்புக்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டன.

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=8852Lipton junction march

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடற்புலிகளுக்கான சுதந்திர கடல்வழிப் பயணத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது கண்காணிப்புக்குழு ‍ கண்டிக்கும் மக்கள் விடுதலை முன்னணி

செவ்வாய், 6 வைகாசி 2003

கடற்புலிகளுக்கும் இலங்கை கடற்படைக்கும் இடையிலான மோதல்கள் முடிவிற்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழு கேட்டுக்கொண்டிருப்பதை மக்கள் விடுதலை முன்னணி கடுமையாகக் கண்டித்திருக்கிறது. இறையாண்மையுள்ள நாடொன்றின் கடற்படை தனது நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று கோருவது அந்நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் விடப்பட்டிருக்கும் சவால் என்று கூறியிருப்பதோடு இவ்வாறு செய்வது கடற்புலிகளின் தங்குதடையின்றிய கடல் வழிப் போக்குவரத்திற்கு யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழு வசதிகள் செய்துகொடுத்திருப்பதாகவும் கூறுகிறது.

இதேவேளை அரசால் உயர் பாதுகாப்பு வலய ஆலோசகராக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற இந்திய இராணுவத் தளபதி சதீஸ் நம்பியார் தனது பரிந்துரைகளுடன் கொழும்பை வந்தடைந்திருக்கிறார். 

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=8931

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க ஏகதிபத்தியவாதிகளின் நலன்களை முறியடித்து, இந்தியாவின் ஸ்த்திரத்தனமையினைக் காப்பதற்காக யுத்த நிறுத்தம் முறியடிக்கப்பட வேண்டும் - மக்கள் விடுதலை முன்னணி

செவ்வாய், 8, வைகாசி 2003

அமெரிக்க ஏகதிபத்தியவாதிகளின் நலன்களைக் காக்கவும், இந்தியாவைப் பலவீனப்படுத்தவுமென்று உருவாக்கப்பட்டிருக்கும் யுத்த நிறுத்தம் உடனடியாக முறியடிக்கப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி கூறியிருக்கிறது.

நடந்துவரும் பேச்சுக்களை உடனடியாக நிறுத்தி, புலிகளை இராணுவ ரீதியில் முற்றாக அழிப்பதற்கான நடவடிக்கைகளை செயற்படுத்தும் நோக்கில் மக்கள் விடுதலை முன்னணியும், ஜனாதிபதி சந்திரிக்காவின் கட்சியும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கி வருகின்றன.

தமிழர்களுடன் அதிகாரங்கள் பகிரப்படுவதை முற்றாக எதிர்த்துவரும் இக்கட்சி, இலங்கையில் இனப்பிரச்சினை என்று ஒன்று இல்லை என்றும், இருப்பது பொருளாதாரப் பிரச்சினையே என்றும் கூறிவருகிறது. மேலும் தமது கட்சியின் கீழ் உருவாக்கப்படும் சோசலிஸ் அரசே இப்பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கும் என்றும் அது கூறுகிறது.

சரித்திர ரீதியில் தீவிர இந்திய எதிர்ப்புவாதக் கட்சியாக அறியப்பட்டிருக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் திடீர் இந்திய விசுவாசம், அது இந்தியாவினால் களமிறக்கப்பட்டிருப்பதையே காட்டுவதாக ரணில் அரசின் முக்கியஸ்த்தர்கள் கூறுகிறார்கள்.

யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கெதிராக சிங்கள மக்களை அணிதிரட்டி, நாட்டில் குழப்பகரமான நிலைமையினை உருவாக்குவதன் மூலம், சந்திரிக்காவினூடாக‌ பேச்சுக்களை நிறுத்தி, உடனடியான போரிற்குள் இலங்கையைத் தள்ள இந்தியா, மக்கள் விடுதலை முன்னணியூடாக முயல்வதாகவும் கருதப்படுகிறது.

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=8942

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இடைக்கால நிர்வாகத்தினை முறியடித்தே தீருவோம் - மக்கள் விடுதலை முன்னணி சூளுரை

திங்கள், 26 வைகாசி 2003

mayday_jvp_4_010501.gif

புலிகளால் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கும் வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கான இடைக்கால நிர்வாகத்தை ரணில் அரசு வழங்க முற்படுமானால் அதனை முறியடித்தே தீருவோம் என்று தீவிர இனவாத இடதுசாரிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி சூளுரைத்திருக்கிறது.

செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா, இலங்கையின் ஒற்றையாட்சி யாப்பிற்கெதிராகச் சென்று புலிகளின் கோரிக்கையினை ரணில் அரசு நிறைவேற்றுமானால், அதனைத் தடுத்து நிறுத்த தனது கட்சி அனைத்து வழிகளிலும் போராடும் என்று கூறினார்.

வடக்குக் கிழக்கிற்கான இடைக்கால நிர்வாகத்தினை வழங்குவது, நாட்டைப் பிரிப்பதற்கு ஒப்பானது என்பதுடன் சிங்கள மக்களினதும், முஸ்லீம் மக்களினதும் நலன்களுக்கும் விரோதமானதுடன், அவர்களின் பாதுகாப்பிற்கும் பங்கம் விளைவிப்பதாகும் என்றும் அவர் மேலும் கூறினார். 

ஆனால், ஜனாதிபதி சந்திரிக்கா, புலிகளுக்கு நாட்டைத் தாரைவார்த்துக்கொடுக்கும் ரணில் அரசின் முடிவை முறியடித்து விடுவார் என்பதில் தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=9072

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இடைக்கால நிர்வாக சபை உருவாக்குவதற்கு முட்டுக்கட்டைகள் போடும் மக்கள் விடுதலை முன்னணி, சந்திரிக்கா கூட்டணி

வெள்ளி, 30 வைகாசி 2003

டோக்கியோவில் நடைபெறவிருக்கும் உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு புலிகளின் பிரசன்னத்துடனோ அல்லது இன்றியோ நடைபெறுதல் அவசியம் என்று சந்திரிக்காவின் கட்சி கூறியிருக்கிறது. மேலும் நடந்துவரும் பேச்சுவார்த்தைகளூடாக எட்டப்பட்ட அரசியல்த் தீர்வு அமுல்ப்படுத்தப்பட்டால் அன்றி இடைக்கால நிர்வாக சபை உருவாக்கப்படல் கூடாதென்றும், அப்படி உருவாக்கப்படும் சபை கூட சில நிபந்தனைகளுடன் தான் உருவாக்கப்பட முடியும் என்றும் அது கூறியிருக்கிறது.


ஜனாதிபதி சந்திரிக்காவின் நெருங்கிய சகாவான மங்கள சமரவீர இதுகுறித்துப் பேசும்போது, இடைக்கால நிர்வாக சபை அமைக்கப்படுதலில் தமக்கு ஆட்சேபணையில்லை, ஆனால் அது சில நிபந்தனைகளுடன் மட்டும்தான் அமைக்கப்பட வேண்டும் என்று கூறினார். முதலாவது புலிகள் அரசியல் தீர்வொன்றிற்கு உடன்பட வேண்டும். மேலும் அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்குத் தடையாக இருக்கும் புலிகளின் ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். இவை இரண்டிற்குமான புலிகளின் அரசியல்த்துறையின் எழுத்துமூல உத்தரவாதம் அளிக்கப்பட்ட பின்னரே இடைக்கால நிர்வாக சபை அமைக்கப்படுவது குறித்துப் பேசமுடியும் என்று அவர் கூறினார்.

 

யுத்த நிறுத்தம், பேச்சுக்கள், இடைக்கால நிர்வாக சபை ஆகியவற்றிற்கெதிரான மக்கள் விடுதலை முன்னணி மற்றும் சந்திரிக்கா கட்சியினரின் தொடர்ச்சியான அழுத்தங்களுக்குப் பணித்துபோயுள்ள ரணில் அரசாங்கம்,நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்பு இடைக்கால நிர்வாக சபையின் உருவாக்கத்தினை அனுமதிக்காது என்பதை  புலிகளிடம் தெரிவித்திருப்பதாக கொழும்பிலிருந்து வெளிவரும் செய்திகள் கூறுகின்றன.

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=9091

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கு இடைக்கால நிர்வாக சபையினை வழங்காதே ‍- கொழும்பில் கூடிய மக்கள் விடுதலை முன்னணியின் 10,000 ஆதரவாளர்கள்

வெள்ளி, 06 ஆனி 2003

JVP protest in Colombo
தீவிர சிங்கள இனவாத இடதுசாரிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியினரின் பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைமையில் கொழும்பில் கூடிய 10,000 இற்கும் அதுஇகமான அக்கட்சியின் ஆதரவாளர்கள், தமிழர்களுக்கான இடைக்கால நிர்வாக சபையினை ரணிலின் அரசு வழங்கக் கூடாதென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
புலிகளுக்கும் ரணில் அரசிற்கும் இடையே நடந்துவரும் சமாதானப் பேச்சுக்களுக்கெதிரான பதாதைகளையும், ரணில் அரசைக் கண்டிக்கும் பதாதைகளையும் அவர்கள் காவி வந்தனர்.

JVP protest in Colombo

இப்பேரெணியில் கட்சியின் செயலாளர் டில்வின் சில்வா, பிரச்சரச் செயலாளர் விமல் வீரவன்ச ஆகியோர் கலந்துகொண்டனர்.

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=9147

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் ஆயுதக் கப்பலை முல்லைத்தீவுக் கடலில் அழிக்க உத்தரவிட்டது நானே, ரணில் புலிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது சரியென்றால், நான் மக்கள் விடுதலை முன்னணியுடன் பேச்சுக்களில் ஈடுபடுவது எப்படித் தவறாகும் ? சந்திரிக்கா

திங்கள், 23, ஆனி, 2003

SLFP Convention

"இந்த நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்காகவே கடந்த சனிக்கிழமை முல்லைத்தீவுக் கடற்பரப்பில் புலிகளுக்கு ஆயுதங்களைக் கொண்டுவந்த கப்பலை அழிக்க உத்தரவிட்டேன்" என்று சந்திரிக்கா தனது கட்சியின் வருடாந்தக் கூட்டத்தில் கூறியிருக்கிறார். 

"புலிகள் இன்னொரு போருக்குத் தயாராகி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து அறிந்திருந்தேன். எனது தளபதிகளுடனான அண்மைய கலந்தாலோசனைகளின்போது இது உண்மையென்று எனக்கு நிரூபணமானது. சமாதானப் பேச்சுக்கள் எனும் போர்வையினூடாக பயங்கரவாதிகள் நாட்டிற்குள் ஆயுதங்களைக் கொண்டுவந்து குவிப்பதை ரணில் அரசு ஊக்குவிக்கிறது. இது இப்படியே நடந்துகொண்டுவருவதை என்னால் அனுமதிக்க முடியாது. ஆகவேதான் முல்லைத்தீவுக் கடலில் புலிகளின் கப்பல் வரும்போது எனது கடற்படையினை அனுப்பி அழிக்கச் செய்தேன்" என்று அவர் மேலும் கூறினார். 

"ரணிலின் அரசு புலிகளுடன் பேச்சுக்களில் ஈடுபடுவது சரியென்றால், நான் மக்கள் விடுதலை முன்னணியினருடன் கூட்டுச் சேர்வது எப்படித் தவறாக முடியும்?" என்றும் அவர் வினவினார்.

slfp_2.jpg

முல்லைத்தீவிற்கு அருகே நடுக்கடலில் அழிக்கப்பட்ட புலிகளின் கப்பல் குறித்து ரணில் அரசின் பாதுகாப்புச் செயலாளர் திலக் மாறப்பன கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை கடற்படை தெரிவிக்கும் தகவல்களுக்கும் புலிகளின் தகவல்களுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் இருப்பதாகக் கூறியிருந்தார். மேலும் புலிகளின் கப்பலை முதன்முதலாக காலை 3:15 மணிக்கு கடற்படை கண்டுவிட்டதென்றும், தாக்குதல் 5 மணிக்கு நடத்தப்பட்டபோதும், காலை 7 மணிவரை தனக்கோ அல்லது கடற்படைத் தளபதிக்கோ இத்தாக்குதல் குறித்து,  தாக்குதலில் ஈடுபட்ட கடற்படையினரோ, ஜனாதிபதி சந்திர்க்காவோ தெரிவிக்கவில்லையென்றும் அவர் கூறியிருந்தார். 

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=9273

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

சமாதான முயற்சிகளுக்கெதிரான தனது செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துவரும் தீவிர இனவாத இடதுசாரிகளான மக்கள் விடுதலை முன்னணியினர்

புதன்கிழமை, 25 ஆனி 2003

Wimal_.jpg

ரணில் அரசிற்கும் புலிகளுக்கும் இடையே செய்துகொள்ளப்பட்டிருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் பேச்சுக்களுக்கெதிராக தொடர்ச்சியான போராட்டங்களை தீவிர இனவாத மாக்ஸிஸ்ட்டுக்களான மக்கள் விடுதலை முன்னணியினர் நாடெங்கிலும் நடத்தி வருகின்றனர். இதன் இன்னொரு கட்டமாக கொழும்பில் இன்று அக்கட்சி சுமார் 5000 ஆதரவாளர்களை இணைத்து ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தியது. பேரணியில் கலந்துகொண்டவர்கள் ரணில் அரசைச் சாடியும், புலிகளை எதிர்த்தும் சுலோகங்களை பாடியதுடன் பதாதைகளையும் காவி வந்தனர்.

TN.-105.jpg

இன்று தமிழர்களால் "தலைவர்" என்று கொண்டாடப்படும் அதே இனவாதியான மக்கள் முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க பிரச்சார மேடையில்
 

மக்கள் விடுதலை முன்னணி இலங்கையில் மூன்றாவது பலமான கட்சியென்பதுடன், நாட்டில் புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நோக்கில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் ச‌மாதானப் பேச்சுக்களுக்கெதிரான சிங்கள மக்களின் உணர்வினை கிளப்பி வருகின்றது.

அத்துடன் தமிழர்களுக்கான தனிநாடொன்றினை உருவாக்கவே ரணில் அரசாங்கம் முயல்வதாகவும் அது திட்டமிட்ட பரப்புரை நடவடிக்கையொன்றினையும் நடத்திவருகின்றது.

யுத்தத்தினால் அழிக்கப்பட்டிருக்கும் வடக்குக் கிழக்கினை புணருத்தானம் செய்வதற்காக புலிகளால் முன்வைக்கப்பட்டிருக்கும் இடைக்கால நிர்வாக சபைக் கட்டமைப்புக் கோரிக்கை என்பது சிங்கள மக்களை ஏமாற்றி தமிழர்களுக்கு தனிநாட்டைத் தாரைவார்க்கும் கைங்கரியமே என்று அக்கட்சி கூறுகிறது. ஆகவே இன்றைய பேரணி வடக்குக் கிழக்கு மாகாண இடைக்கால நிர்வாக சபையினை புலிகளிடம் வழங்காதே எனும் கோஷத்தினை அடிப்படையாக வைத்தே நடத்தப்பட்டது.

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=9293

Edited by ரஞ்சித்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யுத்தநிறுத்தக் கண்காணிப்பாளர்களை நாட்டிற்குத் திரும்பிப் போ என்று மிரட்டிய மக்கள் விடுதலை முன்னணி ஆதவாளர்கள்

செவ்வாய்க்கிழமை, 15 ஆடி, 2003

திருகோணமலையில் அமைக்கப்பட்டிருக்கும் யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் அலுவலகத்திற்கு முன்னால் கூடிய மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்கள், அவர்களை நாட்டிற்குத் திரும்ப் போ என்று ஆர்ப்பாட்டம் செய்தனர். கண்காணிப்பாளர்களின் அலுவலகத்திற்கு பொலீஸார் பாதுகாப்பு வழங்கியிருந்தனர். 

திருகோணமலை துறைமுக வீதி வழியே ஊர்வலமாகச் சென்ற ஆர்ப்பாட்டக் காரர்கள் கண்காணிப்பாளர்களின் அலுவலகத்தை அடைந்தது "புலிகளுக்கு உதவுகிறீர்கள், நாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்" என்று கோஷமிட்டனர். 

அதேவேளை திருகோணமலை நகரில் பேச்சுவார்த்தைகளைக் கண்டித்து பூரண கடையடைப்பைச் செய்யுமாறு மக்கள் விடுதலை முன்னணி கேட்டிருந்தபோதும் பல கடைகள் திறந்திருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. 

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=9437

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்குக் கிழக்கு இடைக்கால நிர்வாக சபைக்கெதிரான முழு பிரச்சார யுத்தத்தினை முன்னெடுத்திருக்கும் மக்கள் விடுதலை முன்னணி

செவ்வாய், 29, ஆடி 2003

தீவிர சிங்கள இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி, வடக்குக் கிழக்கு மாகாணத்தில் இடைக்கால நிர்வாக சபையொன்றினை உருவாக்கும் முயற்சிகளுக்கெதிராக முற்றான எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக சூளுரைத்திருக்கிறது. இடைக்கால நிர்வாக சபைக்கான அனுமதியென்பது நாட்டைத் துண்டாடுவதற்கான அனுமதியாகும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா கூறியிருக்கிறார். 

ஆவணி 6 ஆம் திகதியிலிருந்து நாடுதழுவிய ரீதியில் இடைக்கால நிர்வாக சபைக்கெதிரான கடுமையான எதிர்ப்புப் போராட்டங்களை முடுக்கிவிடும் நடவடிக்கைகளில் மக்கள் விடுதலை முன்னணி இறங்கியிருக்கிறது. ஏனைய எதிர்க்கட்சிகள் சிங்கள மக்களை இடைக்கால நிர்வாக சபைக்கெதிராக அணிதிரட்டத் தவறியமையினாலேயே தமது கட்சி இதனைச் செய்வதாக அவர் கூறினார்.
வடக்குக் கிழக்கு இடைக்கால நிர்வாக சபை இயங்குமிடத்து, அது முழு நாட்டையும் சுக்குநூறாக உடைத்துவிடும் என்று அவர் சிங்கள மக்களை எச்சரித்தார்.  

இதேவேளை ஜனாதிபதி சந்திரிக்காவின் கட்சியினரும் இடைக்கால நிர்வாக சபையினை எதிர்த்து சிங்கள மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தும் கருத்தரங்குகளை நடத்தி வருகின்றனர். அக்கட்சி சார்பாக இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மைத்திரிபால சிறிசேன, மூன்று மாதங்களுக்குள் முழு நாட்டிலும் இக்கருத்தரங்குகள் நடத்தி முடிக்கப்பட்டு விடும் என்று கூறினார். 

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=9529

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இடைக்கால நிர்வாக சபையினை வழங்குவதை எதிர்த்து இன்னுமொரு ஆர்ப்பட்டத்தில் ஈடுபடும் மக்கள் விடுதலை முன்னணி

திங்கட்கிழமை, 11 ஆவணி 2003

புலிகளுக்கு வடக்குக் கிழக்கு இடைக்கால நிர்வாகத்தினை வழங்குவதை எதிர்த்தும், அந்நிய நாட்டுப்படைகளை இலங்கைக்குள் அமைதிகாக்கும் முயற்சிகளுக்காக வரவைக்கும் யோசனைகளை எதிர்த்தும் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றினை செவ்வாயன்று நடத்த தீவிர சிங்கள இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி ஆயத்தமாகி வருவதாக அதன் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா கொழும்பில் கூறினார். சுமார் 50,000 மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்கள் இப்பேரணியில் பங்கேற்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

……………………………………………………………………………………………………

புலிகளுக்கு வடக்குக் கிழக்கினை தாரை வார்த்து நாட்டைக் காடிக் கொடுப்பதை எதிர்த்து மக்கள் விடுதலை முன்னணி மற்றுமொரு ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது

புதன்கிழமை, 20 ஆவணி, 2003

 தீவிர சிங்கள இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி நாட்டைக் காட்டிக்கொடுக்கும் ரணிலின் துரோகத்தை எதிர்த்து வடக்குக் கிழக்கு உட்பட, நாடளாவிய ரீதியில் பிரச்சாரப் போர் ஒன்றினை ஆரம்பிக்கவிருப்பதாக அதன் பிரச்சாரச் செயலாளர் விமர் வீரவன்ச கூறியுள்ளார்.

இதன்படி மக்கள் விடுதலை முன்னணியின் முதலாவது பிரச்சாரப் போர் காலியில் ஆரம்பிக்கும் என்றும், அதன் இறுதிப் பேரணி கொழும்பு லிப்ட்டன் சதுக்கத்தில் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

"இலங்கையை மீட்டெடுப்போம் எனும் போர்வையில் வடக்குக் கிழக்கைப் புலிகளுக்கும், தெற்கை வெளிநாடுகளுக்கும் ரணில் அரசு கொடுக்கவிருக்கிறது" என்று அவர் மேலும் கூறினார்.

ரணிலின் தவறான ஆலோசனைகளால் இலங்கை இராணுவம் போராட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும், வடக்குக் கிழக்கில் புலிகளைக் கட்டுப்படுத்துவது இராணுவத்திற்குக் கடிணமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

 இதவேளை மக்கள் விடுதலை முன்னணியின் பங்காளிகளான வடக்குக் கிழக்கு சிங்களவர்கள் அமைப்பு சந்திரிக்காவுக்கு அனுப்பியுள்ள வேண்டுகோளில் இந்தியாவை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிற்குள் அழைக்கவேண்டும் என்றும், இந்திய கடற்படையின் உதவியுடன் புலிகளின் கடற்போக்குவரத்தை தடுத்து, இலங்கையின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையினையும் காக்க வேண்டும் என்றும் கேட்டிருக்கிறது.மேலும், வடக்குக் கிழக்கை உடனடியாகப் பிரிப்பதும், பொலீஸ் புலநாய்வாளர்கள் புலிகளால் கொல்லப்பட்டு வருவதைத் தடுப்பதும் உடனடித் தேவை என்றும் அவ்வமைப்புக் கூறியிருக்கிறது.

…………………………………………………………………………………………

சமாதானப் பேச்சுக்களை உடனடியாக நிறுத்தக்கோரி காலியில் இருந்து கொழும்பு வரை பாதயாத்திரை மேற்கொள்ளும் மக்கள் விடுதலை முன்னணி

ஞாயிற்றுக்கிழமை, 24 ஆவணி 2003

பேச்சுக்களை உடனடியாக நிறுத்தக்கோரியும், புலிகளிடமிருந்தும், ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்தும் இலங்கையின் இறையாண்மையினையும், ஆட்புல ஒருமைப்பாட்டினையும் காத்திடக் கோரியும் காலியில் இருந்து கொழும்புவரை நான்கு நாட்கள் பாத யாத்திரையினை அதி தீவிர சிங்கள இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி நடத்துகிறது.

ஆட்சியில் இருக்கும் ரணிலின் அரசு கவிழ்க்கப்பட்டு, சமாதானப் பேச்சுக்கள் நிறுத்தப்படும்வரை தமது போராட்டம் ஓயாது என்றும் மக்கள் விடுதலை முன்னணி கூறியிருக்கிறது.

…………………………………………………………………..

எனது கட்சியான மக்கள் கூட்டணி தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படுவதற்கு ஆதரவு தருகிறது, ஆனால் மக்கள் விடுதலை முன்னணி அதற்கு எதிராக இருப்பதால் அவர்களுடன் பொது இணக்கப்பட்டிற்கு வர முடியவில்லை - சந்திரிக்கா

செவ்வாய்க்கிழமை, 2 புரட்டதி 2003

சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி சந்திரிக்க, தனது கட்சி தமிழர்களுடனான அதிகாரப் பகிர்வு குறித்து ஆராயத் தயாராக இருந்தபோதும், மக்கள் விடுதலை முன்னணி அதனைக் கடுமையாக எதிர்த்து வருவதால் அவர்களுடன் பொது இணக்கப்பாடு ஒன்றினை எட்டுவது கடிணமாகியிருக்கிறது என்று கூறினார்.

"ரணிலின் அரசைக் கவிழ்ப்பதில் மக்கள் விடுதலை முன்னணியினருடன் இணைந்து செயற்படுவதில் எந்தத் தவறும் இல்லை. எனக்கு புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் ஆர்வம் இல்லை. ஆனால், புலிகளால் சீர்கெட்டுப்போயுள்ள பாதுகாப்பு நிலவரத்தைச் சீர்செய்து நாட்டைப் பாதுக்காக வேண்டும் என்பதே எனது குறிக்கோள்" என்று அவர் மேலும் கூறினார்.

………………………………………………………………………………….

தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதை மக்கள் விடுதலை முன்னணி கடுமையாக எதிர்த்து நின்றதனால் அக்கட்சிக்கும், சந்திரிக்காவின் கட்சிக்குமிடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன

சனிக்கிழமை, 6 புரட்டாதி 2003

ரணிலின் அரசைக் கவிழ்ப்பதற்காக சந்திரிக்காவின் கட்சியும், மக்கள் விடுதலை முன்னணியும் நடத்திவந்த பேச்சுக்கள் தோல்வியில் முடிவடைந்திருக்கின்றன. இதற்கான முக்கிய காரணமாக தமிழர்களுடன் அதிகாரங்களைப் பகிர்வதன் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்று சந்திரிக்காவின் கட்சி கூறும் அதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியோ அதிகாரப் பகிர்வென்கிற பேச்சிற்கே இடமில்லை, ஒற்றையாட்சியின் கீழ், ஒன்றுபட்ட இலங்கைக்குள் மட்டுமே தீர்வு அமையவேண்டும் என்று பிடிவாதமாக மறுத்துவிட்டது. இதுகுறித்துப் பேசிய மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச, "சர்வதேச அழுத்தத்திற்குப் பயந்தே சந்திரிக்கா அதிகாரப் பகிர்வு குறித்துப் பேசுகிறார். ஆனால் தமிழர்களுக்கு அதிகாரத்தை வழங்கினால் நாடு பாரிய அழிவை எதிர்நோக்கும்" என்று கூறினார். மேலும், தமிழர்களுடன் அதிகாரப் பகிர்வு எனும் சுதந்திரக் கட்சியின் தலைமையின் முடிவினை அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் முற்றாக எதிர்க்க முன்வரவேண்டும் என்றும் அவர் அறைகூவல் விடுத்தார்.

…………………………………………………………………………………..

சமாதானப் பேச்சுக்களை உடனடியாக நிறுத்துமாறு கோரி இரண்டாவது பாதயாத்திரைப் போராட்டத்தை முன்னெடுக்கும் மக்கள் விடுதலை முன்னணி

வியாழக்கிழமை, 11 புரட்டாதி 2003

ரணில் அரசுக்கும், புலிகளுக்கும் இடையே நடைபெற்றுவரும் பேச்சுக்களை உடனடியாக நிறுத்தி இலங்கையின் இறையாண்மையினையும், ஒருமைப்பாட்டையும் காத்திடக் கோரி சிங்களத் தீவிரவாத கட்சியான மக்கள் விடுதலை முன்னணி இரண்டாவது - ஐந்து நாள் பாத யாத்திரைப் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறது.

ரணில் அரசாங்கம் நடத்திவரும் பேச்சுக்களால் இலங்கையின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் மிக்கடுமையான சேதம் விளைவிக்கப்பட்டிருப்பதால் இப்பேச்சுக்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு நோர்வே அனுசரணையாளர்கள் உடனடியாக நாட்டை விட்டு திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா கூறினார்.

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி நடைபெறும் இந்த ஆர்ப்பட்ட பாத யாத்திரையில் சந்திரிக்காவின் கட்சியைச் சேர்ந்த 20 பா. க்களும் பங்கேற்பதாக அவர் மேலும் தெரிவித்தார். அநுர பண்டாரநாயக்க உட்பட பல சந்திரிக்காவின் கட்சிக்காரர்கள் புலிகளுக்கு இடைக்கால நிர்வாகத்தை வழங்குவதைக் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

 

 

 

தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படக் கூடாது, இடைக்கால நிர்வாக சபை கொடுக்கப்படக் கூடாது, பேச்சுக்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், இந்தியாவை உதவிக்கு அழைக்கவேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்து தீவிர இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியினர் மேற்கொண்ட கண்டியில் இருந்து கொழும்புவரையான இரண்டாவது ஐந்து நாள் பாதயாத்திரையின் போது எடுக்கப்பட்ட படங்கள்

FootMarch_3.jpg

FootMarch_6.jpg

FootMarch_1.jpg

FootMarch_5.jpg

FootMarch_2.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சரித்திரத்தை எல்லோரும் அறிய உங்கள் முயற்சி தொடரட்டும்.பாராட்டுக்கள் ரஞ்சித்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.