Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகிந்தவை ஓரம் கட்டத் தொடங்கிவிட்டது அனைத்துலகம்: மங்கள சமரவீர

Featured Replies

சிறிலங்காவையும் அதன் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவையும் அனைத்துலகம் ஓரங்கட்ட தொடங்கி விட்டதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சின் மக்கள் பிரிவின் அமைப்பாளர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி 12-10-2007 02:20 மணி தமிழீழம் [மயூரன்]

பயங்கரவாதச் செயல்களில் சிறீலங்கா அரசு - மங்கள சமரவீர

பயங்கரவாதச் செயல்களில் சிறீலங்கா அரசு ஈடுபட்டு வருவதாக, மகாஜன அணியின் நிறுவனர் மங்கள சமரவீர குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்று பிரான்ஸ் AFP செய்திச் சேவைக்கு செவ்வி வழங்கியிருக்கும் மங்கள சமரவீர, பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் ஈடுபடுவதாக கூறியவாறு, பயங்கரவாதத்தை சிறீலங்கா அரசு கட்டவிழ்த்து விட்டிருப்பதாக கண்டனம் வெளியிட்டுள்ளார்.

''நாட்டில் அரங்கேறிய நீதிக்குப் புறம்பான படுகொலைகள் பலவற்றை, சிறீலங்கா அரசாங்கம் விசாரணை செய்யத் தவறியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபடுவதாகக் கூறியவாறு, பயங்கரவாதத்தை இந்த அரசாங்கம் கையாள்கின்றது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையாரின் வருகை, இதனையே உணர்த்தி நிற்கின்றது. இங்கு இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக சமூகம் கொண்டுள்ள கரிசனையை, இதன்மூலம் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

இப்பொழுது பயங்கரவாத அரசாக சிறீலங்கா முத்திரை குத்தப்படுகின்றது. பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவதன் ஊடாக, பயங்கரவாதத்தை வெற்றிகொள்ள முடியும் என இந்த அரசாங்கம் நம்புகின்றது. இதுவே இவ்வாறான பயங்கரவாத முத்திரை குத்தப்படுவதற்கு காரணமாகின்றது. இங்கு இடம்பெறும் நிகழ்வுகள் குறித்து அனைத்துலக சமூகம் கரிசனை கொண்டுள்ளது.

நாட்டில் அரங்கேறிய பல்வேறு மனித உரிமை மீறல்களை சிறீலங்கா அரசாங்கம் விசாரணை செய்யத் தவறியுள்ளது. பிரான்ஸ் ACF நிறுவனத்தின் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான விசாரணைகள் இடம்பெறவில்லை. இதுவரை, தமிழீழ விடுதலைப் புலிகளைக் கண்டித்து, அவர்கள் மீது பயங்கரவாத முத்திரையை அனைத்துலக சமூகம் குத்தியது. ஆனால், இப்பொழுது அதேபோன்ற விமர்சனத்தை கொழும்பு அரசாங்கம் எதிர்கொள்கின்றது.

இவ்வாறு மகாஜன அணியின் நிறுவனர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.

சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்த பொழுதும், அதிபர் ராஜபக்ஸவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக செயற்பட்ட வேளையிலும், தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம் கட்டவிழ்த்து விட்ட பயங்கரவாதச் செயல்களை நியாயப்படுத்தி, அனைத்துலக அரங்கில் மங்கள சமரவீர கருத்துரைத்திருந்தமை நினைவூட்டத்தக்கது.

(ஜ.பி.சி)

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பயங்கரவாதியென நாங்கள் சொன்ன மங்கள சமரவீர பயங்கரவாத செயல்களில் சிரீலங்கா அரசு என சொல்லும் அளவு ராசபக்ச அரசை வருனிப்பது வரவேற்க படுகிறது. ஆனால் இயக்கத்தின் செய்தியை செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்றத்தில் சொல்லி தெரியவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது வேதனைக்குரியது.

மகிந்தவை ஓரம் கட்டத் தொடங்கிவிட்டது அனைத்துலகம்: மங்கள சமரவீர

சிறிலங்காவையும் அதன் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவையும் அனைத்துலகம் ஓரங்கட்ட தொடங்கி விட்டதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சின் மக்கள் பிரிவின் அமைப்பாளர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் அவர் ஆற்றிய உரை:விபரங்களுக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.