Jump to content

பாகிஸ்தான் இங்கிலாந்து டெஸ்ட் தொடர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து சார்பாக அதிக டெஸ்ட் ஓட்டங்களைக் குவித்து சாதனை படைத்தார் ஜோ ரூட்

image

(நெவில் அன்தனி)

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து சார்பாக அதிக ஓட்டங்களைக் குவித்தவர் என்ற சாதனையை ஜோ ரூட் இன்று புதன்கிழமை (09) படைத்தார்.

0910_harry_brook.png

பாகிஸ்தானுக்கு எதிராக முல்தானில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 71ஆவது ஓட்டத்தைப் பெற்றபோது இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் அலிஸ்டெயா குக்கின் 12472 ஓட்டங்கள் என்ற சாதனையை முறியடித்து  ஜோ ரூட்  முன்னிலை அடைந்தார்.

0910_joe_root_and_harry_brook.png

கணிசமான மொத்த எண்ணிக்கைகள் பெறப்பட்டுவரும் அப் போட்டியில் ஜோ ரூட் சதம் குவித்து அசத்தினார்.

தனது 147ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஜோ ரூட் 35ஆவது சதத்தைப் பூர்த்திசெய்ததுடன் இதுவரை 12578 ஓட்டங்களை மொத்தமாக பெற்று இங்கிலாந்துக்கான சாதனையாளரானார்.

0910_joe_root_hangs_his_portrait_on_the_

அவருக்கு பக்கபலமாகத் துடுப்பெடுத்தாடி வரும் ஹெரி ப்றூக் தனது 6ஆவது சதத்தைக் குவித்து அசத்தினார்.

அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 243 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளனர்.

போட்டியின் 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 492 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

ஜோ ரூட் 277 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டறிகள் உட்பட 176 ஓட்டங்களுடனும் ஹெரி ப்றூக் 173 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 141 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.

அவர்களைவிட பென் டக்கட் 84 ஓட்டங்களையும் ஸக் க்ரோவ்லி 78 ஓட்டங்களையும் பெற்றனர்.

பாகிஸ்தான் அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 556 ஓட்டங்களைக் குவித்தது.

பாகிஸ்தான் சார்பாக அணித் தலைவர் ஷான் மசூத் 151 ஓட்டங்களையும் சல்மான் அகா ஆட்டம் இழக்காமல் 104 ஓட்டங்களையும் அப்துல்லா ஷக்கிப் 102 ஓட்டங்களையும் சவூத் ஷக்கீல் 82 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஜெக் லீச்160 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்றய்டன் காஸ் 74 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கஸ் அட்கின்சன் 99 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/195896

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடியும் போல் இருக்கு....................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்லாந் முத‌லாவ‌து இனிங்ஸ்சில் பெரிய‌ இஸ்கோர் அடிச்சு இருக்கின‌ம் 823...........................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப்றூக் முச்சதம், ரூட் இரட்டைச் சதம்; பாகிஸ்தானுடனான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து சாதனைகளுடன் ஆதிக்கம்

image

(நெவில் அன்தனி)

முல்தான் கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஹெரி ப்றூக், ஜோ ரூட் ஆகியோரின் அபார துடுப்பாட்டங்களின் உதவியுடன் சாதனைகள் பொழிந்த இங்கிலாந்து ஆட்டத்தின் பிடியை தனதாக்கிக்கொண்டு பாகிஸ்தானை தோல்வியின் விளிம்பிற்கு தள்ளிவிட்டுள்ளது.

1010_joe_root_eng_va_pak.png

இரண்டு அணிகளும்  முதல் இன்னிங்ஸில்   கணிசமான மொத்த எண்ணிக்கைகளைப் பெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் நான்காம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து 152 ஓட்டங்களைப் பெற்று தோல்வியின் விளிம்பில் இருக்கிறது.

1010_england_supporters_in_multan_pakist

இன்னிங்ஸ் தோல்வியில் இருந்து மீள்வதற்கு 4 விக்கெட்கள் மாத்திரம் மீதம் இருக்க மேலும் 115 ஓட்டங்களை பாகிஸ்தான் பெறவேண்டியுள்ளது.

1010_joe_root_262.jpg

கடந்த 7ஆம் திகதி ஆரம்பமான இந்தப் போட்டியில் முதல் இரண்டு தினங்கள் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அதன் முதல் இன்னிங்ஸில், அப்துல்லா ஷபிக் (102), அணித் தலைவர் ஷான் மசூத் (151), சல்மான் அகா (104) ஆகியோர் பெற்ற சதங்களின் உதவியுடன் 556 ஓட்டங்களைக் குவித்தது.

1010_harry_brooke_317.jpg

பதிலுக்கு முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து போட்டியின் நான்காம் நாளன்று ஹெரி ப்றூக் குவித்த முச்சதம், ஜோ ரூட் குவித்த இரட்டைச் சதங்களின் உதவியுடன் சாதனைகள் பொழிந்து ஆட்டத்தின் பிடியை தனதாக்கிக்கொண்டது.

1010_england_players_celebrate_a_wkt_vs_

யோர்க்ஷயர் பிராந்திய அணி வீரர்களான அவர்கள் இருவரும் 4ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 454 ஓட்டங்களின் பலனாக இங்கிலாந்து தனது முதலாவது இன்னிங்ஸை 7 விக்கெட்களை இழந்து 823 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் நிறுத்திக்கொண்டது.

ஹெரி ப்றூக் 317 ஓட்டங்களைக் குவித்து தனது அதிகூடிய இன்னிங்ஸ் எண்ணிக்கையைப் பதிவுசெய்தார்.

ஜோ ரூட் 262 ஓட்டங்களைப் பெற்றார். இது அவரது தனிப்பட்ட அதிகூடிய இன்னிங்ஸ் எண்ணிக்கையாகும். ஜோ ரூட் குவித்த 6ஆவது இரட்டைச் சதம் இதுவாகும்.

இந்தப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதராக அதிகூடிய மொத்த எண்ணிக்கையை இங்கிலாந்து பெற்று வரலாறு படைத்தது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஓர் இன்னிங்ஸில் பெறப்பட்ட நான்காவது அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும்.

இந்தியாவுக்கு எதிராக 1997இல் இலங்கை 6 விக்கெட்களை இழந்து குவித்த 952 ஓட்டங்களே ஓர் இன்னிங்ஸில் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகும்.

அடுத்த அதிகூடிய மொத்த எண்ணிக்கைகள் வருமாறு:

1938 தி ஓவல் மைதானம் இங்கிலாந்து 903 - 7 விக். எதிர் அவுஸ்திரேலியா.

1930 கிங்ஸ்டன் மைதானம் இங்கிலாந்து 849  எதிர்   மேற்கிந்தியத் தீவுகள்.

இதேவேளை, இங்கிலாந்து சார்பாக அதிகூடிய டெஸ்ட் ஓட்டங்களைப் பெற்றவர் என்ற சாதனையை நேற்று நிலைநாட்டிய ஜோ ரூட், 147 டெஸ்ட் போட்டிகளில் 12664 ஓட்டங்களை மொத்தமாக குவித்துள்ளார். அதிக டெஸ்ட் ஓட்டங்கள் குவித்தவர்கள் வரிசையில் சச்சின் டெண்டுல்கர் (15921), ரிக்கி பொன்டிங் (13378), யக் கலிஸ் (13289), ராகுல் ட்ராவிட் (13288) ஆகியோருக்கு அடுத்ததாக ஜோ ரூட் 5ஆவது இடத்தில் உள்ளார்.

இதனிடையே இன்னும் பல சாதனைகளை இங்கிலாந்து நிலைநாட்டியது.

சாதனைகள் - மைல்கற்கள்

1. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 800 ஓட்டங்களுக்கு மேல் குவித்த முதலாவது அணி என்ற பெருமையை இங்கிலாந்து பெற்றுக்கொண்டது. இதன் மூலம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு சொந்தமாக இருந்த 66 வருட சாதனையை இங்கிலாந்து முறியடித்தது. கிங்ஸ்டன் மைதானத்தில் 1958இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் 3 விக்கெட்களை இழந்து 790 ஓட்டங்களைக் குவித்திருந்தது.

மேலும் இங்கிலாந்து குவித்த மொத்த எண்ணிக்கை பாகிஸ்தானில் டெஸ்ட் இன்னிங்ஸில் ஒன்றில் பெறப்பட்ட அதிகூடிய  எண்ணிக்கையாகும். இலங்கைக்கு எதிராக கராச்சியில் 2009ஆம் ஆண்டு பாகிஸ்தான் 6 விக்கெட்களை இழந்து 765 ஓட்டங்களைப் பெற்றிருந்ததே இதற்கு முன்னர் பாகிஸ்தான் மண்ணில் இன்னிங்ஸ் ஒனறில் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாக  இருந்தது.

2. ஜோ ரூட், ஹெரி ப்றூக் ஆகியோரிடையே நான்காவது விக்கெட்டில் பகிரப்பட்ட 454 ஓட்டங்களானது டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கான அதிகூடிய இணைப்பாட்டமாகும். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 67 வருடங்களுக்கு முன்னர் 1957இல் பீட்டர் மே, கொலின் கௌட்றி ஆகிய இருவரும் பகிர்ந்த 411 ஓட்டங்களே 4ஆவது விக்கெட்டுக்கான இங்கிலாந்தின் முன்னைய அதிசிறந்த இணைப்பாட்டமாக இருந்தது.

3. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஜோ ரூட், ஹெரி ப்றூக் ஆகியோரின் இந்த இணைப்பாட்டமானது மஹேல - சங்கக்கார (624 எதிர் தென் ஆபிரிக்கா), சனத் - மஹநாம (576 எதிர் இந்தியா), மார்ட்டின் குறோ - ஜோன்ஸ் (467 எதிர் இலங்கை) ஆகிய ஜோடியினரின் இணைப்பாட்டங்களுக்கு அடுத்ததாக நான்காவது சிறந்த இணைப்பாட்டமாகும்.

எவ்வாறாயினும் விருந்தாளிகள் என்ற வகையில் ஜோ ரூட், ஹெரி ப்றூக் ஜோடியினரின் இந்த இணைப்பாட்டம் அந்நிய மண்ணில் குவிக்கப்பட்ட அதிகூடிய ஓட்டங்களைக் கொண்ட இணைப்பாட்டமாக பதிவானது. இதற்கு முன்னர் தி ஒவல் மைதானத்தில் 1934இல் டொன் ப்றட்மன், பில் பொன்ஸ்போர்ட் ஆகியோர் பகிர்ந்த 451 ஓட்டங்களே விருந்தாளி ஜோடியினரால் பெறப்பட்ட அதிகூடிய இணைப்பாட்டமாக இருந்தது.

4. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஓரே இன்னிங்ஸில் 250 ஓட்டங்களுக்கு மேல் இருவர் (ஜோ ரூட், ஹெரி ப்றூக்) குவித்த 3ஆவது சந்தர்ப்பம் இதுவாகும். அவர்களை விட பாகிஸ்தானுக்கு எதிராக 1958இல் கொன்ரட் ஹன்ட் - கார்பீல்ட் சோபர்ஸ் ஜோடியினரும் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக 2006இல் மஹேல ஜயவர்தன - குமார் சங்கக்கார ஜோடியினரும் இந்த அரிய மைல்கல் சாதானையை நிலைநாட்டியிருந்தனர்.

இங்கிலாந்து சார்பாக இரட்டைச் சதங்கள் குவித்த இரண்டாவது ஜோடியினர் ஜோ ரூட், ஹெரி ப்றூக் ஆவர். இந்தியாவுக்கு எதிராக 1985இல் க்ரேம் பௌலரும் மைக் கெட்டிங்கும் இரட்டைச் சதங்கள் குவித்த முதலாவது இங்கிலாந்து ஜோடி ஆவர்.

5. பாகிஸ்தானுக்கு எதராக பாகிஸ்தானில் விளையாடிய நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் சதங்கள் குவித்த முதலாவது இங்கிலாந்து வீரர் ஹெரி ப்றூக் ஆவார். பாகிஸ்தானுக்கு எதிராக நான்கு டெஸ்ட்களில் தொடர்ச்சியாக சதம் குவித்தவர்கள் வரிசையில் ப்றயன் லாரா, யக் கலிஸ், டேவிட் வோனர், கேன் வில்லியம்ஸன் ஆகியோருக்கு அடுத்தபடியாக ஐந்தாவது இடத்தில் ஹெரி ப்றூக் இடம்பெறுகிறார்.

முதலாவது டெஸ்ட் போட்டி எண்ணிக்கை சுருக்கம்

பாகிஸ்தான் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 556 (ஷான் மசூத் 151, சல்மான் அகா 104, அப்துல்லா ஷபிக் 102, சவூத் ஷக்கீல் 82, ஜெக் லீச் 160 - 3 விக்., ப்றைடன் காஸ் 74 - 2 விக்., கஸ் அட்கின்சன் 99 - 2 விக்.)

இங்கிலாந்து 1ஆவது இன்: 823 - 7 விக். டிக்ளயார்ட் (ஹெரி ப்றூக் 317, ஜோ ரூட் 262, பென் டக்கட் 84, ஸக் க்ரோவ்லி 78, சய்ம் அயூப் 101 - 2 விக்.), நசீம் ஷா 157 - 2 விக்.)

பாகிஸ்தான் 2ஆவது இன்: 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 152 - 6 விக். (சல்மான் அகா 41 ஆ.இ., சவூத் ஷக்கீல் 29, ஆமிர் ஜமால் 27 ஆ.இ., சய்ம் அயூப் 25, கஸ் அட்கின்சன் 28 - 2 விக்., ப்றைடன் காஸ் 39 - 2 விக்.)

https://www.virakesari.lk/article/195986

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானை இன்னிங்ஸால் வென்றது இங்கிலாந்து; வரலாறு ஏடுகளில் பதிவான மற்றொரு டெஸ்ட்

image

(நெவில் அன்தனி)

பாகிஸ்தானுக்கு எதிராக முல்தானில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 47 ஓட்டங்களால் இங்கிலாந்து அபார வெற்றியீட்டியது.

போட்டியின் கடைசி நாளான இன்று வெள்ளிக்கிழமை (11) காலை இன்னிங்ஸ் தோல்வியில் இருந்து மீள்வதற்கு மேலும் 115 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 152 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த பாகிஸ்தான், சகல விக்கெட்களையும் 220 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இன்னிங்ஸில் 500க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்து இன்னிங்ஸால் தோல்வி அடைந்த முதலாவது அணி என்ற பெயரை வரலாற்று ஏடுகளில் பாகிஸ்தான் பதித்துக்கொண்டது.

ஷான் மசூதின் டெஸ்ட் தலைமையில் பாகிஸ்தான் அடைந்த 6ஆவது நேரடி டெஸ்ட் கிரிக்கெட் தோல்வி இதுவாகும்.

இப் போட்டி, கடைசி நாளான இன்றைய பகல் போசன இடைவேளைக்கு சற்று முன்னர் நிறைவுக்கு வந்தது.

நான்காம் நாள் ஆட்ட நேர முடிவின்போது ஆட்டம் இழக்காமல் இருந்த சல்மான் அகா, ஆமிர் ஜமால் ஆகிய இருவரும் இன்று காலை திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்களைப் பூர்த்தி செய்தனர்.

அத்துடன் 7ஆவது விக்கெட்டில் 109 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

ஆனால், அகாவின் விக்கெட் உட்பட இன்றைய தினம் வீழ்ந்த 3 விக்கெட்களையும் ஜெக் லீச் கைப்பற்றி இங்கிலாந்தின் வெற்றியை உறுதிசெய்தார்.

கடைசி ஆட்டக்காரர் அப்ரார் அஹ்மத் சுகவீனம் காரணமாக துடுப்பெடுத்தாடவில்லை.

இந்தப் போட்டியில் இன்னிங்ஸால் வென்ற இங்கிலாந்து, 48 வருடங்களின் பின்னர் ஆசிய கண்டத்தில் தனது இரண்டாவது இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவு செய்தது.

டெல்லியில் 1976ஆம் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியிலேயே ஆசிய கண்டத்தில் கடைசியாக இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 25 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது.

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் இதே மைதனாத்தில் அக்டோபர் 15ஆம் திகதி ஆரம்பமாவதுடன் கடைசி டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் அக்டோபர் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

எண்ணிக்கை சுருக்கம்

பாகிஸ்தான் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 556 (ஷான் மசூத் 151, சல்மான் அகா 104, அப்துல்லா ஷபிக் 102, சவூத் ஷக்கீல் 82, ஜெக் லீச் 160 - 3 விக்., ப்றைடன் காஸ் 74 - 2 விக்., கஸ் அட்கின்சன் 99 - 2 விக்.)

இங்கிலாந்து 1ஆவது இன்: 823 - 7 விக். டிக்ளயார்ட் (ஹெரி ப்றூக் 317, ஜோ ரூட் 262, பென் டக்கட் 84, ஸக் க்ரோவ்லி 78, சய்ம் அயூப் 101 - 2 விக்.), நசீம் ஷா 157 - 2 விக்.)

பாகிஸ்தான் 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 260 (சல்மான் அகா 63, ஆமிர் ஜமால் 55 ஆ.இ., சவூத் ஷக்கீல் 29, சய்ம் அயூப் 25, கஸ் அட்கின்சன் 28 - 2 விக்., ப்றைடன் காஸ் 39 - 2 விக்.)

1110_salman_aga.png

1110_eng_capt_ollie_pope_and_pak_capt_sh

https://www.virakesari.lk/article/196039

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கிஸ்தான் அணிக்கு என்ன‌ ஆச்சு அன்மைக் கால‌மாய்

 

எத்த‌னையோ அனுப‌வ‌மான‌ வீர‌ர்க‌ள் விளையாடின‌ அணியில் உப்பு ச‌ப்பில்லா விளையாட்டு விளையாடுகின‌ம்

 

முத‌லாவ‌து ரெஸ் விளையாட்டை ச‌ம‌ நிலையில் முடிந்து இருக்க‌ வேண்டும் ஆனால் அத‌ற்கான‌ முய‌ற்ச்சியில் பாக்கி வீர‌ர்க‌ள் செய‌ல் ப‌ட‌ வில்லை....................

 

ப‌ழைய‌ வீர‌ர்க‌ள் என்றால் போராடும் குன‌ம் ப‌டைத்த‌வ‌ர்க‌ள் இப்ப‌ இருக்கும் இள‌ம் வீர‌ர்க‌ளுக்கு அனுப‌வ‌ம் மிக‌ மிக‌ குறைவு..................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறிமுக வீரர் குலாம் குவித்த சதத்தால் பலமான நிலையை நோக்கி பாகிஸ்தான்

image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்துக்கு எதிராக முல்தான் கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (15) ஆரம்பமான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுக வீரர் கம்ரன் குலாம் குவித்த சதத்தின் உதவியுடன் பாகிஸ்தான் பலமான நிலையை நோக்கி நகர்கிறது.

1510_kamran_ghulam...png

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பாகிஸ்தான் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 259 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

பாகிஸ்தான் அதன் முதல் இரண்டு விக்கெட்களை 19 ஓட்டங்களுக்கு இழந்து பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது.

எனினும் சய்ம் அயூப், கம்ரன் குலாம் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 149 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தினர்.

சய்ம் அயூப் 77 ஓட்டங்களைப் பெற்றார்.

நியூஸிலாந்துக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான கம்ரன் குலாம் அப் போட்டியில் துடுப்பெடுத்தாடவோ பந்துவீசவோ இல்லை. மாறாக களத்தடுப்பில் மாத்திரம் ஈடுபட்டார்.

அதன் பின்னர் சர்வதேச டெஸ்ட் அரங்கில் இன்றைய போட்டியில் அறிமுகமான கம்ரன் குலாம், ஓர் அனுபவசாலிபோல் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 224 பந்தகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 118 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து 5ஆவது விக்கெட்டில் மொஹமத் ரிஸ்வானுடன் மேலும் 65 ஓட்டங்களை கம்ரன்  குலாம் பகிர்ந்தார்.

மொஹமத் ரிஸ்வான் 37 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதுள்ளார்.

இங்கிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெற்றுவரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்டில் வெற்றிபெற்ற இங்கிலாந்து 1 - 0 என முன்னிலை வகிக்கிறது.

https://www.virakesari.lk/article/196388

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கிஸ்தான் இன்று சில‌து வெல்ல‌க் கூடும்....................

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த போரில் கிள்ளி பார்த்தாலும் ஆச்சரியம் தீராதது இஸ்ரேலின் உளவுதுறைதான். எப்படி இவர்களால் இதெல்லாம் முடியுது என்பது பிரமிக்கவைப்பது. கமாஸ் ஹிஸ்புல்லாஹ் தலைமையை அழிப்போம் என்று அறிவித்தார்கள் சொல்லி ஒரு சிலமாதங்களிலேயே ஒட்டுமொத்தமாக காலி பண்ணுகிறார்கள், ஏனையவர்களுக்கு இதெல்லாம் பாகிஸ்தான் பார்டருக்கு போய் தீவிரவாதிகளை அழித்து அதன் தலைவரை தமிழ்நாட்டுக்கு பிடித்துவரும் விஜயகாந்த் படங்களில் மட்டுமே சாத்தியம் ஆனானப்பட்ட அமெரிக்காவே உலகமெங்கும் அவர்களின் படைகளை கொண்டு கடைவிரித்தும், தன்னால் தேடப்படுகிறவர்களாக அறிவித்தவர்களை பல வருடங்களின் பின்னரே வேட்டையாட முடிகிறது, அதிலும் அமெரிக்காவால் தேடி களைத்துபோன ஒருசிலரை  இஸ்ரேலே இந்தபோரில் தேடி போட்டு தள்ளியிருக்கிறது. இத்தனைக்கும் அவர்களெல்லாம் நிலத்தடியிலும் பாதுகாப்பான நாடுகளிலும் அடிக்கடி இடத்தை மாற்றி, தொடர்பாடல் முறையை மாற்றி பதுங்கியிருந்தவர்கள், இஸ்ரேலின் இந்த சாகசங்களுக்கு அவர்களின் ஏஐ தொழில்நுட்பம் பாதி காரணமென்றாலும் மீதிகாரணம் இஸ்ரேலுக்கு உளவுதகவல் சொல்லி கூட இருந்து குழி பறிக்கும் அங்குள்ள முஸ்லீம்களே. தொழில்நுட்பம் முகங்களை குரல்களைதான் தேடி கண்டு பிடிக்கும், இந்த கட்டிடத்துக்கு இத்தனை மணிக்கு ஒன்றுகூட வருகிறார்கள் என்றெல்லாமா சொல்லும்?
    • கடந்த வருடம் இஸ்ரேலின் மேல் நடத்தப்பட்ட அருவருக்கத்தக்க தாக்குதலின் சூத்திரதாரி இவர்தான். இத்தாக்குதலின் ஊடாக பலஸ்த்தீன மக்களின் அறப்போராட்டத்தின் மீதான சர்வதேச அனுதாபத்தினை இவர் இழக்கவைத்தார். பலமுறை ஹமாஸிற்கும் இஸ்ரேலிற்கும் இடையே நடந்துவந்த பணயக் கைதிகள் விடுவிப்புத் தொடர்பான பேச்சுக்களில் மிகக்கடுமையாக இவர் நடந்துகொண்டார் என்றும் கூறுகிறார்கள். இவரது இழப்பால் ஹமாஸின் போராட்டம் முற்றுப்பெற்றதாக நான் நினைக்கவில்லை, ஏனென்றால் பலஸ்த்தீன மக்களின் அவலங்கள் இன்னும் அப்படியே இருக்கின்றன.  பலஸ்த்தீன மக்களுக்கான சுமூக வாழ்வினை, அவர்கள் தங்கள் வாழிடத்தில் நிம்மதியாக அனுபவிக்க இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும். இஸ்ரேலை அழிப்பதே தமது ஒரே குறிக்கோள் என்று கருதுவதை ஈரானின் முல்லாக்களும் அதன் கூலிகளும் இப்போதாவது உணர்ந்துகொள்ள வேண்டும். இவரின் கடைசி நேர வீடியோவைப் பார்த்தேன் இடிபாடுகளுக்குள் அகப்பட்டு, காயப்பட்ட நிலையில் ஒரு கதிரையில் அமர்ந்திருக்கிறார். அவரை நோக்கி இஸ்ரேலின் ட்ரோன் ஒன்று செல்கிறது. அதனை நோக்கி அருகில் இருந்த பலகை ஒன்றினை  எடுத்து எறிகிறார், ட்ரோன் விலக்கிக்கொள்கிறது. அடுத்த சில நிமிடங்களில் பூரண இராணுவ உடையில் அவரது சடலம் கீழே கிடக்க அருகில் இஸ்ரேலிய விசேட படைகள் நிற்கின்றனர். இறுதிவரை தன் மக்களுக்காகப் போரிட்டு மடிந்த தலைவர் என்று பலஸ்த்தீனர்கள் இவரது இறப்பிற்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். இவரது உடலை இஸ்ரேல் எடுத்துச் சென்று பல் ஆய்வுகளின் மூலம்  இவர் சின்வார்தான் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது.  சுமார் 20வருடங்களாக இஸ்ரேலின் சிறையில் இருந்த சின்வார் 2011 ஆம் ஆண்டில் ஹமாஸினால் பணயக் கைதியாகப் பிடிக்கப்பட்டிருந்த இஸ்ரேலிய இராணுவ வீரன் ஒருவனின் விடுதலைக்காக இஸ்ரேலினால் விடுவிக்கப்பட்ட 1000 ஹமாஸ் உறுப்பினர்களில் ஒருவராக வெளியில் வந்தவர் . படிப்படியாக ஹமாஸின் தலைமைப்பொறுப்புக்களைப் பெற்ற இவர் முன்னாள் தலைவரின் இறப்பிற்குப் பின்னர் பிரதான தலைமைப்பொறுப்பை எடுத்தவர். சிறையில் இருந்த காலத்தில் மூளையில் வளர்ந்துவந்த கட்டியொன்றினை இஸ்ரேலிய இராணுவ மருத்துவர்கள் அகற்றி இவரைக் காப்பாற்றியும் இருந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.  https://edition.cnn.com/2024/10/17/world/video/sinwar-hamas-leader-killed-final-moments-idf-drone-lead-digvid
    • இங்கு புலம்பெயர் நாடுகளில் வாழும் பலர் அநுரகுமாரவை வானளவாகப் புகழ்ந்து தள்ளுகிறார்கள். இதுவரை வந்த சிங்களத் தலைவர்களை விடவும் இவர் தமிழர்களைப் பொறுத்தவரை சிறப்பானவர் என்று சத்தியம் செய்கிறார்கள். ஆனால் அநுர பேசும் நாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சி என்பது தனியே தமிழருக்கு மட்டுமே பொருந்துவதில்லை. ஒட்டு மொத்த நாட்டிற்கும் பொருந்துவது, குறிப்பாக 80 வீதமாக சனத்தொகையில் இருக்கும் சிங்களவர்களுக்கானது. டில்வின் சில்வாவின் கூற்றில் இருக்கும் யாழ்ப்பாணத் தமிழர்களின் "புலம்பெயர் உறவுகள்" என்பதனூடாக அவர் யாழ்ப்பாணத்தவர்களுக்கு அதிகம் பிரச்சினை இருப்பதாக ஒத்துக்கொள்ளவில்லை என்றே எடுத்துக்கொள்ளலாம். வன்னியிலும் கிழக்கிலும் வாழும் தமிழர்கள் டில்வின் சில்வா கூறுவது போல கஸ்ட்டத்திலேயே வாழ்கிறார்கள். அது உண்மைதான். அதுசரி, அநுரவுக்குச் செம்புதூக்கும் அடிவருடிகளும், பக்தகோடிகளும் தமிழரின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு அவர் என்ன தீர்வு வைத்திருக்கிறார் என்பதையாவது இதுவரை கேட்டார்களா?  அல்லது தமிழர்களுக்கு பொருளாதாரப் பிரச்சினைகளைக் காட்டிலும் வேறு பிரச்சினைகளும் இருக்கின்றனவா?  இன்று அநுரவைத் தூக்கிக் கொண்டாடும் புலம்பெயர்ந்த தமிழர்கள் இப்பிரச்சினைகள் குறித்து என்ன முடிவில் இருக்கிறார்கள்? ஒன்றில் அவர்கள் தமிழர்களுக்கு வேறு பிரச்சினைகள் இல்லை என்கிற முடிவிற்கு வந்திருக்க வேண்டும் அல்லது அப்பிரச்சினைகளைக் கடந்து சென்றுவிடலாம், இனி அதுகுறித்துப் பேசத் தேவையில்லை என்கிற முடிவிற்கு வந்திருக்க வேண்டும். இவற்றுள் எதனை அவர்கள் தெரிவுசெய்தாலும் தமிழர்களின் நிலை ஒரு இனமாகப் பலவீனப்படப் போகின்றதே ஒழிய பலமடையப்போவதில்லை. சிங்களவருக்கு இருப்பதைப் போன்ற பொருளாதாரப் பிரச்சினைகளுக்காகத்தான் தமிழர்கள் சுதந்திர காலத்திலிருந்து கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் உறவுகளைக் காவுகொடுத்து போரிட்டார்களா என்று இன்று அநுரவுக்கு விசுவாசம் காட்டும் புலம்பெயர் தமிழர்களைக் கேட்கத் தோன்றுகின்றது. 
    • அருமை வசி! அதிலும் ஒரு கருத்தை முன்வைக்கும் பக்குவம் இருக்கின்றதே, அருமையிலும் அருமை. 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.