Jump to content

கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகள் மீதான தாக்குதலிற்கு அமித்ஷா அனுமதி வழங்கினாரா? வோசிங்டன் போஸ்ட் தகவல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
image

கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகள் மீதான தாக்குதலிற்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அனுமதி வழங்கினார் என கனடா அதிகாரிகளை மேற்கோள்காட்டி வோசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

கனடாவிலிருந்து வெளியேற்றப்பட்ட இந்திய அதிகாரிகள் மத்தியிலான தொடர்பாடல்களில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் இந்தியாவின் ரோ அமைப்பின் சிரேஸ்ட அதிகாரிகள் குறித்து குறிப்பிடப்பட்டிருந்ததாக கனடா அதிகாரிகள் இந்திய அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளனர் என வோசிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.

புலனாய்வு தகவல்களை சேகரித்தலில் ஈடுபடுமாறும் சீக்கிய பிரிவினைவாதிகள் மீது தாக்குதலை மேற்கொள்ளுமாறு இந்திய உள்துறை அமைச்சரும் ரோவின் அதிகாரிகளுமே உத்தரவிட்டனர் என்பது வெளியேற்றப்பட்டுள்ள இந்திய அதிகாரிகள் மத்தியிலான உரையாடல் மூலம் தெரியவந்துள்ளதாக வோசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒக்டோபர் 12ம் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டொவால், கனடாவின் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் மத்தியில் இடம்பெற்ற வெளியில் தெரியவராத சந்திப்பின் போது இந்த விடயம் குறித்து கனடா அதிகாரிகள் தகவல்களை வழங்கியுள்ளனர் என வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

மேலும் இடைமறித்து கேட்கப்பட்ட தகவல்களின் போது பெயர்கள் வெளியான நபர்களை விசாரணை செய்வதற்கு கனடா இந்தியாவின் அனுமதியை கோரியது என தெரிவித்துள்ள வோசிங்டன் போஸ்ட் அவர்களிற்கான இராஜதந்திர விடுபாட்டுரிமையை நீக்குமாறு கனடா விடுத்த வேண்டுகோளை இந்தியா நிராகரித்துள்ளது என செய்தி வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்தே இந்திய தூதுவர் உட்பட அதிகாரிகளை கனடா வெளியேற்றியது என வோசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/196410

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

கனடாவிலிருந்து வெளியேற்றப்பட்ட இந்திய அதிகாரிகள் மத்தியிலான தொடர்பாடல்களில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் இந்தியாவின் ரோ அமைப்பின் சிரேஸ்ட அதிகாரிகள் குறித்து குறிப்பிடப்பட்டிருந்ததாக கனடா அதிகாரிகள் இந்திய அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளனர் என வோசிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.

கனடாவில் மாத்திரமல்ல இங்கிலாந்திலும் இதே மாதிரியான தாக்குதல்கள் நடத்தியதை விசாரிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

கனடாவில் மாத்திரமல்ல இங்கிலாந்திலும் இதே மாதிரியான தாக்குதல்கள் நடத்தியதை விசாரிக்க வேண்டும்.

காந்தி தேசத்தின்... எல்லை தாண்டிய பயங்கரவாதம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

காந்தி தேசத்தின்... எல்லை தாண்டிய பயங்கரவாதம்.

மேற்கு நாடுகள் ரசியா இவைகளைப் பார்த்து இந்தியாவும் எப்போதோ தொடங்கிவிட்டது.

அமெரிக்காகாரர் இதில் கில்லாடிகள்.விட்டுட்டு பின்னால் திரிந்து முழுவதுமாக அள்ளுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

மேற்கு நாடுகள் ரசியா இவைகளைப் பார்த்து இந்தியாவும் எப்போதோ தொடங்கிவிட்டது.

அவர்கள்... பிடிபடாமல் செய்வார்கள்,
இவர்கள்.... செய்துவிட்டு, பிடிபட்டு விடுவார்கள். 😂

  • Haha 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.