Jump to content

இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் உலக சாதனைப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி - நியூசிலாந்து வரலாற்று வெற்றியை பெற்றது எப்படி?

இந்தியா - நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ரிஷப் பந்த் ஆட்டமிழந்த காட்சி.  

புனேவில் நடந்த இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 113 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இன்னும் 2 நாட்கள் மீதமிருக்கும் நிலையிலேயே இரண்டாது டெஸ்ட போட்டி முடிவுக்கு வந்துள்ளது.

முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 259 ரன்களும், இந்திய அணி 156 ரன்களும் சேர்த்தன. நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 103 ரன்கள் முன்னிலை பெற்று ஆடி, 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, 359 ரன்கள் இலக்கோடு இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி, 245 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி அடைந்தது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்கறு நியூசிலாந்து அணி புதிய வரலாறு படைத்துள்ளது.

இந்தியாவுக்கு 359 ரன் இலக்கு

நியூசிலாந்து அணி நேற்றைய இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் சேர்த்து, 301 ரன்கள் என பெரிய முன்னிலை பெற்றிருந்தது. டாம் பிளென்டல் 30 ரன்னிலும், கிளென் பிலிப்ஸ் 9 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து இன்றைய ஆட்டத்தைத் தொடர்ந்தனர். டாம் பிளென்டன் 41 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

இதைத் தொடர்ந்து கடைசிவரிசை பேட்டர்களான சான்ட்னர் (4), சவுத்தி (0), அஜாஸ் படேல் (1), ரூர்கே (0) என வரிசையாக ஜடேஜா, அஸ்வின், சுந்தர் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தனர். காலை தேநீர் இடைவேளைக்கு முன்பாகவே நியூசிலாந்து அணி 255 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழந்து, இந்திய அணிக்கு 359 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

டி20 போல் அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால்

359 ரன்கள் இலக்கைத் துரத்த இந்திய அணிக்கு 3 நாட்கள் வரை அவகாசம் இருந்தது. ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா இருவரும் இந்திய அணியின் இன்னிங்சைத் தொடங்கினர். ரோகித் சர்மா நிதானமாக பேட் செய்ய, ஜெய்ஸ்வால் அதிரடியாக ரன்களைச் சேர்த்தார். நிதானமாக ஆட முயன்றாலும் ரோகித் சர்மாவால் நீண்டநேரம் நிலைக்க முடியவில்லை. , 8 ரன்களில் சான்ட்னர் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த கில், ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து ரன்களைச் சேர்த்தார்.

இருவரும் களத்தில் இருந்தவரை ரன்கள் வேகமாக வந்தன. டி20 போட்டியைப் போல் இருவரும் அதிரடியாக ஆடியதால் 8.2 ஓவர்களில் இந்திய அணி 50 ரன்களை எட்டியது. ஜெய்ஸ்வால் சிக்ஸர், பவுண்டரிகளாக அடித்து ரன்ரேட்டை உயர்த்தினார்.

உணவு இடைவேளையின் போது இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்தது. ஜெய்ஸ்வால் 40 பந்துகளில் அரைசதத்தைப் பதிவு செய்தார். கில், ஜெய்ஸ்வால் பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைக் கடந்து சென்றது.

இந்தியா - நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஜெய்ஸ்வால் சிக்ஸர், பவுண்டரிகளாக அடித்து ரன்ரேட்டை உயர்த்தினார்.

இந்திய அணியை சுருட்டிய சான்ட்னர்

நிதானமாக பேட் செய்த கில் 23 ரன்களில் சான்ட்னர் பந்துவீச்சில் மிட்ஷெலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தனர். 15.2 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை 96 பந்துகளில் எட்டி வேகமாக இலக்கை நோக்கி நகர்ந்தது.

அடுத்து கோலி களமிறங்கி, ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்தார். அதிரடியாக ஆடிவந்த ஜெய்ஸ்வால் 65 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்த நிலையில் சான்ட்னர் பந்துவீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். இதன்பின் இந்திய அணியின் சரிவு தொடங்கியது. அடுத்துவந்த ரிஷப் பந்த் ரன் அவுட் செய்யப்பட்டு டக்-அவுட் ஆனார்.

இந்தியா - நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

சான்ட்னரின் ‘ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப்’ பந்துவீச்சில் காலை நகர்த்தாமல் ஆடி விராட் கோலி 17 ரன்னில் ஆட்டமிழந்தார். சர்ஃபிராஸ் கான் களத்துக்கு வந்தது முதலே தனது காலை நகர்த்தாமலேயே சான்ட்னரின் பந்துவீச்சை எதிர்கொண்டு பல தவறுகளைச் செய்தார்.

லேசாக டர்ன் ஆகும் வகையில் சான்ட்னர் வீசிய பந்தைத் தடுத்து ஆட முற்பட்ட போது சர்ஃபிராஸ் கானை ஏமாற்றிய பந்து க்ளீன் போல்டாக்கியது. சர்ஃபிராஸ் கான் 9 ரன்னில் ஏமாற்றமளித்தார்.

அதன் பிறகு இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வரிசையாக இழந்த வண்ணம் இருந்தது. வாஷிங்டன் சுந்தர் (21), அஸ்வின் (18), ஆகாஷ் தீப் (1) என வரிசையாக விக்கெட்டுகளைக் கோட்டைவிட்டனர். கடைசியில் நம்பிக்கையளித்த ஜடேஜா 42 ரன்களில் அஜாஸ் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 96 ரன் என்ற வலுவான நிலையில் ஒரு கட்டத்தில் இருந்தது. ஆனால், அடுத்த 149 ரன்களுக்குள் மீதமிருந்த 9 விக்கெட்டுகளையும் இந்திய அணி இழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணியின் உலக சாதனைப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி

நியூசிலாந்து தொடருக்கு முன்பாக, இந்திய அணி 2013-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 18 டெஸ்ட் தொடர்களை வென்று உலக சாதனையுடன் வீறுநடை போட்டது. இந்திய மண்ணில் நடைபெறும் தொடர் என்பதால், இதனையும் வெற்று சாதனைப் பயணத்தை மேலும் நீட்டிக்கும் முனைப்பில் இந்திய அணி இருந்தது. ஆனால், அதற்கு நியூசிலாந்து அணி தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

தற்போதைய நிலையில், சர்வதேச டெஸ்டில் இந்திய அணி தொடர்ச்சியாக 18 முறை தொடர்களை வென்றதே சாதனையாக இருக்கிறது. ஆஸ்திரேலியா இருமுறை தொடர்ந்து 10 தொடர்களை வென்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

கடந்த 1983-ஆம் ஆண்டுக்குப் பின் இந்திய அணி ஒரு காலண்டர் ஆண்டில் உள்நாட்டில் 3 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்தது இதுதான் முதல்முறை. ஏறக்குறைய 41 ஆண்டுகளுக்குப் பின் ஒரே ஆண்டில் உள்நாட்டில் 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது.

புதிய வரலாறு

இதுவரை, நியூசிலாந்து அணி இந்தியாவில் பல ஆண்டுகள் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடர்களில் விளையாடியிருந்தாலும், ஒருமுறைகூட டெஸ்ட் தொடரை வென்றது இல்லை. அந்த வரலாறு இம்முறை மாறியுள்ளது.

இந்திய மண்ணில் பெங்களூருவில் நடந்த டெஸ்டில் வென்ற நியூசிலாந்து அணி, புனேயில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியையும் வென்று டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.

இந்தியா - நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

"ஒட்டுமொத்த அணியின் தோல்வி"

டெஸ்ட் தொடரை இழந்தபின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், “டெஸ்ட் தொடரை இழந்தது வேதனையளிக்கிறது. இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்களைவிட நியூசிலாந்து வீரர்கள் சிறப்பாக விளையாடினர். களத்தில் வந்த சவால்களுக்கு எங்களால் சரியான பதிலடி கொடுக்க முடியாமல் தோல்வி அடைந்துவிட்டோம்,” என்றார்.

மேலும், “சரியாக பேட் செய்தோம் என நான் நினைக்கவில்லை, அதனால்தான் போதுமான ரன்களும் கிடைக்கவில்லை. 20 விக்கெட்டுகளை எடுக்கலாம். அதேசமயம், பேட்டர்களும் ரன்கள் குவிக்க வேண்டும். நியூசிலாந்து அணியை முதல் இன்னிங்ஸில் 100 ரன்களுக்கு மேலாக முன்னிலை பெற வைத்துவிட்டோம். இதற்கு நாங்கள் சரியாக பேட்டிங் செய்யாததுதான் காரணம். நாங்கள் பதிலடி கொடுத்திருக்க வேண்டும், ஆனால், தோற்றுவிட்டோம்,” என்றார்.

“இது அதிகமான ஆட்டங்கள் நடந்த பிட்ச் அல்ல, நாங்கள்தான் சரியாக பேட் செய்யவில்லை. வான்ஹடே மைதானத்தில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியை வெல்ல முயல்வோம். இது அணியின் ஒட்டுமொத்த தோல்வி. எங்கள் முன் நின்ற சவால்களை ஏற்பதில் ஓர் அணியாகத் தோற்றுவிட்டோம்,” எனத் தெரிவித்தார்.

இந்தியா - நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடினமான பாதை, ஒற்றை மனிதரின் சாதனை

இந்தியப் பயணத்துக்கு முன்பாக இலங்கை சென்ற நியூசிலாந்து அணி, அந்நாட்டிடம் டெஸ்ட் தொடரை இழந்தது. இதனால் அனுபவ கேப்டன் கேன் வில்லியம்ஸன் கேப்டன் பதவியிலிருந்து விலகினார். காயம் காரணமாக இந்திய அணிக்கு எதிரான இரு டெஸ்ட் போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை. சிறந்த டெஸ்ட் பேட்டரான வில்லியம்ஸன் இல்லாமலே நியூசிலாந்து அணி இந்தியத் தொடருக்கு வந்தது. ஆனால், இந்திய அணி தயாரித்து வைத்த ஆயுதத்தை எடுத்தே இந்திய அணியை வீழ்த்தி 2-0 என்று டெஸ்ட் தொடரை வென்று புதிய சகாப்தத்தை நிகழ்த்தியுள்ளது.

நியூசிலாந்து அணி, டெஸ்ட் தொடரை வெல்வதற்கு பிரம்மாஸ்திரமாக இருந்தது மிட்ஷெல் சான்ட்னர் எனும் ஒற்றை மனிதர்தான். முதல் இன்னிங்ஸில் 53 ரன்களுக்கு 7 விக்கெட், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட் என ஆட்டத்தையே திருப்பிவிட்டார்.

12 ஆண்டுகளுக்குப்பின் முற்றுப்புள்ளி

அதேசமயம், கடந்த 2012-ஆம் ஆண்டுக்குப்பின் இந்திய மண்ணில் எந்த நாட்டு அணிக்கு எதிராகவும் டெஸ்ட் தொடரை இந்திய அணி இழக்காமல் இருந்து வந்தது.

தற்போது 12 ஆண்டுகளுக்குப்பின் நியூசிலாந்திடம் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்து, தனது சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டது. இதுவரை எந்த அணியும் உள்நாட்டில் டெஸ்ட் தொடரை 12 ஆண்டுகளாக இழக்காமல் பயணித்தது இல்லை. ஆனால், இந்திய அணி மட்டுமே அந்தச் சாதனையை செய்திருந்த நிலையில் அதற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஏறக்குறைய 4,332 நாட்களுக்குப்பின் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்துவிட்டது.

இந்தியா - நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சான்ட்னரின் பந்துவீச்சுத் திட்டத்தை தொடக்கத்திலேயே ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், கில், ரிஷப்பந்த் போன்ற அதிரடி பேட்டர்கள் தகர்த்திருக்கலாம்

இந்திய அணிக்கு என்ன ஆச்சு?

நியூசிலாந்து டெஸ்ட் அணியில் இடம் பெற்ற சுழற்பந்துவீச்சாளர்களான மிட்ஷெல் சான்ட்னர், கிளென் பிலிப்ஸ் இருவருமே டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் இல்லை. அதிலும் சான்ட்னர் இதுவரை டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியதே இல்லை. அப்படியிருந்த வீரர் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளையும் சாய்த்தார்.

ஆனால், டெஸ்ட் சுழற்பந்துவீச்சாளர்கள் என அடையாளம் காணப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின், ரவிந்திர ஜடேஜா ஆகியோரின் சுழற்பந்துவீச்சு புனேவில் சுத்தமாக எடுபடவில்லை இருவரின் பந்துவீச்சையும் நியூசிலாந்து பேட்டர்கள் எளிதாகக் கையாண்டனர். இதில் வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சு மட்டும் விதிவிலக்கு.

இந்திய பேட்டர்கள் சிறிதுகூட நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை திணறச் செய்யும் வகையில் பேட் செய்யவில்லை. அவர்களை நிலைகுலைய வைக்கும் விதத்தில் அதிரடி ஆட்டத்தைக் கையில் எடுக்கவில்லை. அவ்வாறு அதிரடி பாணியை எடுத்திருந்தால், நியூசிலாந்து அணியின் திட்டம் சிதறி, என்ன செய்வதென்று தெரியாமல் தவறுக்கு மேல் தவறு செய்திருப்பார்கள்.

ஆனால், சுழற்பந்துவீச்சைக் கவனமாக ஆட வேண்டும் என்ற நோக்கோடு கூடுதலாக செலுத்திய கவனம், ரன்வேகத்தையும் குறைத்தது. தவறு செய்யவும் வழிவகுத்தது. இந்திய பேட்டர்கள் கூடுதல் கவனம் செலுத்தியதை வாய்ப்பாகப் பயன்படுத்திய சான்ட்னர், ‘ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப்’ பந்துவீசி நெருக்கடியும், அழுத்தத்தையும் அதிகரித்து விக்கெட்டுகளை எளிதாகச் சாய்த்தார்.

சான்ட்னரின் பந்துவீச்சுத் திட்டத்தை தொடக்கத்திலேயே ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், கில், ரிஷப்பந்த் போன்ற அதிரடி பேட்டர்கள் தகர்த்திருக்கலாம். ஆனால், கவனமாக ஆட வேண்டும் என்ற நோக்கோடு ஒவ்வொரு பந்துக்கு ஒவ்வொரு விதமாக செயல்பட்டு அவரை ஃபார்முக்கு இட்டுச் சென்றனர்.

அதேநேரத்தில், நியூசிலாந்து பேட்டர்கள் அஸ்வின், ஜடேஜா ஆகியோரை நிலைகுலையச் செய்யும் விதத்தில் அதிரடி ஆட்டத்தை கையாண்டனர். இது அஸ்வின், ஜடேஜாவின் பந்துவீச்சு உத்தியை குழப்பிவிட்டது. இலங்கை அணிக்கு எதிராக கல்லே நகரில் நடந்த டெஸ்டிலும் இதே உத்தியைத்தான் நியூசிலாந்து அணி கையாண்டது குறிப்பிடத்தக்கது.

சுழற்பந்துவீச்சுக்கு எதிராக எப்போதுமே சிறப்பாக ஆடக் கூடியவர்கள் என்று இந்திய பேட்டர்கள் என அறியப்பட்ட காலம் இருந்தது. அதனால்தான் இந்திய ஆடுகளங்கள் பெரும்பாலும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாகவே அமைக்கப்பட்டன. அப்படியிருந்த இந்திய அணியில் சீனியர் பேட்டர்களான ரோகித் சர்மா, விராட் கோலி போன்றோர் ஜொலிக்காமல் போனது கேள்வியை எழுப்புகிறது.

இந்தியா - நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 6 போட்டிகளில் குறைந்தபட்சம் 4 வெற்றிகள், ஒரு டிராவை இந்திய அணி பதிவு செய்தால்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குச் செல்ல முடியும்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற முடியுமா?

இந்திய அணியின் டெஸ்ட் தொடர் தோல்வி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குச் செல்லும் அதன் பாதையை கடினமாக்கியுள்ளது. தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணியும், முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியும் சிறிய புள்ளிகள் வித்தியாசத்தில்தான் இருக்கின்றன.

இன்னும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 டெஸ்ட் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் என 6 போட்டிகளில் குறைந்தபட்சம் 4 வெற்றிகள், ஒரு டிராவை இந்திய அணி பதிவு செய்தால்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வீரப் பையன்26 said:

நான் நேற்று சொன்னேன் தானே இன்றுட‌ன் விளையாட்டு முடிந்து விடும் என்று 

விளையாட்டு 3 நாள் தான் எடுத்த‌து 5 நாள் விளையாட்டை 

113 ரன்ஸ்சால் நியுசிலாந் பெரிய‌ வெற்றி😁.............................

👍..........

இந்த தோல்விக்கு பின்னால் இந்தியாவின் வளர்ச்சியை பொறுக்க முடியாத ஒரு சில உலக நாடுகளின் சதி இருக்கின்றது என்று சொல்வதைத் தவிர வேறு எதுவும் இப்போது சொல்வதற்கில்லை..........

இதற்கு ஆதாரம் என்னிடம் கேட்காதீர்கள்....... எனக்கு தெரிந்த தகவல்களை நான் சொல்கின்றேன். வேண்டும் என்றால் அந்த சில உலக நாடுகள் இங்கு வந்து இதற்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் கொடுக்கட்டும்...........🤣........(உபயம்: உதய கம்மன்பில).

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ரசோதரன் said:

👍..........

இந்த தோல்விக்கு பின்னால் இந்தியாவின் வளர்ச்சியை பொறுக்க முடியாத ஒரு சில உலக நாடுகளின் சதி இருக்கின்றது என்று சொல்வதைத் தவிர வேறு எதுவும் இப்போது சொல்வதற்கில்லை..........

இதற்கு ஆதாரம் என்னிடம் கேட்காதீர்கள்....... எனக்கு தெரிந்த தகவல்களை நான் சொல்கின்றேன். வேண்டும் என்றால் அந்த சில உலக நாடுகள் இங்கு வந்து இதற்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் கொடுக்கட்டும்...........🤣........(உபயம்: உதய கம்மன்பில).

இந்தியா க‌ப்ட‌னை ரெஸ் விளையாட்டில் சேர்க்க‌ கூடாது , இவ‌ருக்கு ப‌தில் புஜாரா அல்ல‌து ர‌கான‌ இவைய‌ சேர்க்க‌னும்

இந்தியா அணியில் அதிக‌ம் 20ஓவ‌ரில் விளையாடும் வீர‌ர்க‌ளை தான் தெரிவு செய்து இருக்கின‌ம்

அனுப‌வ‌ வீர‌ர் புஜாரா இந்தியா அணிக்கு க‌ண்டிப்பாய் தேவை விக்கேட் விழுந்தாலும் ம‌லை போல் நின்று மெது மெதுவாய் ஆடி ர‌ன்ஸ் அடிப்பார்........................இர‌ண்டு தோல்விக்கும் ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ள் தான் கார‌ண‌ம்😁........................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வீரப் பையன்26 said:

இர‌ண்டு தோல்விக்கும் ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ள் தான் கார‌ண‌ம்😁........................

👍..........

கோலியும், ரோகித்தும் 8, 17 என்று கூட்டுத்தொகை 8 ஆக வரவேண்டும் என்று எண்ணி எண்ணி அடித்து இருக்கின்றார்கள் போல.............🤣

அந்த நாட்களில் ஒரு புரளி இருந்தது. ஈராக் உதைபந்தாட்ட அணி போட்டிகளில் தோற்றால், சதாமின் மகன் உதய் அந்த அணி வீரர்களை இரும்புச் சங்கிலிகளால் கட்டிப் போடுவாராம் என்று.......... இப்ப ஜெய் ஷா அந்தச் சங்கிலிகளை தேடிக் கொண்டிருப்பார் போல........  

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

👍..........

கோலியும், ரோகித்தும் 8, 17 என்று கூட்டுத்தொகை 8 ஆக வரவேண்டும் என்று எண்ணி எண்ணி அடித்து இருக்கின்றார்கள் போல.............🤣

அந்த நாட்களில் ஒரு புரளி இருந்தது. ஈராக் உதைபந்தாட்ட அணி போட்டிகளில் தோற்றால், சதாமின் மகன் உதய் அந்த அணி வீரர்களை இரும்புச் சங்கிலிகளால் கட்டிப் போடுவாராம் என்று.......... இப்ப ஜெய் ஷா அந்தச் சங்கிலிகளை தேடிக் கொண்டிருப்பார் போல........  

5நாள் விளையாட்டுக்கு நிதான‌மும் பொறுமையும் முக்கிய‌ம் குருநாதா

5நாள் விளையாட்டு மூன்று நாளில் முடிந்து போய் விடுது
ப‌ழைய‌ கிரிக்கேட் ஜாம்பவான்க‌ள் நின்று பிடிப்பாங்க‌ள் வெற்றி அடையா விட்டாலும் ம‌ச்சை ச‌ம‌ நிலையில் முடிப்ப‌த‌ற்க்கு க‌டும் முய‌ற்ச்சி ப‌ண்ணுவின‌ம் 

இப்ப‌த்த‌ இள‌ம் வீர‌ர்க‌ள் எல்லாம் காசாசை பிடித்த‌வ‌ர்க‌ள் அதிர‌டியா விளையாடினால் தான் ஜ‌பிஎல் 20 ஓவ‌ர் ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் எங்க‌ளை சேர்ப்பார்க‌ள் என்ற‌ நினைப்பில் விளையாடுகின‌ம்..................

கோலி ரோகித் இருவ‌ரும் ஓய்வை அறிப்ப‌து ந‌ல்ல‌ம் இவ‌ர்க‌ளுக்கு வ‌ய‌தாகிட்டு போக‌ போக‌ ஒழுங்காய் விளையாடுகின‌ம் இல்லை அணிக்கு தான் பாதிப்பு


இல‌ங்கை அணியில் அஞ்ச‌லோ ம‌த்தியூஸ் இவ‌ருக்கு தான் பெரிய‌ வ‌ய‌து ம‌ற்ற‌ வீர‌ர்க‌ள் எல்லாம் இள‌ம் வீர‌ர்க‌ள் அது தான் அவ‌ர்க‌ளால் நிதான‌மாய் நின்று விளையாடி பெரிய‌ இஸ்கோர் அடிக்க‌ முடியுது

நியுசிலாந்த‌ இல‌ங்கை அணி சிம்பிலா வென்ற‌வை

இந்தியா போயும் போயும் சொந்த‌ ம‌ண்ணில் நியுசிலாந்திட‌ம் தோத்து இருக்கின‌ம் ஹா ஹா.......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வார‌ கிழ‌மை ந‌ட‌க்கும் மூன்றாவ‌து ரெஸ் விளையாட்டு 

மும்பை மைதான‌த்தில் ந‌ட‌ப்ப‌தால் அதிக‌ ர‌ன்ஸ்ச எதிர் பார்க்க‌லாம் மும்பை வ‌க்க‌ன்ட் மைதான‌ம் ம‌ட்டை வீர‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம்.................இதில் ஆவ‌து இந்தியா வெல்லுதா என்று பாப்போம் இதிலும் கோட்ட‌ விட்டால் இந்திய‌ வீர‌ர்க‌ள் க‌டும் விம‌ர்ச‌ன‌த்தத‌ ச‌ந்திக்க‌ வேண்டி வ‌ரும்...................நியுசிலாந் தொட‌ரை வென்ற‌ நினைப்பில் துணிந்து அடித்து ஆட‌ பாப்பின‌ம் அப்ப‌டி ந‌டந்தால் விளையாட்டு ச‌ம‌ நிலைய‌ நோக்கி போகும் 

 

இந்தியா வெல்ல‌ க‌டின‌மாய் போராடுவின‌ம்😁...........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா கொச் க‌வுத‌ம் க‌ம்பிர‌

சோச‌ல் மீடியாக்க‌ளில் க‌ழுவி ஊத்தின‌ம் இந்தியாவின் தொட‌ர் தோல்வியால்

 

வீர‌ர்க‌ள் ச‌ரியாக‌ விளையாட‌ விட்டால் கொச்சை வ‌சை பாடுவ‌த‌ ஏற்க்க‌ முடியாது........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கெளதம் கம்பீரை அவமானப்படுத்த வேண்டுமென்றே ரோஹித்தும் கோலியும் விளையாடுவதுபோல தோன்றுகிறது. இந்த இருவருக்கும் கம்பீரை சுத்தமா பிடிக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டெஸ்ட் தொடரில் இந்தியாவை வீழ்த்த நியூசிலாந்தின் சான்ட்னருக்கு சி.எஸ்.கே உதவியதா?

மிட்செல் சான்ட்னர் - நியூசிலாந்து - கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

  • எழுதியவர்,போத்திராஜ்
  • பதவி,பிபிசி தமிழுக்காக

முழுநேர டெஸ்ட் பந்துவீச்சாளராக இல்லாத போதும், சமீபத்தில் புனேவில் நடந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற மிட்செல் சான்ட்னர் முக்கியப் பங்காற்றினார். 69 ஆண்டுகளுக்குப் பின் நியூசிலாந்து அணி இந்தியாவில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி உள்ளது.

நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரிக்குப் பின் சிறந்த சுழற்பந்துவீச்சாளராக மிட்செல் சான்ட்னர் புகழ்பெற்றுள்ளார்.

உண்மையில் டேனியல் வெட்டோரி ஓய்வு பெற்றபின் நியூசிலாந்து அணியில் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் தேவை என்பதால் அணியில் சேர்க்கப்பட்டவர் சான்ட்னர்.

ஆனால், அவரிடம் இருந்து பெரிய அளவிலான ஆகச்சிறந்த பந்துவீச்சு வெளிப்படவில்லை என்பதால், அவருக்கு அதிக அளவில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

 

புனேவில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில்கூட நியூசிலாந்து அணியில் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் பிரேஸ்வெல்லை எடுக்கவே அந்த அணியின் நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. மேலும், ப்ளேயிங் லெவனில் அஜாஸ் படேல், பிரேஸ்வெலுக்குதான் முக்கியத்துவம் அளிக்க முடிவுசெய்திருந்தது.

ஆனால், சொந்தப்பணி காரணமாக பிரேஸ்வெல் தொடரில் இடம் பெறமுடியாததால் சான்ட்னர் ப்ளேயிங் லெவனில் நியூசிலாந்து அணிக்குள் வந்தார்.

யார் காரணம்?

ஆசிய நாடுகளில் கிரிக்கெட் தொடருக்காக நியூசிலாந்து அணி பயணம் செய்யத் தொடங்கிய பின்புதான் சான்ட்னரின் பந்துவீச்சுத் திறமை மெருகேறி, அவரைச் சிறந்த பந்துவீச்சாளராக அடையாளம் காட்டியது.

சான்ட்னரின் பந்துவீச்சில் திடீரென ஏற்பட்ட முன்னேற்றம், நுணுக்கம், துல்லியம் ஆகியவை மெருகேற இலங்கையின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஒருவரும், ஐ.பி.எல் டி20 தொடரும், சி.எஸ்.கே அணியும்தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது.

 
மிட்செல் சான்ட்னர் - நியூசிலாந்து - கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மிட்செல் சான்ட்னர்

புனே டெஸ்ட்: முன்பும்- பின்பும்

குறிப்பாக இந்திய அணிக்கு எதிரான புனே டெஸ்ட் போட்டிக்கு முன்பாக, சான்ட்னர் டெஸ்ட் அரங்கில் ஒருமுறைகூட ஒரே இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை. சான்ட்னரின் அதிகபட்சமே ஒரு இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள்தான்.

உள்நாட்டுப் போட்டிகளிலும் ஒருமுறைதான் சான்ட்னர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். புனே டெஸ்ட் போட்டிக்கு முன்பாக சான்ட்னரின் பந்துவீச்சு சராசரி 42.16 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 91.60 ஆகவும் இருந்தது.

இலங்கை சென்றிருந்த நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை இழந்துதான் இந்தியாவுடன் களமிறங்கியது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்கூட சான்ட்னர் வெகு சிறப்பாக பந்து வீசவில்லை. கல்லே டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட்டை மட்டுமே சான்ட்னர் வீழ்த்தியிருந்தார்.

ஆனால், புனேவில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்குப்பின் ஒரே டெஸ்டில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி, முத்தையா முரளிதரன், மறைந்த ஷேன் வார்ன், சக்லைன் முஸ்தாக், நேதன் லயன் ஆகியோரின் சாதனைக்கு இணையாக சான்ட்னர் உள்ளார்.

ஆனால் புனே டெஸ்ட் போட்டிக்குப்பின் சான்ட்னரின் டெஸ்ட் வாழ்க்கையே தலைகீழாக மாறி, அவரது பந்துவீச்சுக்கு தனி மரியாதை கிடைத்துள்ளது. புனே டெஸ்ட் போட்டிக்குப்பின் சான்ட்னரின் பந்துவீச்சு சராசரி 36.32 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 78.2 ஆகவும் மெருகேறியுள்ளது.

ஒருமுறைகூட 5 விக்கெட்டுகளை வீழ்த்தாத சான்ட்னர் புனே டெஸ்டில் இரு இன்னிங்ஸிலும் 5 விக்கெட்டுகள் என 13 விக்கெட்டுகளை வீழ்த்தி, இரு 5 விக்கெட்டுகள் சாதனையைப் படைத்துள்ளார்.

3 நாட்களில் 'தேசிய ஹீரோ'

நியூசிலாந்து அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் லான் ஸ்மித் வர்ணனையின்போது கூறுகையில் “புனேவில் நடந்த 3 நாட்கள் டெஸ்ட் போட்டிக்குப்பின் நியூசிலாந்தின் தேசிய ஹீரோவாக சான்ட்னர் மாறிவிட்டார்,” என்று பெருமையோடு குறிப்பிட்டார்.

கடினமான இந்திய ஆடுகளம்

சான்ட்னரின் பந்துவீச்சில் திடீரென இந்த முன்னேற்றம் ஏற்படுவதற்கு ஒரு விதத்தில் ஐ.பி.எல் டி20 தொடரும், இந்தியப் பந்துவீச்சாளர்களும், சி.எஸ்.கே அணியும் காரணமாகியுள்ளது என்பதை சான்ட்னரே பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள ஆடுகளங்கள் அனைத்தும் பெரும்பாலும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக உருவாக்கப்பட்டவை. இங்கு வந்து வெளிநாட்டு சுழற்பந்துவீச்சாளர் சாதிப்பது கடினம்தான். ஏனென்றால் ஆடுகளத்தின் தன்மை, எவ்வாறு பந்துவீசுவது, எந்த வேகத்தில் வீசுவது, பந்துவீச்சில் எத்தகைய மாறுபாட்டை வெளிப்படுத்துவது என்பதைத் தெரிந்து பந்துவீச வேண்டும்.

இதற்கு முந்தைய காலங்களில் மிகச்சில வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள்தான் இந்திய மண்ணில் சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்துள்ளனர். முத்தையா முரளிதரன், ஷேன் வார்ன், மெக்கஃபே, நேதன் லயன், ஸ்வான், சக்லைன் முஸ்தாக் என சிலர்தான் சிறப்பாகப் பந்துவீசியுள்ளனர். மற்றவகையில் அனுபவமற்ற சுழற்பந்துவீச்சாளர்களால் இந்திய மண்ணில் சாதிப்பது கடினம்.

ஆனால், இந்தியாவில் ஒரே டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் சான்ட்னர் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்திருப்பது கிரிக்கெட் ஜாம்பவான்களை வியப்படைய வைத்துள்ளது.

இந்திய ஆடுகளங்களின் தன்மையை வெகு எளிதாக சான்ட்னர் அறிந்து கொள்ள அவருக்கு ஐ.பி.எல் தொடரும், சி.எஸ்.கே அணியில் எடுத்த பயிற்சியும், ஐ.பி.எல் தொடரில் இந்திய பந்துவீச்சாளர்களுடன் ஏற்பட்ட பழக்கமும் காரணமாகியுள்ளது.

 
மிட்செல் சான்ட்னர் - நியூசிலாந்து - கிரிக்கெட்

பட மூலாதாரம்,INSTAGRAM/MITCHSANTNER

ஐ.பி.எல், சி.எஸ்.கே எப்படி உதவின?

'கிரிக்இன்போ' இணையதளத்துக்கு சான்ட்னர் அளித்த ஒரு பேட்டியில், “ஒரு சிறந்த சுழற்பந்துவீச்சாளராக நான் உருமாறுவதற்கு எனக்கு ஐ.பி.எல் டி20 தொடர் வெகுவாக உதவியது. சி.எஸ்.கே அணியில் நான் இடம் பெற்றபோது அதில் இருந்த ஹர்பஜன் சிங், ரவிந்திர ஜடேஜா, இம்ரான் தாஹிர் ஆகியோரின் நட்பும் அவர்களின் பந்துவீச்சு நுணுக்கமும் என் பந்துவீச்சை மெருகேற்ற உதவியது,” என்று தெரிவித்தார்.

"இந்திய ஆடுகளங்களைப் பற்றி பெரிதாகத் தெரியாது. ஆனால், ஐ.பி.எல் தொடரில் ஆடியபின் இந்திய ஆடுகளங்களின் தன்மையை நான் புரிந்துகொண்டேன். அதற்கு ஏற்றாற்போல் பந்துவீச்சை மாற்ற முடிந்தது. குறிப்பாக நான் கேரம்பால் பந்துவீச்சை அஸ்வின் பந்துவீச்சு முறையைப் பார்த்துதான் கற்றுக்கொண்டேன்,” என்று தெரிவித்தார்.

யார் அந்த இலங்கை வீரர்?

அது மட்டும்லலாமல் ஆசியாவில் வங்கதேசம், இலங்கை, இந்தியா போன்ற அணிகளுடன் விளையாட நியூசிலாந்து அணி சுற்றுப்பயணம் சென்று விளையாடத் துவங்கியதிலிருந்து அந்த அணிக்குப் பந்துவீச்சு ஆலோசகராக இலங்கையின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டார்.

ஹேரத்தின் ஏராளமான ஆலோசனைகள், அவர் கற்றுக்கொடுத்த நுணுக்கங்கள் ஆகியவை சான்ட்னரின் பந்துவீச்சு மெருகேறுவதற்கு முக்கியக் காரணங்களாக அமைந்திருக்கிறது. புனே டெஸ்ட் போட்டியில் விராட் கோலியை ஃபுல் டாஸில் ஆட்டமிழக்கச் செய்யக்கூட ஹேரத்தின் ஆலோசனையில் வீசப்பட்ட பந்துவீச்சுதான் காரணம் என்று சான்ட்னர் தெரிவித்துள்ளார்.

புனே டெஸ்ட் போட்டிக்குப்பின் சான்ட்னர் அளித்த பேட்டியில் “என்னுடைய சுழற்பந்துவீச்சு மெருகேறியதற்கு ஹேரத்தின் ஆலோசனை முக்கியக் காரணம். ஹேரத் உண்மையில் சிறந்த பந்துவீச்சாளர். பந்துவீச்சில் எவ்வாறு வேகக்தைக் குறைப்பது, ஒவ்வொரு பந்திலும் வேகத்தில் மாறுபாட்டை எவ்வாறு கொண்டுவருவது என்பதை எனக்கு கற்றுக்கொடுத்தார்,” என்றார்.

"புனே டெஸ்டில் வாஷிங்டன் சுந்தர் இதேபோன்று பந்துவீச்சில் வேகத்தைக் குறைத்துப் பந்துவீசிய முறையைக் கண்டேன். அதேபோன்று ஹேரத்தும் கற்றுக்கொடுத்தது எனக்கு உதவியது. விராட் கோலியை 'ஃபுல் டாஸில்' ஆட்டமிழக்கச் செய்ய நான் பந்துவீச்சில் வேகத்தைக் குறைத்து வீசியது காரணம். இந்த நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்தது ஹிராத் தான்,” எனத் தெரிவித்துள்ளார்.

 
மிட்செல் சான்ட்னர் - நியூசிலாந்து - கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வெட்டோரிக்குப் பின் கிடைத்த அடையாளம்

இந்தியத் தொடருக்கு சான்ட்னர் வருவதற்கு முன்புவரை பெரிதாக அறியப்படாத வீரராகவும், பந்துவீச்சாளராகவும் இருந்தார். ஆனால் ஒரே டெஸ்டில் உச்சத்துக்கு சென்றுவிட்டார்.

கடந்த 1992-ஆம் ஆண்டு, பிப்ரவரி 5 ஆம் தேதி ஹேமில்டன் மாகாணத்தில் வைகடோ நகரில் மிட்செல் சான்ட்னர் பிறந்தார். சிறுவயதிலிருந்தே பந்துவீச்சு, பேட்டிங்கில் தீவிரமாகப் பயிற்சி எடுத்த சான்ட்னர், பந்துவீச்சு ஆல்ரவுண்டராகவே வளர்ந்தார். கிரிக்கெட் விளையாடாத நாட்களில் கோல்ஃப் விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

2011-ஆம் ஆண்டிலிருந்து நியூசிலாந்து வடக்கு மாவட்ட கிரிக்கெட் அணிகளில் சான்ட்னர் விளையாடி வந்தார். 2014-15 ஆம் ஆண்டில் நடந்த உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் சான்ட்னரின் ஆட்டம் வெகுவாக பாராட்டப்பட்டதையடுத்து, நியூசிலாந்தின் தேசிய அணிக்குள் இடம் பெற்றார்.

2015-ஆம் ஆண்டு நியூசிலாந்தின் அனுபவ சுழற்பந்துவீச்சாளர் டேனியல் வெட்டோரி ஓய்வு பெற்றபின், இடதுகை சுழற்பந்துவீச்சாளரை அந்த அணி தேடிக்கொண்டிருந்தபோது, சான்ட்னர் அடையாளம் காணப்பட்டு அவர் அணியில் சேர்க்கப்பட்டார்.

முதல்முறையாக 2015-ஆம் ஆண்டு இங்கிலாந்து பயணத்துக்கான நியூசிலாந்து அணியில் சான்ட்னர் அறிமுகமாகி ஆக்டோபர் 24-ஆம் தேதி நடந்த ஒருநாள் போட்டியில் அறிமுகமாகினார். அதற்குமுன்பாக உள்நாட்டில் சோமர்செட் கவுன்டி அணிக்கு எதிராக சான்ட்னர் 94 ரன்கள் சேர்த்தது நியூசிலாந்து நிர்வாகத்துக்கு வெகுவாக நம்பிக்கையளித்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சான்ட்னர் விளையாட வாய்ப்புக் கிடைத்தது.

சர்வதேசப் போட்டியில் சான்ட்னர் விளையாடுவதற்கு முன்பாக அவர் 19 முதல்தரப் போட்டிகளில் மட்டுமே விளையாடிய அனுபவத்தைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சாம் பில்லிங்ஸ் விக்கெட்டை வீழ்த்தி சான்ட்னர் முதல் சர்வதேச விக்கெட்டை எடுத்தார். நான்காவது ஒருநாள் போட்டியில் அதில் ரஷித் பந்துவீச்சில் ஒரே ஓவரில் 28 ரன்களை விளாசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

 
மிட்செல் சான்ட்னர் - நியூசிலாந்து - கிரிக்கெட்

பட மூலாதாரம்,INSTAGRAM/MITCHSANTNER

படக்குறிப்பு, 2018-இல் முழங்காலில் ஏற்பட்ட காயம், அறுவை சிகிச்சையால் சான்ட்னர் சிஎஸ்கே அணியில் விளையாட முடியாமல் போனது.

பகலிரவு டெஸ்டில் அறிமுகம்

இதைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் சான்ட்னர் விளையாட வாய்ப்புக் கிடைத்தது. அதே 2015-ஆம் ஆண்டில் நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பகலிரவுடெஸ்ட் போட்டியில் சான்ட்னர் அறிமுகமாகினார். டெஸ்ட் வரலாற்றில் ஒரு வீரர் பகலிரவு டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகியது இதுதான் முதல்முறையாகும்.

அதன்பின் நியூசிலாந்தின் நேதன் மெக்கலம், ஜீத்தன்படேல், அஜாஸ் படேல் ஆகியோருடன் சேர்ந்து சுழற்பந்துவீச்சு வீசும் வாய்ப்பும் சான்ட்னருக்கு கிடைத்தது. இருப்பினும், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சான்ட்னரின் பந்துவீச்சு பெரிதாக எடுபடவில்லை, வெற்றி நாயகனாக வலம்வர முடியாமல் பெரிதும் அறியப்படாத வீரராகவே இருந்து வந்தார்.

ஐ.பி.எல் அறிமுகம்

இதனிடையே 2018-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் சிஎஸ்கே அணி 50 லட்சம் ரூபாய்க்கு சான்ட்னரை வாங்கியது. ஆனால் அந்த ஆண்டில் முழங்காலில் ஏற்பட்ட காயம், அறுவை சிகிச்சையால் சான்ட்னர் சி.எஸ்.கே அணியில் இடம் பெற்று விளையாட முடியாமல் போனது. அதன்பின் சிஎஸ்கே அணியில்தான் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

குறிப்பாக 2019-ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக கடைசிப்பந்தில் சிக்ஸர் அடித்து சி.எஸ்.கே அணியை சான்ட்னர் வெற்றி பெறவைத்த ஆட்டமும், இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 2 விக்கெட் வீழ்த்தியதும் அவரை பெரிய உயரத்துக்கு கொண்டு சென்றது.

சான்ட்னர் தனக்கு பேட்டிங் செய்யக் கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறியதில்லை. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வாட்லிங்குடன் பார்ட்னர்ஷிப் அமைத்து சான்ட்னர் முதல்முறையாக சர்வதேச டெஸ்ட் சதத்தை எட்டினார். 7-வது விக்கெட்டுக்கு வாட்லிங், சான்ட்னர் 261 ரன்கள் சேர்த்து நியூசிலாந்து அணியின் அதிகபட்ச 7-வது விக்கெட் ரன் குவிப்பு என்ற சாதனையைப் புரிந்தனர்.

இதுவரை டெஸ்ட் போட்டியில் சான்ட்னர் ஒரு சதம், 3 அரைசதங்கள் உள்பட 941 ரன்களும், ஒருநாள் போட்டியில் 3 அரைசதங்கள் உள்பட 1,355 ரன்களும், டி20 போட்டியில் ஒரு அரைசதம் உள்பட 675 ரன்களும் சேர்த்துள்ளார். டெஸ்ட் போட்டியில் சான்ட்னர் 67 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 107, டி20 போட்டியில் 115 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

புனே டெஸ்ட் போட்டிக்கு முன்புவரை பெரிதும் அறியப்படாத வீரராக இருந்த சான்ட்னரை உலகம் அறியச் செய்த பங்கு இந்திய வீரர்களுக்கும், ஐ.பி.எல், சி.எஸ்.கே அணியினருக்கும் இருக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது தான் முட்டாள் தனம். அதிலும் படித்த முட்டாள்தனம்.. எவ்வளவு மரியாதை கொடுத்து எழுதினாலும் உங்களால் இந்த முட்டாள்தன எழுத்தில் இருந்து மீளமுடியாது. டொட்..
    • பட மூலாதாரம்,ESA/EUCLID/EUCLID CONSORTIUM/NASA; ESA/GAIA/DPA படக்குறிப்பு, பிரபஞ்சத்தின் நீள்வட்ட வடிவம் எழுதியவர்,ஆசிரியர் குழு பதவி,பிபிசி முண்டோ ‘யூக்ளிட் விண்வெளி தொலைநோக்கி’ மூலம் எடுக்கப்பட்ட படங்கள் மூலம் உருவாக்கப்பட்ட பிரபஞ்சத்தின் முப்பரிணாம வரைபடம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த வரைபடம் 10 கோடி நட்சத்திரங்களையும் விண்மீன் திரள்களையும் காட்டுகிறது. இந்த யூக்ளிட் விண்வெளி தொலைநோக்கியை உருவாக்கியது ஐரோப்பிய விண்வெளி முகமை (இ.எஸ்.ஏ). இப்போது அந்த அமைப்பு இந்தப் படங்களை வெளியிட்டுள்ளது. 1,000 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள விண்மீன் திரள்கள் மற்றும் நட்சத்திரங்களைக் கவனிப்பது தொடர்பாக, யூக்ளிட் தொலைநோக்கி இந்தாண்டு தன் பணியை தொடங்கியது. அதன் ஒரு சதவிகித பணிதான் இந்த முப்பரிணாம வரைபடத்தின் முதல் பகுதி. (ஓர் ஒளி ஆண்டு = ஓர் ஆண்டில் ஒளி கடக்ககூடிய தூரம் - அதாவது, சுமார் 9.5 லட்சம் கோடி கிலோமீட்டர்கள்) ஆறு ஆண்டுகள் நீடிக்கும் இப்பணி மூலம், நுண்ணிய தகவல்களுடன் கூடிய பிரபஞ்சத்தின் வரைபடத்தை விஞ்ஞானிகள் உருவாக்குவார்கள். விண்வெளியின் உருவாக்கம் மற்றும் அதன் பரிணாம வளர்ச்சி குறித்த ஏராளமான தகவல்களையும் இதன்மூலம் பெற முடியும். எத்தனை கேலக்சிகள்? வரைபடத்தின் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஒரு பகுதியில் மட்டுமே கோடிக்கணக்கான விண்மீன் திரள்கள் (கேலக்சிகள்) உள்ளன, என்று ஏ.எஃப்.பி. செய்தி முகமையிடம் கூறினார் யூக்ளிட் காப்பகத்தின் பொறுப்பாளரான விஞ்ஞானி புரூனோ அல்டீரி. “பல்வேறு வகையான விண்மீன் திரள்கள் தொடர்புடைய இடங்கள், காலப்போக்கில் அவை எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்தன, பல நூறு கோடி ஆண்டுகளாக அவை ஏன் நட்சத்திரங்களை உருவாக்கவில்லை என்பது பற்றிய புள்ளிவிவரங்களை இதன்மூலம் உருவாக்க முடியும்,” எனவும் அவர் தெரிவித்தார். விண்வெளியின் மூன்றில் ஒரு பகுதியை 2030-ஆம் ஆண்டுக்குள் வரைபடமாக்கும் தங்கள் இலக்கை அடைய முடியும் என, விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.   பட மூலாதாரம்,ESA/EUCLID/EUCLID CONSORTIUM/NASA படக்குறிப்பு, யூக்ளிட் தொலைநோக்கியின் ஒரு சதவிகித பணிதான் இது என, ஐரோப்பிய விண்வெளி முகமை கூறுகிறது பிரபஞ்சம் குறித்த மாபெரும் புதிர் தனது பணியின் முதல் படியில், யூக்ளிட் தொலைநோக்கி வானத்தின் தெற்கு அரைக்கோளத்தின் 132 சதுர டிகிரி பகுதியைப் படம்பிடித்தது. இது சந்திரனின் மேற்பரப்பை விட 500 மடங்கு அதிகம். இதன் மூலம் ‘பிரபஞ்சத்தை ஒரு மாபெரும் ஜிக்சா புதிரைப் போன்று’ இந்தத் தொலைநோக்கி உருவாக்கியுள்ளது. வரும் ஆண்டுகளில் அந்த ஜிக்சா புதிரின் பகுதிகள் சேர்க்கப்படும். "இது பிரபஞ்ச வரைபடத்தின் 1% தான். ஆனால், இந்த ஒருபகுதி மட்டுமே பல்வேறு வகையான ஆதாரங்களால் நிரம்பியுள்ளது. இதன்மூலம் பிரபஞ்சத்தை விவரிக்கப் புதிய வழிகளை விஞ்ஞானிகள் கண்டறியக் கூடும்," என்று, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் யூக்ளிட் திட்ட விஞ்ஞானி வலேரியா பெட்டோரினோ ஓர் அறிக்கையில் கூறியுள்ளார். இந்த வரைபடத்தின் மிக முக்கியமான விஷயம், அடர்த்தியான கரும்புள்ளிகளால் ஆன பிரகாசமான ‘கேலக்டிக் சிர்ரஸ் மேகங்கள்’ (galactic cirrus clouds) என்று அழைக்கப்படும் நீல ‘மேகங்கள்’. இவை, தூசி மற்றும் வாயுவின் கலவையாகும். “இவற்றிலிருந்து தான் புதிய நட்சத்திரங்கள் உருவாகின்றன,” என்கிறார், அல்டீரி. யூக்ளிட் தொலைநோக்கி என்ன காட்டுகிறது என்பதை 2 டிகிரி கோணத்தில் புலப்படும்படி இ.எஸ்.ஏ இந்த வரைபடத்தில் விளக்கியுள்ளது. இதனை 600 முறை பெரிதாக்குவதன் மூலம், பிரபஞ்சத்தின் சிறிய பகுதியில் இருக்கும் விண்மீன் திரள்களைக் காணலாம்.   பட மூலாதாரம்,ESA/EUCLID/EUCLID CONSORTIUM/NASA படக்குறிப்பு, யூக்ளிட் செய்துள்ள இந்த அவதானிப்பின் மூலம் விண்மீன் திரள்களைக் காணலாம் மிக நுணுக்கமான வரைபடம் ஐரோப்பிய விண்வெளி முகமை தனது இணையதளத்தில் பகிர்ந்துள்ள இந்த வரைபடம், முன்பு அரிதாகவே அடையப்பட்ட அதீதமான தெளிவுத்திறனைக் (resolution) கொண்டுள்ளது. அதாவது, 208 மெகாபிக்சல்கள் தெளிவுத்திறனை இந்த வரைபடம் கொண்டுள்ளது. இந்த வரைபடத்தை மேலும் ‘ஜூம்’ செய்ய முடிகிறது. அதன்மூலம், சுழல் விண்மீன் திரள்களின் (spiral galaxy) சிக்கலான கட்டமைப்பையோ இரண்டு விண்மீன் திரள்கள் ஒன்றோடொன்று தொடர்புகொள்வதையோ உங்களால் காண முடியும். பிரபஞ்சம் குறித்த ஒரு விரிவான பார்வையை யூக்ளிட் தொலைநோக்கி வழங்குகிறது. இதன்மூலம், ஒரேயொரு படத்தின் மூலம் பிரபஞ்சத்தின் விரிவான காட்சியைக் காண முடிகிறது. இதற்கு நேர்மாறாக, ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி குறுகிய பார்வையையே வழங்குகிறது. ஆனால், அதன்மூலம் விண்வெளியின் வெகு தொலைவில் இருக்கும் பகுதிகளைப் பார்க்க முடியும். பிரபஞ்சத்தின் மர்மம் அவிழுமா? பிரபஞ்சத்தின் ஆழத்தில் என்ன இருக்கிறது என்பதை அறிவதற்கான மிகவும் விரிவான வரைபடத்தை உருவாக்குவது, இத்திட்டத்தின் இறுதி இலக்கு. ஆனால் அதனோடு சேர்த்து மிகப்பெரிய அறிவியல் புதிர்களில் ஒன்றின் மீதும் வெளிச்சம் பாய்ச்ச முயல்கிறது இத்திட்டம். அது: ‘டார்க் மேட்டர்’ அல்லது ‘கரும்பொருள்’ (பிரபஞ்சத்தில் கண்ணுக்குத் தெரியாத, மர்மமான பொருள் - dark matter) மற்றும் ‘இருண்ட ஆற்றல்’. இவை பிரபஞ்சத்தின் 95%-த்தை உள்ளடக்கியுள்ளது. உண்மையில் இவைபற்றி நமக்கு எதுவும் தெரியாது. டார்க் மேட்டர் (25%) மற்றும் இருண்ட ஆற்றல் (70%) ஆகியவை எதிரெதிர் விளைவுகளைக் கொண்டிருக்கின்றன. டார்க் மேட்டர் விண்மீன் திரள்களை ஒன்றாக வைத்திருக்கிறது, அதே நேரத்தில் இருண்ட ஆற்றல் பிரபஞ்சத்தை விரிவுபடுத்துகிறது. இந்த வரைபடம் மூலம், விண்மீன் திரள்களின் பரவல் மற்றும் பிரபஞ்சத்தின் விரிவாக்கம் ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளை மேற்கொள்ள முடியும். இது, அண்டத்தின் கருதுகோள் மாதிரிகளைச் செம்மைப்படுத்துகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c774j4rnd7xo
    • ஜே.வி.பியினர் தங்களை மார்க்சியவாதிகளாகக் காட்டிக்கொண்டு பௌத்த சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலையே முன்னெடுத்து வருகின்றனர் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் சனநாயகத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளருமான பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் சனநாயகத் தமிழரசுக் கூட்டமைப்பில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் பொ. ஐங்கரநேசன் ஞாயிற்றுக்கிழமை கோண்டாவிலில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இனங்களுக்கிடையே கலைஞர்களின் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் 2003ஆம் ஆண்டு கொழும்பு நகர மண்டபத்தில் தமிழ், சிங்கள கலை இலக்கியவாதிகள் இணைந்து கலைக்கூடல் நிகழ்ச்சியை நடாத்தியிருந்தனர். இதனை ஏற்பாடு செய்தவர்களில் நானும் ஒருவன். ஆனால் இன நல்லிணக்கத்தைச் சகிக்கமுடியாத ஜே.வி.பியினர் புத்தபிக்குகள் சகிதம் ஊர்வலமாக வந்து தாக்குதல்களை மேற்கொண்டனர். தமிழர்கள்மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பியை தமிழ் மக்களே ஆதரிப்பது அரசியல் மடைமைத்தனமாகும் மார்க்சியம் இன மத மொழி பேதங்களைக் கடந்து மனிதர்களை நேசிக்கக் கற்றுக் கொடுக்கும் ஒரு தத்துவம் ஆகும். ஆனால் ரோகண விஜயவீராவின் மறைவுக்குப் பின்னர் ஜே.வி.பி ஏனைய சிங்களக்  கட்சிகளைப் போன்றே முற்றுமுழுதாக பௌத்த சிங்களப் பேரினவாதக் கட்சியாக மாறிவிட்டது. இந்திய – இலங்கை ஒப்பந்த காலப் பகுதியில் அதனை ஆதரித்தமைக்காக சந்திரிகா அம்மையாரின் கணவர் விஜய குமாரதுங்காவின் ஆதரவாளர்கள் பலரையும் விக்கிரமபாகு கருணரட்னவின் ஆதரவாளர்கள் பலரையும் தம் இனம் என்றும் பாராமல் சுட்டுக் கொன்றவர்கள் இவர்கள் தான். தமிழர்களின் தாயகமான வடக்கு கிழக்கை நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் துண்டாடியவர்கள் இவர்கள்தான். விடுதலைப் புலிகளை அழித்ததில் அமெரிக்காவின் பங்களிப்புக்காக அமெரிக்கத் தூதரகம் சென்று கைகுலுக்கியவர்களும்  இவர்கள்தான். ஜே.வி.பி இப்போது தேசிய மக்கள் சக்தி என்ற புதிய முகமூடியுடன் தேர்தல் அரசியலில் ஈடுபட்டுவருகிறது. ஜனாதிபதித் தேர்தலின்போது ராஜபக்சாக்களின் மீதும் ரணில் தரப்பின் மீதும்  சிங்கள மக்கள் கொண்டிருக்கும் வெறுப்பு தென்னிலங்கையில் அரசியல் தலைமையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த மாற்றம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தரப்போவதில்லை. படித்தவர்கள் சிலர்கூட இதனைப் புரிந்து கொள்ளாமல் தமிழ்க் கட்சிகளின் மீது கொண்டிருக்கும் வெறுப்புக் காரணமாக ஜே.வி.பியை ஆதரிக்கத் தலைப்பட்டிருக்கிறார்கள். அமைச்சர் பதவிக்காகத் தமிழ் மக்களை ஜே.வி.பியிடம் அடகு வைப்பதற்கும் சிலர் தயாராக இருக்கிறார்கள். தமிழ் மக்கள் இதனைப் புரிந்துகொண்டு ஜே.வி.பியை வடக்கு கிழக்கில் முற்றாக நிராகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/311246
    • இஸ்ரேல் தவிர்ந்த வேறு ஒருவருக்கும் முழுமையான யுத்தத்தில் நாட்டம் இல்லை. 
    • இங்கே யாரும் நீங்கள் 20 வருடங்கள் முன்பு இருந்தது போல இல்லை. மேலும், இந்த தீவிர தேசிக்காய் குழுவில் நான் மட்டுமல்ல, மௌனமாக இருக்கும் தாயக மக்கள் கூட சேரப் போவதில்லை. எனவே, முட்டாள் தனமான ஆட்டு மந்தைக்கூட்ட ஒற்றுமையென்பது தமிழர்களிடையே வராதென நம்புகிறேன்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.