Jump to content

சமாதான காலத்தில் தமிழீழத்திற்கு வந்து போராளியான தமிழ்நாட்டுப் பெண்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

சமாதான காலத்தில் தனது குடும்பத்தினருடன் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலாவிற்கு வந்தார் அன்னார். அப்போது தனது குடும்பத்தினருடன் இவர் வந்ததாக அறியக் கூடியதாக உள்ளது. இவரின் குடும்பத்தில் தந்தையார் ஒரு தமிழ்ப் பற்றாளர் என்று அறியப்படுகிறார். 

பின்னர் இவரின் தந்தையால் ஓமந்தை வழியாக வன்னிக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு புலிகளின் அரசியல்துறையினரிடம் தமிழீழத்தின் விடுதலைக்காக போராடவென அன்னார் ஒப்படைக்கப்பட்டார். 

பின்னர் ஒரு புதிய போராளிக்குச் செய்யப்படும் அடிப்படைத் தகவல்கள் இவரிடமும் எடுக்கப்பட்டு பயிற்சிமுகாமிற்கு அனுப்பட்டு போராளியானார். 

பின்னாளில், 2006இல் நான்காம் ஈழப்போர் வெடித்த போது இவர் மன்னார் முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலையில் (Forward Defence Line) களமிறக்கப்பட்டார். அங்கு மாலதி/சோதியா படையணியின் ஒரு பகுதியில் (9 பேர்) போராளியாக களமாடினார். 

ஏறத்தாழ 10ம் மாதத்திற்குப் பின்னர் நடந்த சமரொன்றின் போது இவரின் பகுதியில் ஒருவர் தவிர்ந்து ஏனையோர் அனைவரும் வீரச்சாவடைந்ததாக ஒன்மரில் பிழைத்த அந்த ஒரேயொரு போராளி தெரிவித்தார். எனவே இவர் வீரச்சாவடைந்து விட்டதாகவே தெரிகிறது.  

இவரின் இயக்கப்பெயர் "இசைநிலா" என்பதாகும்.

 

தகவல் மூலம்:

  • ஒன்மரில் பிழைத்த அந்த ஒரே போராளி

ஆக்கம் & வெளியீடு
நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.