Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

லூயிஸ் ஆர்பரின் இலங்கை விஜயம் தமிழருக்கு பெற்றுத் தந்தது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லூயிஸ் ஆர்பரின் இலங்கை விஜயம் தமிழருக்கு பெற்றுத் தந்தது என்ன?

[14 - October - 2007]

-ச.பா.நிர்மானுசன்-

காணாமற் போன உறவுகளின் அவலக்குரல்கள், நீதி விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம், எதிர்ப்புகள், மழுப்பல்களுக்கு மத்தியில் லூயிஸ் ஆர்பர் அம்மையாரின் சந்திப்புகள் தொடர்கின்றன (12-10-07).

முழுமைப்படுத்தப்படாத இலங்கைக்கான நிகழ்ச்சி நிரலைப் போலவே அம்மையாரின் விஜயத்தின் நோக்கமும் வெற்றியளிக்காமல் போய்விடுமோ என்ற வினா தமிழ் மக்களிடமும் மனித உரிமை செயற்பாட்டாளர்களிடமும் மேலோங்கியுள்ளது.

தமிழர்களின் வாழ்விற்கும், மனித உரிமை தத்துவங்களின் உண்மைக்கும், உலகின் நீதிக்குமான சவால் மிகுந்த சோதனைக்களம் இலங்கைத் தீவில் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது. "தாமதித்து வழங்கப்படும் நீதி, மறுக்கப்படுவதற்கு சமன்" என்பது இலங்கைத் தீவிலும் நிதர்சனமாகப் போகிறதா என்பது விரைவில் தெரியவரவிருக்கின்றது.

நெருக்கடியானதும், நீண்டகாலம் நிலவுகின்றதுமான மனித உரிமை மீறல்களை வெளிக்கொணர்ந்து அவற்றிற்கு முக்கியத்துவமளித்தல், பல்வேறு தரப்பினர்களாலும் உயிர் ஆபத்தினை எதிர் நோக்கியுள்ளவர்களுக்கு நிவாரணமளித்தல், குடிநிலை, பண்பாடு, பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக உரிமைகள் அபிவிருத்தி உள்ளடங்கலாக ஆகியவை அனைவருக்கும் பாரபட்சமற்ற வகையில் கிடைப்பதை கவனத்திற்கொள்ளல் ஆகியவை மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் குறிக்கோள்களாகும்.

இந்த வகையில், குறித்த தருணத்தில் இலங்கைத் தீவில் இடம்பெறுகின்ற மனித உரிமை விவகாரம் இலங்கைத் தீவில் மட்டுமன்றி சர்வதேச ரீதியிலும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகக் காணப்படுகின்றது. எது எப்படியிருப்பினும் லூயிஸ் ஆர்பர் அம்மையரின் இலங்கைத் தீவிற்கான விஜயமென்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றே. அவர் சாதாரண நோக்கங்களுக்காக குறித்த நாடுகளுக்கு விஜயங்களை மேற்கொள்வதென்பது இன்றுவரை நடைமுறையில் இல்லை.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஸ்தானிகரின் விஜயமென்பது மிக மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் நாடுகளினை நோக்கியதாகவே இடம்பெற்றுள்ளது. யூகோஸ்லாவியா, கொங்கோ ஜனநாயக குடியரசு ஆகியவற்றில் நிலவிய கொடூரமான மனித உரிமை மீறல்கள், ரூவாண்டா, புரூண்டியில்இடம்பெற்ற இனச்சுத்திகரிப்பு, 2006 இல் இடம்பெற்ற இஸ்ரேல் லெபனானுக்கிடையிலான மோதல் ஆகியனவற்றினை தொடர்ந்தே ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஸ்தானிகரின் விஜயங்கள் குறித்த நாடுகளை நோக்கியதாக அமைந்தன. இலங்கைத் தீவுக்கு வரமுன்னர் லூயிஸ் ஆர்பர் அம்மையாருடைய பார்வை ஈராக்கை நோக்கியதாகவிருந்தது.

லூயிஸ் ஆர்பர் அம்மையாரினுடைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயம், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எந்த விதத்தில் நன்மையளிக்கப் போகின்றது? தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் உரிய முறையில் எடுத்துக் கூறப்படுகிறதா? அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் கோட்டை விட்டது போல் லூயிஸ் ஆர்பர் அம்மையாரினுடைய விஜயத்தின் போதும் இடம்பெறுமா? என்பது போன்ற தவிர்க்க முடியாத கேள்விகள் மேலெழும்புகின்றன.

அதேவேளை, தமிழ் மக்களுக்கு சர்வதேச சமூகத்தினதும் ஐக்கிய நாடுகள் சபையினதும் நடவடிக்கைகள் மீதான சந்தேகங்கள் வலுப்பெறுகின்றன. ஏனெனில், மனித உரிமை மீறல் தொடர்பான கண்காணிப்பு, விசாரணை போன்றவற்றை சீரிய முறையில் மேற்கொள்ள வேண்டுமாயின் மோதுகையுடன் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளுடனும் சந்திப்புக்களை மேற்கொள்ள வேண்டும். மேற்கொள்ளப்படுகின்ற சந்திப்புகள் எத்தகைய அழுத்தங்களும் இன்றி சுயாதீனமாக இடம்பெறவேண்டும்.ஆனால் மேற்கூறிய இரண்டு விடயங்களுமே லூயிஸ் ஆர்பர் அம்மையாரினுடைய விஜயத்தின் போது இடம்பெறவில்லை.

முப்பத்துநான்கு நாடுகள் புலிகளை தடைசெய்துள்ளதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் கூறுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் சுதந்திரத்திற்காகப் போராடுபவர்கள் அல்ல என்றும் அவர்கள் பயங்கரவாதிகள் என்றும் அரசாங்கம் தெரிவிக்கின்றது. அப்படியிருந்தும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தான் பேச்சுவார்த்தையினை மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச சமூகமும், தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சு மேசைக்கு திரும்ப வேண்டும் என்று அரசாங்கமும் அடிக்கடி கூறிவருகின்றன.

மேற்கூறிய இரு தரப்புகளுமே தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தான் பேச்சினை மேற்கொள்ள வேண்டும் என்பதனை இதயசுத்தியுடன் உறுதியாக தெரிவித்து வருகின்றார்களாயின், ஏன் லூயிஸ் ஆர்பர் அம்மையார் புலிகளை சந்திப்பதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கவில்லை? நிலைபேறான சமாதானம் எட்டப்பட வேண்டும் என்ற தூய எண்ணம் இருக்குமாயிருந்தால் அதன் முதற்படியாக மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும். அதுவே நீதியான சமாதானத்திற்கான முதற்படியாக அமையும்.

"மனித உரிமை மீறல்களை வெளிக்கொணர்வதன் மூலமே சமாதானப் பேச்சுவார்த்தைக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பினை நல்க முடியும்" என கிழக்கு திமோருக்கான ஐ.நா. செயலாளர் நாயகத்தின் முன்னாள் விசேட பிரதிநிதியும், சர்வதேச மன்னிப்புச் சபையின் முன்னாள் செயலாளர் நாயகமுமான இயன் மார்ட்டின் தெரிவித்திருந்தமை கவனத்திற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், இதுவரை அது மேற்கொள்ளப்படவில்லை. லூயிஸ் ஆர்பர் அம்மையாரினுடைய விஜயத்திற்குப் பிற்பாடாவது அது மேற்கொள்ளப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அவ்வாறானதொரு ஆக்கபூர்வமான செயற்பாடு மேற்கொள்ளப்படுவதாயின் இலங்கைத் தீவில் சர்வதேச சுயாதீன மனித உரிமைக் கண்காணிப்பகம் அமைக்கப்படுவது மிக மிக அவசியமானது.

ஆனால், சர்வதேச சுயாதீன மனித உரிமைக் கண்காணிப்பகத்தினை ஷ்ரீலங்காவில் அமைப்பதற்கு அரசாங்கம் சம்மதிக்குமா என்பது கேள்விக்குரியதே. இருப்பினும் சர்வதேச நெருக்குவாரங்கள் உரிய முறையில் அரசாங்கத்தின் மீது தொடுக்கப்படுமாகவிருந்தால் அரசாங்கம் சம்மதித்தே ஆக வேண்டும். இவ்வாறான அழுத்தத்தினை தொடர்ந்து இறுதியில் அரசாங்கங்கள் சம்மதித்த சம்பவங்கள் வரலாற்றில் நடந்தேறியுள்ளன.

கிழக்கு திமோரில் சர்வதேச படைகளை அனுமதிப்பதற்கு இந்தோனேசிய அரசாங்கம் இணங்க மறுத்த போதும் பல்வேறு முறைகளில் வெவ்வேறு முனைகளினூடாக பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்கள் இந்தோனேசிய அரசாங்கத்தை இறங்கிவரச் செய்தது. வன்முறைகள் தொடருமாகவிருந்தால் மானுடத்துக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களுக்கான பொறுப்புகளிலிருந்து எவரும் தப்பித்துக் கொள்ள முடியாது என ஐ.நா. செயலாளர் மற்றும் மனித உரிமை ஸ்தானிகரால் விடுக்கப்பட்ட அழுத்தம் பொதிந்த அறிவிப்புகளே காரணமாக அமைந்தன. ஷ்ரீலங்காவினுடைய வரலாற்றில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காகவோ அல்லது குற்றங்களுக்காகவோ உரியவர்கள் யாருமே நீதியின் முன் நிறுத்தி தண்டிக்கப்படவில்லை. அதாவது பொறுப்புக்கூறும் தன்மையிலிருந்து (Accountability) இலகுவாக விலகிக் கொள்கிறார்கள்.

அடுத்து, மோதுகை இடம்பெறுகின்ற சூழலாக இருப்பினும் சட்டவாட்சியை (Rule of Law) உறுதிப்படுத்த வேண்டியது பொறுப்புள்ள ஒரு அரசாங்கத்தின் தலையாய கடமை. பக்கச்சார்பற்ற நீதித்துறையென்பது பல்லின சமூகங்கள் வாழும் ஒரு நாட்டில் ஜனநாயகம் நிலவுகின்றது என்பதை எடுத்துக்காட்டுவதற்கான அடையாளம்.

ஆனால், மேற்கூறிய மிக முக்கியமான மூன்று கட்டுமானங்களும் ஸ்ரீலங்காவில் இல்லை. ஆகவே, ஸ்ரீலங்கா தொடர்பான "மறுசிந்திப்பு" என்பது ஷ்ரீலங்கா மீது உண்மையான அக்கறைகொண்ட அனைவருக்கும் வரவேண்டியதொன்று. அது ஸ்ரீலங்காவை சீர்திருத்துவதாக இருத்தல் வேண்டும்.

பர்மாவில், கிழக்கு திமோரில், கொங்கோ ஜனநாயக குடியரசில், சூடானில், சோமாலியாவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் ஷ்ரீலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். ஹெயிட்டியில் மனித உரிமை மீறல்களை புரிந்தவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில் காட்டப்பட்ட அக்கறை ஏன் ஷ்ரீலங்காவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதற்கு காட்டப்படவில்லை.

மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள், இனச்சுத்திகரிப்பு, போர்க்குற்றங்கள், உடன்படிக்கைகளை மீறிய குற்றங்கள் ஆகியவற்றுக்கான குற்றங்களுக்கான பொதுமன்னிப்பு ஐ.நா. சபை ஆதரவளிக்க முடியாது. இது எல்லாத் தரப்புக்கும், பிராந்தியங்களுக்கும் பொருந்தும்.

ஆகவே, ஸ்ரீலங்கா அதற்கு விதிவிலக்கானதல்ல ஆதலால், உரிய நடவடிக்கையினை பொறுப்பான தரப்புகள் உடனடியாக எடுக்க வேண்டும். அதற்கு நான் மேலே குறிப்பிட்ட "மறுசிந்திப்பு" மிக அவசியமானது. அதுவே, இலங்கைத் தீவில் பூரண அமைதியையும் நிலையான சமாதானத்தையும் நிலைநாட்டவல்லது. இவையனைத்துக்குமான திறவுகோல் என்பது லூயிஸ் ஆர்பர் அம்மையாரினுடைய விஜயத்தின் முடிவினையடுத்து சர்வதேச சமூகம் எடுக்கவுள்ள முடிவுகளிலேயே தங்கியுள்ளது.

சர்வதேசத்தின் மனச்சாட்சியுடன் கூடிய நடவடிக்கைக்காக தமிழ் மக்கள் எதிர்பார்த்திருக்கின்ற மிக முக்கியமான முடிவுகளில் ஒன்றாக அந்த முடிவே அமையப்போகிறது. அதனூடாகவே இலங்கைத் தீவினுடைய எதிர்காலமும் நிர்ணயிக்கப்படப் போகிறது.

http://www.thinakkural.com/news/2007/10/14...s_page38341.htm

  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமை பிரச்சினையும் சர்வதேச எதிர் விளைவுகளும்

-எஸ்.ஐ.கீதபொன்கலன்-

தொடரும் கொலைகளும், கடத்தல்களும், பாரிய அளவிலான மனிதாபிமானப் பிரச்சினைகளும் சர்வதேச கரிசனையை தூண்டுகின்ற விடயங்களாக மாற்றமடைந்துவிட்டன. அது தொடர்புடைய மக்களின் வாழ்க்கைப் பிரச்சினை என்பதில் சந்தேகமில்லை. இத்தகைய ஒரு பின்னணியிலேயே கடந்த வாரம் ஜனாதிபதியின் ஐ.நா. சபைக்கான பயணம் பாரிய ஒரு செய்தியாக மாற்றமடைந்திருந்தது. விஜயம் தொடர்பில் உள்நாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக காணப்பட்டிருந்தது. ஜனாதிபதியின் குழுவில் அடங்கியிருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையே ஆகும்.

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகி இருக்கின்ற ஒரு பின்னணியில் இத்தகைய பாரிய ஒரு குழு இணைத்துக் கொள்ளப்படுவது அவசியம்தானா என்ற தொனியில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இருப்பினும் சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு காலகட்டத்திலேயே ஜனாதிபதியின் நியூயோர்க் பயணம் அமைந்திருந்தது என்பதில் சந்தேகமில்லை. இம் முக்கியத்துவம் அண்மைய கடந்த காலத்தில் ஏற்பட்டிருந்த மனித உரிமைகள் நிலை காரணமாகவும் அது தொடர்பில் சர்வதேச நிறுவனங்கள் மேற்கொள்கின்ற, மேற்கொள்ள இருந்த நடவடிக்கைகள் காரணமாகவுமே தோற்றம் பெற்றிருந்தது.

எல்லா நாடுகளிலும், எல்லாப் பிரதேசங்களிலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதுண்டு. எனினும், இவை தொடர்பில் சர்வதேச நிறுவனங்களோ அல்லது சர்வதேச சமூகமோ அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. உண்மையில் மனித உரிமை மீறல்கள் படுமோசமானவையாக மாறுகின்ற போதும், அவை ஏற்றுக் கொள்ளப்பட்ட மனிதாபிமான வரையறைகள் யாவற்றுக்கும் எதிரானவையாக அமைகின்ற போது சர்வதேச சமூகம் மிக விரைவாகவே அவை தொடர்பில் கவனம் செலுத்தத் தொடங்குகின்றது. இந்தக் கவனத்திலும் கூட ஒரு பச்சோந்தித் தனமும் பக்கச் சார்பும் காணப்படுவது உண்டு. மனித உரிமை மீறல்களுக்கான காரணம், அரசாக இருக்குமாயின் எதிர்நடவடிக்கைகள் மட்டுமன்றி, வார்த்தைப் பிரயோகங்களும் கூட கவனமாகவும் மட்டுப்படுத்தப்பட்டவையாகவு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2007-10-15

இலங்கை நிலைமை தொடர்பாக ஆர்பர் அம்மையாரின் கையாள்கை

இலங்கை இனப்பிரச்சினை விவகாரம் தொடர்பாகக் காத்திரமான விடயங்களை வெளிக்கொண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்ட, மனித உரிமைகளுக்கான ஐ.நா.தூதுவர் லூயிஸ் ஆர்பர் அம்மையாரின் இலங்கை விஜயம் முடி வடைந்துவிட்டது.

எதிர்பார்க்கப்பட்டபடி, இலங்கை நிலைமை தொடர் பான தெளிவான பார்வை ஒன்றை ஆர்பர் அம்மையாரின் இந்தப் பயணம் மூலம் உலகம் தரிசிக்கக்கூடிய நல்லதோர் வாய்ப்புக் கிட்டியிருக்கின்றது.

இலங்கையில் மிக மோசமாக இடம்பெறும் மனித உரிமை மீறல்களைக் கண்காணிக்க ஐ.நாவின் அவதானிப்பு அலுவலகம் ஒன்றை இலங்கையில் ஸ்தாபிக்க வேண்டும் என்பதில் ஐ.நா.உறுதியாக இருப்பதும்

அதற்கு இடமளிப்பது இல்லை என்பதில் இலங்கை அரசு பிடிவாதமாக இருக்கின்றது என்பதும்

ஆர்பர் அம்மையாரின் கொழும்பு விஜயத்தின் முடிவின் போது நடத்தப்பட்ட பத்திரிகையாளர் மாநாட்டில் தெளி வாக வெளிப்பட்டன.

இலங்கை விவகாரத்தைக் கண்காணிப்பதற்காக சர்வ தேச அமைப்புகள் இலங்கைக்கு வருவதற்கும், இங்கு ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் அலுவலகம் ஒன்றைத் திறப்பதற்கு அனுமதிப்பது இல்லை என்பதிலும் அரசு உறுதியாக இருக்கின்றது.

மேற்படி அலுவலகம் திறப்பதைப் பிரேரிக்கும் விதத் தில் ஆர்பர் அம்மையார் தெரிவித்த கருத்துக்கு அதே பத்தி ரிகையாளர் மாநாட்டில் வைத்து அரசின் திட்டவட்டமான நிராகரிப்புப் பதில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுவிட்டது.

இலங்கை அரசின் சார்பில் அந்தப் பத்திரிகையாளர் மாநாட்டில் பங்குபற்றிய இடர் முகாமைத்துவ, மனித உரி மைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இந்த விடயத்தை உறுதியாகத் தெளிவுபடுத்தினார்.

அந்த மாநாட்டில் வைத்து மனித உரிமைகளுக்கான ஐ.நா.தூதுவர் ஆர்பர் அம்மையார், தெரிவித்த கருத்துகளின் சாராம்சம் இங்கு நோக்கற்பாலது.

""மனித உரிமைகளைப் பேணும் விடயத்தில் இலங்கை அரசுக்கும் ஐ.நாவுக்கும் இடையில் வெறும் தொழில்நுட்ப உதவிப் பரிமாற்றம் இருந்தால் மட்டும் போதுமானது என நான் நம்பவில்லை. மக்களுக்கு நன்மைதரும் விதத்தில் இதில் ஐ.நாவின் பங்களிப்பு உயர்ந்தளவுக்கு மேம்படுத் தப்படவேண்டும்.

""மனித உரிமை மீறல்கள் கட்டுமட்டில்லாமல் நடக்கின் றன. இவை அரசுக்கு எதிரான புலிகளின் வெறும் பிரசார உத்தியின் அடிப்படையிலான குற்றச்சாட்டுகள் என்று கூறப்பட்டாலும் கூட, விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய பல விடயங்கள் அவற்றில் புதைந்திருப்பதை உணர முடிகின்றது.

""பயங்கரவாதத்தை ஒழிக்கும் நோக்குடன் இலங்கை அரசு கொண்டு வந்துள்ள அவசரகாலச்சட்ட விதிகள் தொடர்பான இறுக்கமான ஏற்பாடுகள், சட்டத்தின் ஆட்சி யில் ஏற்பட்டுள்ள மிக மோசமான நலிவு நிலைமை, குற்ற மிழைத்தோரைச் சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றும் விசேட சட்டவிலக்களிப்பு வசதிகள் போன்றவை மனித உரிமைகள் தொடர்பான விடயத்தில் அபாய எச்சரிக்கை யை ஏற்படுத்துவனவாக உள்ளன.

""ஊன்றிய கவனிப்புடன் கூடிய விசாரணைகள், குற்ற மிழைத்தோரை சட்டத்தின் முன் நிறுத்துதல், அத்தகையோ ரைத் தண்டித்தல் போன்றவை தொடர்பாக இறுக்கமான சட்ட ஏற்பாடுகள் இல்லாமை கவலையைத் தருகின் றது.''

இப்படியெல்லாம் தமது இலங்கை விஜய முடிவில் ஆர்பர் அம்மையார் கருத்துத் தெரிவித்திருக்கின்றார்.

ஆர்பர் அம்மையார் தமது இலங்கை விஜயத்தை அடுத்து, கொழும்பில் தெரிவித்த கருத்துகளில் இருந்து ஊன்றிக் கவனிக்கத்தக்க அம்சங்களாக வெளிப்பட்ட விடயங்களை இனிப் பார்ப்போம். அவை:

* மனித உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடு களை விசாரிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டி ருக்கின்றன என்று இலங்கை அரசு கூறினாலும், அவ்வாறு நேர்மையாக விசாரிக்கப்படவேண்டிய பல்வேறு சம்ப வங்கள் இன்னும் விசாரிக்கப்படாமலேயே உள்ளன.

* அவ்வாறு நிலுவையில் விடப்பட்டிருக்கும் பல்வேறு மனித உரிமை மீறல்கள் விசாரிக்கப்படுவதற்கு ஆவன செய்யப்பட வேண்டும்.

* இலங்கையில் மோசமாக இடம்பெறும் மனித உரிமை மீறல்களை விசாரணை செய்வதற்கு இலங்கையில் தற்ச மயம் நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்கள் போதுமான வையல்ல.

*குற்றச்சம்பவங்கள் குறித்து விசாரிக்கப்படாத நிலைமை நீடிப்பது பெரும் குழப்பத்தைத் தருகின்றது.

இவையே ஆர்பர் அம்மையார் வெளிப்படுத்தும் முக் கிய விடயங்களாகும்.

ஏற்கனவே சர்வதேச ரீதியில் சர்ச்சைக்குரிய முக்கிய தேசங்களின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விட யங்களைக் கையாண்ட நிரம்பிய அனுபவம் பெற்றவரே லூயிஸ் ஆர்பர் அம்மையாராவார்.

முன்னாள் யூகோஸ்லாவியாவிலும், ருவாண்டாவிலும் மிக மோசமாக இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து, சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்ந்து, அந் நாடுகளின் தலைவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை களை நடத்திய முன் அனுபவம் ஆர்பர் அம்மையாருக்கு நிறையவே உண்டு.

சர்வதேச நீதிமன்றத்தில் சிறந்த வழக்குத் தொடுநராகப் பணியாற்றிய ஆர்பர் அம்மையாருக்கு, இலங்கைக்கு உள்ளே இனப்பிரச்சினை ரீதியாகத் தமிழர் அடக்கி, ஒடுக் கப்பட்டு, அவலப் படுத்தப்படும் வாழ்க்கை நிலையைப் புரிந்து கொள்வது (அவருக்கு) ஒன்றும் அப்படிக் கஷ்ட மான விடயமே அல்ல.

இந்தப் பின்னணியில்

இங்கு தாம் கண்ட உண்மைகளை சர்வதேச மயப் படுத்தி, இலங்கைப் பிரச்சினையில் மேற்குலகு உட்பட்ட பெரும்பான்மை சர்வதேச சமூகத்துக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஆர்பர் அம்மையார் உதவி செய்வார்; உறுதியாக நடவடிக்கை எடுப்பார் எனத் தமிழர்கள் நம்பிக்கையோடு எதிர்பார்க்கின்றனர்.

http://www.uthayan.com/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லூயிஸ் ஆர்பரின் விஜயம்

[15 - October - 2007]

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் இலங்கைக்கான தனது ஐந்து நாள் விஜயத்தின் இறுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை கொழும்பில் மனித உரிமைகள் விவகார அமைச்சர் மகிந்த சமரசிங்க சகிதம் நடத்திய செய்தியாளர் மகாநாடு இலங்கையில் இடம்பெற்றுவருகின்ற படுமோசமான மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படக்கூடிய சூழ்நிலை வெகுவிரைவில் தோன்றக்கூடிய சாத்தியமில்லை என்பதை தெளிவாக உணர்த்தியது. அத்துடன் மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையேயான உறவுகளில் கொந்தளிப்பான நிலைமை தோன்ற ஆரம்பித்திருப்பதையும் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.

இவ்வருட ஆரம்பத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஜெனீவாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது இலங்கைக்கு வருமாறு லூயிஸ் ஆர்பருக்கு அழைப்பு விடுத்திருந்தபோதிலும் கூட, அவரது இலங்கை விஜயம் இங்கு இடம் பெற்றுவருகின்ற தொடர்ச்சியான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உலக நாடுகளும் உள்நாட்டு மற்றும் சர்வதேச அமைப்புகளும் வெளிக்காட்டிய தீவிர அக்கறைகளின் விளைவானது என்பதில் சந்தேகமில்லை. முன்னாள் யூகோஸ்லாவியா மற்றும் ருவாண்டாவுக்கான சர்வதேச குற்றவியல் விசாரணை மன்றத்தின் முன்னாள் வழக்குத் தொடுநரான லூயிஸ் ஆர்பர், இலங்கையில் தங்கியிருந்த நாட்களில் ஜனாதிபதி ராஜபக்ஷ உட்பட அரசாங்கத் தரப்பினர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்ட மக்கள், சிறைக் கைதிகள் என்று பலதரப்பினரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தியிருந்தார். யாழ்நகருக்கும் அவர் விஜயம் மேற்கொண்டு நிலைவரங்களை நேரில் கண்டறிய முயற்சித்தாரெனினும், இராணுவத்தினரின் கெடுபிடிகள் காரணமாக மக்களுடனான அவரின் நேரடித் தொடர்பாடலுக்கு போதுமான வாய்ப்பு இருக்கவில்லை. கிளிநொச்சிக்கு லூயிஸ் ஆர்பர் செல்லவிரும்பினார். ஆனால், வழமைபோன்று பாதுகாப்புக் காரணங்களைச் சாட்டாகக் கூறி அவரை அங்கு செல்ல அரசாங்கம் அனுமதிக்கவில்லை.

அண்மையில் ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலின் 6 ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படுவதை வெற்றிகரமாகத் தடுத்துவிட்டதாக அரசாங்கத் தரப்பினர் பெருமை பேசிக்கொண்டிருந்தார்கள். லூயிஸ் ஆர்பரின் விஜயத்தின்போது நிலைமையைச் சமாளிப்பதற்காக முன் கூட்டியே ஊடகங்களில் பிரசாரங்களும் முடுக்கிவிடப்பட்டன. இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் அரசாங்கத்தின் செயலுக்கு ஆதரவளிக்கும் ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற தென்னிலங்கை அரசியல் சக்திகள் அந்தப் பிரசாரங்களில் அரசாங்கத் தரப்பினரை விடவும் கூடுதல் முனைப்புடன் செயற்பட்டதையும் காணக்கூடியதாகவிருந்தது. இலங்கையில் மனித உரிமை மீறல்களைக் கண்காணிப்பதற்கு ஐ.நா.வின் அனுசரணையுடனான கட்டமைப்பு ஏற்படுத்தப்படுவதற்கான எந்தவொரு முயற்சியையும் தடுப்பதே அரசாங்கத்தினதும் அதற்கு ஆதரவளிக்கும் போர் ஆதரவுச் சக்திகளினதும் முக்கிய குறிக்கோளாக இருக்கிறது.

மனித உரிமை மீறல்களை விசாரணை செய்வதற்கு இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் போதுமானவை என்பதே அரசாங்கத் தரப்பினரின் நிலைப்பாடாக இருக்கிறது. கடந்த நவம்பரில் ஜனாதிபதி ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் செயற்பாடுகளை கண்காணிக்க அவராலேயே அழைக்கப்பட்ட சர்வதேச சுயாதீன முன்னணிப் பிரமுகர்கள் குழு மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள் நம்பகமான முறையில் முன்னெடுக்கப்படவில்லை என்று இதுவரை மூன்று அறிக்கைகளில் சுட்டிக் காட்டியிருக்கிறது. அந்த சுயாதீன பிரமுகர்கள் குழுவின் அறிக்கைகளைக் கண்டனம் செய்து பதில் அறிக்கைகளை விடுப்பதில் அரசாங்கம் அக்கறைகாட்டியதே தவிர, சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளைச் சீர்செய்ய ஒருபோதுமே முயற்சித்ததில்லை. லூயிஸ் ஆர்பரும் தனது விஜயத்தின் போது அவதானித்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்தின் அணுகுமுறைகளும் செயற்பாடுகளும் போதுமானவையல்ல என்று தெரிவிக்கத் தவறவில்லை. மனித உரிமை மீறல்களைக் கண்காணிக்க ஐ.நா. அவதானிகளை பணிக்கு அமர்த்தவேண்டும் அல்லது மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகரின் அலுவலகமொன்று இலங்கையில் திறக்கப்பட வேண்டும் என்ற யோசனையை சனியன்று செய்தியாளர் மகாநாட்டில் லூயிஸ் ஆர்பர் முன்வைத்தார். இந்த யோசனை தொடர்பில் எந்தவொரு பேச்சுவார்த்தையையும் முன்னெடுக்க அரசாங்கம் தயாராயில்லை என்று அமைச்சர் சமரசிங்க லூயிஸ் ஆர்பர் முன்னிலையிலேயே கூறிவிட்டார்.

மனித உரிமைகள் விவகாரங்களைக் கையாளுவதற்கு அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட கட்டமைப்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கு ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரகம் துறைசார் உதவிகளை வழங்கினால் போதுமானது என்பதே அமைச்சர் சமரசிங்கவின் வலியுறுத்தலாக இருந்தது. இலங்கையில் மனித உரிமை மீறல்களைக் கண்காணிக்க சர்வதேச அமைப்பொன்றை அனுமதித்தால் அரசாங்கத்தின் எதிரிகளுக்கு அந்த அமைப்பு ஒரு பிரசாரக் கருவியாக மாறிவிடும் என்ற கருத்தையும் சமரசிங்க வெளியிட்டார். மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பெரும் எண்ணிக்கையான நம்பகமான முறைப்பாடுகள் இருக்கின்றபோதிலும், அவை தொடர்பில் நம்பகமானதும் தகுதியுடையதுமான தகவல்களைத் திரட்ட இயலாமல் இருப்பதே முக்கியமான குறைபாடாக இருப்பதாக லூயிஸ் ஆர்பர் தெரிவித்திருக்கிறார். அத்துடன், இலங்கையின் கட்டமைப்புகளுக்கு துறைசார் உதவிகளை வழங்குவதற்கு அப்பால் மனித உரிமைகளுக்கான ஐ.நா.உயர்ஸ்தானிகரகத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பு நகரவேண்டும் என்று வலியுறுத்திய லூயிஸ் ஆர்பர், இது விடயத்தில் இலங்கை அரசாங்கத்தை உற்சாகப்படுத்துவதற்கு தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொள்ளப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.

இலங்கையில் இடம்பெற்றுவருகின்ற மனித உரிமை மீறல் சம்பவங்களைப் பொறுத்தவரை அவற்றில் சம்பந்தப்படுகின்ற சக்திகள் சட்டத்திலிருந்து விடுபாட்டுரிமை பெற்றவர்கள் போன்று செயற்படுகின்றமையே மிகவும் கவலை தருகின்ற அம்சமாகும். இதன் காரணத்தினால்தான் மனித உரிமை மீறல்களைக் கண்காணிப்பதற்கு ஐ.நா. அனுசரணையுடனான சர்வதேச கட்டமைப்பு தேவை என்ற கோரிக்கை எழுந்தது. இலங்கையின் உள்நாட்டுப் போர் வரலாற்றில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நடத்தப்பட்ட எந்தவொரு உள்நாட்டு விசாரணையுமே உருப்படியான பயன்களைத் தரவில்லை. அத்துடன் தற்போது இடம்பெறுகின்ற மனித உரிமை மீறல்களில் பிரதானமாகப் பாதிக்கப்படுபவர்கள் தமிழர்கள் என்பதால் தென்னிலங்கை அரசியல் சக்திகள் மெத்தனமான போக்கைக் கடைப்பிடிக்கின்றன. மனித உரிமை மீறல்களைக் கண்காணிப்பதற்கு சர்வதேச கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை லூயிஸ் ஆர்பரின் விஜயத்தின் பின்னரான நிலைவரங்களையடுத்து - மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையேயான உறவுகளில் குழப்பநிலை தோன்றக்கூடிய வாய்ப்பு இருக்கின்ற பின்னணியில் - பின்னடைவைக் கண்டுவிடுமோ என்ற அச்சம் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.