Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவிற்கும் ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் கடற்றொழில் அமைச்சருமான  டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது,  அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக பணியாற்றிய கடந்த காலப் பகுதியில், அடையாளம் கண்டு சிபார்சு செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை தொடர்வது, மற்றும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டிருத்த திட்டங்களை ஆரம்பிப்பது  வேண்டியவற்றுள், முன்னுரிமைப்படுத்தப்பட்ட  38 விடயங்கள்  தொடர்பாக வெள்ளிக்கிழமை (25) டக்ளஸ் தேவானந்தா அவர்களினால்  ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் உள்ளிட்ட குறித்த விடயங்கள், ஜனாதிபதியினால் சாதகமாக பரிசீலிக்கப்பட்ட நிலையில், சந்திப்பு சுமூகமாக நிறைவடைந்தது.

இதன்போது, நடைபெவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஈ.பி.டி.பி. கணிசமான ஆசனங்களை பெற்று நாடாளுமன்றம் வரவேண்டும் என்ற வாழ்த்துக்களை  ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/197128

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் உள்ளிட்ட குறித்த விடயங்கள், ஜனாதிபதியினால் சாதகமாக பரிசீலிக்கப்பட்ட நிலையில், சந்திப்பு சுமூகமாக நிறைவடைந்தது.

அந்த ஆளும் அவரின்ட கட்சிகாரரும் பகிரங்கமாக சொல்லுகின்றனர் தமிழ் மக்களுக்கு அரசியல் அபிலாசைகள் இல்லை என்று ....நீங்கள் போய் அபிலாசைகள் பற்றி பேசிவிட்டு வாறீயள்....🤔

  • கருத்துக்கள உறவுகள்

ஒரேயடியாக விழுந்தேவிட்டானய்யா,..🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் உள்ளிட்ட குறித்த விடயங்கள், ஜனாதிபதியினால் சாதகமாக பரிசீலிக்கப்பட்ட நிலையில், சந்திப்பு சுமூகமாக நிறைவடைந்தது.

    அவர் போனவிடயம் அதுவல்ல....

3 hours ago, ஏராளன் said:

இச்சந்திப்பின் போது,  அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக பணியாற்றிய கடந்த காலப் பகுதியில், அடையாளம் கண்டு சிபார்சு செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை தொடர்வது, மற்றும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டிருத்த திட்டங்களை ஆரம்பிப்பது  வேண்டியவற்றுள், முன்னுரிமைப்படுத்தப்பட்ட  38 விடயங்கள்  தொடர்பாக வெள்ளிக்கிழமை (25) டக்ளஸ் தேவானந்தா அவர்களினால்  ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

சந்திப்பின் முக்கிய விடயம் இங்கிருக்கிறது. அவரவர் வகிக்கும் பதவிகளில் திறமை பெற்றிருக்க வேண்டும் என்று அனுரா ஏற்கெனவே கூறிவிட்டார். என்றாலும் தனது தில்லுமுல்லுகளை அறிக்கையிட்டு பதவி வாங்க போய் மண்டியிட்டுள்ளார்.  ஏதாவது சாதித்தேன் என்று சொல்லியுள்ளாரா? ஆரம்பிக்கப்பட்ட திட்டம், முன்னுரிமைப்படுத்தப்பட்ட திட்டம், சிபாரிசு செய்யப்பட்ட திட்டம். இதில் இவரின் திறமை, செயற்பாடு எங்கிருக்கிறது?  எல்லா பதவிகளுக்குள்ளும் மூக்கை நுழைத்து படம் காட்டி விளம்பரம் தேடுவதுபோல் படம் காட்டப்போனாராம். அனுரா, அவரின் திறமைக்கு  பதிலளித்துள்ளார் பாருங்கள்.... இவர் இனி தேர்தலில் வென்றாற்தான் தொடர்ந்து சந்திப்பு, சும்மா அலட்டல் பாட்டிகளோடு அரட்டை அடிக்க அவருக்கு நேரம் எங்கிருக்கிறது? அவருக்கே தலையை பிடுங்குமளவுக்கு பிரச்சனை இருக்கிறது.

4 hours ago, ஏராளன் said:

இதன்போது, நடைபெவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஈ.பி.டி.பி. கணிசமான ஆசனங்களை பெற்று நாடாளுமன்றம் வரவேண்டும் என்ற வாழ்த்துக்களை  ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 பாராளுமன்றத்தில் பேசுவோம், தனியாக பேச வேண்டாமே என்றும் சொல்லியிருக்கலாம். ஆனாலும் இதுகளுக்கெல்லாம் வெட்கம் எங்கிருக்கிறது? இவர்களின் முகவர் வேலையெல்லாம் அவர்களுக்கு தேவையில்லை. அவர்களே நேரடியாக சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டார்கள், எடுக்க வேண்டிய நடவடிக்கையையும் எடுப்பார்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியுடனான எமது சந்திப்பு பலருக்கு வயிற்றில் புளியை கரைத்திருக்கலாம் என்கிறார் டக்ளஸ்

ஜனாதிபதி அனுரவின் அணுகுமுறையிலும் செயற்பாட்டிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனை பொறுத்திருந்து பார்க்கவேண்டும் என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வவுனியாவிற்கு இன்று விஜயம் செய்தவர் காத்தார் சின்னக்குளம் பகுதியில் உள்ள கட்சியின் தேர்தல் அலுவலகம் ஒன்றை திறந்து வைத்திருந்தார்.

அதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்தப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தேசிய நல்லிணக்கம் ஊடாகவே எமது மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும்.

புதிய நாடாளுமன்றத்தில் கூடிய ஆசனங்களை பெறுவதன் மூலம் ஆட்சி அமைப்பவர்களுடன் நாங்களும் பங்குகொள்வதன் ஊடாக மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற எமது அரசியல் இலக்கை அடைவதற்காக அத்திசையை நோக்கி பயணிக்கலாம் என்ற வகையில் பத்து மாவட்டங்களில் இம்முறை போட்டியிடுகின்றோம்.

இதனூடாக நான்கு அல்லது ஐந்து ஆசனங்களை பெறுவது எமது இலக்காக உள்ளது.

இதுவரை நான் எட்டு ஜனாதிபதிகளை சந்தித்துள்ளேன்.

ஆனால் இவர் என்னைவிட வயதில் இளைமையானவர், அவரது அணுகு முறையிலும் செயற்பாட்டிலும் நல்லதொரு மாற்றம் தெரிகிறது. எனினும் அதனைப் பொறுத்திருந்துதான் நாங்கள் பார்க்கவேண்டும்.

நாம் வடக்குக்கிழக்கு தமிழ்பேசும் மக்களின் அரசியல் உரிமை பிரச்சனையை பிரதானமாக முன் வைத்துள்ளோம்.

இந்த தேர்தலில் எமது கட்சி அதிக ஆசனங்களை பெறுவதற்கான வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்திருந்தார். சிலவேளை இந்தசந்தி்ப்பு பலருக்கு புளியை கரைத்திருக்கலாம்.

நாங்கள் இருதரப்புமே ஆயுதபோராட்டத்தின் பின்னர் நாடாளுமன்றம் சென்றவர்கள். அந்தவகையில் ஒரு புரிந்துணர்வு இருதரப்பிற்கும் உள்ளது.

அவர்களது ஆட்சியில் கலந்துகொள்ள போகிறோமா என்ற விடயத்தினை தேர்தலின் பின்னரே தீர்மானிக்கமுடியும்.

இதேவேளை எல்பிட்டியவில் தேசிய மக்கள் சக்தி 15 ஆசனங்களும் எதிர்த்தரப்புக்கள் 15 ஆசனங்களையும் பெற்றுள்ளது.

அவர்கள் பாராளுமன்றிலும் பெரும்பாண்மை எடுப்பதாக சொல்கிறார்கள். அதனை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஜனாதிபதித்தேர்தலிலும் கணிப்புகள் எல்லாம் பிழைத்து விட்டது. எனவே பொறுத்திருப்போம்.என்றார்.

https://thinakkural.lk/article/311229

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.