Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்கள சுதந்திர கருத்தாளர் சங்கம்.........

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சரி எல்லா மாடும் ஓடுது எண்ட மாட்டையும் ஓட விடுவம்! :D

பல கள நண்பர்களின் கருத்துக்களை பார்க்கையில் இந்த அமைப்பில் இணையாவிட்டாலும் அவர்களுக்கு ஆதரவு கண்டிப்பாக இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். ஒருவர் இருவர் வந்து கருத்து சொல்லி இருந்தால் இதை தனி நபர் கொள்கையாக எடுத்திருப்பேன், எனது பார்வையில் முக்கிய கருத்தாளர்களது (***) ஒரே கருத்தாக இருப்பதனால் அக் கருத்துக்களை அரட்டை விவாதமாகவோ வீண் கருத்துக்களாகவோ எடுத்துகொள்ளாமல் அதற்கு எனது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன். இருந்தாலும் இந்த அமைப்பில் இணையவில்லை, ஏனெனில் முக்கிய உறுப்பினர்கள் அமைப்பில் இருப்பதனால் அவர்கள் எதையும் சமாளிப்பார்கள் எண்ட துணிவில் + நம்பிக்கையில் ஆதரவு தருகிறேன்.

(அடுத்த தேர்தல் வரும் பொழுது டன்னுக்கு ஆதரவு இல்லையெண்டால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து ஆதரவை துண்டிப்பேன் அதை இப்பவே சொல்லி இருக்கு ஆமா)

டன் எப்பவுமே சுயேட்சை தான். :lol::lol:

*** தணிக்கை செய்யப்பட்டுள்ளது. - இனையவன்

Edited by இணையவன்

  • Replies 57
  • Views 7.1k
  • Created
  • Last Reply

ஒரு கருத்துக்களத்தில் மட்டுறுத்தல் என்பது மிகவும் தேவையான ஒன்று. மட்டுறுத்தலில் கவனம் எடுக்காததால் தற்ஸ்தமிழ் இணையம் கருத்து எழுதும் பகுதியையே நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்மணத்தில் சில வாரங்களுக்கு முன்பு "போலிகள்" பற்றிய சர்ச்சை எவ்வளவு தூரம் மோசமாகப் போனது என்பதையும் சிலர் அறிந்திருக்கக் கூடும்.

யாழ் களம் சில விதகளை வகுத்துக்கொண்டு சிறப்பாக இயங்குகிறது. யாழ் களத்தை நடத்துபவர்களுக்கு சில கடப்பாடுகள் உண்டு. அவர்களால் அனைத்துக் கருத்துக்களையும் அனுமதிக்க முடியாது.

நான் இதுவரை ஆயிரத்திச் சொச்சம் கருத்துக்களை எழுதியிருக்கிறேன். இதுவரை இரண்டு முறைதான் என்னுடைய கருத்துக்கள் மட்டுறுத்தல் செய்யப்பட்டதாக நினைக்கிறேன்.

இப்படி இரண்டு முறை என்றாலும், என்னுடைய கருத்துக்களை மட்டுறுத்தல் செய்தது எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் அவர்களுடைய களத்தில் அவர்கள் "தவறு" என்று கருதுகின்ற கருத்துக்களை நீக்குவதற்கு அவர்கள் உரிமை உள்ளவர்கள்.

நான் இதுவரை எத்தனையோ கருத்துக்களை எழுதுவதை தவிர்த்திருக்கிறேன். நான் மனதில் நினைக்கின்ற அனைத்தையும் எழுதினால், அடிக்கடி என்னுடைய கருத்துக்களை மட்டுறுத்த வேண்டிய தேவை ஏற்படும் என்று எனக்கு தெரியும்.

யாழ் கள நிர்வாகம் எதை ஏற்கும், எதை ஏற்காது என்பு புரிந்துணர்வுடன் நான் நடந்து கொள்கிறேன். என்னுடைய அனைத்துக் கருத்துக்களையும் கொட்டுவதற்கு இது என்னுடைய தளம் அல்ல.

என்னுடைய கருத்துக்களை "ஓரளவு" மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு ஒரு கருத்துக்களம் சந்தர்ப்பம் தருகிறது. அதைப் பயன்படுத்தி முடிந்தளவு கருத்துக்களை பரிமாறி நன்மை அடைவதுதான் என்னுடைய குறிக்கோள்.

இதை விடுத்து, களநிர்வாகத்தோடு முரண்பட்டுக் கொண்டு நிற்பது எனக்கு சரியாக படவில்லை.

நாம் சிறுபிள்ளைகள் அல்ல. இங்கே கருத்துக்களை எப்படி வைக்க வேண்டும் என்று அறியாது நாம் இருக்க முடியாது.

கள நிர்வாகத்துடன் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொண்டு எம்முடைய கருத்துக்களை வைப்போம். அனைவரும் பயனடைவோம்.

ஒரு சந்தேகம்! தவறாக நினைக்க வேண்டாம்

சங்கம் என்ற பெயரில் குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்களை சேர்த்துக் கொண்டு, புதிய கருத்துக்களம் ஏதாவது ஆரம்பிக்கப் போகிறீர்களா?

Edited by சபேசன்

சங்கம் எண்ட உடனே எல்லாத்துக்கும் நிர்வாகத்தை எதிர்ப்பது எண்டு மட்டுமே நினைத்து கொள்பவர்கள் பலர் போல இருக்கிறது...

இங்கை இந்த இணயத்துக்காக பணம் செலவு செய்பவர் மோகன் அண்ணா மட்டும்தான்.... ( வலைஞனை வேணும் எண்டாலும் சேர்த்து கொள்ளலாம்) ஆனால் இங்கை இந்த களத்தை என்ன நோக்கத்துக்காக தோற்றுவித்தாரோ அதன் நோக்கம் முழுதாக நிறைவேற்றபட்டதா..?? அல்லது நிறைவேறுகிற திசையில்தான் போய் கொண்டு இருக்கிறதா...??

இங்கை எல்லா பகுதிகளிலையும் தங்களது கருத்துக்களை பயம் இல்லாது வைக்கும் கருத்தாளர்கள் எத்தினை பேர்....??? அதிலை முக்கியமாக சபேசன், நெடுக்காலபோவானை, கிருபன் அண்ணா, ஒருகாலம் வரை சாணக்கியன் அண்ணா, அதை ஒட்டிய காலப்பகுதி வரை தூயவன்...! இவர்களை தவிர மற்றவர்களுக்கு தனக்கு பிடித்தவர்களுடன் எதிர்த்து கருத்தாட பயம்.....! இதுதான் இந்த களம் அடுத்த படிக்கு முன்னேற தடையாக இருப்பது...!

உங்களது கருத்துக்கள் ஒருவேளை வெட்டப்பட்டு விடலாம்... அதனால் இங்கு வந்தமா அரட்டை மட்டும் அடித்து நட்பாக நேரம் போக்கினமா போனமா எண்று இருக்காமல் துணிந்து செயல்பட வேண்டும்... யாழில் கருத்தாடுவதுக்கே பயம்... அதிலை மட்டுறுத்துனர்மார் வெட்டி போடுவினம் எண்ட பயம்... இதை எல்லாம் போக்க நான் ஏன் இணைந்து செயல்பட முடியாது...??? எல்லாம் பய மயம் எண்று இருக்க முடியாது...! உங்களது தனித்துவமே உங்களது கருத்துக்கள்தான்... இல்ல எண்டால் லண்டனிலை இருக்கும் சுண்டலுக்கு, அவுஸ்ரேலியாவிலை இருக்கும் டண்ணுக்கும் ஒரே கருத்தாக இருந்தால் வித்தியாசம் எப்படி வரும்....???

பயம் அதிகமானவர்கள் தயவு செய்து விலகி எப்போதும் போல நில்லுங்கள்.... எனக்கும் சாணக்கியன் அண்ணாவுக்கும், ஜமுனாவுடன் கூட பல கருத்து மோதல்கள் பலதரப்பட்ட வகையில் இருந்தன, இருக்கின்றன... ஆனால் இப்படியான சில அமைப்பு ரீதியான ஒப்பு நடவடிக்கையால் அவை மட்டும் ஒருமித்த கருத்தாகிவிட முடியாது...

இந்த சங்கம்... யாழ் என்னுடைய களம் எண்று தேண்றியதால் வந்தது... அதை சில மட்டுறுத்தல் , அல்லது மோதல்களால் இல்லாது ஒழித்துவிட முடியாது...! களத்தின் வழர்ச்சி ஓங்க வேணும் எண்று நினைப்பதால் எடுக்க படும் நடவடிக்கை, நிர்வாகத்துக்கு வெளியே எடுக்க படுகிறது... அதுவும் களவுறவுகள் மத்தியில்... இது உங்களின் களம். வழப்படுத்த விரும்புபவர்கள் வாருங்கள் சேர்ந்து வளப்படுத்துவோம்....! மட்டுறுத்தல், மோதல்கள் எனும் பெயரில் கள உறவுகளின் கருத்துக்கள் வெளிவருவதை தடுக்க இருக்கும் தடைகளை களைவோம்....!

பலகாலமாக இல்லாவிட்டாகும் கிட்டத்தட்ட 5000 கருத்துக்களுக்கு மேல் எழுதிவிட்ட எனக்கே மட்டுறுத்தல் என்பது எவ்வளவு சோர்வை கொடுக்கிறதே, புதிதாக வரும் ஒருவரை எப்படி சுறுட்டி ஓரம் தள்ளும் என்பதை உணர முடிந்ததால்தான் நான் இந்த சங்க யோசனைக்கு முன் உடன் பட்டேன்...!

புதிதாக வருபவர்களையும் உத்வேகத்துடன் கருத்து எழுத வைக்க வேண்டும்... இதுக்கான நடவடிக்கையையும் சங்கம் எடுக்க வேண்டும் என்பது என்னுடைய ஆவல்... !

யாழ்களம் என்னுடையது...!

நண்றி...

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களம் என்னுடையது...!

எல்லாத்திலும் அண்ணருக்கு கஞ்சத்தனம் தான்.

எம்முடையது என்று சொல்லிப் பழகவேணும். :blink:

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா தளபதியாரே நான் லண்டன் டன் அவுஸ்திரேலியாவா?

இது கூட நல்லா தான் இருக்கு..

  • தொடங்கியவர்

சபேஷ் மாமா

சஜெஸ்சனிற்கு ரொம்ப நன்றியுங்கோ :lol: !!ஜம்மு பேபி ஓல்வேஸ் கூல் தான் மாமோய் தாராளமாக என்னவும் சொல்லலாம் மாமோய்!!ஓ முந்தி சினமூட்டியதா அப்ப நேக்கு கருத்து எழுத தெரியாது பிறகு யாழில உங்க மாதிரி பெரியவாவை பார்த்து தான் கருத்து எழுத பழகினான் மாமா :blink: அது தான் ஏதாவது யாழிற்கு செய்வோம் என்று பார்த்தா!!பலரும் தவறாக நிர்வாகத்தை எதிர்க்க தொடங்கி இருகிறோம் என்பது வேடிக்கையாக இருகிறது...........மாமா நீங்களும் சங்கத்தில சேர்ந்து கொள்ளளாமே!! :lol:

டங்குமாமா!!

எப்ப மாட்டு வண்டி வாங்கினீங்க என்னை எப்ப ஏற்றி கொண்டு சோமாலியா சுற்றி காட்ட போவீங்க டங்கு அண்ணா :) !!சா நம்ம டங்கு மாம வெளியில் இருந்து ஆதரவு தருகிறார் என்று சொல்லி இருகிறார் பிறகு என்ன ஜமாயிச்சிடுவோம்!!முக்கியமான உறுப்பினர்கள் இருக்கிறார்களா நான் இல்லை நான் பேபி (எனி வந்து சொல்லுவார் யார் என்னை சொன்னது என்று அப்படி சொன்னா பிச்சு போடுவேன் பிச்சு :lol: )அடுத்த தேர்தல் வரும் போது நானும் சுயேட்சையா கேட்போம் என்று இருகிறேன் டங்கு மாமா சோ என் ஆதரவு இருக்கு உங்களுக்கு!! :D

ஜம்மு எப்பவும் பேபி தான்!!

சபேசன் மாமா!!

மறுபடி மறுபடி சொல்லி களைத்து போனோம் இது நிர்வாகத்தை எதிர்க்கும் செயற்பாடல்ல நிர்வாகத்தின் யாழ்களம் மீதுள்ள அக்கறையால் உறவுகள் யாவரும் சேர்ந்து தொடங்கிய அமைப்பு தான் இது என்பதை தெரிவித்து கொள்கிறேன்!!நிர்வாகம் தன் கடமையை செய்யலாம் ஆனால் உறவுகள் அதனால் சோர்வடைந்து கருத்துகள் எழுதாமல் இருப்பதை தவிர்க்கும் நோக்கில் தான் உருவாக்கபட்ட சங்கம் என்று கூறலாம்!!இப்ப பாருங்கோ நீங்க கூட என்னுடைய கருத்து 2 தரம் வெட்டினது என்ற கொள்கையில் இருக்கிறீங்க இதை நிவர்த்தி செய்வோம் அனைவரும் ஒன்றாக இணைவோம் என்பதே இந்த சங்கத்தின் நோக்கம்!!மற்றவன் எப்படி போனாலும் கவலை இல்லை என்பவர்களை இணையும்படி நாம் வற்புறுத்தவில்லை விருப்பம் என்றா இணையும்படி கூறி இருந்தோம்!! :lol:

இது எங்கள் களம் இல்லை என்று கூறமுடியாது எம்மை பொறுத்தவரை இது எங்கள் களம் என்ற கொள்கையில் இருப்பவர்கள் தான் இந்த சங்கத்தில் விருப்பத்துடன் இணைந்து கொண்டார்கள் ஏனேனில் முன்னேற்ற பாதையில் இட்டு செல்ல!!

சபேசன் மாமா பகுத்தறிவு பற்றி கதைக்கும் நீங்கள் சங்கம் அமைத்தது குறிபிட்ட எண்ணிகையிலான உறவுகளை கொண்டு வேறோரு களம் அமைக்க போறீங்களா என்று கேட்பது வேடிக்கை என்றே சொல்லமுடியும்!!சங்கம் அமைப்பது நிர்வாகத்துடன் எதிர்க்க ,கூட்டம் கூடி இன்னொன்ரு ஆரம்பிக்க என்ற வரையறையில் இருப்பது வேடிக்கை!!ஆகவே சங்கம் என்பது ஒன்றை எதிர்க்க அல்ல ஆக்கபூர்வமான செயற்பாடுகளிள் ஈடுபட தான் என்பதை மீண்டும் நினைவுறுத்துகிறோம்!! :)

தயா அண்ணா!!

நீங்கல் குறிபிட்டு இருந்தீர்கள் கருத்து மோதல்கள் எம்மில் இருந்தன என்று நிச்சயமாக இனி வரும் காலங்களிள் கூட ஆரோக்கியமான கருத்து மோதல்கள் எம்முள் இருக்கும் :) ஏன் சங்கத்தில் கூட ஒவ்வொரு உறுப்பினருக்கு சுகந்திரம் இருக்கு உங்கள் கருத்துகளை தெரிவிக்க!!நீங்கள் சொல்வது போல யாழ்களம் என்னுடையது என்ற கொள்கையில் இருப்பதால் தான் நானும் ஆவலுடன் இந்த சங்கத்தில் இணைந்து கொண்டேன்!!இன்னும் பல முயற்சிகளை இந்த சங்கத்தின் மூலம் எடுத்து பல வெற்றிகளை யாழிற்கு தேடி தருவது தான் இந்த சங்கத்தின் நோக்கம்!!அந்த வகையில் சங்கத்தில் இணைந்து கொண்ட அனைத்து உறவுகளிற்கும் மிக்க நன்றிகள்!! :)

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"அங்கு சிரிப்பவர்கள் சிரிகட்டும் அது ஆணவ சிரிப்பு இங்கு ஜம்மு பேபி சிரிக்கும் சிரிப்பே புன்சிரிப்பு"

எல்லாத்திலும் அண்ணருக்கு கஞ்சத்தனம் தான்.

எம்முடையது என்று சொல்லிப் பழகவேணும். :lol:

யாருக்கும் பங்கு குடுக்கிற ஐடியா இல்லை...!! :blink:

ஆஹா தளபதியாரே நான் லண்டன் டன் அவுஸ்திரேலியாவா?

இது கூட நல்லா தான் இருக்கு..

இருவருக்கும் ஒரே கருத்து இருந்தால் டண்ணும் சுண்டலும் ஒண்டுதானே....!! யார் எங்கை இருந்தால் என்ன. அதுக்காகத்தான் எழுதினான்...

  • தொடங்கியவர்

இருவருக்கும் ஒரே கருத்து இருந்தால் டண்ணும் சுண்டலும் ஒண்டுதானே....!! யார் எங்கை இருந்தால் என்ன. அதுக்காகத்தான் எழுதினான்...

தயா அண்ணா உங்க புலனாய்வில நெருங்கிட்டீங்க மிச்சத்தையும் கண்டுபிடியுங்கோ வாழ்த்துகள்!! :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.