Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-5-6.jpg?resize=750,375&ssl=1

டியாகோ கார்சியாவில் சிக்கியுள்ள இலங்கை தமிழர்கள் பிரித்தானியாவுக்குள் நுழைய அனுமதி!

ஐக்கிய இராஜ்ஜியத்தின் இந்தியப் பெருங்கடல் பிரதேசமான டியாகோ கார்சியாவில் (Diego Garcia) கடந்த மூன்று வருடங்களாக தங்கியிருந்த 60க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழ் புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவிற்கு இடம்பெயர்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மோதல்கள் காரணமாக இலங்கையை விட்டு வெளியேறிய 16 சிறுவர்கள்/குழந்தைகள் உட்பட 64 இலங்கை தமிழர்கள் கொண்ட குழு, ஏனைய நாடுகளுக்கு நுழைய அனுமதி மறுக்கப்பட்ட பின்னர் 2021 ஒக்டோபர் மாதம் முதல் தொலைதூர தீவில் சிக்கித் தவித்துள்ளது.

இவர்கள் அங்கு, எலி தொல்லைகளுடன் கூடிய நெரிசலான கூடாரங்களில் வாழ்வது, பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவற்றை எதிர்கொள்வது, மன உளைச்சல் மற்றும் தற்கொலை முயற்சிகள் போன்ற பல்வேறு துயரங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், பல வருட சட்ட மற்றும் மனிதாபிமான அழுத்தங்களுக்குப் பிறகு பிரித்தானிய அரசாங்கத்தின் மேற்படி சலுகை அவர்களுக்கு அறிவிக்கப்படவுள்ளது.

இதன் மூலம், குற்றவியல் தண்டனைகள், நிலுவையில் உள்ள குற்றச்சாட்டுகள் அல்லது விசாரணைகள் இல்லாத அனைத்து குடும்பங்கள், குழந்தைகள் மற்றும் துணையில்லாத ஆண்களின் குடும்பங்கள் நேரடியாக பிரித்தானியாவுக்கு மாற்றப்படுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டும்.

எவ்வாறெனினும், குற்றவியல் தண்டனை பெற்றதாகக் கூறப்படும் மூன்று தமிழர்கள் பிரித்தானியாவுக்கு நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சலுகைக்கான பணிகள் தொடர்ந்தும் பேச்சுவார்த்தையில் உள்ளதாகவும், அடுத்த 48 மணி நேரத்துக்குள் இது தொடர்பில் முறையான தீர்மானம் எடுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவில் உள்ள இலங்கை தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் இந்த நடவடிக்கையை “நீதிக்கான நீண்ட போரில்” “மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கை” என்று விவரித்தனர்.

New-Project-6-4.jpg?resize=600,338&ssl=1

New-Project-4-5.jpg?resize=600,338&ssl=1

https://athavannews.com/2024/1407347

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம் இனியாவது அந்த மக்களுக்கு விடிவு வரட்டும் .

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தீவொன்றில் சிக்கியிருந்த 60 இலங்கைத் தமிழர்கள்! நடந்தது என்ன?

December 3, 2024  11:17 am

தீவொன்றில் சிக்கியிருந்த 60 இலங்கைத் தமிழர்கள்! நடந்தது என்ன?

இந்தியப் பெருங்கடல் தீவான டியாகோ கார்சியாவில் கடந்த  மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிக்கியிருந்த புலம்பெயர்ந்த இலங்கைர்கள் குழுவொன்று இங்கிலாந்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

16 குழந்தைகள் உட்பட 60 பேர் அடங்கிய இலங்கைத் தமிழர்கள் குழுவொன்றே இவ்வாறு இங்கிலாந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.

கடந்த 2021 நவம்பர் மாதம் முதல் இந்த குழுவினர் டியாகோ கார்சியா தீவில் அடிப்படை வசதிகள் இன்றி மிகவும் மோசமான நிலையில்  வசித்து வந்துள்ளனர்.

இவ்வாறு, இங்கிலாந்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள், அந்நாட்டில் 6 மாதக்காலம் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த ஆறு மாதங்களுக்கு தேவையான நிதி வசதியையும் அந்நாட்டு வௌிவிவகார அமைச்சு வழங்க தீர்மானித்துள்ளது.

இவர்கள் தீவில் இருந்த காலப்பகுதியில், பல உண்ணாவிரதங்கள் மற்றும் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டதாகவும் அதில் சிலர் சிகிச்சைக்காக ருவாண்டாவிற்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முகாமுக்குள் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் துன்புறுத்தல் போன்ற குற்றச்சாட்டுகளும் பதிவாகியுள்ளதாக 'பிபிசி' தெரிவித்துள்ளது.

என்றாலும், மூன்று பேர் மீது மட்டும் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், அவர்கள் தொடர்ந்து Diego Garcia தீவிலேயேதான் வைக்கப்பட்டிருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

 

https://tamil.adaderana.lk/news.php?nid=196772

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செயல் ,  இனியாவது அவர்களின் வாழ்க்கை மேம்படட்டும் .......!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

animiertes-schiffe-bild-0059  animiertes-schiffe-bild-0007 animiertes-schiffe-bild-0046 animiertes-schiffe-bild-0200

யாழ்ப்பாணத்தில் இருந்து ஏழு கப்பல், 650 ஆட்களை ஏற்றிக் கொண்டு  
டியாகோ கார்சியாவிற்கு புறப்பட்டுக் கொண்டு இருக்குது... என்று ஊர்க்கிழவி சொல்லுது. 😂 🤣

Edited by தமிழ் சிறி

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

டியாகோ கார்சியாவில் பிரிட்டன் தமிழர்களை சட்டவிரோதமாக தடுத்துவைத்திருந்தது – பிரிட்டிஸ் நீதிபதி

December 17, 2024

இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களை பிரிட்டன் டியாகோகார்சியாவில் சட்டவிரோதமாக தடுத்துவைத்திருந்தது  என பிரிட்டிஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புகலிடக்கோரிக்கையாளர்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்த இடம் ஒரு சிறைச்சாலை ஆரம்பத்திலிருந்தே சிறைச்சாலை என நீதிபதி மார்கிரெட் ஒபி தெரிவித்துள்ளார்.
 

https://www.ilakku.org/டியாகோ-கார்சியாவில்-பிரி/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.