Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை (Arjuna Mahendran) நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “அர்ஜுன மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் நாம் சட்டமா அதிபரிடம் கலந்துரையாடினோம்.

சட்ட இடையூறுகள்

இந்தநிலையில் அவரை நாட்டிற்கு அழைத்து வருவதில் சில சட்ட இடையூறுகள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

அர்ஜுன மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை : அநுரவின் அதிரடி அறிவிப்பு | Action To Bring Arjuna Mahendran To The Country

நாம் மீண்டும் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் இது தொடர்பில் எழுத தீர்மானித்துள்ளோம். இந்தநிலையில் நாடுகடத்தல் சட்டம் இதற்கு தடையாக இருக்காது என்ற தர்க்கத்தை இந்த தரப்பிலிருந்து அனுப்பியுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 

எனவே, நாம் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முயல்கின்றோம் அத்தோடு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்து.

அர்ஜுன மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை : அநுரவின் அதிரடி அறிவிப்பு | Action To Bring Arjuna Mahendran To The Country

அது தொடர்பிலான விசாரணைகள் நடைபெற்றுள்ளன, மீண்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை மேற்கொள்வதாக இருந்தால் நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு தடவை அனுமதியை பெற்றுகொள்ள வேண்டும்.

இதனடிப்படையில், அடுத்த வழக்கு விசாரணை நடைபெறும் தினத்தில் அதற்கு அனுமதியை பெற்றுக்கொள்ள முடியும்” என அவர் தெரிவித்துள்ளார்.

https://ibctamil.com/article/action-to-bring-arjuna-mahendran-to-the-country-1731023300#google_vignette

  • 3 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜூன மகேந்திரனை நாடு கடத்த முடியாது - சிங்கப்பூர் அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல்கள்

27 FEB, 2025 | 11:23 AM

image

மத்தியவங்கி பிணைமுறிமோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை சிங்கப்பூர் இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு மறுத்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இடம்பெற்ற மத்தியவங்கி பிணைமுறிமோசடியுடன் தொடர்புடையவர் என குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநரை நாடுகடத்துவதற்கான வேண்டுகோளை இலங்கை சட்டமாஅதிபர் திணைக்களம் விடுத்திருந்தது.

எனினும் சிங்கப்பூரின் சட்டங்களின் கீழ் இலங்கைக்கு அவரை நாடு கடத்த முடியாது என சிங்கப்பூரின் சட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/207808

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டை கொள்ளையடித்த மகிந்தவுக்கு எந்த விசாரணையோ தண்டனையோ வழங்கப்படாதா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூர் அரசினால் தப்பிய அர்ஜுன் மகேந்திரன்: தோல்வியில் முடிந்த அரசாங்கத்தின் முயற்சி

சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்த சிங்கப்பூர் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரின் நாடுகடத்தல் சட்டத்தின் கீழ் குறித்த நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது என்று சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களம் இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

2015 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி காரணமாக இலங்கை அரசாங்கத்திற்கு பத்து பில்லியன் ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பிடியாணை 

இது தொடர்பில் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, வரும் 25 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் மகேந்திரனுக்கு அழைப்பானை அனுப்பியிருந்தது.

சிங்கப்பூர் அரசினால் தப்பிய அர்ஜுன் மகேந்திரன்: தோல்வியில் முடிந்த அரசாங்கத்தின் முயற்சி | Attempt To Extradite Arjuna Mahendran Fails

இருப்பினும், அன்று அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை, பின்னர் அவர் சிங்கப்பூர் சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக மகேந்திரனை கைது செய்ய கொழும்பு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்டர்போல் மூலம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

நாடு கடத்தல்

இதேவேளை, மகேந்திரனை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் கூறியிருந்தார்.

சிங்கப்பூர் அரசினால் தப்பிய அர்ஜுன் மகேந்திரன்: தோல்வியில் முடிந்த அரசாங்கத்தின் முயற்சி | Attempt To Extradite Arjuna Mahendran Fails

இவ்வாறானதொரு பின்னணியில், அர்ஜுன் மகேந்திரனை நாட்டிற்கு நாடு கடத்துமாறு சட்டமா அதிபர் திணைக்களம் பல சந்தர்ப்பங்களில் சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இருப்பினும், அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றுள்ளதால், நாட்டின் நாடுகடத்தல் சட்டத்தின் கீழ் அவரை இலங்கைக்கு நாடு கடத்த முடியாது என்று சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களம் இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.

https://ibctamil.com/article/attempt-to-extradite-arjuna-mahendran-fails-1740670114#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்டர்போல் மூலம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

ஆஹா,ஆஹா .....

இன்டபோலினால் தேடப்பட்ட கே.பி (புலிகளின் உறுப்பினர்)அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாக்கின்றீர்கள் அல்லவா? பிறகு எப்படி நீங்கள் இந்த வெள்ளை கொலர் குற்றவாளியை அவர்களிடம் பிடிச்சு தா என கேட்க முடியும்...அவர்களும் தர மாட்டார்கள் ..அவர்களின் இறையாண்மையை மீறிய செயலாக நினைப்பார்கள்..

5 hours ago, ஏராளன் said:

இருப்பினும், அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றுள்ளதால், நாட்டின் நாடுகடத்தல் சட்டத்தின் கீழ் அவரை இலங்கைக்கு நாடு கடத்த முடியாது என்று சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களம் இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.

அது.

  • கருத்துக்கள உறவுகள்

சில ஊடகவியாளலர்கள் முன்பு அதிரடி படையில் பணி புரிந்தவர்களோ தெரியவில்லை ..பாதாள உலக குழுவினர் போன்று...

அநுரவின் அதிரடி அறிவிப்பு

எதற்கு எடுத்தாலும் ..."அனுராவின் அதிரடி நடவடிக்கை" என தலையங்கம் போட மறக்க மாட்டார்கள்....அதிரடி என்றால் என்ன எனதெரியாது போல ....சட்டம் சம்பந்த பட்ட விடயங்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க முடியாது ....

போர போக்கை பார்த்தால் இன்று தோழர் அதிரடியாக மலம் கழித்தார்,சலம் கழித்தார் என செய்தியை போடுவினம் போல அவ்வளவு ஜெ.வி.பி பற்று

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.