Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை, இந்திய மீனவர் விவகாரம் - ஆரம்பத்திலேயே நேரடி தலையீடுகள் இல்லை - சந்திரசேகரன்

Oruvan

இலங்கை, இந்திய மீனவர் விவகாரத்தை சுமுகமாக தீர்க்கவே சமகால அரசாங்கம் விரும்புகிறது. அதிகாரிகள் மட்டத்தில் இடம்பெறும் பேச்சுகளில் இணக்கப்பாட்டுக்கு வரமுடியும் என எதிர்பார்க்கிறோம். அதனால் ஆரம்பத்திலேயே அரசாங்கத்தின் உயர்மட்ட நேரடி தலையீடுகள் இந்த விடயத்தில் இருக்காது என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

இலங்கை கடல்வளத்தையும், மீன்வளத்தை பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் உறுதியாக எடுக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்திய, இலங்கை மீனவர்கள் விவகாரத்தில் சமகால அரசாங்கத்தின் ஆரம்பகட்ட நகர்வுகள் எவ்வாறு இருக்கும் என 'ஒருவன்' பத்திரிகை எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் சுட்டிக்காட்டியதாவது,

இந்திய, இலங்கை மீனவர்களின் விவகாரம் எதிர்காலத்தில் சுமுகமாக தீர்க்கப்படும். சமகால அரசாங்கம் ஆரம்பத்திலேயே நேரடியாக உயர்மட்ட கலந்துரையாடல்களை இந்த விடயத்தில் மேற்கொள்ளப் போவதில்லை. இருநாட்டு அதிகாரிகள் மட்டத்தில் தற்போது பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன.

அதிகாரிகள் மட்டத்தில் மேற்கொள்ளப்படும் பேச்சுகளே சரியானதாக இருக்கும். அதனை சமகால அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. அந்தப் பேச்சுளின் ஊடாக எதிர்காலத்தில் சாதகமான முடிவுகள் எடுக்கப்படும்.

டிசம்பர் நடுப்பகுதியில் இடம்பெறும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய பயணத்தில் இந்த விடயம் தொடர்பில் அதிக முக்கியம் கொடுக்கப்படாது. பொருளாதாரம் மற்றும் ஏனைய விடயங்கள் குறித்தே முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆனால், இந்த விடயம் தொடர்பில் சாதாரண பேச்சுகள் இடம்பெறும்.

எவ்வாறாயினும் எமது அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. எமக்குச் சொந்தமான கடற்பரப்பில் அத்துமீறும் செயல்பாட்டை நாம் எதிர்க்கிறோம். இந்திய அரசாங்கத்தின் சட்டங்களையும் மீறிதான் இந்திய மீனவர்கள் எமது கடல்பரப்பில் மீன்பிடிக்கின்றனர்

இந்தியாவின் சட்டம், தமிழ்நாட்டின் சட்டம் என்பன ரோலர் அல்லது இழுவை படகு மீன்பிடியை எதிர்க்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள பல மீனவச் சங்கங்களும் இழுவைப் படகு மீன்பிடியை எதிர்க்கின்றன. கட்டாயம் அதனை நிறுத்த வேண்டும். இந்தச் செயல்பாடு தொடர்ந்தால் இந்திய மீனவர்களுக்குக் கூட மீன்பிடிக்க முடியாத நிலைமை ஏற்படலாம்.

இந்த நிலைமையை கடந்த கால அரசாங்கங்கள் எந்தளவு தெளிவுபடுத்தினார்கள் எனத் தெரியவில்லை. இலங்கையின் மீன்வளம் மற்றும் கடல் வளத்தை முழுமையாக பாதுகாத்துக்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கும்.” என்றார்.

 

https://oruvan.com/sri-lanka/2024/11/21/sri-lanka-indian-fishermen-issue-no-direct-interventions-at-the-beginning-chandrasekaran-jvp

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.