Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

IMF உடன்படிக்கை திருத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவிப்பு

December 5, 2024  09:45 am

IMF உடன்படிக்கை திருத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவிப்பு 

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையில் திருத்தப்பட்ட விடயங்கள் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தெரியவரும் என சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் கொள்கை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

"அடுத்த மூன்று ஆண்டுகளில் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பிற்குள் நாங்கள் செயல்பட வேண்டும் என்று நாங்கள் கூறினோம்.

அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கிறோம். ஆம், அது திருத்தப்பட்டுள்ளது. அவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அந்தத் திருத்தங்களின் விடயங்களை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நாட்டு மக்கள் அறிந்து கொள்ள முடியும்.

பாராளுமன்றத்திற்கே நிதி அதிகாரம் உள்ளது. அனுபவமிக்க ரணில் விக்கிரமசிங்க எல்லா இடங்களிலும் VAT குறைக்கப்படவில்லை என்று பொய் சொன்னோம் என்றார். VAT குறைக்கப்பட வேண்டும்.

VAT குறைக்கப்படவுள்ளது. யாரால் குறைக்க முடியும்? இது ஒரு நிதி சட்டமூலம்.

அவரும் நமது பிரதமருக்கு டியூஷன் கொடுக்க முயன்றார். பாராளுமன்ற சட்டத்தின் மூலம் மட்டுமே வரிகளை குறைக்க முடியும். முதல் திட்டம் வரவு செலவுத்திட்டத்தில் செயல்படுத்தப்படும்" என்றார்.
 

https://tamil.adaderana.lk/news.php?nid=196860

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் 4 லட்சம் கோடி ரூபாவை பெறுவதற்கு அநுர முயற்சி

Anura-Kumara-Dissanayake-es-declarado-pr

கடந்த அரசாங்கங்களை போன்றே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் கடன் பெறுவதை பிரதான இலக்காகக் கொண்டுள்ளதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான எஸ்.எம். மரிக்கார், தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் 4000 பில்லியன்(4 லட்சம் கோடி) ரூபா கடன் பெறுவதற்கு அரசாங்கம் பரிந்துரைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் அரசினால் சமர்ப்பிக்கப்பட்ட கணக்கு வாக்குப்பதிவு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இனவாத செயற்பாடுகளுக்கு நாங்கள் என்றும் எதிரானவர்கள். என்று பாராளுமன்றத்துக்கு வந்து குறிப்பிட்டுக் கொண்டிருக்காமல், இனவாத செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.

அரச செலவுகளை குறைத்து ஊழல் மோசடிகளை குறைப்பதாக தேசிய மக்கள் சக்தி தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்தது.ஆனால் எதிர்வரும் நான்கு மாதங்களுக்கான பெரும் தொகை நிதி ஒதுக்கியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இவ்வாறே செலவிட்டார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில், கடன் பெறுவதற்கு ஜனாதிபதி தேவையில்லை என்று குறிப்பிட்டார். தற்போது தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் 4000 பில்லியன் (4 லட்சம் கோடி) ரூபா கடனைப் பெறுவதற்கு அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது.

கடன் சுமைகளினால் தான் நாடு வங்குரோத்து நிலையடைந்தது என்று நாட்டு மக்கள் குறிப்பிடுகிறார்கள். சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்திட்டங்களை மறுசீரமைப்பதாக அரசாங்கம் குறிப்பிட்டது.

தேசிய கடன் மறுசீரமைப்பின் போது ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிய சேவையாளர்கள் பாதிக்கப்பட்டார்கள். தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தில் தொழில் படையினர் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். ஆகவே ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் பயனாளர்களுக்க நியாயம் வழங்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


https://akkinikkunchu.com/?p=301975

 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.