Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீனவர்கள் நேரில் சந்திப்பது இதுவரை நடைபெறவில்லை; அவ்வாறு இடம்பெறுமாயின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் -  இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் துணைத்தூதுவர் சாய் முரளி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீனவர்கள் நேரில் சந்திப்பது இதுவரை நடைபெறவில்லை; அவ்வாறு இடம்பெறுமாயின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் -  இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் துணைத்தூதுவர் சாய் முரளி

Published By: Vishnu

16 Dec, 2024 | 02:25 AM
image
 

மீனவர்கள் நேரில் சந்திப்பது இதுவரை நடைபெறவில்லை. அது இடம்பெறுமாயின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் யாழ்ப்பாணம் துணைத்தூதுவர் சாய் முரளி இவ்வாறு தெரிவித்தார். 

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பெரும் பங்களிப்புடன் மிஸ்பா ஜெப மிஷனரி ஆலயத்தின் ஏற்பாட்டில் சனிக்கிழமை (14.12.2024 முல்லைத்தீவு முள்ளியவளையில் மாபெரும் நத்தார் பெருவிழா இடம்பெற்றிருந்தது. நிகழ்வின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார், 

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இந்திய மக்கள் சார்பாக மிஸ்பா ஜெப மிஷனரி ஆலய மாணவர்களுக்கு இந்திய மக்கள் சார்பாக கலந்து கொண்டு உதவித்திட்டங்களை வழங்குவதில் பெருமையடைகிறேன்.

இந்திய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பல திட்டங்களில் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணத்திலுள்ள மக்களுக்கு ஆதரவாக மேலும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம், கிழக்கு பல்கலைக்கழகம் சம்பந்தமான திட்டங்களும் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது 

இன்றையதினம் இலங்கை ஜனாதிபதி இந்தியா பயணிக்கின்றார். அங்கு தங்கியிருந்து இலங்கை சம்பந்தமான பல திட்டங்கள் தொடர்பான அறிவிப்பை எதிர்பார்க்கலாம். அதில் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் சேர்ந்த பல திட்டங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. 

நிகழ்வில் கலந்து கொள்ள வந்திருக்கின்ற அனைவரோடும் மாணவர்கள், இளைஞர்கள், இங்கே இருக்கின்ற மக்கள் அனைவரையும் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். ஏற்கனவே குறிப்பிட்டது போல இது ஒரு ஆரம்பம்தான் எதிர்காலத்தில் பல விடயங்களோடு சேர்ந்து பயணிப்போம். 

ஒக்டோபர் மாதம் இறுதியில் பெரியளவிலான கூட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது. அதில் இலங்கை தொடர்பான அதிகாரிகள் சந்தித்திருக்கிறார்கள் ஆனால் மீனவர்கள் நேரில் சந்திப்பது இதுவரை நடைபெறவில்லை. அது இடம்பெறுமாயின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என மேலும் தெரிவித்தார்.

 
  •  
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, யாயினி said:

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பெரும் பங்களிப்புடன் மிஸ்பா ஜெப மிஷனரி ஆலயத்தின் ஏற்பாட்டில் சனிக்கிழமை (14.12.2024 முல்லைத்தீவு முள்ளியவளையில் மாபெரும் நத்தார் பெருவிழா இடம்பெற்றிருந்தது. நிகழ்வின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார், 

இது எந்த கூட்டம் ?

 

  • கருத்துக்கள உறவுகள்

இது தொடர்பாக சில விடயங்களைச் சொல்ல விரும்புகின்றேன்.

மிஸ்பா ஜெப மிஷனரி ஆலயம் என்பது கொழும்பு  மட்டக்குளியில் உள்ள ஒரு free gospel church ஆகும். சங்கிகளின் மொழியில் சொல்வதனால் மதம் மாற்றும் ஒரு நிறுவனமாகும். இந்த ஆலயத்தின் நத்தார் நிகழ்வுக்கு இந்தியத் தூதர் ஏன் வரவேண்டும் அல்லது அழைக்கப்படவேண்டும் என்ற கேள்வி எழுகின்றது. அடுத்ததாக ஏழை மக்களுக்கு பணம்கொடுத்து மதம்மாற்றுபவர்கள் என்று சங்கிகளால் சொல்லப்படும் ஓர் ஆலய மாணவர்களுக்கு ஏன் இந்திய மக்களின் உதவித்திட்டம் வழங்கப்பட வேண்டும்? இந்தியத் தூதர் ஓரு கிறிஸ்தவராக இருந்து அழைக்கப்பட்டிருந்தால் அதில் ஓரளவுக்குத்தன்னும் நியாயம் இருந்திருக்கும்.  சரி இந்த நிகழ்வில் ஏன் மீனவர் பிரச்சினை குறித்த கருத்துக்களை இந்தியத்தூதர் தெரிவிக்கவேண்டும்? இவ்வாறான கேள்விகள் எனக்குள் எழுகின்றன. இது குறித்து ஈழத்து இந்து சமயிகளின் தலைவன் மற்வன்புலவு சச்சிதானந்தனினதும் இந்து சமயத்தின் காவலன் சிறுவர் இல்லம் புகழ் ஆறுதிருமுருகனினதும் எதிர்வினை எப்படி இருக்கப்போகின்றது என்பதனையும் அறிய உள்ளம் அவாவுகின்றது.

மேலதிக தகவல்களாக இந்த மிஸ்பா சபையின் போதகர் ஜெயம் சாரங்கபாணி (படத்தில் இடதுபுறம் இருப்பவர்) ஆவார். சாரங்கபாணி என்ற பெயர் பொதுவாக தெலுங்கு மொழி பேசும் மக்களின் பெயராக அறியப்படுகின்றது.

இறுதியாக இது ஓரு மத நிகழ்வாக இருந்தால் பேசாமல் கடந்து போய்விடலாம். ஆனால் இங்கு ஒரு மதநிகழ்வில் அரசியல் பேசப்பட்டிருக்கின்றது. அதுதான் சில அய்யங்களை தோற்றுவித்திருக்கின்றது!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

இது தொடர்பாக சில விடயங்களைச் சொல்ல விரும்புகின்றேன்.

மிஸ்பா ஜெப மிஷனரி ஆலயம் என்பது கொழும்பு  மட்டக்குளியில் உள்ள ஒரு free gospel church ஆகும். சங்கிகளின் மொழியில் சொல்வதனால் மதம் மாற்றும் ஒரு நிறுவனமாகும். இந்த ஆலயத்தின் நத்தார் நிகழ்வுக்கு இந்தியத் தூதர் ஏன் வரவேண்டும் அல்லது அழைக்கப்படவேண்டும் என்ற கேள்வி எழுகின்றது. அடுத்ததாக ஏழை மக்களுக்கு பணம்கொடுத்து மதம்மாற்றுபவர்கள் என்று சங்கிகளால் சொல்லப்படும் ஓர் ஆலய மாணவர்களுக்கு ஏன் இந்திய மக்களின் உதவித்திட்டம் வழங்கப்பட வேண்டும்? இந்தியத் தூதர் ஓரு கிறிஸ்தவராக இருந்து அழைக்கப்பட்டிருந்தால் அதில் ஓரளவுக்குத்தன்னும் நியாயம் இருந்திருக்கும்.  சரி இந்த நிகழ்வில் ஏன் மீனவர் பிரச்சினை குறித்த கருத்துக்களை இந்தியத்தூதர் தெரிவிக்கவேண்டும்? இவ்வாறான கேள்விகள் எனக்குள் எழுகின்றன. இது குறித்து ஈழத்து இந்து சமயிகளின் தலைவன் மற்வன்புலவு சச்சிதானந்தனினதும் இந்து சமயத்தின் காவலன் சிறுவர் இல்லம் புகழ் ஆறுதிருமுருகனினதும் எதிர்வினை எப்படி இருக்கப்போகின்றது என்பதனையும் அறிய உள்ளம் அவாவுகின்றது.

மேலதிக தகவல்களாக இந்த மிஸ்பா சபையின் போதகர் ஜெயம் சாரங்கபாணி (படத்தில் இடதுபுறம் இருப்பவர்) ஆவார். சாரங்கபாணி என்ற பெயர் பொதுவாக தெலுங்கு மொழி பேசும் மக்களின் பெயராக அறியப்படுகின்றது.

இறுதியாக இது ஓரு மத நிகழ்வாக இருந்தால் பேசாமல் கடந்து போய்விடலாம். ஆனால் இங்கு ஒரு மதநிகழ்வில் அரசியல் பேசப்பட்டிருக்கின்றது. அதுதான் சில அய்யங்களை தோற்றுவித்திருக்கின்றது!

உங்கள் ஐயம் நியாயமானது. 

இந்தியத் தூதுவர் கிறீத்துவ நிறுவனம் ஒன்றுடன் வருகிறார் என்றால் நிச்சயமாக அது நன்மைக்கானது அல்ல. 

சாரங்கபாணி என்கிற பெயரே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.