Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஒரு புவியியல் பிழைக் கோட்டில் அமைந்துள்ள இப்பகுதியில் பூகம்பங்கள் பொதுவானவை (கோப்புப்படம்)
 

சீனாவின் திபெத் பகுதியில் உள்ள மலைத்தொடரில் செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தில் குறைந்தது 53 பேர் உயிரிழந்துள்ளதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

திபெத்தில் உள்ள புனித நகரமான ஷிகாட்சேயில் உள்ளூர் நேரப்படி காலை 9:00 மணியளவில் (01:00 GMT) நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.1 என்ற அளவில் மேற்பரப்புக்கு கீழே 10 கிலோமீட்டர் (சுமார் ஆறு மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்க புவியியல் ஆய்வின் தரவுகளின்படி, பெரிய நிலநடுக்கத்திற்கு பிறகு சிறிய நிலநடுக்கங்களும் ஏற்பட்டுள்ளன.

அண்டை நாடான நேபாளம் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளிலும் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டது. ஒரு புவியியல் பிழைக் கோட்டில் அமைந்துள்ள இப்பகுதியில் பூகம்பங்கள் பொதுவானவை

 

திபெத்தின் புனித நகரங்களில் ஒன்றாக ஷிகாட்சே கருதப்படுகிறது. இது திபெத்திய புத்த மதத்தின் முக்கிய நபரான பஞ்சன் லாமாவின் பாரம்பரிய இடமாகும். அவரது ஆன்மீக அதிகாரம் தலாய் லாமாவுக்கு அடுத்தபடியாக உள்ளது

நிலநடுக்கத்திற்குப் பிறகு கட்டடங்கள் இடிந்து விழும் படங்களும் காணொளிகளும் சமூக ஊடகப் பதிவுகளில் வெளியாகியுள்ளன.

சீனா பூகம்ப வலையமைப்பு மையத்தின் ஆராய்ச்சியாளர் ஜியாங் ஹைகுன் சீனா சீன ஊடகமான சிசிடிவியிடம், "ஒரு பெரிய நிலநடுக்கத்திற்குப் பிறகு ஏற்படும் சிறிய அதிர்வுகளின் வலிமை மற்றும் நடுக்கம் படிப்படியாக குறையும்" என்று கூறினார்.

5 என்ற அளவிலான மற்றொரு நிலநடுக்கம் இன்னும் நிகழக்கூடும் என்றாலும், "பெரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது"என்று ஜியாங் கூறினார்.

நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள இப்பகுதி, எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. உறைபனிக்குக் கீழே வெப்பநிலை உள்ள இப்பகுதியில், சீன விமானப்படை மீட்புப் பணிகளைத் தொடங்கியுள்ளது மற்றும் ஆளில்லா விமானங்களையும் அனுப்பியுள்ளது.

அப்பகுதியில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இரண்டும் துண்டிக்கப்பட்டுள்ளன.

நேபாளத்தில் அதிர்வு

இதற்கிடையில், நேபாள தலைநகர் காத்மாண்டுவில் செவ்வாய்க்கிழமை காலை நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டதாக ஏஃப்பி செய்தி முகமையின் செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.

நிலநடுக்க அதிர்வுக்கு பிறகு ஏற்பட்ட உயிர் மற்றும் உடைமை இழப்புகளை நேபாள அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக ஏஃப்பி தெரிவித்துள்ளது.

"அதிர்வு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தது, இங்குள்ள அனைவரும் கண்விழித்துகொண்டனர். இதுவரை சேதமும் ஏற்பட்டதாக எந்த தகவலுக்கு எங்களுக்கு வரவில்லை" என்று எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகிலுள்ள நாம்சே பகுதியின் அரசு அதிகாரி ஜகத் பிரசாத் ஏஃப்பியிடம் தெரிவித்தார்.

''ஒரு வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை'' என்கிறார் நேபாளத்தின் சொலுகும்பு மாவட்ட உதவி தலைமை மாவட்ட அதிகாரி ரூபேஷ் விஸ்வகர்மா.

" பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது போல் உணர்ந்தேன். நான் வெளியே வந்து பார்த்தேன், இங்கு எந்த சேதமும் இல்லை. லோபுச்சேவை அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று விஸ்வகர்மா பிபிசி நேபாள சேவையிடம் தொலைப்பேசியில் தெரிவித்தார்.

தேசிய நிலநடுக்க அளவீடு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் செய்தித் தொடர்பாளர் மனிகா ஜா பிபிசியிடம், "இந்த நிலநடுக்கத்தின் மையம் நேபாளம் அல்ல, சீனாதான். ஆனால் அதன் தாக்கம் நேபாளத்தின் பல பகுதிகளில் உணரப்பட்டது." என்றார்.

இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியானது, இந்திய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தகடுகள் மோதும் புவியியல் பிழைக் கோடுக்கு அருகே அமைந்துள்ளது. இதனால் அப்பகுதி அடிக்கடி நில அதிர்வுகளுக்கு உள்ளாகிறது.

2015ம் ஆண்டில், நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டு அருகே 7.8 ரிக்டர் அளவில் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இந்த துயர நிகழ்வில் கிட்டத்தட்ட 9,000 மக்கள் இறந்தனர் மற்றும் 20,000 க்கும் அதிகமான மக்கள் காயமடைந்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்

திபெத் நிலநடுக்கத்தில் 53 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

திபெத் நிலநடுக்கத்தில் 53 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

சீனாவின் மலைப்பகுதியான திபெத்தில் செவ்வாய்கிழமை (07) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் குறைந்தது 53 பேர் உயிரிழந்துள்ளதுடன், 62 பேர் காயமடைந்துள்ளதாக சீன அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

பீஜிங் நேரப்படி 09:05 மணியளவில் (01:00 GMT) திபெத்தின் புனித ஷிகாட்சே (Shigatse) நகரத்தை தாக்கிய நிலநடுக்கம் 7.1 மெக்னிடியூட் அளவு மற்றும் 10 கிலோமீட்டர் (ஆறு மைல்) ஆழத்தில் இருந்ததாக அமெரிக்க‍ புவியியல் ஆய்வு நிலையம் கூறியுள்ளது.

எனினும் நிலநடுக்கம் 6.8 மெக்னிடியூட் அளவில் ஏற்பட்டதாக சீன அரசு ஊடகம் தெரிவித்தது.

எவ்வாறெனினும், இதன் தாக்கம் அண்டை நாடான நேபாளம் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளிலும் உணரப்பட்டதுடன், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

நிலநடுக்கத்தை அடுத்து சமூக ஊடக பதிவுகள் இடிந்து வீழ்ந்த கட்டிடங்களையும், மீட்பு பணிகளையும் வெளிக்காட்டுகின்றன.

Image

அனர்த்தத்தை அடுத்து தீபத்தின் பல பகுதிகளுக்கான மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோம் இரண்டும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், உயிரிழப்புகளைக் குறைப்பதற்கும், பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களை மீள்குடியேற்றுவதற்கும் முழுமையான தேடல் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நேபாளத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டாலும் அங்கு சொத்து சேதமோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்று ஆரம்பக் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தகடுகளின் பெரிய கோட்டிற்கு அருகில் அமைந்துள்ள இப்பகுதி, அடிக்கடி நில அதிர்வு நடவடிக்கைகளுக்கு தாயகமாக உள்ளது.

2015 ஆம் ஆண்டில், நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டு அருகே ஏற்பட்ட 7.8 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கத்தில் சுமார் 9,000 பேர் உயிரிழந்தனர் மற்றும் 20,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1415504

  • கருத்துக்கள உறவுகள்

இந்த படத்தில் இருப்பவர்களை பார்த்தால், நேபாளியர் போலிருக்கிறதே. பழைய படமா? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திபெத் நிலநடுக்கம்: குறைந்தது 95 பேர் பலி

நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன
7 ஜனவரி 2025, 02:48 GMT
புதுப்பிக்கப்பட்டது 54 நிமிடங்களுக்கு முன்னர்

திபெத் பகுதியில் உள்ள மலைத்தொடரில் செவ்வாய்க்கிழமை அன்று காலை ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தில் குறைந்தது 95 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 130 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

திபெத்தில் உள்ள புனித நகரமான ஷிகாட்சேயில் உள்ளூர் நேரப்படி காலை 9:00 மணியளவில் (01:00 GMT) நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.1 என்ற அளவில் மேற்பரப்புக்கு கீழே 10 கிலோமீட்டர் (சுமார் ஆறு மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்க புவியியல் ஆய்வின் தரவுகளின்படி, பெரிய நிலநடுக்கத்திற்கு பிறகு சிறிய நிலநடுக்கங்களும் ஏற்பட்டுள்ளன.

சீனாவின் திபெத் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இந்த நிலநடுக்கத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன

நேபாளம் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளிலும் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டது. ஒரு புவியியல் பிழைக் கோட்டில் அமைந்துள்ள இப்பகுதியில் பூகம்பங்கள் பொதுவானவை.

திபெத்தின் புனித நகரங்களில் ஒன்றாக ஷிகாட்சே கருதப்படுகிறது. இது திபெத்திய புத்த மதத்தின் முக்கிய நபரான பஞ்சன் லாமாவின் பாரம்பரிய இடமாகும். அவரது ஆன்மீக அதிகாரம் தலாய் லாமாவுக்கு அடுத்தபடியாக உள்ளது

சீன அரசு ஊடகங்கள் ஒளிபரப்பிய வீடியோ பதிவுகள் வீடுகள் மற்றும் கட்டடங்கள் இடிந்து விழுந்ததையும், இடிபாடுகளுக்குள் சென்று மீட்புப் பணியாளர்கள் அங்கு சிக்கி உள்ள மக்களுக்கு தடிமனான போர்வைகளை வழங்குவதைக் காட்டுகின்றது.

 

சீனா பூகம்ப வலையமைப்பு மையத்தின் ஆராய்ச்சியாளர் ஜியாங் ஹைகுன் சீன ஊடகமான சிசிடிவியிடம், "ஒரு பெரிய நிலநடுக்கத்திற்குப் பிறகு ஏற்படும் சிறிய அதிர்வுகளின் வலிமை மற்றும் நடுக்கம் படிப்படியாக குறையும்" என்று கூறினார்.

5 என்ற அளவிலான மற்றொரு நிலநடுக்கம் இன்னும் நிகழக்கூடும் என்றாலும், "பெரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது"என்று ஜியாங் கூறினார்.

நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள இப்பகுதி, எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. உறைபனிக்குக் கீழே வெப்பநிலை உள்ள இப்பகுதியில், சீன விமானப்படை மீட்புப் பணிகளைத் தொடங்கியுள்ளது மற்றும் ஆளில்லா விமானங்களையும் அனுப்பியுள்ளது.

அப்பகுதியில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இரண்டும் துண்டிக்கப்பட்டுள்ளன.

நேபாளத்திலும் நிலநடுக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,நேபாளத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டது, அங்கு உயிரிழப்புகள் ஏற்படவில்லை

நேபாளத்தில் அதிர்வு

இதற்கிடையில், நேபாள தலைநகர் காத்மாண்டுவில் செவ்வாய்க்கிழமை காலை நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டதாக ஏஃப்பி செய்தி முகமையின் செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.

நிலநடுக்க அதிர்வுக்கு பிறகு ஏற்பட்ட உயிர் மற்றும் உடைமை இழப்புகளை நேபாள அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக ஏஃப்பி தெரிவித்துள்ளது.

"அதிர்வு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தது, இங்குள்ள அனைவரும் கண்விழித்துகொண்டனர். இதுவரை சேதமும் ஏற்பட்டதாக எந்த தகவலுக்கு எங்களுக்கு வரவில்லை" என்று எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகிலுள்ள நாம்சே பகுதியின் அரசு அதிகாரி ஜகத் பிரசாத் ஏஃப்பியிடம் தெரிவித்தார்.

''ஒரு வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை'' என்கிறார் நேபாளத்தின் சொலுகும்பு மாவட்ட உதவி தலைமை மாவட்ட அதிகாரி ரூபேஷ் விஸ்வகர்மா.

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஒரு புவியியல் பிழைக் கோட்டில் அமைந்துள்ள இப்பகுதியில் பூகம்பங்கள் பொதுவானவை (கோப்புப்படம்)

"பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது போல் உணர்ந்தேன். நான் வெளியே வந்து பார்த்தேன், இங்கு எந்த சேதமும் இல்லை. லோபுச்சேவை அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று விஸ்வகர்மா பிபிசி நேபாள சேவையிடம் தொலைப்பேசியில் தெரிவித்தார்.

தேசிய நிலநடுக்க அளவீடு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் செய்தித் தொடர்பாளர் மனிகா ஜா பிபிசியிடம், "இந்த நிலநடுக்கத்தின் மையம் நேபாளம் அல்ல, சீனாதான். ஆனால் அதன் தாக்கம் நேபாளத்தின் பல பகுதிகளில் உணரப்பட்டது." என்றார்.

இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியானது, இந்திய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தகடுகள் மோதும் புவியியல் பிழைக் கோடுக்கு அருகே அமைந்துள்ளது. இதனால் அப்பகுதி அடிக்கடி நில அதிர்வுகளுக்கு உள்ளாகிறது.

2015ம் ஆண்டில், நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டு அருகே 7.8 ரிக்டர் அளவில் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இந்த துயர நிகழ்வில் கிட்டத்தட்ட 9,000 மக்கள் இறந்தனர் மற்றும் 20,000க்கும் அதிகமான மக்கள் காயமடைந்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திபெத்தை உலுக்கியுள்ள பூகம்பம் - 450 பேர் உயிருடன் மீட்பு

08 JAN, 2025 | 02:47 PM
image

திபெத்தை உலுக்கியுள்ள பூகம்பத்தினால் 126 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தொலைதூர பகுதிகளில் உயிருடன் இருக்ககூடியவர்கள் என கருதப்படுபவர்களை மீட்பதற்காக 15000 மீட்பு பணியாளர்களை சீனா திபெத்திற்கு அனுப்பியுள்ளது.

450 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

tibet_earth_58.jpg

எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்திலிருந்து 50 மைல் தொலைவில் உள்ள பகுதியை தாக்கிய பூகம்பம் ஆயிரக்கணக்கான வீடுகளை அழித்துள்ளது என சீன  ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடும் குளிர் நிலவுகின்றது இதனால் மீட்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள சீனஊடகங்கள் மீட்பு நடவடிக்கைகளை பார்வையிடுவதற்கான சீனாவின் துணை பிரதமர் திபெத் சென்றுள்ளார் என குறிப்பிட்டுள்ளன.

இந்த பகுதி ஒரு பெரிய பிழைக்கோட்டில் அமைந்துள்ளதால் இங்கு பூகம்பங்கள் என்பது பரவலான விடயம்.

எனினும் செவ்வாய்கிழமை பூகம்பம் சமீபத்தைய சீன வரலாற்றில் மிக மோசமான ஒன்று.

ரிச்டர் அளவையில் 7.1 ஆக பதிவாகியுள்ள இந்த பூகம்பத்தின் அதிர்வுகள் நேபாளம் இந்தியாவிலும் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திபெத்தினை சீனா கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது . இங்கு இணையசேவைகள் கட்டுப்படுத்தப்பட்டு;ள்ளன, அரசாங்கத்தின் அனுமதியின்றி செய்தியாளர்கள் செயற்பட முடியாது. இதன் காரணமாக பூகம்பம் குறித்து சீன ஊடகங்களின் மூலமே அறிந்து கொள்ளவேண்டிய நிலை காணப்படுவதாக பிபிசி தெரிவித்துள்ளது.

உயிரிழப்புகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பாதிக்கப்பட்ட மக்களை அவர்களின் பகுதிகளில் மீள குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் சீன ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மீட்பு பணியாளர்களிற்கு உதவுவதற்காக சீன விமானப்படையின் விமானங்கள் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன, ஆளில்லா விமானங்களையும் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.

tibet_earth__56.jpg

30,000 மக்கள் அந்த பகுதியில் இடம்பெயர்ந்துள்ளனர் என சீன அரசாங்கத்தின் பீப்பிள்ஸ் டெய்லி தெரிவித்துள்ளது.

பூகம்பம் மையம் கொண்டிருந்த டிங்கிரி கன்ரியில்; தொலைபேசி இணையசேவைகளை சரி செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

35000 கட்டிடங்கள் தரைமட்டமாகியிருக்கலாம் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/203310

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.