Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவராக சாணக்கியன் தெரிவு

 

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களாக பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோர் தெரிவு ஒன்றியத்தின் அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண தெரிவு பிரதி இணைத் தலைவர்கள் நால்வர். பத்தாவது பாராளுமன்றத்தில் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்ட திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் முதலாவது கூட்டம் 08 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இந்த ஒன்றியத்தின் இணைத் தலைவர்களாக அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இதன்போது ஒன்றியத்தின் இணைத் தலைவராக அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேனவின் பெயரை, பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜனக சேனாரத்ன முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பாக்ய ஸ்ரீ ஹேரத் அதனை வழிமொழிந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் அவர்களின் பெயரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்ததுடன், அதனை பாராளுமன்ற உறுப்பினர் நலீன் பண்டார வழிமொழிந்தார்.

அத்துடன், இந்த ஒன்றியத்தின் அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண தெரிவு செய்யப்பட்டதுடன், பிரதி இணைத் தலைவர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே, சந்தன சூரியஆரச்சி, கௌரவ எஸ். எம். மரிக்கார் மற்றும் சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இங்கு உரையாற்றிய ஒன்றியத்தின் இணைத் தலைவர்கள், பாராளுமன்றத்தை பொதுமக்களுக்கு நெருக்கமடையச் செய்வதற்கு இந்த ஒன்றியத்தின் மூலம் மேற்கொள்ளக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர். அதற்காக அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

 

http://www.samakalam.com/பாராளுமன்ற-ஒன்றியத்தின்/

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றிய தலைவரின் பொறுப்புகள் என்ன? 

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி சட்டத்தரணி என்றால்; ஏதோ பாண்டித்தியம் பெற்றதுபோல் புலுடா விடுவது போல் இதுவும் ஒன்று. சும்மாவே தனக்குள்தான் கட்சி என்பதுபோல், தொடக்க காலத்தில் இருந்து இருக்கும் வயதில் மூத்தவர்களை கட்டிப்போட நினைக்கும் சாணக்கியனுக்கு, இந்த ஒரு பதவிகாணும். மணி கட்டின மாதிரி துள்ளுவதற்கு .அவருக்கு அனுபவமோ, பக்குவமோ இல்லை. ஏதோ கொம்பு முளைச்சமாதிரி துள்ளுறார், கவுண்டு விழுந்தாலும் விழலாம். பதவி வரும்போது பணிவு வரவேண்டும். இது அதிகார மோகம் உச்சத்துக்கு ஏறி யாரோடு பேசுகிறோம், என்ன பேசுகிறோம் என்பதையறியாமல் தான் வந்த பாதையை உணராமல் அறிக்கை விடுவார். அத்தைக்கு பவுசு வந்தா அர்த்தராத்திரியில் எழும்பி குடை பிடிக்குமாம். மக்கள் போட்ட பிச்சையில் வந்து நின்று கொண்டு, வடக்கையும் எங்களிடம் தாருங்கள் நாங்கள் திருத்துகிறோம் என்று அறிக்கை விட்டவரல்லோ. அப்போ, கிழக்கிலே ஒரு பிரச்சனையும் இல்லை, எல்லாம் நிறைவாக இருக்கிறது. இப்போ, வடக்கிலதான் பிரச்சனை என்பது உண்மையை ஏற்றுக்கொள்ளாத தன்மை. அதிலிருந்து அவரது அறிவை புரிந்து கொள்ளுங்கள். துள்ளுற மாடு பொதி சுமக்காது.      

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

ஜனாதிபதி சட்டத்தரணி என்றால்; ஏதோ பாண்டித்தியம் பெற்றதுபோல் புலுடா விடுவது போல் இதுவும் ஒன்று. சும்மாவே தனக்குள்தான் கட்சி என்பதுபோல், தொடக்க காலத்தில் இருந்து இருக்கும் வயதில் மூத்தவர்களை கட்டிப்போட நினைக்கும் சாணக்கியனுக்கு, இந்த ஒரு பதவிகாணும். மணி கட்டின மாதிரி துள்ளுவதற்கு .அவருக்கு அனுபவமோ, பக்குவமோ இல்லை. ஏதோ கொம்பு முளைச்சமாதிரி துள்ளுறார், கவுண்டு விழுந்தாலும் விழலாம். பதவி வரும்போது பணிவு வரவேண்டும். இது அதிகார மோகம் உச்சத்துக்கு ஏறி யாரோடு பேசுகிறோம், என்ன பேசுகிறோம் என்பதையறியாமல் தான் வந்த பாதையை உணராமல் அறிக்கை விடுவார். அத்தைக்கு பவுசு வந்தா அர்த்தராத்திரியில் எழும்பி குடை பிடிக்குமாம். மக்கள் போட்ட பிச்சையில் வந்து நின்று கொண்டு, வடக்கையும் எங்களிடம் தாருங்கள் நாங்கள் திருத்துகிறோம் என்று அறிக்கை விட்டவரல்லோ. அப்போ, கிழக்கிலே ஒரு பிரச்சனையும் இல்லை, எல்லாம் நிறைவாக இருக்கிறது. இப்போ, வடக்கிலதான் பிரச்சனை என்பது உண்மையை ஏற்றுக்கொள்ளாத தன்மை. அதிலிருந்து அவரது அறிவை புரிந்து கொள்ளுங்கள். துள்ளுற மாடு பொதி சுமக்காது.      

""அத்தைக்குப் பவிசு வந்தால்"" அல்ல சாத். 

அது "அற்பனுக்குப் பவிசு வந்தால், அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான்"  என்றுதான்  வரவேண்டும். 

சாணக்கியனைத் திட்டும் அவசரத்தில் சாத்தான் தன்னிலை மறந்து எதை அதையோவெல்லாம் எழுதுகிறார். 

🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரியம் ஐயாவின் விளக்கம் வட்ஸப்பில் :

 

பாராளுமன்ற ஒன்றியங்கள் பாராளுமன்ற நிலையில் கட்டளைக்கு உள்வாங்கப்படுவதில்லை..

நாடாளுமன்ற குழுக்களின் வகைகள்
 இலங்கைப் பாராளுமன்றத்தின் குழுக்கள் இரண்டு விரிவான வகுப்புக்களுள் வகைப்படுத்தப்பட முடியும். அவை நிலையியற் குழுக்கள், விஷேட குழுக்கள் என்பன ஆகும். நிலையியற் குழுக்கள், நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் சபாநாயகரால் நியமிக்கப்படுவதுடன் அக்குழுவின் அலுவல் முற்றுப் பெற்றாலும் முற்றுப் பெறாவிட்டாலும் தொடர்ந்து செயற்பட்டவாறிருக்கும். அவைகளின் பதவிக் காலத்தில் சற்று நிரந்தரத்தன்மை காணப்படும். சபையின் குறிப்பிட்ட ஓர் அலுவலை அவை கையாள்கின்றன. விஷேட குழுக்களோ பெரிதும் தற்காலிகமானவையாக இருப்பதுடன் அவற்றின் பணி பூர்த்தியானதும் அவை இல்லாதொழிந்து போகின்றன. 

இக்குழுக்கள் காலத்திற்குக் காலம் அவற்றுக்கு வழங்கப்படும் இவ்வாறான குறிப்பிட்ட செயற்பாடுகளுக்காகச் செயலாற்றுகின்றன. இவற்றை நாம் தெரிகுழுக்கள் என்றும் அழைக்கலாம்.
நிலையியற் கட்டளைகளின் படி முழுப் பாராளுமன்றக் குழுவுக்குப் புறம்பாக, இலங்கைப் பாராளுமன்றம் ஐந்து வகையான குழுக்களைக் கொண்டுள்ளது
விசேட குழுக்கள்
துறைசார் மேற்பார்வைக் குழுக்கள்
அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள்
சட்டவாக்க நிலையியற் குழுக்கள்
சிறப்பு நோக்கங்களுக்கான குழுக்கள்

பாராளுமன்ற ஒன்றியங்கள் என்பவை பொதுவான நலன்களையும் / இலக்குகளையும் பற்றிக் கலந்துரையாடி, அவற்றுக்காக ஆதரித்துவாதாடுவதற்கான அல்லது பகிரப்பட்ட ஒரு நிகழ்ச்சிநிரலை முன்னெடுப்பதற்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவாகும்.

ஒன்றியத்தின் பிரதான நோக்கங்கள், நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதும் கொள்கை விடயங்களைக் கலந்துரையாடுவதும் சட்டவாக்க முன்னுரிமைகள் பற்றிய உபாயமார்க்கங்களைத் தயாரிப்பதுமாகும். ஒன்றியங்கள் பொதுவாக சில குறிப்பிட்ட அடையாளம் காணப்பட்ட விடயங்களிலும், சுற்றாடல், மனித உரிமைகள், பொருளாதார அபிவிருத்தி அல்லது ஒரு குறித்த வேறுபட்ட குழுக்கள் (உதாரணம்: பெண்கள் ஒன்றியம், இளைஞர் ஒன்றியம், சிறுவர் ஒன்றியம்) போன்ற தலைப்புக்களிலும் கவனம் குவிக்கின்றன.

ஒன்றியத்தின் நடவடிக்கைகள், கிரமமான கூட்டங்களை நடத்துதல், நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல், சட்டாவக்கத்தினை முன்மொழிதல், ஆலோசனைகளை முன்வைத்தல், நடப்பு விவகாரங்களைக் கலந்துரையாடுதல், மற்றும் பங்கீடுபாட்டாளர்களுடனும் பொதுமக்களுடனும் சேர்ந்து செயற்படல் ஆகியவற்றினை உள்ளடக்குகின்றன.

பின்வருவன இலங்கையின் கடந்த 2020,ல் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நடப்பு ஒன்றியங்களாகும்:

1         பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம்
2         பாராளுமன்ற சிறுவர் ஒன்றியம்
3         திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியம்
4         இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம்.                                                                  5         விலங்குகள் நலனுக்கான பாராளுமன்ற ஒன்றியம்
6         தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான பாராளுமன்ற ஒன்றியம்
7         மாற்றுத்திறனாளிகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம்
8         மலைநாட்டைப் பாதுகாத்தல் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம்
9         மனித உரிமைகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம்
10       இலங்கையில் மலையகப் பெருந்தோட்டத்துறை சமூகத்தின் முன்னேற்றம் பற்றிய ஒன்றியம்
11      காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியம்
12      மருத்துவர்களாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம்

எவ்வாறாயினும், பாராளுமன்ற ஒன்றியங்களுக்கான ஏற்பாடுகள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிலையியற் கட்டளைகளில உள்ளடக்கப்படவில்லை..

நிலையிற்கட்டளைக்கு உள்வாங்கப்படும் பாராளுமன்ற பதவிகள் அனைத்தும் சபாநாயகரால் பாராளுமன்ற அமர்வில் அறிவிப்பார்.

-பா.அரியநேத்திரன்-
10/01/2024

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.