Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: Vishnu

10 Jan, 2025 | 07:01 PM
image
 

மியன்மாரிலிருந்து நாட்டுக்கு வருகைதந்திருக்கும் ரோஹிங்கிய அகதிகளைத் திருப்பியனுப்பவேண்டாம் எனக்கோரி வெள்ளிக்கிழமை (10) கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப்போராட்டத்தின்போது பிடிக்கப்பட்ட படங்கள்.

DSC_6301.jpg

DSC_6290.jpg

DSC_6285.jpg

DSC_6279.jpg

 

ரோஹிங்கிய அகதிகளைத் திருப்பியனுப்பவேண்டாம் எனக்கோரி கொழும்பில் கவனயீர்ப்புப்போராட்டம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

இது வெள்ளிக்கிழமைகளில் நடக்கும் நிகழ்வுதானே!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

இது வெள்ளிக்கிழமைகளில் நடக்கும் நிகழ்வுதானே!

நாங்களும் இந்த நாட்டிலை இருக்கிறம் என்று காட்டுவதற்கு...அவனவன் அரிசி இல்லை பருப்பு இல்லையன்று அழுகிறான்...இவை இன்னும் நூறு பெருக்கும் சேர்த்து அழுகினம்

...

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, satan said:

இது வெள்ளிக்கிழமைகளில் நடக்கும் நிகழ்வுதானே!

வெள்ளிக்கிழமைகளில் பாகிஸ்தான் மசூதிகளில் குண்டு வெடிப்பதும்,
ஶ்ரீலங்காவில் முஸ்லீம்கள் தம் மதத்திற்காக மட்டும் கொடி பிடிப்பதும் வழமையான நிகழ்வுகள். 

2 hours ago, alvayan said:

நாங்களும் இந்த நாட்டிலை இருக்கிறம் என்று காட்டுவதற்கு...அவனவன் அரிசி இல்லை பருப்பு இல்லையன்று அழுகிறான்...இவை இன்னும் நூறு பெருக்கும் சேர்த்து அழுகினம்

...

 

  • கருத்துக்கள உறவுகள்

ரோஹிங்கிய முஸ்லிம் அகதிகள் விவகாரம் ; ஜான்சன் பிரிராடோ விசாரணைக்கு அழைப்பு!

13 Jan, 2025 | 11:33 AM

image

வடக்கு, கிழக்கு சிவில் ஒருங்கிணைப்புக் குழுவின் இணை இணைப்பாளர் ஜான்சன் பிரிராடோவை கொழும்பில் உள்ள குற்றப்புலனாய்வு திணைக்கள தலைமை அலுவலகத்துக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது,

அண்மையில் இலங்கை - முல்லைத்தீவு கடலில் ரோஹிங்கிய முஸ்லிம்களை ஏற்றிவந்த படகானது தமக்கான அடைக்கலம் தேடி வருகை தந்தது. 

இந்தப் படகில் வந்த சுமார் நூற்றுக்கு அதிகமானவர்கள் விமானப்படையின் கண்காணிப்பில் தடுத்துவைக்கப்பட்டு அவர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றன. 

ரோஹிங்கிய அகதிகளை நாடு கடத்துவது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் அவர்களை நாடு கடத்த வேண்டாம் என முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்னால் வடக்கு, கிழக்கு சிவில் ஒருங்கிணைப்புக் குழு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது. 

இந்தப் போராட்டத்தில் பங்குபற்றிய வடக்கு, கிழக்கு சிவில் ஒருங்கிணைப்புக் குழுவின் இணை இணைப்பாளர் ஜான்சன் பிரிராடோ, மியன்மாரில் பாதுகாப்பு இல்லை; தமக்கு பாதுகாப்புத் தருமாறு அடைக்கலம் கோரிய ரோஹிங்கிய முஸ்லிம்களை இலங்கை அரசாங்கம் மியன்மாரிடம் ஒப்படைக்கக் கூடாது என வலியுறுத்தியிருந்தார்.

அவர்களை இலங்கையிலிருந்து பாதுகாப்பாக இன்னொரு நாட்டில் சர்வதேச மனித உரிமைகள் நிறுவனங்களின் கண்காணிப்பில் வைத்து பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில் இப்போராட்டம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப் பெறுவதற்காக கொழும்பில் உள்ள குற்றப்புலனாய்வுத் தலைமை அலுவலகத்துக்கு வருமாறு ஜான்சன் பிரிராடோவுக்கு அழைப்புக் கட்டளை அனுப்பப்பட்டுள்ளது.
 

https://www.virakesari.lk/article/203701

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நூறுபேருடன் முடியப்போவதில்லை, இனி வரப்போகும் நாட்களில் எத்தனை பேர் வருவார்கள் என்று தெரியவில்லை. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.