Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சுனா எம்.பி. அரசியலில் இருந்து ஓய்வா?

January 30, 2025  11:50 am

அர்ச்சுனா எம்.பி. அரசியலில் இருந்து ஓய்வா?

அரசியலில் அதிக காலம் இருப்பதற்கு தான் எதிர்பார்க்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நேற்று (29) மதியம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தான் ஒரு மருத்துவர் என்றும், கடந்த காலங்களிலிருந்து அரசியலில் ஆர்வம் காட்டவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இந்த முறை மக்களுக்காக பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அரசியல் தனக்கு மிகவும் பிடிக்காத துறை என்றும் குறிப்பிட்டார்.

"எனக்கு உண்மையாகவே அரசியல் பிடிக்காது. நான் 38 வருடங்களாக ஒருபோதும் வாக்களித்ததில்லை. இப்போது நான் உண்மையிலேயே மக்களுக்காக வந்தேன். எனவே இனி செய்ய வேண்டியது எதுவுமில்லை. அரசியல் என்பது எனக்குப் பிடிக்காத ஒரு துறை. ஆனால் நான் அரசியலில் இருக்கும் வரையில் மக்களுக்காக பாடுபடுவேன்"

 

https://tamil.adaderana.lk/news.php?nid=199507

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கிருபன் said:

"எனக்கு உண்மையாகவே அரசியல் பிடிக்காது. நான் 38 வருடங்களாக ஒருபோதும் வாக்களித்ததில்லை. இப்போது நான் உண்மையிலேயே மக்களுக்காக வந்தேன். எனவே இனி செய்ய வேண்டியது எதுவுமில்லை. அரசியல் என்பது எனக்குப் பிடிக்காத ஒரு துறை. ஆனால் நான் அரசியலில் இருக்கும் வரையில் மக்களுக்காக பாடுபடுவேன்"

அர்ஜுனா தனக்கு அரசியல் பிடிக்காது என்றால், ஏன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவர்.

இவரின் செய்கைகளையும், உளறல்களையும் மக்கள் இனியும் ரசிக்கத் தயார் இல்லை என்றே நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது!

நீண்ட காலத்திற்கு அரசியலில் இருக்க மாட்டேன்! -இராமநாதன் அர்ச்சுனா.

போக்குவரத்து பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இராமநாதன் அர்ச்சுனா, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள  நிலையில், தான் மிகவிரைவில் அரசியலில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று கருதி எம்.பி.பி.எஸ்., எம்.எஸ்.சி. உள்ளிட்ட பட்டங்களை கற்கவில்லை. எனக்கு உண்மையில் அரசியல் விரும்பமும் கிடையாது. 38 வருடங்களில் நான் ஒருதடவையேனும் வாக்களித்தது கூட இல்லை.

நான் மக்களுக்காகத்தான் அரசியலில் களமிறங்கினேன். ஆனால், இதில் நீண்ட காலத்திற்கு இருக்க மாட்டேன்.
இருக்கும் காலம் வரை நேர்மையாக இருப்பேன்” இவ்வாறு அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1419039

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

இவரின் செய்கைகளையும், உளறல்களையும் மக்கள் இனியும் ரசிக்கத் தயார் இல்லை என்றே நினைக்கின்றேன்.

அப்படியா  ???  சும்மா சொல்லி போட்டு போக முடியாது   பாஸ்     

அவருடன்  தேர்தலில் நீங்கள்   அல்லது வேறு நபர்கள் போட்டியிட்டு   வென்று காட்டுங்கள் பார்ப்போம்   🤣

குறிப்பு,.....கோசானையும்.    விடலாம்    🤣

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தமிழ் சிறி said:

நான் மக்களுக்காகத்தான் அரசியலில் களமிறங்கினேன். ஆனால், இதில் நீண்ட காலத்திற்கு இருக்க மாட்டேன்.
இருக்கும் காலம் வரை நேர்மையாக இருப்பேன்” இவ்வாறு அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

இது வரவேற்க வேண்டிய. விசயம்,.. விடயம்      

மண்டையைப் போடும் வரை அரசியலில் இருப்பவர்கள்   தன்னுடைய  பிள்ளைகள் மருமக்கள்.  பேரப்பிள்ளைகள்.  பூட்டப்பிள்ளைகள்.  என்று அனைவரையும்   அரசியலுக்கு இழுந்து வருபவர்கள்   பிழைப்பு வாதிகள்,......அரசியல்வாதிகள் பாடசாலை  மாணவர்கள் மாதிரி இருக்க முடியாது    உண்மைக்காக.   உரிமைக்காக   அடிபட. வேண்டும்  இதிலென்ன நாகரிகம் பண்பாடு  பார்ப்பது???  அப்படி பார்த்தால் 

உரிமையும்    உண்மையையும். பெற்றுவிட முடியாது     🙏

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

 

அர்ச்சுனா எம்.பி. அரசியலில் இருந்து ஓய்வா?

January 30, 2025  11:50 am

அர்ச்சுனா எம்.பி. அரசியலில் இருந்து ஓய்வா?

அரசியலில் அதிக காலம் இருப்பதற்கு தான் எதிர்பார்க்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நேற்று (29) மதியம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தான் ஒரு மருத்துவர் என்றும், கடந்த காலங்களிலிருந்து அரசியலில் ஆர்வம் காட்டவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இந்த முறை மக்களுக்காக பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அரசியல் தனக்கு மிகவும் பிடிக்காத துறை என்றும் குறிப்பிட்டார்.

"எனக்கு உண்மையாகவே அரசியல் பிடிக்காது. நான் 38 வருடங்களாக ஒருபோதும் வாக்களித்ததில்லை. இப்போது நான் உண்மையிலேயே மக்களுக்காக வந்தேன். எனவே இனி செய்ய வேண்டியது எதுவுமில்லை. அரசியல் என்பது எனக்குப் பிடிக்காத ஒரு துறை. ஆனால் நான் அரசியலில் இருக்கும் வரையில் மக்களுக்காக பாடுபடுவேன்"

 

https://tamil.adaderana.lk/news.php?nid=199507

இந்த பைத்தியரை கொஞ்சம் பக்குவப்படுத்தி தெளிவோடு வெளியே கொண்டுவந்து, புரிதலோடு வலம் வருவாரேயானால் நல்ல எதிர்காலம் இருக்கு.
இந்த சிங்கள பேட்டியில் கூட யதார்த்தமான பதில்களை அனாசியமாக தருகிறார். 

  • கருத்துக்கள உறவுகள்

அருச்சுனா சார் (சார் எண்டு எழுதாட்டில் கடித்து வைப்பார்),

நீங்களும் தங்கமும் விலகி மயூரனுக்கு வாய்ப்பை கொடுங்கள்.

மேலும் நல்ல இளைஞர்களை அவர் பக்கம் திருப்பி ஒரு நிஜாமன மாற்றை உருவாக்குங்கள்.

அதுதான் நீங்கள் செய்ய கூடிய மிகபெரிய நன்மை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.