Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு யுஎஸ்எயிட் வழங்கிய நிதியால் 100க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் ஊடகவியலாளர்கள் நன்மையடைந்துள்ளனர் - விசாரணையை கோருகின்றார் நாமல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN   05 FEB, 2025 | 09:56 AM

image

யுஎஸ்எயிட்டின் நிதி உதவியுடன்  இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் குறித்து அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யுஎஸ்எயிட்டின் திட்டங்கள் மூலம் நன்மையடைந்த அரசசார்பற்ற அமைப்புகளின் விபரங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சர்வதேச திட்டங்களில் யுஎஸ்எயிட் அமைப்பின் தலையீடுகள் குறித்து மேற்குலக ஊடகங்கள் எழுப்பியுள்ள கரிசனைகள் குறித்து அவர் சமூக ஊடகத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனிதாபிமான உதவிகள் என்ற போர்வையில் உலக நாடுகளில்  அமைதியின்மையை ஏற்படுத்துவதற்கு யுஎஸ்எயிட்டின் நிதி பயன்படுத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என நாமல் ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த சில வருடங்களில் இலங்கைக்கு யுஎஸ்எயிட் பல மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது என தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச  100க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகளும், ஊடகவியலாளர்களும் நன்மையடைந்துள்ளனர் எனினும் இந்த நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதற்கான தெளிவான உரிய கணக்கு வழக்குகள் இல்லை குறிப்பிட்டுள்ளார்.

அரசசார்பற்ற அமைப்புகளிற்கான நிதிகளை ஒழுங்குபடுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/205827

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி,பிரதமர் மற்றும் பொதுப்பாதுகாப்பு அமைச்சரின் கருத்துக்களில் குழப்பம் காணப்படுகின்றது!

அரசு சாரா நிறுவனங்கள் வெளிநாட்டு உதவிகளை எவ்வாறு கையாண்டன? நாமல் ராஜபக்ச கேள்வி.

”இலங்கையில் உள்ள அரசு சாரா நிறுவனங்கள், வெளிநாட்டு உதவிகளை எவ்வாறு கையாண்டன? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது எக்ஸ் தளத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

உலகெங்கிலும் ஏராளமான திட்டங்களுக்கு நிதியளித்துள்ள USAID , மேற்கத்திய ஊடகங்களுடன் சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலங்கை கடந்த ஆண்டுகளில் USAID இலிருந்து மில்லியன் கணக்கான டொலர்களை பணமாகவும் மானியங்களாகும் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மனிதாபிமான உதவி என்ற போர்வையில் மற்ற நாடுகளில் பிரச்சினைகளையும் உறுதியற்ற தன்மையையும் உருவாக்க ருளுயுஐனு இன் நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

USAID தங்கள் மானியங்கள் மற்றும் உதவி நிதிகளை எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பது பற்றிய தெளிவான பதிவு எதுவும் இல்லை எனவும் ருளுயுஐனு இன் கீழ் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து விசாரணை நடத்தி, விரிவான அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேநேரம், அந்த சலுகைகளைப் பெற்ற அரசு சாரா நிறுவனங்கள் குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளார். அத்தோடு, அரசு சாரா நிறுவனங்களுக்கு நிதியளிப்பதற்கான விதிமுறைகள் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தாலும், அவை இன்னும் செயல்படுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே வெளிப்படைத்தன்மையைப் பேண இந்த விதிமுறைகளைக் கொண்டுவருமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாகவும் நாமல் ராஜபக்ஷ தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2025/1419881

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

இலங்கையில் உள்ள அரசு சாரா நிறுவனங்கள், வெளிநாட்டு உதவிகளை எவ்வாறு கையாண்டன? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது எக்ஸ் தளத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

அடபாவி திருப்பதிக்கே லட்டா?

இது உங்களைப் பார்த்து நாங்க கேட்க வேண்டிய கேள்வி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.