Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

CM ஸ்டாலின், இபிஎஸ், சீமான், விஜய் ஆகியோர் வீட்டு குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள்…? நெஞ்சைத் தொட்டு உண்மையை சொல்லுங்க… அண்ணாமலை கேள்வி..!!

அரசியல் , மாநில செய்திகள்February 18, 2025

பாஜக கட்சியின் மாநில தலைவர் மும்மொழிக் கொள்கை தொடர்பாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதாவது தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டிற்கு கல்விக்கான நிதியை தர முடியாது என மத்திய கல்வி மந்திரி கூறிய நிலையில் ஒருபோதும் மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் எனவும் இரு மொழிக் கொள்கையை மட்டும் தான் தமிழ்நாட்டில் கடைபிடிப்போம் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கூறி வருகிறார்கள். இந்நிலையில் அண்ணாமலை வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது, கடந்த 2019 ஆம் ஆண்டு கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு சமர்ப்பித்த புதிய கல்விக் கொள்கை அறிக்கையில் மூன்று மொழிகளை படிப்பது கட்டாயம். அதில் தாய் மொழியை முதன்மையான மொழியாகவும் இரண்டாவது ஆங்கிலத்தையும் மூன்றாவது ஹிந்தியையும் படிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் மூன்று மொழிகளை கற்கும் நிலையில் அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகள் மட்டும்தான் இரு மொழிகளை கற்கிறார்கள்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் மகன் தமிழ் மொழிக்கு பதிலாக பிரெஞ்சு மொழி படிப்பதாக கூறுகிறார் அது நல்ல விஷயம் தான். ஆனால் அரசு பள்ளியில் படிக்கும் 52 லட்சம் மாணவர்கள் மட்டும் இரு மொழி கொள்கையை படிக்கிறார்கள். திமுகவினரின் குழந்தைகள் மட்டும் மூன்று மொழிகளை படித்து விட்டு வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் ஆனால் அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் மட்டும் திமுகவினருக்கு போஸ்டர் ஒட்ட வேண்டுமா.? மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின், சீமான், விஜய், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள் என்பதை முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். எங்கள் கண்முன்னே இளைய சமுதாயம் அழிவதை ஏற்க முடியாது. மேலும் கண்டிப்பாக அரசு பள்ளிகளில் மூன்று மொழிகளை கொண்டு வர வேண்டும் என்று கூறினார்.

https://www.seithisolai.com/cm-ஸ்டாலின்-இபிஎஸ்-சீமான்-வ/

டிஸ்கி

தட் கரடியே காறி துப்புன மொமெண்ட்

  • கருத்துக்கள உறவுகள்

'மும்மொழிக் கொள்கை என்னும் முதிர்ச்சியின்மை முடிவுக்கு வருமா......' என்ற தலைப்பில் நல்லதொரு கட்டுரையை பேராசிரியர் ராஜன் குறை கிருஷ்ணன் மின்னம்பலத்தில் எழுதியிருக்கின்றார்:

https://minnambalam.com/political-news/immaturity-of-the-trilingual-policy/

இந்தக் கட்டுரையில் மூன்றாவது மொழி என்பது மாணவர்களுக்கு எப்படி ஒரு சுமையாகின்றது என்று சொல்லப்பட்டிருக்கின்றது. அத்துடன் மூன்றாவது மொழியோ அல்லது ஹிந்தியோ தெரியாமல் இருக்கும் தமிழ்நாடு எந்தத் துறையிலும் பின்னே நில்லாமல், மாறாக முன்னேயே, மற்ற மாநிலங்களுக்கு ஒரு எடுத்துக் காட்டாக, போய்க் கொண்டிருக்கின்றது என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது.

கட்டுரையில் பேசப்படாத, ஆனால் இந்த தலைப்புக்கு தொடர்பான ஒரு விடயம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும், பிரபலங்களும் தங்களின் தெரிவாக என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பது. திராவிடம் பேசும், தமிழ்த் தேசியம் பேசும், இரண்டையும் கலந்து கொண்டிருக்கும் என்று பொதுவாழ்வில் மேடையேறும் மிகப் பெரும்பான்மையான தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும், பிரபலங்களும் தங்கள் பிள்ளைகளையும், சந்ததிகளையும் தமிழ் மொழி ஊடாகவோ அல்லது அரச பாடசாலைகளிலோ படிப்பிப்பதில்லை. தனியார் ஆங்கிலப் பாடசாலைகளிலேயே இவர்களின் பிள்ளைகள் கல்வி கற்கின்றனர்.

தரமான தமிழ் பாடசாலைகளே இங்கு இல்லை என்று அவர்களின் வசதிக்கேற்ப ஒன்றையும் சொல்லிவிடுகின்றனர். ஆனாலும், ஒவ்வொரு பரீட்சையிலும் மிகச் சிறந்த பெறுபேறுகளை தமிழ் மொழி மூலம் படிக்கும் பல மாணவர்கள் பெற்றுக் கொண்டே இருக்கின்றனர். இஸ்ரோவின் இன்றைய தலைவரான நாராயணன், முந்தைய தலைவரான சிவன், இப்படி எண்ணற்றவர்கள் தமிழ்மொழி மூலமே கல்வி கற்றவர்கள்.

அதுவும் கூட, தமிழ்நாட்டில் பாடசாலைகளில் தமிழ் மொழி கட்டாயம் என்று சட்டத்தின் பின்பு தான், தமிழ் மொழியை தனியார் பாடசாலைகளில் இன்று படிப்பிக்கின்றார்கள். அதற்கு முன், அங்கு மாற்றீடாக வேறு மொழிகளையே, உதாரணம்: பிரெஞ்ச், சமஸ்கிருதம், படிப்பித்தார்கள். தமிழ்நாட்டில் இந்தச் சட்டம் வராதிருந்தால், திராவிடத் தலைவர்களினதும், தமிழ் தேசியத் தலைவர்களினதும் பிள்ளைகள் தமிழை ஒரு பாடமாகக் கூட படித்திருக்கமாட்டார்கள். சமஸ்கிருதத்தையே படித்திருந்திருப்பார்கள். சமஸ்கிருதமே பலரின் தெரிவாக இருந்தது, காரணம் மிக இலகுவாக அங்கு அதிக புள்ளிகள் கிடைக்கும் என்பதால்.

நடிகர்களிடம் ஏமாறுவது போலவே, இந்த அரசியல்வாதிகளிடமும் மக்கள் ஏமாறுகின்றனர்.

Edited by ரசோதரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

'மும்மொழிக் கொள்கை என்னும் முதிர்ச்சியின்மை முடிவுக்கு வருமா......' என்ற தலைப்பில் நல்லதொரு கட்டுரையை பேராசிரியர் ராஜன் குறை கிருஷ்ணன் மின்னம்பலத்தில் எழுதியிருக்கின்றார்:

https://minnambalam.com/political-news/immaturity-of-the-trilingual-policy/

இந்தக் கட்டுரையில் மூன்றாவது மொழி என்பது மாணவர்களுக்கு எப்படி ஒரு சுமையாகின்றது என்று சொல்லப்பட்டிருக்கின்றது. அத்துடன் மூன்றாவது மொழியோ அல்லது ஹிந்தியோ தெரியாமல் இருக்கும் தமிழ்நாடு எந்தத் துறையிலும் பின்னே நில்லாமல், மாறாக முன்னேயே, மற்ற மாநிலங்களுக்கு ஒரு எடுத்துக் காட்டாக, போய்க் கொண்டிருக்கின்றது என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது.

கட்டுரையில் பேசப்படாத, ஆனால் இந்த தலைப்புக்கு தொடர்பான ஒரு விடயம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும், பிரபலங்களும் தங்களின் தெரிவாக என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பது. திராவிடம் பேசும், தமிழ்த் தேசியம் பேசும், இரண்டையும் கலந்து கொண்டிருக்கும் என்று பொதுவாழ்வில் மேடையேறும் மிகப் பெரும்பான்மையான தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும், பிரபலங்களும் தங்கள் பிள்ளைகளையும், சந்ததிகளையும் தமிழ் மொழி ஊடாகவோ அல்லது அரச பாடசாலைகளிலோ படிப்பிப்பதில்லை. தனியார் ஆங்கிலப் பாடசாலைகளிலேயே இவர்களின் பிள்ளைகள் கல்வி கற்கின்றனர்.

தரமான தமிழ் பாடசாலைகளே இங்கு இல்லை என்று அவர்களின் வசதிக்கேற்ப ஒன்றையும் சொல்லிவிடுகின்றனர். ஆனாலும், ஒவ்வொரு பரீட்சையிலும் மிகச் சிறந்த பெறுபேறுகளை தமிழ் மொழி மூலம் படிக்கும் பல மாணவர்கள் பெற்றுக் கொண்டே இருக்கின்றனர். இஸ்ரோவின் இன்றைய தலைவரான நாராயணன், முந்தைய தலைவரான சிவன், இப்படி எண்ணற்றவர்கள் தமிழ்மொழி மூலமே கல்வி கற்றவர்கள்.

அதுவும் கூட, தமிழ்நாட்டில் பாடசாலைகளில் தமிழ் மொழி கட்டாயம் என்று சட்டத்தின் பின்பு தான், தமிழ் மொழியை தனியார் பாடசாலைகளில் இன்று படிப்பிக்கின்றார்கள். அதற்கு முன், அங்கு மாற்றீடாக வேறு மொழிகளையே, உதாரணம்: பிரெஞ்ச், சமஸ்கிருதம், படிப்பித்தார்கள். தமிழ்நாட்டில் இந்தச் சட்டம் வராதிருந்தால், திராவிடத் தலைவர்களினதும், தமிழ் தேசியத் தலைவர்களினதும் பிள்ளைகள் தமிழை ஒரு பாடமாகக் கூட படித்திருக்கமாட்டார்கள். சமஸ்கிருதத்தையே படித்திருந்திருப்பார்கள். சமஸ்கிருதமே பலரின் தெரிவாக இருந்தது, காரணம் மிக இலகுவாக அங்கு அதிக புள்ளிகள் கிடைக்கும் என்பதால்.

நடிகர்களிடம் ஏமாறுவது போலவே, இந்த அரசியல்வாதிகளிடமும் மக்கள் ஏமாறுகின்றனர்.

அருமை….

இதில் சுவாரசியம் என்னவென்றால் இப்படி தனியார் கல்வியில் ஆங்கிலம்மூலம் கற்போர் அப்பன், தாத்தன் தயவில்தான் மேலே வருகிறார்கள்.

ஆனால் சிவன்கள் சுயம்புவாக வளர்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

கரடியே காறி துப்புன மொமெண்ட்

🤣

பாஜக தலைவர்அண்ணாமலையே சீமானின் ஏமாற்று தனத்தை சொல்லிவிட்டார்

அரசியலுக்கும், திரள் நிதிக்கும் தான் தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

தனுஷ் நடித்த செல்வராகவன் இயக்கிய மயக்கம் என்ன படத்தில் ஒரு வசனம் வரும்

"நிறைய மொழி தெரிந்தால் ஒரு மொழியும் உருப்படியாகத் தெரியாது "

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, பகிடி said:

தனுஷ் நடித்த செல்வராகவன் இயக்கிய மயக்கம் என்ன படத்தில் ஒரு வசனம் வரும்

"நிறைய மொழி தெரிந்தால் ஒரு மொழியும் உருப்படியாகத் தெரியாது "

இதே கான்செப்ட் கமலின் தசாவதாரத்திலும் வரும்.

அந்த சிபிஐ கமலை பார்த்து சயண்டிஸ்ட் கமல் சொல்லுவார்…

He knows five languages in Telugu 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பகிடி said:

"நிறைய மொழி தெரிந்தால் ஒரு மொழியும் உருப்படியாகத் தெரியாது "

Jack of all trades, master of none.

(இது காலாகாலம் வழங்கி வந்தது)

இப்போது

Jack of all trades, master of none, but oftentimes better than master of one.

(அந்த பழமொழியின் முடிவு பகுதியாக இருந்தது இதுவரை வழங்கப்படவில்லை என்பது செல்வோரின் விளக்கம்)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.