Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஓயும் ஊசல்

-------------------

large.AFeralCat.png

என்னைக் கண்டவுடன்

அது இப்ப எச்சரிக்கையாவதில்லை

மெதுவாக தலையை உயர்த்தி

நேராக என் கண்களை பார்க்கின்றது

கனிவும் அமைதியும் அதன் கண்களில்

காலம் கொடுத்து விட்டிருக்கின்றது

தெருப்பூனை ஒன்றின் ஆயுளைத் தாண்டி

இன்னும் அது தெருவில் வாழ்கின்றது

மெதுவாக வந்து

கொஞ்சமாக சாப்பிடுகின்றது

'நீ சாப்பிட்டாயா...........

எல்லோரும் நலமா........'

என்று உள்ளே மெதுவாக 

ஒரு தடவை எட்டிப் பார்க்கின்றது

ஒரே எட்டில்

முருங்கையில் ஏறி

கூரைக்கு அது  இப்போது பாய்ந்து போவதில்லை

முருங்கையையும் கூரையையும் பார்த்து விட்டு

நிலத்தில் நடந்து போகின்றது

அது இப்ப

எந்தப் பறவையையும் பிடிக்க பதுங்குவதும் இல்லை

எங்கோ போய் ஓய்ந்து

அன்றைய நாளை முடிக்கின்றது

நாளை மீண்டும் வரும்

அந்த ஒரு நேர பூனை உணவிற்கு

பின்னர் ஒரு நாளில் இருந்து

அது வரவே போவதில்லை

அதன் இரண்டு விழிகளும்

என்னை விட்டும்

போகப் போவதில்லை

என் நினைவு ஓயும் வரை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆடி அடங்கிப் போட்டுது போல.

நினைவுகள் மட்டும் அடங்குவதில்லை. 😺

  • கருத்துக்கள உறவுகள்

அதன் இரண்டு விழிகளும்

என்னை விட்டும்

போகப் போவதில்லை

என் நினைவு ஓயும் வரை.

அன்பின் மகத்துவம்...அது பூனையால் வந்தது...மனிதரால் வந்ததுஅல்ல..

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

கனிவும் அமைதியும் அதன் கண்களில்

காலம் கொடுத்து விட்டிருக்கின்றது

ஞான நிலை அடைந்து விட்டது ...பூனை ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, villavan said:

ஆடி அடங்கிப் போட்டுது போல.

நினைவுகள் மட்டும் அடங்குவதில்லை. 😺

3 minutes ago, alvayan said:

அன்பின் மகத்துவம்...அது பூனையால் வந்தது...மனிதரால் வந்ததுஅல்ல..

சில வேளைகளில் இப்படியான ஒரு மனநிலை ஒரு முழுப் பைத்தியக்காரத்தனமோ என்றும் தோன்றும்...............

ஆனால் ஒரே தெருவிலேயே, ஒரே வீட்டிலேயே 25 வருடங்களுக்கும் மேலாக இருக்கும் நான், இந்த தெருவில் இருக்கும் பலர் முடிந்து போனதை பார்த்திருக்கின்றேன். ஒவ்வொருவரின் கடைசி வருடங்களிலும் அவர்கள் எதிர்பார்த்தது சக மனிதர்களின் ஆதரவையும், அன்பையும் அன்றி வேறெதுவுமே இல்லை..........

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

ஒரே எட்டில்

முருங்கையில் ஏறி

கூரைக்கு அது  இப்போது பாய்ந்து போவதில்லை

முருங்கையையும் கூரையையும் பார்த்து விட்டு

நிலத்தில் நடந்து போகின்றது

சாப்பாடு ஒழுங்காக கிடைக்குது போல.

மனிதரும் திருமணத்துக்கு முன் பாய்வார்கள்.

பின் அடங்கியிருப்பார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, putthan said:

ஞான நிலை அடைந்து விட்டது ...பூனை ...

உயிர்களுக்கு பொதுவாகவே வயதானால் ஒரு அனுபவமும், பக்குவமும் வரும் போல.............. ஆனால் மனிதர்களுக்கு மருத்துவர்கள் சொல்ல வேண்டும், இன்னும் இத்தனை நாட்கள் தான் இருக்கின்றது என்று............ அதன் பின் தான் வரும் ஞானம்........

1 minute ago, ஈழப்பிரியன் said:

சாப்பாடு ஒழுங்காக கிடைக்குது போல.

மனிதரும் திருமணத்துக்கு முன் பாய்வார்கள்.

பின் அடங்கியிருப்பார்கள்.

வயதாகிப் போனது அண்ணா....... பாய முடியாது............. நாங்களும் அப்படித்தானே.... எல்லாமே ஆடி அடங்கத்தான் வேண்டும்....................

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரசோதரன் said:

ஒவ்வொருவரின் கடைசி வருடங்களிலும்

ஒரு விதத்தில் காலம் கடந்த ஞானம் தான்.

இங்கு இருக்கும் அயலவர்கள் பெரிதாகப் பழக மாட்டார்கள், கடைசிக் காலம் என்று வந்த பிறகு தான் வாங்க பழகலாம் என்ற மாதிரி பேசுவார்கள். நமக்கு அதுக்கிடையில் மனம் விட்டுப் போய் விடும். எப்பிடி இருந்தாலும் நம் முதிர்ச்சி நம் கையில்:

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஒரு உயிரினத்துக்கும் தன்னுடைய உடலில் தளர்வுகள் உணரும்போது உறங்கு நிலையில் இருந்த ஞானம் கொஞ்சம் கொஞ்சமாய் விழித்தெழும் ......... மனிதர்களும் இதற்கு விதிவிலக்கல்ல .......... இங்கு பலர் பூனை வளர்ப்பார்கள் ........ பின் அவர்கள் இருக்கும்போதோ, வேறிடத்துக்கு மாறும்போதோ அவற்றை அனாதரவாய் விட்டு விட்டு போய்விடுவார்கள் ......... பிறகென்ன அதுகள் அக்கம் பக்கம் வீடுகளுக்கு உணவுக்காக அலைந்து திரியும் . .......! 😁

நன்றி ரசோ ..........!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, villavan said:

ஒரு விதத்தில் காலம் கடந்த ஞானம் தான்.

இங்கு இருக்கும் அயலவர்கள் பெரிதாகப் பழக மாட்டார்கள், கடைசிக் காலம் என்று வந்த பிறகு தான் வாங்க பழகலாம் என்ற மாதிரி பேசுவார்கள். நமக்கு அதுக்கிடையில் மனம் விட்டுப் போய் விடும். எப்பிடி இருந்தாலும் நம் முதிர்ச்சி நம் கையில்:

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!

இது பல இடங்களிற்கும் ஒரு பொதுவான பண்பு போல, வில்லவன்.......

எனக்கும் இதே தெருவில் ஆரம்பத்தில் இதே அனுபவம் தான். இங்கிருந்த மற்றவர்கள் எல்லோரும், வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், அப்ப 25 வருடங்களின் முன்னரேயே 50 வயதுகளை தாண்டியவர்கள். மிகவும் வசதியானவர்களும் கூட. 'யார் இவன் ஒரு சின்னப் பொடியன் இங்கே.......' என்ற பார்வையிலேயே ஆரம்ப காலங்கள் கடந்து கொண்டிருந்தது.

உரையாடல்கள் இல்லாமல், ஒற்றை வரி அல்லது சில வரிகள் என்றும் பின்னர் மாறியது.

வலியதும், கொடியதும் விதி என்பார்கள். காலம் என்றும் சொல்லலாம். சில வருடங்களின் பின்னர், தொடர்ச்சியாக ஓரிரு நாட்களுக்கு என்னைக் காணாவிட்டால், 'சொல்லாமல் கொள்ளாமல் எங்கே போய் விட்டாய்.................' என்று உரிமையாக கோபப்படுவார்கள்................... அவர்களின் பேச்சு துணை நான் தான்.................

தெருவில் 12 வீடுகள், எழுதினால் சுராவின் 'ஒரு புளியமரத்தின் கதை' போல ஒரு பெரும் நாவலே எழுதலாம்...................... அவ்வளவு கதைகள் இந்த மனிதர்கள் ஒவ்வொருவரிடமும்.

6 hours ago, suvy said:

எந்த ஒரு உயிரினத்துக்கும் தன்னுடைய உடலில் தளர்வுகள் உணரும்போது உறங்கு நிலையில் இருந்த ஞானம் கொஞ்சம் கொஞ்சமாய் விழித்தெழும் ......... மனிதர்களும் இதற்கு விதிவிலக்கல்ல .......... இங்கு பலர் பூனை வளர்ப்பார்கள் ........ பின் அவர்கள் இருக்கும்போதோ, வேறிடத்துக்கு மாறும்போதோ அவற்றை அனாதரவாய் விட்டு விட்டு போய்விடுவார்கள் ......... பிறகென்ன அதுகள் அக்கம் பக்கம் வீடுகளுக்கு உணவுக்காக அலைந்து திரியும் . .......! 😁

நன்றி ரசோ ..........!

அதுவே தான் சுவி ஐயா........🙏.

பலதும் பொருளற்றவை போல என்று சில நேரங்களில் தோன்ற ஆரம்பித்துவிட்டது. எல்லாமே கடகவென்று நடந்து முடிந்து, கொஞ்சம் வேகமாகவே இந்த இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டேனோ என்றும் தோன்றுகின்றது............🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.