Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-320.jpg?resize=750%2C375&ssl

தெலுங்கானா சுரங்கப்பாதை சரிவு: சிக்கிக் கொண்ட 8 தொழிலாளர்கள்!

தெலுங்கானாவில் கட்டுமானப் பணியில் இருந்த சுரங்கப்பாதையின் ஒரு பகுதி சனிக்கிழமை (22) இடிந்து விழுந்ததில் குறைந்தது எட்டு தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர்.

தெலுங்கானாவின் ஸ்ரீசைலம் அணைக்கு பின்புறம் உள்ள சுரங்கப்பாதையின் ஒரு பகுதியில் கசிவை சரிசெய்ய சில தொழிலாளர்கள் உள்ளே சென்றபோது இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

விபத்தினை அடுத்து சுரங்கத்தில் சிக்கி பல தொழிலாளர்கள் பாதுகாப்பாக வெளியேறினர்.

எனினும், எட்டு தொழிலாளர்கள் இன்னும் சுரங்கத்தில் சுக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) மீட்புப் படை தெரிவித்துள்ளன.

சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களில் 4 பேர் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், இருவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், ஒருவர் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர் மற்றும் ஒருவர் பஞ்சாப்பைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீட்பு நடவடிக்கைகளுக்காக இந்திய இராணுவம் தனது பொறியாளர் பணிக்குழுவையும் (ETF) விரைவாக பணியமர்த்தியுள்ளது.

நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, இராணுவ பொறியாளர் பணிக்குழுவானது விபத்து நடந்த இடத்தில் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண (HADR) நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Athavan News
No image preview

தெலுங்கானா சுரங்கப்பாதை சரிவு: சிக்கிக் கொண்ட 8 தொழிலாள...

தெலுங்கானாவில் கட்டுமானப் பணியில் இருந்த சுரங்கப்பாதையின் ஒரு பகுதி சனிக்கிழமை (22) இடிந்து விழுந்ததில் குறைந்தது எட்டு தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். தெலுங்கானாவின் ஸ்ரீசைலம் அணைக்கு பின்பு...
  • கருத்துக்கள உறவுகள்

தெலுங்கானா சுரங்க விபத்து: 72 மணி நேரம் கடந்தும் சிக்கியவர்களை தொடர்பு கொள்வதில் சிரமம்

25 FEB, 2025 | 05:13 PM

image

தெலுங்கானாவின் ஸ்ரீசைலம் சுரங்க விபத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி 72 மணிநேரமாக நீண்டுவரும் நிலையில் உள்ளே சிக்கியிருப்பவர்களை தொடர்பு கொள்வதில் இன்னும் சிரமம் நீடிக்கிறது. சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்கும் பணியில் இந்திய ராணுவம் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை உள்ளிட்டவை ஈடுபட்டுள்ளன.

தெலுங்கானாமாநிலம் நாகர்னூல் மாவட்டத்தின் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாயில் உள்ள சுரங்கப்பாதை சனிக்கிழமை காலை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 8 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். 

GkoTvyBX0AAGhsr.jpg

மாநில அரசின் வேண்டுகோளின்படி எஸ்எல்பிசி சுரங்கத்துக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் இந்திய புவியியல் ஆய்வு மையம் மற்றும் தேசிய நிலவியல் ஆய்வு நிறுவனத்தின் நிபுணர்கள் இணைந்து ஈடுபட்டுள்ளனர். சுரங்கப்பாதை வேலை நடந்து வரும் நாகர்னூல் மாவட்ட ஆட்சியர் சந்தோஷ் கூறுகையில் “சுரங்கத்துக்குள்ளே சிக்கியிருப்பவகளை இதுவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்திய புவியியல் ஆய்வு மையம் மற்றும் தேசிய நிலவியல் ஆய்வு நிறுவனத்தின் நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று வருகிறோம்.

தண்ணீரை வெளியேற்றி மீட்புக்குழுவினர் முன்னேறியுள்ளனர். ஆனால் கடைசி 40 மற்றும் 50 மீட்டர் வரை எங்களால் செல்லமுடியவில்லை. தற்போது ஜிஎஸ்ஐஇ என்சிஆர்ஐ நிபுணர்களின் ஆலேசானையைப் பெற்று வருகின்றோம். எல்அண்ட்டி நிபுணர்களும் இங்கு வந்துள்ளனர்.” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் சுரங்கத்துக்குள் சிக்கியுள்ள ஜார்க்கண்டைச் சேர்ந்த நான்கு தொழிலாலர்களின் குடும்ப உறுப்பினர்கள் தெலங்கானா புறப்பட்டுள்ளதாக முதல்வர் ஹேமந்த் சோரன் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு உறுப்பினர் என போலீஸ் அதிகாரிகளுடன் தெலங்கானா கிளம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு ஜார்க்கண்ட்டின் சில்கியாரா சுரங்கத்துக்குள் சிக்கிய தொழிலாளர்களை வெற்றிகரமாக மீட்ட எலி வலை சுரங்கத் தொழிலாளர்கள் இந்த மீட்பு பணியிலும் நேற்று இணைந்துள்ளனர். உள்ளே இருக்கும் நிலைமை குறித்து ஆராய்ந்த பின்பு செயல்திட்டம் வகுக்கப்படும்.” என்று எலிவலை தொழிலாளர்களில் ஒருவர் தெரிவித்தார்.

இதனிடையே உள்ளே சிக்கியிருப்பவர்கள் யார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/207661

  • கருத்துக்கள உறவுகள்

தெலுங்கானா சுரங்கத்தில் சிக்கிய 8 பேர் உயிரிழப்பு:

02 MAR, 2025 | 09:38 AM

image

தெலுங்கானாவில் சுரங்கத்தில் சிக்கிய 8 தொழிலாளர்கள் உயிரிழந்து விட்டனர். அவர்களின் உடல்கள் சேற்றில் புதைந்திருப்பது ரேடார் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது என்று மாநில அமைச்சர் ஜூபல்லி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீசைலம் இடது தண்ணீர் கால்வாய் திட்டத்தில் எஸ் எல்பிசி சுரங்கம் தோண்டப்பட்டது. கடந்த வாரம் சுரங்கத்தின் மேற்கூரை திடீரென சரிந்ததால் 8 தொழிலாளர்கள் சுரங்கத்துக்குள் சிக்கி கொண்டனர். இவர்களை மீட்க ராணுவம், பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்பு படை, காவல் துறை என 9 படைகளின் வீரர்கள் இரவு, பகலாக போராடி வருகின்றனர்.

சுரங்கத்தில் சிக்கி கொண்டவர்களை மீட்க ரேடார் கருவிகள், ட்ரோன்கள் உபயோகப்படுத்தப்பட்டன. 13.85 கி.மீ. தூரம் வரை உள்ள சுரங்கப்பாதையில் வெள்ளிக்கிழமை இரவு வரை 13.61 கி.மீ. தொலைவை மீட்புப் படை வீரர்கள் அடைந்தனர்.

telungana_tunnel.jpg 

வழி நெடுகிலும் சேறும் சகதியுமாக இருந்தது. தற்போது ஐந்தரை அடி உயரத்தில் சேறு நிறைந்திருக்கிறது. இந்நிலையில் நேற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்தன. தண்ணீரை ஒருபுறம் வெளியேற்றினாலும், மறுபுறம் சுரங்கத்துக்குள் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.

இதனால் மீட்பு பணிகள் தாமதமாகி வருகின்றன. இந்நிலையில், கட்டர்கள் கொண்டு சுரங்கத்தில் பைப்புகளை அகற்றி மீட்புப் பணிகள் தொடர்ந்தன. ரேடார் கருவி மூலம் நேற்று ஸ்கேன் செய்ததில் ஓர் இடத்தில் 4 தொழிலாளர்கள் சேற்றில் புதைந்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து ஸ்கேன் செய்ததில் சற்று தொலைவில் மேலும் 4 பேர் சேற்றில் புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தெலுங்கானாஅமைச்சர்கள் உத்தம் குமார் ரெட்டி, ஜூபல்லி கிருஷ்ணா ராவ் மற்றும் தலைமை செயலர் சாந்திகுமாரி ஆகியோர் சம்பவ இடத்தில் நேற்று ஆய்வு செய்தனர். அதன் பின்னர் அமைச்சர் ஜூபல்லி கிருஷ்ணா ராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சுரங்க விபத்து நடந்தது முதல் தற்போது வரை தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் எதிர்கட்சியினர் இதனை தவறாக சித்தரித்து வருகின்றனர். சுரங்கத்தில் சிக்கிய 8 பேரும் உயிரிழந்துவிட்டனர். ஞாயிற்றுக்கிழமைக்குள் 4 பேரின் சடலங்கள் மீட்கப்படும். மீதியுள்ள நால்வரின் சடலங்கள் சற்று தாமதமாக மீட்கப்படும். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வது வேதனை அளிக்கிறது.

இவ்வாறு அமைச்சர் ஜூபல்லி கிருஷ்ணா ராவ் தெரிவித்தார்.

சுரங்கத்துக்குள் சிக்கிய தொழிலாளர்களின் உறவினர்கள் சுரங்க வாயிலில் காத்திருக்கின்றனர். அமைச்சரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

https://www.virakesari.lk/article/208036

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.