Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுக்ரேன் அதிபர் செய்தியாளர் சந்திப்பு: டிரம்பின் 'சர்வாதிகாரி' விமர்சனம் பற்றிக் கூறியது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

23 பிப்ரவரி 2025, 18:30 GMT

புதுப்பிக்கப்பட்டது 23 பிப்ரவரி 2025, 18:31 GMT

யுக்ரேன் நேட்டோ உறுப்பினராகச் சேர்க்கப்பட்டாலோ அல்லது அமைதியை ஏற்படுத்தினாலோ தனது அதிபர் பதவியை விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பதாக யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

திங்கள் கிழமையன்று நடக்கவுள்ள ஐரோப்பிய தலைவர்கள் இடையிலான சந்திப்பு குறித்து முதலில் பேசிய ஸெலன்ஸ்கி, "யுக்ரேன் போர் தொடர்பாக இந்தச் சந்திப்பில் அடுத்த சில வாரங்களுக்கான உத்திகள் குறித்து ஆலோசிக்கப்படும். யுக்ரேனிய பாதுகாப்புக்கான உத்தரவாதங்கள் குறித்து விவாதிக்கப்படும்," என்று கூறினார்.

யுக்ரேனுக்கு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா என இரண்டுமே தேவை என்றும் அவர் தெரிவித்தார்.

யுக்ரேனில் நாளை நடைபெறும் சந்திப்பில் ஐரோப்பிய தலைவர்களின் எதிர்பார்ப்புகள் குறித்து ஸெலன்ஸ்கியிடம் ஒரு செய்தியாளார் எழுப்பிய கேள்விக்கு, "சில வலுவான முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக" தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பு யுக்ரேன் போர் விவகாரத்தில் ஒரு திருப்புமுனையாக இருக்க வாய்ப்புள்ளது என தான் நம்புவதாகவும் ஸெலன்ஸ்கி தெரிவித்தார்.

ஸெலன்ஸ்கி செய்தியாளர் சந்திப்பின் 5 முக்கிய அம்சங்கள்

  • யுக்ரேன் நேட்டோ உறுப்பினராகச் சேர்க்கப்பட்டால் அல்லது அமைதியைக் கொண்டுவர முடியும் என்றால், தனது பதவியை விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பதாக ஸெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.

  • அமெரிக்காவுக்கும் யுக்ரேனுக்கும் இடையிலான சாத்தியமான கனிம ஒப்பந்தம் குறித்துப் பேசிய அவர், ஒப்பந்த முன்மொழிவுகள் இதுவரை தாங்கள் விரும்பும் வகையில் இல்லை எனவும், பேச்சுவார்த்தைகள் முன்னேறி வருவதாகவும் குறிப்பிட்டார். அதன் அடிப்படையில், தனது வளங்களைப் பகிர்ந்துகொள்ள யுக்ரேன் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

  • அவரை சர்வாதிகாரி என்று முத்திரை குத்தும் வகையிலான டிரம்பின் கருத்து குறித்துப் பேசியபோது, "நான் ஒரு சர்வாதிகாரி அல்ல. ஆனால், புதின் மீண்டும் படையெடுக்க மாட்டார் என்பதை உறுதிப்படுத்த அமெரிக்க அதிபர் உத்தரவாதம் அளிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டார்.

  • இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய பாதுகாப்பு உத்தரவாங்களைப் பற்றி ஆலோசிக்க ஐரோப்பிய தலைவர்கள் யுக்ரேனுக்கு வருகை தர உள்ளார்கள். இந்தச் சந்திப்பு, ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று தான் நம்புவதாக அவர் கூறினார்.

  • யுக்ரேன், ரஷ்யா இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பான எந்தவொரு பேச்சுவார்த்தையாக இருந்தாலும், அதில் யுக்ரேன் இருக்க வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

டிரம்பின் 'சர்வாதிகாரி' விமர்சனம் குறித்து என்ன கூறினார்?

யுக்ரேன் அதிபர் செய்தியாளர் சந்திப்பு: டிரம்பின் 'சர்வாதிகாரி' விமர்சனம் பற்றிக் கூறியது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் இருந்து யுக்ரேனுக்கு தேவைப்படும் உத்தரவாதங்கள் குறித்தும் அமைதிக்காக யுக்ரேனின் அதிபர் பதவியை விட்டுக்கொடுக்க அவர் தயாராக இருக்கிறாரா என்பது குறித்தும் செய்தியாளர் சந்திப்பில் கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த ஸெலன்ஸ்கி, "ஆம், யுக்ரேன் அமைதிக்காக அதிபர் நாற்காலியை விட்டு நான் விலக வேண்டுமென்று விரும்பினால், அதைச் செய்யத் தயாராக இருக்கிறேன். அதற்குப் பதிலாக யுக்ரேனை நேட்டோ உறுப்பினராக சேர்க்க வேண்டும்," என்று அவர் குறிப்பிட்டார்.

ஜோ பைடன், டிரம்ப் என இருவரின் நிர்வாகத்தின் கீழும் கிடைக்கும் ஆதரவுக்குத் தான் கடமைப்பட்டுள்ளதாகக் கூறிய ஸெலன்ஸ்கி, அதிபர் டிரம்பிடம் இருந்து பாதுகாப்பு உத்தரவாதம் வேண்டுமென்றும் தெரிவித்தார்.

ரஷ்யாவுடனான போரின்போது யுக்ரேனுக்கு அமெரிக்கா வழங்கிய உதவிக்குப் பிரதிபலனாக, யுக்ரேனின் வளங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்ற அமெரிக்காவின் கோரிக்கை குறித்தும் அவர் தனது கருத்தைத் தெரிவித்தார்.

முன்பு இந்தக் கோரிக்கையை நிராகரித்த யுக்ரேன் அதிபர் தற்போது, "அமெரிக்காவுடன் அதுகுறித்துப் பேச நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கள் வளங்களைப் பகிர்ந்துகொள்ளத் தயாராக இருக்கிறோம். ஆனால், அதற்கு முதலில் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா புதினை கட்டாயப்படுத்த வேண்டும்," என்று கூறினார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னை "தனது வேலையை மோசமாகச் செய்துகொண்டிருக்கும் ஒரு சர்வாதிகாரி" என்று குறிப்பிட்டது குறித்துக் கேட்கப்பட்டபோது, "டொனால்ட் டிரம்பின் வார்த்தைகள் என்னைக் காயப்படுத்தவில்லை. ஒரு சர்வாதிகாரிக்குத்தான் அதைக் கேட்டு கோபம் வரும்," என்று புன்னகையுடன் யுக்ரேன் அதிபர் பதிலளித்தார்.

யுக்ரேனுக்கு ஐரோப்பிய தலைவர்களின் ஆதரவு

யுக்ரேன் அதிபர் செய்தியாளர் சந்திப்பு: டிரம்பின் 'சர்வாதிகாரி' விமர்சனம் பற்றிக் கூறியது என்ன?

பட மூலாதாரம்,EPA

பிப்ரவரி 24ஆம் தேதியன்று நடக்கவுள்ள சந்திப்பு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று யுக்ரேன் அதிபர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு தொடர்பான தனது செலவினங்களை அதிகரிக்கவும், யுக்ரேனில் ஒரு சமாதான ஒப்பந்தத்தை எட்ட உதவவும் ஐரோப்பிய தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

இந்நிலையில், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டேர் லேயன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் பிரிட்டன் பிரதமர் கீயர் ஸ்டார்மருடன் இது தொடர்பாகப் பேசியதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த வாரத் தொடக்கத்தில், ஐரோப்பா முழுவதும் இருந்து பல தலைவர்களுடன் யுக்ரேன் தொடர்பான உச்சிமாநாட்டை பிரான்ஸ் அதிபர் நடத்தினார். அவரும் ஸ்டார்மரும் இந்த வாரம் அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த வாஷிங்டன் செல்கின்றனர்.

யுக்ரேன் போரின் மூன்றாவது ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு, "நீதியுடன் கூடிய நிலையான, விரிவான அமைதிக்கான அவசரத் தேவை இருப்பதாக" ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறியுள்ளார்.

மேலும், எந்தவொரு சமாதான ஒப்பந்தமும் "யுக்ரேனின் இறையாண்மை, சுதந்திரம், பிராந்திய ஒருமைப்பாட்டை" மதிக்க வேண்டும் என்று அன்டோனியோ குட்டெரெஸ் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

யுக்ரேன் நேட்டோ உறுப்பினராக இல்லாதது ஏன்?

யுக்ரேன் தலைநகர் கீயவ்

பட மூலாதாரம்,UKRAINIAN ARMED FORCES

படக்குறிப்பு,யுக்ரேன் தலைநகர் கீயவ் மீது வானில் ட்ரோன்களை தேட யுக்ரேனிய சேவைப் பணியாளர்கள் தேடல் விளக்குகளைப் பயன்படுத்துகின்றனர்.

யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி, அந்நாடு நேட்டோவில் உறுப்பினராக வேண்டும் என்று நீண்ட காலமாகக் கூறி வருகிறார்.

கடந்த 1949ஆம் ஆண்டு 12 மேற்கத்திய நாடுகளால் ஒரு ராணுவக் கூட்டணி உருவாக்கப்பட்டது. அதில் ஒரு நாடு தாக்கப்பட்டால், மற்றவர்கள் அதைப் பாதுகாக்க உதவும் என்ற ஒப்பந்தத்துடன் அந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டது. அதுவே நேட்டோ என்றழைக்கப்படுகிறது. இன்று, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவை சேர்ந்த 32 நாடுகள் அதில் உறுப்பினர்களாக உள்ளன.

நேட்டோ படைகளை ரஷ்ய எல்லைகளுக்கு மிக அருகில் கொண்டு வரும் என்ற கவலைகளைக் காரணம் காட்டி, யுக்ரேன் உறுப்பினராகும் யோசனையை ரஷ்யா தொடர்ந்து எதிர்த்து வருகிறது. சமீபத்தில், ஸெலன்ஸ்கி நேட்டோ உறுப்பினர் பதவியைத் தனது "வெற்றித் திட்டத்தின்" ஒரு பகுதியாகக் குறிப்பிட்டபோது, ரஷ்ய அதிபர் மாளிகை அவர் "அது நடைமுறைச் சாத்தியமில்லாததைப் பேசுவதாக" கூறியது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvg1xx0zdp0o

  • கருத்துக்கள உறவுகள்

2pPb1R7-GRMljQdfgjneh3e6AYb2QP2XAxAunEbA

பதவியைத் துறக்கத் தயார்! – ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அறிவிப்பு.

உக்ரேனுக்கு நேட்டோ உறுப்பினர் பதவியைக் கொடுத்தால்,  தனது ஜனாதிபதிப் பதவியைத் துறக்கத் தான்  தயாராக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி  வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

உக்ரேன்-ரஷ்யா இடையேயான போர் கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து  வரும் நிலையில் இப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முயற்சித்து வருகிறார். மேலும் ‘உக்ரரேன் ஜனாதிபதி  ஜெலன்ஸ்கி சர்வதிகாரிபோல் செயற்படுகிறார் எனவும், இவர் போர் நிறுத்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாக விட மாட்டார் எனவும்  ஜனாதிபதி ட்ரம்ப்  அண்மையில் குற்றம் சாட்டி இருந்தார்.

இந்நிலையில்  குறித்த விடயம் தொடர்பாக ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த போதே வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன் போது உக்ரேனில் அமைதி நிலவ வேண்டும் என்றால் தனது பதவியை விட்டுக்கொடுக்கத் தயார் எனவும்,  உக்ரேனுக்கு நோட்டோ உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் எனவும்,  ரஷ்யாவின் முழுமையான படையெடுப்பிற்கு எதிராக உக்ரேனுக்கு ட்ரம்ப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதங்கள் மிகவும் தேவை. உக்ரேன் மற்றும் ரஷ்யா இடையே டிரம்ப் மத்தியஸ்தராக இருக்க வேண்டும் எனவும் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

நோட்டோ நாடுகளுக்கு நேட்டோ படைகள் பாதுகாப்பு தரும். குறிப்பாக நேட்டோ உறுப்பு நாட்டை யாராவது தாக்கினால், பதிலாக அனைத்து நேட்டோ நாடுகளும் ஆதரவாக வரும். இது தனக்கான பாதுகாப்பைத் தரும் என உக்ரேன் கருதுகிறது. நோட்டோவில் உக்ரேன் உறுப்பினராக இணைய ரஷ்யா மறுப்பு தெரிவித்ததே போருக்கு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1422747

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.