Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Hamas.jpeg?resize=750%2C375&ssl=1

இஸ்ரேலுடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தையினை இரத்து செய்த ஹமாஸ்!

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான தற்காலிக போர்நிறுத்தம் அமுலில் காணப்படும் நிலையில் இஸ்ரேலுடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தையினை ஹமாஸ் இரத்து செய்துள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான தற்காலிக போர்நிறுத்தம் அமுலில் காணப்படும் நிலையில் ஒப்பந்தத்தின் பிரகாரம் ஹமாஸ் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவித்து வருகின்றது.

இதற்கு பதிலீடாக இஸ்ரேல் தமது நாட்டில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்து வருகின்றது இந்த நிலையில் பணயக்கைதிகளில் கொல்லப்பட்ட 4 இஸ்ரேலியர்களின் உடலை ஹமாஸ் ஒப்படைத்திருந்தது.

கொல்லப்பட்ட இஸ்ரேலியர்கள் நால்வரின் உடல்கள் காசாவின் முக்கிய நகரில் வைத்து செஞ்சிலுவை சங்கம் ஊடாக இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும் இதன்போது இஸ்ரேலியர்களைன அவமதிக்கும் வகையில் காசாவில் அணிவகுப்பு மரியாதை நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் குற்றம் சுமத்தியுள்ளது

இந்த நடவடிக்கையானது போர் நிறுத்தத்தினை மீறும் செயலாகும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது அத்துடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தினை ஹமாஸ் மீறியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளதுடன் பணயக்கைதிகளை விடுதலை செய்யும் தீர்மானத்தினையும் நிறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்யாத நிலையில் இஸ்ரேல் போர்நிறுத்தத்தினை மீறியுள்ளதாக ஹமாஸ் குற்றம் சுமத்தியுள்ளது. இஸ்ரேலுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபட போவதில்லை எனவும் அறிவித்துள்ளது

இதேவேளை போர் நிறுத்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு படையினரை தயார் நிலையில் இருக்குமாறும் இஸ்ரேல் பிரதமர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Athavan News
No image preview

இஸ்ரேலுடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தையினை இரத்து செய்த...

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான தற்காலிக போர்நிறுத்தம் அமுலில் காணப்படும் நிலையில் இஸ்ரேலுடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தையினை ஹமாஸ் இரத்து செய்துள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான தற்காலிக போர்நிறுத்தம் அமுலில...
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் கட்ட போர் நிறுத்த பேச்சை ஹமாஸ் நிறுத்தியதால் காசாவில் மீண்டும் போர் பதற்றம்

மேற்குக் கரைக்குள் இஸ்ரேலிய டாங்கிகள் நுழைவு

Gayan AbeykoonFebruary 25, 2025

இஸ்ரேல் ஒத்தி வைத்திருக்கும் 600க்கும் அதிகமான பலஸ்தீன கைதிகளை விடுவிக்கும் வரை இரண்டாம் கட்ட போர் நிறுத்தத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று ஹமாஸ் அமைப்பு அறிவித்திருக்கும் நிலையில் காசாவில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

மறுபுறம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் 20 ஆண்டுகளில் முதல் முறையாக இஸ்ரேலிய டாங்கிகள் நுழைந்திருக்கும் சூழலில் அங்கு வன்முறை அதிகரித்துள்ளது.

காசாவில் அமுலில் உள்ள போர் நிறுத்தத்தில் கடந்த சனிக்கிழமை ஹமாஸ் அமைப்பு ஆறு இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவித்த நிலையில் அவர்களுக்கு பகரமாக இஸ்ரேல் சிறையில் இருந்து விடுவிக்க வேண்டிய 620 பலஸ்தீன கைதிகளை விடுவிப்பதையே இஸ்ரேல் ஒத்திவைத்துள்ளது.

வாராந்தம் இடம்பெறும் பணயக்கைதிகளின் விடுதலையின்போது மேடை அமைத்து நடத்தப்படும் நிகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இஸ்ரேல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அடுத்த கட்ட பணயக்கைதிகள் விடுதலையின்போது இவ்வாறான நிகழ்வு இடம்பெறுவதில்லை என்பது உறுதி செய்யப்படும் வரை பலஸ்தீன கைதிகளை விடுவிப்பதை இடைநிறுத்தியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் கடந்த ஞாயிறன்று (23) அறிவித்தது.

போர் நிறுத்த உடன்படிக்கையின் முதல் கட்டம் எதிர்வரும் மார்ச் ஆரம்பத்தில் நிறைவடையவுள்ள நிலையில், இரண்டாம் கட்டத்திற்கான பேச்சுவார்த்தைகள் இன்னும் ஆரம்பிக்காத சூழலிலேயே இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படும் வரை இஸ்ரேலுடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்கப்போவதில்லை என்று ஹமாஸ் தலைவர் ஒருவரான மஹ்மூத் மர்தாவி அறிவித்துள்ளார். தவிர, போர் நிறுத்த உடன்படிக்கையின் விதிகளை கடைப்பிடிக்க இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கவும் மத்தியஸ்த நாடுகளான எகிப்து, கட்டார் மற்றும் அமெரிக்காவை அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் இந்தக் கைதிகள் விடுவிக்கப்படும் வரை இஸ்ரேலின் எந்த நிபந்தனைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவதை எகிப்து நிராகரித்திருப்பதாக இந்தப் பேச்சுவார்த்தையுடன் தொடர்புட்ட அதிகாரி ஒருவர் ஏ.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

பலஸ்தீனர்களின் விடுதலையை எதிர்பார்த்து காசாவின் கான் யூனிஸ் நகரிலும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ரமல்லா நகரிலும் குளிரான காலநிலைக்கு மத்தியில் பல மணி நேரமாக காத்து நிற்கின்றனர்.

‘இது கடினமாக உள்ளது’ என்று 20 ஆண்டுகள் இஸ்ரேலிய சிறையில் இருக்கும் தனது சகோதரனின் விடுதலைக்காக காத்திருக்கும் ஹசன் யாசீன் குறிப்பிட்டுள்ளார். சகோதரனுடன் இணையும் எதிர்பார்ப்புடன் அவர் ரமல்லா நகரில் கடந்த சனிக்கிழமை தொடக்கம் காத்திருக்கிறார்.

21 ஆண்டுகளின் பின்னர் தனது கணவரின் விடுதலையை எதிர்பார்த்து ஐதா அலி டரக்மே தூபாஸில் இருந்த ரமல்லா நகரை வந்தடைந்தபோதும் அவர் எதிர்பார்த்தது போல் விடுதலை இடம்பெறவில்லை என்று தெரிவித்துள்ளார்.

காசாவில் 15 மாதங்கள் நீடித்த போரில் 48,000இற்கு அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்ட நிலையிலேயே கடந்த ஜனவரி 19 ஆம் திகதி போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது. போர் நிறுத்த காலத்தில் இதுவரை 25 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டதோடு பதிலாக நூற்றுக்கணக்கான பலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) இராணுவ நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய நெதன்யாகு, ‘எந்த நேரத்திலும் உக்கிர மோதலை ஆரம்பிப்பதற்கு நாம் தயாராக உள்ளோம்’ என்று எச்சரித்துள்ளார்.

மறுபுறம் மேற்குக் கரையிலும் இஸ்ரேல் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தனது படை நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த படை நடவடிக்கையின் அங்கமாக 20 ஆண்டுகளில் முதல் முறையாக மேற்குக் கரையில் இஸ்ரேலிய டாங்கிகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக ஜெனின் நகர் மற்றும் அதன் அகதி முகாமில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் 25க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு வீடுகள், வீதிகள் என உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதில் ஜெனின் அகதி முகாமில் இருக்கும் 120 வீடுகளை இஸ்ரேலியப் படை முற்றாக அழித்திருப்பதோடு மேலும் பல வீடுகள் பகுதி அளவு சேதமாக்கப்பட்டிருப்பதாக ஜெனின் மாநகர சபை தெரிவித்துள்ளது.

இங்கு இடம்பெற்று வரும் சுற்றிவளைப்புகளில் பெரும் எண்ணிக்கையானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த படை நடவடிக்கைகளால் மேற்குக் கரையின் வடக்கே உள்ள அகதி முகாம்களில் இருந்து 40,000க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.thinakaran.lk/2025/02/25/world/115601/இரண்டாம்-கட்ட-போர்-நிறுத/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.