Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: Rajeeban

06 Mar, 2025 | 10:52 AM

image

தென்கொரிய போர்விமானங்கள் தவறுதலாக வீடுகள் மீது வீசிய குண்டுகள் காரணமாக 7  பேர் காயமடைந்துள்ளனர்.

GlU5FL6WMAAhUvQ.jpg

போர்விமான ஒத்திகையின் போது பொதுமக்கள் வாழும் பகுதிகள் மீது விமானங்கள் தவறுதலாக குண்டுகளை வீசியதில்  7 பேர் காயமடைந்துள்ளனர், நால்வர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது.

வடகொரியா எல்லைக்கு அருகில் உள்ள பொச்சியோன் என்ற நகரத்தின் குடியிருப்புகள் மீது விமானப்படையின் கேஎவ் 16 விமானங்கள் தவறுதலாக குண்டுகளை வீசியுள்ளன.

இதில் ஒரு குண்டு வெடித்துள்ளது, ஏனைய குண்டுகளை பாதுகாப்பாக அகற்றும் நடவடிக்கைகளில் குண்டு செயல்இழக்கவைக்கும் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

south_korea_acc_bom.jpg

இருவருக்கு கழுத்திலும் தோளிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக உள்ளுர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குண்டுகள் விழுந்து வெடித்தபோது வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்த 60 வயது பெண்ணொருவரின் கழுத்தை குண்டு சிதறல்கள் தாக்கியுள்ளன.

வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்த வேளை பாரிய சத்தம் கேட்டது, நான் கண்விழித்தவேளை அம்புலன்சில்இருந்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

எங்கள் விமானங்கள் தவறுதலாக எம்கே 82 குண்டுகளின் 8 எறிகணைகளை வீசியுள்ளன. அவை சூட்டு எல்லைக்கு வெளியே விழுந்துள்ளன என தென்கொரிய விமானப்படை தெரிவித்துள்ளது.

GlVI-yia0AAqC4A.jpg

இதற்காக மன்னிப்பு கோரியுள்ள விமானப்படை விசாரணைகள் இடம்பெறுவதாகவும் இழப்பீடுகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தினால்ஒரு தேவாலயமும் சில வீடுகளும் சேதமடைந்துள்ளன.

நான் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தவேளை வெடிப்பு சத்தங்கள் கேட்டன என இடிபோலயிருந்தது, வீடு அதிர்ந்தது என யொன்காப்பிற்கு ஒருவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/208417

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-79.jpg?resize=750%2C375&ssl=

தவறுதலாக பொது மக்கள் பகுதியில் குண்டுகளை வீசிய தென் கொரிய போர் விமானம்!

தென் கொரிய போர் விமானம் ஒன்று வியாழக்கிழமை (06) பயிற்சியின் போது தவறுதலாக பொதுமக்கள் பகுதியில் எட்டு குண்டுகளை வீசியதில் ஏழு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்களில் நால்வர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

வட கொரியாவின் எல்லைக்கு அருகிலுள்ள போச்சியோன் நகரில், அந் நாட்டு நேரப்படி காலை 10:04 மணிக்கு (கிரீன்விச் நேரப்படி காலை 01:04) விமானப்படை கே.எஃப்-16 விமானம் சம்பந்தப்பட்ட சம்பவம் நடந்தது.

வீசப்பட்ட குண்டுகளில் ஒன்று மாத்திரம் வெடித்ததாக நம்பப்படுகிறது.

வெடிக்காத மற்ற ஏழு குண்டுகளையும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் பணியில் வெடிகுண்டு செயலிழப்பு குழு ஈடுபட்டுள்ளதாக போச்சியோன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால், அந்தப் பகுதிக்கு அருகில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தின் விளைவாக ஒரு தேவாலய கட்டிடம் மற்றும் வீடுகளும் சேதமடைந்தன.

விபத்து தொடர்பில் தென்கொரிய ஊடகங்களில் வெளியிடப்பட்ட படங்கள் ஒரு கட்டிடத்தின் உடைந்த ஜன்னல் மற்றும் தேவாலயத்தின் சேதமடைந்த கூரையைக் காட்டுகின்றன.

GlVLcGXXEAAhDZE?format=jpg&name=medium

வியாழக்கிழமை நடைபெற்ற இந்தப் பயிற்சி அமெரிக்கப் படைகளுடனான கூட்டுப் பயிற்சியுடன் தொடர்புடையது என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தென் கொரியாவும் அமெரிக்காவும் மார்ச் 10 முதல் மார்ச் 20 வரை கூட்டுப் பயிற்சிகளை நடத்த உள்ளன – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய பிறகு இதுவே முதல் முறை.

வட கொரியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே வளர்ந்து வரும் கூட்டணி குறித்து இரு நாடுகளும் அதிகளவில் எச்சரிக்கையாக இருக்கும் நேரத்தில் இந்த பயிற்சி வந்துள்ளது.

2022 ஆம் ஆண்டில் தென் கொரியாவும் அமெரிக்காவும் நடத்திய மற்றொரு கூட்டுப் பயிற்சியின் போது, படையினர் ஒரு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவின.

அது செயலிழந்து இராணுவத் தளத்தில் உள்ள ஒரு கோல்ஃப் மைதானத்தில் மோதியது.

இது வெடிக்கவில்லை என்றாலும், அது தீப்பிடித்து எரிந்து அப்பகுதியில் வசிப்பவர்களிடையே பீதியை ஏற்படுத்தியிருந்தமையும் குறுப்பிடத்தக்கது.

Athavan News
No image preview

தவறுதலாக பொது மக்கள் பகுதியில் குண்டுகளை வீசிய தென் கொர...

தென் கொரிய போர் விமானம் ஒன்று வியாழக்கிழமை (06) பயிற்சியின் போது தவறுதலாக பொதுமக்கள் பகுதியில் எட்டு குண்டுகளை வீசியதில் ஏழு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களில் நால்வர் படுகாயங்கள...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.