Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-95.jpg?resize=750%2C375&ssl=

லண்டனில் எஸ்.ஜெய்சங்கர் மீதான தாக்குதல் முயற்சி; இங்கிலாந்தின் பாதுகாப்பு குறித்து கேள்வி!

லண்டனில் “காலிஸ்தானிய குண்டர்களால்” இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மீதான தாக்குதல் முயற்சிகளைத் தொடர்ந்து வெளிவிவகார அமைச்சர்களுக்கான ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பு ஒரு கேள்விக்குறியாக மாறியது.

இந்த சம்பவம் ஜனநாயகத்திற்கும், இந்தியாவில் உள்ள நண்பர்கள் மற்றும் நட்பு நாடுகளுக்கும் அவமானம் என்று பொது மன்றத்தில் பிரச்சினையை எழுப்பிய பிரித்தானிய எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் சட்ட மன்ற உறுப்பினர் பாப் பிளாக்மேன் கூறினார்.

இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் பிளாக்மேன் வலியுறுத்தினார்.

மேலும், இராஜதந்திரிகளின் பாதுகாப்பு நெறிமுறைகள் தொடர்பான பொருத்தமான அமைச்சரவை அறிக்கைகளை உறுதி செய்யுமாறு அவைத் தலைவரைக் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பில் மேலும் உரையாற்றிய அவர்,

நேற்று (புதன்கிழமை) இந்திய வெளிவிகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், இந்த நாட்டில் இந்திய மக்கள் மத்தியில் உரையாற்றி முடிந்ததும் ஒரு பொது இடத்தில் இருந்து வெளியேறும்போது தாக்குதல் முயற்சி முன்னெடுக்கப்பட்டது.

காலிஸ்தானி குண்டர்களால் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது.

இது ஜெனீவா மாநாட்டிற்கு எதிரானது, மேலும் அவர் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய காவல்துறையும் பாதுகாப்புப் படையினரும் தவறிவிட்டதாகத் தெரிகிறது.

இப்போது, இது ஜனநாயகத்திற்கு ஒரு அவமானம், இது இந்தியாவில் உள்ள நமது நண்பர்கள் மற்றும் நட்பு நாடுகளுக்கு ஒரு அவமானம்.

மேலும் இது மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

எனவே, இந்த நாட்டிற்கு வெளியூர் இராஜதந்திரிகள் வரும்போது, அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யப் போவது குறித்து உள்துறைச் செயலாளரோ அல்லது பொருத்தமான அமைச்சரோ இந்த அவையில் ஒரு அறிக்கை வெளியிடுவதைத் தலைவர் உறுதி செய்வாரா? என்றும் அவர் இதன்போது கேள்வி எழுப்பினார்.

ஜெய்சங்கருக்கு எதிரான சம்பவத்திற்கு தொழிலாளர் கட்சித் தலைவர் லூசி பவல் மன்னிப்பு கேட்டார்.

லண்டனில் உள்ள சாத்தம் ஹவுஸ் சிந்தனைக் குழுவில் நடந்த ஒரு நிகழ்விலிருந்து வெளியேறும்போது இந்திய வெளிவிவகார அமைச்சர் தாக்கப்பட்டார்.

மார்ச் 6 (புதன்கிழமை) மாலை மத்திய லண்டனில் உள்ள சாத்தம் ஹவுஸுக்கு வெளியே இந்த சம்பவம் நடந்தது.

ஆன்லைனில் பரவி வரும் ஒரு காணொளியில், காலிஸ்தானிய குண்டர்கள் ஜெய்சங்கர் பயணித்த வாகனத்தை நோக்கி ஓடி வருவதும், லண்டன் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் இந்திய தேசியக் கொடியைக் கிழிப்பதும் காட்டப்படுகிறது.

ஜெய்சங்கர் கலந்துரையாடலில் பங்கேற்ற இடத்திற்கு வெளியே காலிஸ்தான் ஆதரவு ஆதரவாளர்கள் கொடிகளை ஏந்தி போராட்டம் நடத்தினர்.

வர்த்தகம், சுகாதாரம், கல்வி, மக்களிடையேயான உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை உள்ளடக்கிய இந்தியா-இங்கிலாந்து விரிவான மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்த ஜெய்சங்கர் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1424368

  • கருத்துக்கள உறவுகள்

ஜெய்சங்கர் மீதான பாதுகாப்பு அத்துமீறல்: இந்தியா கடும் கண்டனம்

07 Mar, 2025 | 03:03 PM

image

இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் அமர்ந்திருந்த காரை நோக்கி ஒருவர் வேகமாகச் சென்ற சம்பவத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் இங்கிலாந்து பயணத்தின் போது நடந்த பாதுகாப்பு விதிமீறல் சம்பவத்தை கண்டித்த இந்தியா "ஜனநாயக சுதந்திரத்தை இதுபோன்ற நபர்கள் தவறாகப் பயன்படுத்துகின்றனர்" என்று கூறியுள்ளது.

எக்ஸ் தளத்தில் பரவும் வீடியோவில் மூவர்ணக் கொடியுடன் ஒரு நபர் ஜெய்சங்கர் அமர்ந்திருக்கும் காரை நோக்கி விரைவதைக் காணலாம். அந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த போலீசார் அந்த நபரைத் தடுத்து அழைத்துச் சென்றபோதும் காலிஸ்தான் ஆதரவுக் கொடிகளுடன் போராட்டக்காரர்கள் குழு கோஷங்களை எழுப்புவதைக் காணலாம்.

இது குறித்து  இந்தியவெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில் "வெளியுறவுத்துறை அமைச்சர் இங்கிலாந்துக்கு சென்ற போது பாதுகாப்பு விதிமீறல் ஏற்பட்ட காட்சிகளை நாங்கள் பார்த்தோம். இந்த பிரிவினைவாதிகள் மற்றும் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை நாங்கள் கண்டிக்கிறோம்" என்று கூறினார்.

மேலும் "இப்படிப்பட்டவர்கள் ஜனநாயக சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துவதை நாங்கள் கண்டிக்கிறோம். இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தும் அரசு தங்கள் அனைத்து கடமைகளை முழுமையாக நிறைவேற்றும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்றும் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/208538

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் அமர்ந்திருந்த காரை நோக்கி ஒருவர் வேகமாகச் சென்ற சம்பவத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இந்தியப் பிரதமர் ரஜீவுக்கு தலையில் அடி விழுந்தும் மகாத்மாகாந்தி பரம்பரையடா நாங்கள் என்று இருந்தார்களே

இப்போ மட்டும் எப்படி ரோசம் வருகுது?

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

காலிஸ்தானி குண்டர்களால் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது.

தேசிய இனங்களின் போராட்டங்கள் உங்களுக்கு பயங்கரவாதமாகவும்,குண்டர்கள்வாதமாகவும் தான் தெரியும்....

காளிஸ்தான் தேசிய இனத்தின் போராட்டத்தை 1984 இல் வன்முறை ஊடாக இந்திய இராணுவ(குண்டர்கள் சட்டம்) அடக்கி ஒடுக்கி விட்டது என மார் தட்டி கொண்டிருந்தார்கள் ..இப்பொழுது என்ன திடிரேன கனடா,இங்கிலாந்து என தாக்குதல் தொடங்குகின்றது ....

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இலங்கையில் இந்தியப் பிரதமர் ரஜீவுக்கு தலையில் அடி விழுந்தும் மகாத்மாகாந்தி பரம்பரையடா நாங்கள் என்று இருந்தார்களே

இப்போ மட்டும் எப்படி ரோசம் வருகுது?

அது வந்து சிங்களவர்கள் வட இந்திய கோமாளி கொள்கை வகுப்பாளர்களை நன்றாகவே மூளைச்சலவை செய்து வைத்திருக்கின்றார்கள் ...என்ட மூக்கும் உன்ட மூக்கும் நீளமானது ஆகவே நானும்(சிறிலங்கா) நீயும்(இந்தியா) நண்பேன்டா ....

ஒர் சிங்கள எம்.பி 1980 களில் பாராளுமன்றத்தில் பேசினவர் ஜெ.ஆரின் மூக்கும் இந்திரா காந்தியின் மூக்கும் ஒரே மாதிரி என்று....

சிங்களவர்கள் இப்ப இராவணனும் தங்கன்ட ஆளாம், சூர்ப்பனகையின் மூக்கு தங்கன்ட பரம்பரை மூக்கு என சொல்லுவினம் அதையும் நம்பும் வட் இந்திய கொள்கை வகுப்பாளர்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.