Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Israel-hamas-gaza-war-GettyImages-171497

காசா மீது இஸ்ரேல் இன்று அதிகாலை வான்தாக்குதல்-200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

காசா மீது இஸ்ரேல் இன்று அதிகாலை நடத்தப்பட்ட வான்தாக்குதல்களில் 200க்கும் மேற்பட்ட காசா மக்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 100 அதிகம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

அத்துடன் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சமீபத்திய சமாதான கலந்துரையாடல்கள் தோல்வியடைந்ததை அடுத்து, இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், ஹமாஸ் இலக்குகளை மட்டுமே தாக்குவதாகவும், பொதுமக்களுக்கு தீங்கு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுப்பதாகவும் இஸ்ரேலிய இராணுவம் கூறியிருந்தது

ஆனால், காசாவில் பெரும்பாலான உயிரிழப்புகள் பொதுமக்களே என காசா சுகாதார அமைச்சு தெரிவிக்கிறதுடன் இந்த தாக்குதல்கள் காசாவில் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள மனிதாபிமான நெருக்கடியை மேலும் மோசமாக்கியுள்ளன.

மேலும் மக்கள் தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர், மேலும் உணவு, தண்ணீர் மற்றும் வைத்திய வசதிகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது என்றும் காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

https://athavannews.com/2025/1425578

  • கருத்துக்கள உறவுகள்

Israel - Gaza : மீண்டும் போரை தொடங்கியிருக்கும் இஸ்ரேல்... காஸா மீது தாக்குதல்; 300 பேர் பலி

VM மன்சூர் கைரி

போர்நிறுத்தம் அமலுக்கு வந்ததற்குப் பிறகு இஸ்ரேல் நடத்தியிருக்கும் மிகக் கொடூரமான தாக்குதல் இது. குறிப்பாக அகதிகள் தங்ககியிருந்தப் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

Isreal - Gaza

Isreal - Gaza

ஜனவரி மாதம் தொடங்கிய போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இன்று அதிகாலை முதல் காஸா முழுவதும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதில் குழந்தைகள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். காஸா நகரம், டெய்ர் அல்-பலா, கான் யூனிஸ், ரஃபா உள்ளிட்ட பல இடங்களில் இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியிருக்கிறது. போர்நிறுத்தம் அமலுக்கு வந்ததற்குப் பிறகு இஸ்ரேல் நடத்தியிருக்கும் மிகக் கொடூரமான தாக்குதல் இது. குறிப்பாக அகதிகள் தங்ககியிருந்தப் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

Isreal - Gaza

Isreal - Gaza

இந்தத் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு இஸ்ரேல், டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்துடன் கலந்தாலோசித்ததாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த தாக்குதலில் பெரும்பாலான குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பதாக காஸா சுகாதரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இதேபோன்று சிரியா, லெபனானின் பல்வேறு பகுதிகளிலும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதன்மூலம், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் போரைத் தொடங்கியுள்ளதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

https://www.vikatan.com/government-and-politics/more-strikes-hit-gaza-death-toll-rises-to-more-than-300

  • கருத்துக்கள உறவுகள்

டிரம்பென்ற ஒரு கசமாரிக்கு வாக்களித்த முசல்மான்கள்தான் இதற்கு காரணம். அல்லது பென்சில்வேனியா, மிச்சிக்கன் டிரம்பிற்கு போயிருக்கமாட்டிது.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ragaa said:

டிரம்பென்ற ஒரு கசமாரிக்கு வாக்களித்த முசல்மான்கள்தான் இதற்கு காரணம். அல்லது பென்சில்வேனியா, மிச்சிக்கன் டிரம்பிற்கு போயிருக்கமாட்டிது.

ட்ரம்ப் கட்டிப்பிடித்து கொஞ்சிக்கொண்டிருப்பார் என்று எதிர்பார்த்திருப்பினம் .

இப்படி full BBQ போட்டு சுடச்சுட வறுத்தெடுப்பார் என்று கனவிலும் எதிர்பார்த்திருக்கமாட்டினம். அமெரிக்காவின் வீழ்ச்சி ட்ரம்பிலிருந்து ஆரம்பிக்கட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

தலைக்கு மேலே 16 போர் விமானங்கள் - பிள்ளைகளின் உடல்களை சுமந்தபடி மருத்துவமனைக்கு வந்த பெற்றோர்" - காசாவில் மீண்டும் பெரும் அவலம்

Published By: RAJEEBAN 18 MAR, 2025 | 05:06 PM

image

காசா மீது மீண்டும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் 400க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள அதேவேளை அந்த பயங்கரமான தருணங்களை காசா மக்கள்  ஊடகங்களிற்கு விபரித்துள்ளனர்

16 விமானங்கள் தலைக்கு மேலே காணப்பட்டன, பலர் தங்கள் குழந்தைகளின் உடல்களை தூக்கியவாறு மருத்துவமனைக்கு வந்தனர் என ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் காசாவின் அனைத்து பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல் சத்தத்தை கேட்டு  அச்சத்துடன் கண்விழித்தோம் என ஆசிரியர் அகமட் அல் ரிஸ்க் அல் ஜசீராவிற்கு தெரிவித்துள்ளார்.

gaza_march_2025_14444.jpg

குண்டுவீச்சின் ஆரம்ப தருணங்களை பகிர்ந்துகொண்டுள்ள அவர் நாங்கள் அஞ்சிநடுங்கினோம் எங்கள் பிள்ளைகளும் அஞ்சி நடுங்கின பல உறவுகள் எங்களின் நிலை குறித்து அறிந்துகொள்வதற்காக எங்களை தொடர்புகொண்டார்கள், அம்புலன்ஸ்கள் ஒரு வீதியிலிருந்து மற்றைய வீதிக்கு ஒடத்தொடங்கின என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிள்ளைகளின் உடல்களை கையில் சுமந்தபடி குடும்பங்கள் மருத்துவமனைக்கு வரத்தொடங்கின என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் தலைக்கு மேலே 16 போர்விமானங்களும் ஆளில்லா விமானங்களும் காணப்பட்டன  நாங்கள் பெரும் அச்சத்தில் சிக்குண்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

காசா மருத்துவமனைகள் முற்றாக செயல் இழந்து காணப்படுகின்ற சூழ்நிலையிலேயே காசாவின் சுகாதார கட்டமைப்பு முற்றாக  சிதைவடைந்துள்ள நிலையிலேயே இந்த தொடர்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

ஐந்து செகன்டிற்கு ஒரு வெடிப்பு சத்தம் கேட்பதாக ஐநாவின் பணியாளர் ஒருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

யுனிசெவ் அமைப்பின் பேச்சாளர் ரொசாலியா பொலொன் தென்காசாவின் அல்மவாசியில் உள்ளார்.

இது அனைவருக்கும் மிகவும் கடினமான இரவு என அவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

பாரிய வெடிப்பு சத்தங்கள் காரணமாக நான் கண்விழித்தேன், நான் தங்கயிருந்த வீடு குலுங்கியது, அடுத்த 15 நிமிடங்கள் நாங்கள் ஒவ்வொரு ஐந்து செகன்டிற்கும் ஒரு வெடிப்புச் சத்தங்கள் என்ற அடிப்படையில் வெடிப்பு சத்தங்களை கேட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

வெளியே அலறல்களையும் அம்புலன்ஸ் சைரன்ஸ்களையும் கேட்டதாக தெரிவித்துள்ள அவர் தலைக்கு மேலே விமானங்களின் இரைச்சல் கேட்டது என தெரிவித்துள்ளார்.

மனிதாபிமான பொருட்கள், எரிபொருட்கள் சமையல் எரிவாயு போன்றவற்றின் விநியோகத்தினை நிறுத்தி மின்சார விநியோகத்தினை நிறுத்திய பின்னரே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

15 மாதங்களிற்கு முன்னரே சுகாதாரசேவையை முற்றாக அழித்துவிட்டனர் என தெரிவித்துள்ள  அவர், நான் பேசிய சிறுவர்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர் அதிர்ச்சியில் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

காசாவில் பணிபுரியும் சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவர் இஸ்ரேல் மீண்டும் வான் வழித்தாக்குதலை மேற்கொண்டவேளை தான் பார்த்த முழுமையான படுகொலை மற்றும் அழிவு குறித்து ஸ்கை நியுசிற்கு தெரிவித்துள்ளார்.

gaza_march_20025_15555.jpg

டெய்ர் அல் பலாவில் உள்ள நாசர் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பெரோஸ் சித்வா இஸ்ரேலின் புதிய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் அனேகமானவர்கள் பெண்கள் குழந்தைகள் என தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு நான் ஆறு சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டேன், இவர்களில் சிலர் ஆறுவயதிற்கு உட்பட்ட குழந்தைகள் துரதிஸ்டவசமாக அவர்கள் அனைவரும் உயிரிழக்கப்போகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இது பேரழிவு, கூடாரங்கள் மீது குண்டுகளை வீசினால் இதுவே நடக்கும் என்பதை நீங்கள் எதிர்பார்க்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஒரு சம்பவம் நடந்தாலும் அமெரிக்காவின் மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பிவிடும், மரதன் குண்டுவெடிப்பின் போது நான் அங்கிருந்தேன் அங்கு பெரும் குழப்பம் நிலவியது என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அன்று பார்த்தது காசாவில் இன்று நான் பார்த்தன் சிறிய அளவே என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/209578

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.