Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அதனால் அவர்களுக்கு மாதம் 3000  வாடகையில் வீட்டைக் கொடுத்து மின் கட்டணத்தையும் கட்டும்படி சொல்கிறோம். அவர்களின் அடையாள அட்டையையும் படம் எடுத்து லோயரிடமும் கொடுத்து ஒப்பந்தம் கைச்சாத்தாகிறது.

இது மிகமிக கம்மியான வாடகையாக இருக்கிறதே?

ம் தொடருங்கள்.

  • Replies 161
  • Views 10k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • மெசொபொத்தேமியா சுமேரியர்
    மெசொபொத்தேமியா சுமேரியர்

    பத்து   அடுத்தநாள் காலை வழமைபோல வீட்டுக்கு வரும் போது மருதனார் மடத்துக்கும் சுண்ணாகத்துக்கும் இடையே உள்ள பூங்கன்றுகள் விற்கும் கடைக்குச் சென்று விதவிதமாக பூத்திருந்த செவ்வரத்தங் கன்றுகளில் 15 ஐ வாங்கி

  • மெசொபொத்தேமியா சுமேரியர்
    மெசொபொத்தேமியா சுமேரியர்

    மூன்று   வீட்டில் இருப்பவர் இரண்டு வாரங்கள் வங்கி அலுவலாக  வெளிமாவட்டம் சென்றதனால் உடனே வாடகை ஒப்பந்தம் எழுத முடியவில்லை. இரண்டு நாழின்பின் வந்துசேர அவரை வரச்சொல்லிவிட்டு மணிவண்ணனிடம் போகிறேன். ஒப்பந்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

இது மிகமிக கம்மியான வாடகையாக இருக்கிறதே?

ம் தொடருங்கள்.

உண்மை தான் ....ஆனால் யாருக்கு ??? அமெரிக்கர்களுக்கு தான் இலங்கை மக்களுக்கு இது மிகவும் அதிகம் ஆகும் நான் ஒரு நூறு ரூபாய் கூடக் கொடுக்க. மாட்டேன் ஏனென்றால்

இந்த பெரிய வளவைப் பார்க்க வேண்டும் கிழமையில். ஒரு நாளைக்கு குப்பைகள் கூட்ட. தாவரங்களுக்கு தண்ணீரை அடிக்க. தேவை ஒரு நாள் சம்பளம் 3000 ரூபாய் ஆகவே மாதம்

4*3000=12000 ரூபாய்கள். வரும் எனவே… 12000-3000=9000 ரூபாய் இவர்கள் தான் கொடுக்க வேண்டும்,. 🤣🤣🤣. மேலும் இவர்கள் ஓய்வு நேரங்களில் எல்லாம் தொலைபேசி. எடுத்து

பாக்கு மரம் தென்னை மரம்....பனை மரம் இப்படி ஒவ்வொரு மரங்களின். வளர்ச்சி தண்ணீர் விட்டது ஏப்ப. ?? என்று அந்த குடும்பங்களுக்கு தேவையற்ற கேள்விகள் கேட்பார்கள். இதற்கு எல்லாம் சரியாக பார்த்து பதில்கள் கூற அவர்களுக்கு நேரம் வேண்டும் அதற்கு சம்பளம் கொடுக்கப்படவும். வேண்டும் .....இல்லையா??? உங்களிடம் ஒரு கேள்வி உங்களை அந்த வீட்டில் குடியிருததினால். வீடு இல்லை பெரிய வளவில் பெரிய காணியில் இருக்க விட்டால் மாதம் எவ்வளவு ஆயிரம் கொடுப்பீரகள்.?? அல்லது எவ்வளவு ஆயிரம் உங்களுக்கு தர வேண்டும் ??

குறிப்பு,....உங்கள் நண்பரை கண்டால் விசாரித்தேன் என்று சொல்லுங்கள் ஏதாவது எழுதுவார் வாசிக்கலாம் என்று பார்த்தால் ..ஆளை பல மாதங்களாக காணவில்லை யாழிடம். கோபம் அல்லது யாழ் கள உறுப்பினர்களுடன் கோபமாக இருக்கலாம் 🤣🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

இது மிகமிக கம்மியான வாடகையாக இருக்கிறதே?

ம் தொடருங்கள்.

எனக்கு அவர்கள் என் வளவையும் வீட்டையும் கன்றுகளையும் கவனமாகப் பார்த்தால் சரி என்ற நினைப்பு. 10000 வரை வாடகை வாங்கலாம். எனக்கு அப்படி வாங்க மனம் வரவில்லை. எனக்காக இரண்டு அறைகளைப் பிடித்துக்கொண்டுதானே கொடுத்தது. அதனால் ஓகே.

1 hour ago, Kandiah57 said:

உண்மை தான் ....ஆனால் யாருக்கு ??? அமெரிக்கர்களுக்கு தான் இலங்கை மக்களுக்கு இது மிகவும் அதிகம் ஆகும் நான் ஒரு நூறு ரூபாய் கூடக் கொடுக்க. மாட்டேன் ஏனென்றால்

இந்த பெரிய வளவைப் பார்க்க வேண்டும் கிழமையில். ஒரு நாளைக்கு குப்பைகள் கூட்ட. தாவரங்களுக்கு தண்ணீரை அடிக்க. தேவை ஒரு நாள் சம்பளம் 3000 ரூபாய் ஆகவே மாதம்

4*3000=12000 ரூபாய்கள். வரும் எனவே… 12000-3000=9000 ரூபாய் இவர்கள் தான் கொடுக்க வேண்டும்,. 🤣🤣🤣. மேலும் இவர்கள் ஓய்வு நேரங்களில் எல்லாம் தொலைபேசி. எடுத்து

பாக்கு மரம் தென்னை மரம்....பனை மரம் இப்படி ஒவ்வொரு மரங்களின். வளர்ச்சி தண்ணீர் விட்டது ஏப்ப. ?? என்று அந்த குடும்பங்களுக்கு தேவையற்ற கேள்விகள் கேட்பார்கள். இதற்கு எல்லாம் சரியாக பார்த்து பதில்கள் கூற அவர்களுக்கு நேரம் வேண்டும் அதற்கு சம்பளம் கொடுக்கப்படவும். வேண்டும் .....இல்லையா??? உங்களிடம் ஒரு கேள்வி உங்களை அந்த வீட்டில் குடியிருததினால். வீடு இல்லை பெரிய வளவில் பெரிய காணியில் இருக்க விட்டால் மாதம் எவ்வளவு ஆயிரம் கொடுப்பீரகள்.?? அல்லது எவ்வளவு ஆயிரம் உங்களுக்கு தர வேண்டும் ??

குறிப்பு,....உங்கள் நண்பரை கண்டால் விசாரித்தேன் என்று சொல்லுங்கள் ஏதாவது எழுதுவார் வாசிக்கலாம் என்று பார்த்தால் ..ஆளை பல மாதங்களாக காணவில்லை யாழிடம். கோபம் அல்லது யாழ் கள உறுப்பினர்களுடன் கோபமாக இருக்கலாம் 🤣🙏

உண்மையில் சிரித்துவிட்டேன். தண்ணீர் அவர்கள் விடத் தேவை இல்லை. எல்லாம் தானியங்கி. பல வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் சும்மா வீட்டை மட்டும் பாராமரிக்கவே 30000, 60000 என்று கொடுக்கிறார்கள் என்று கேள்வி.

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உண்மையில் சிரித்துவிட்டேன். தண்ணீர் அவர்கள் விடத் தேவை இல்லை. எல்லாம் தானியங்கி. பல வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் சும்மா வீட்டை மட்டும் பாராமரிக்கவே 30000, 60000 என்று கொடுக்கிறார்கள் என்று கேள்வி.

பின்னர் எழுப்பும் போது லட்சக் கணக்காக கொடுக்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆறு    

நாம் லண்டன் வந்து ஒரு வாரம் வரையில் அவர்கள் வீட்டில் இருக்க வரவில்லை. அவர்களைக் கூட்டிவந்தவரிடம் கேட்டால் அவர்கள் சுண்ணாகத்தில் சகோதரி வீட்டில் இருந்தார்களாம். அடுத்த கிழமை வருவார்கள் என்கிறார். வீட்டில் ஆட்கள் இருக்கவேண்டும் என்றுதானே வாடகைக்குக் குடுத்தது. இதென்னடா இவர்கள் என்கிறேன். எல்லாத்துக்கும் நுணுக்கம் பாக்காதை. அவர்கள் வருவார்கள்தானே என்று மனிசன் வக்காலத்து வாங்குகிறார்.

இரண்டு வாரங்கள் செல்ல எல்லோரும் பொருட்களையும் லாண்ட் மாஸ்டரில் கொண்டுவந்து வந்து இறங்குகிறார்கள். ஒரு ஓட்டோவும் நிற்க உங்கள் கணவர் ஓட்டோ ஓடுபவரோ என்று அந்தப் பெண்ணிடம் கேட்க, இல்லை. எமது தேவைக்காக வைத்திருக்கிறோம் என்கிறார். அதன்பின் ஒரு மாதம் எந்தப் பிரச்சனையும் இன்றிப் போகிறது. அதன்பின் ஒருவாரம் மீண்டும் ஒருவரையும் காணவில்லை. தொலைபேசியில் மகளை அழைத்தால் வெப்பம் காரணமாக விடுமுறையில் கண்டி, நுவரெலியா சென்றிருக்கிறார்களாம்.

நீ வாடகைக்குக் கொடுத்தால் அவர்கள் ஒரு இடமும் போகக் கூடாதா என்கிறார் கணவர். தாய் சுண்ணாகத்தில் ஒரு கடையில் வேலை செய்வதாகவும் மகளும் கணவனும் இல்லாதபடியால் இங்கு தனிய இருக்கப் பயந்து மீண்டும் தமக்கை வீட்டில் போய் இருக்கிறாராம். மகளும் கணவனும் வந்தபின் மீண்டும் என் வீட்டில் வந்து இருப்பார் என்கிறார் அவர்களை அழைத்து வந்தவர்.

மீண்டும் இரு வாரங்களில் வீட்டில் நடமாட்டம் தெரிகிறது. பின் ஒரு மாதத்தின் பின்னர் தாயும் மகனும் மட்டும் இருக்க மகளையும் கணவரையும் ஓட்டோவையும் காணவில்லை. மக்களுக்குப் போன் செய்தால் போன் போகவில்லை. அவர் என் இலக்கத்தை புளொக் செய்துவிட்டாரோ என எண்ணி அவரின் தொலைபேசி இலக்கத்தை மச்சாளிடம் கொடுத்து போன் செய்து பார்க்கும்படி சொல்கிறேன். அவர்கள் சிம்மை மாற்றிவிட்டார்கள் என்று நினைக்கிறேன் என்கிறார் மச்சாள். அவர்களைக் கூட்டி வந்தவருக்கு போன் செய்து தாயின் தொலைபேசி இலக்கத்தை வாங்கித் தரும்படி கேட்க அவவுக்கு தொலைபேசி இல்லையாம் என்கிறார்.

இரண்டு வாரங்களில் தாயையும் சின்ன மகனையும் கூடக் காணவில்லை. மீண்டும் கூட்டி வந்தவருக்கே போன் செய்து என்ன பிரச்சனை என்கிறேன். மருமகன் மகளுக்கு அடித்ததில் மாமியார் ஏசிவிட்டாராம். மருமகன் கோபித்துக்கொண்டு மனைவியைக் கூட்டிக்கொண்டு வேறு வீடு சென்றுவிட்டாராம் என்று கூற, என்னடா தலைவலி மீண்டும் என்று யோசனை அதிகரிக்கிறது.

கடைசி வீடும் வளவும் மிச்சம் இருக்கும்தானே. கவலைப்படாதை என்று சிரிக்கிறார் மனிசன். ஊரிலிருந்து வந்து இப்ப நான்கு மாதங்கள்தான். உடனே திரும்ப போவது செலவு. நடப்பது நடக்கட்டும். கமராவைப் பார்க்காமல் இரு என்று கணவர் சொல்ல பல்லைக் கடித்துக்கொண்டு இரு வாரங்கள் இருக்கிறேன்.

சரி இன்று ஒருக்காப் பார்ப்போம் என்று போனில் கமராவைப் பார்த்தால் வீட்டின் முற்றத்தில் ஆறேழுபேர் நிற்கின்றனர். ஒரு ஓட்டோ, ஒரு சயிக்கிள், இரு ஸ்கூட்டிகள் என்பன நிற்கின்றன. என்னடா இது என்று கணவருக்கு போன் செய்தால் தான் பிசி. இப்ப கமராவைப் பார்க்க முடியாது என்கிறார். வீட்டின் கதவுகள் எல்லாம் திறந்திருக்கு. ஒரு ஓட்டோவும் நிக்குது. இருவர் ஆறேழு பலாப் பழங்களைக் கொண்டுவந்து ஓட்டோவில் வைக்கிறார். இன்னொருவர் இரண்டு உரைப் பைகளில் உரித்த தேங்காய்களைக் கொண்டுவந்து ஏற்றுகிறார்.

இருந்தாற்போல் தொலைபேசி அழைப்புக் கேட்க, வந்தவர்கள் யாரினதோ போன் என நான் நினைக்க, அம்மா உங்களுக்கு போன் என்று கத்தியபடி பொடியன் தாயிடம் போனைக் கொண்டுவந்து கொடுக்கிறார். கொஞ்சம் வயசானவர் போலிருந்த ஒருவர் “இந்த நல்ல வீட்டில இருக்க உங்களுக்கு வருத்துது” என்று கூறுகிறார். நல்ல கறிவேப்பிலை என்று மரத்தை மேலால் முறித்துக்கொண்டு ஒருவர் வர மற்றவர் ஒரு கட்டு வேப்பிலையை வெட்டிக்கொண்டு வந்து தன் மோட்டார் சயிக்கிளில் வைத்துக்கட்ட வீட்டின் மற்றப் பக்கத்தில் ஒரு ஐம்பது தேங்காய்களாவது உரித்த தென்னம் பொச்சுகள் குவிக்கப்பட்டிருக்கு.

உடனே நான் வீடு எடுத்துத் தந்தவருக்கு போன் செய்து நடந்தவற்றைக் கூறி அவர்களை இனி இருக்கவிட முடியாது. அவர்கள் பொருட்களை ஏற்றிக்கொண்டு செல்லச் சொல்லுங்கள் என்கிறேன்.

ஒரு வாரத்தில் அவர்கள் பொருட்களை எடுத்துக்கொண்டு செல்ல, கொஞ்சம் தள்ளி இருக்கும் ரதி அக்கா என்று சொன்னேன் தானே. அவர் போன் செய்கிறார்.  

“என்ன நிவேதா உங்கள் வீட்டில் இருப்பவர்கள் எழும்பிவிட்டார்கள் போலிருக்கே”

“எப்பிடித் தெரியும் அக்கா”

“நான் உங்கள் வீட்டடியால் போகேக்குள்ள லாண்ட் மாஸ்டரில் சாமான்கள் ஏத்தினபடி போச்சினம்”

“ஓமக்கா அது பெரிய பிரச்சனை. வீட்டில இருக்காமல் தேங்காய் பிலாக்காய் மட்டும் ஆய்ந்தால் ..........

“அப்ப இனி ஆரை இருத்தப்போறியள்”

“அதுதான் அக்கா என்ன செய்யிறது எண்டு தெரியேல்லை. இரண்டு பேரிட்டைச் சொல்லியிருக்கிறன். நீங்களும் ஆரன் இருந்தால் சொல்லுங்கோ”

“நான் ஆரையன் கேட்டுப் பாக்கிறன். திறப்பு இப்ப ஆரிட்டை இருக்கு?

“அந்தச் சனத்தைக் கூட்டிவந்த எங்கடை ஊர் பெடியன் தான் மச்சாளிட்டைக் குடுத்துவிட்டிருக்கு”

“நீங்கள் எப்ப வாறியள்?

“இப்ப உடனே வேலையில லீவு சொல்லிவிட்டு வரமுடியாதக்கா. ஐந்து மாதத்துக்கு முன்னம்தானே வந்தது”

“ஒரு இரண்டு மாதம் வேணுமென்டால் நான் அப்பப்ப எட்டிப் பாக்கிறன்.அதுக்குள்ள நீங்கள் வரப்பாருக்கோ. ஆரன் நல்லவை அம்பிட்டால் உங்களுக்குச் சொல்லுறன்”

“மிக்க நன்றி அக்கா. அப்ப அந்தத் தம்பியை திறப்பைக் கொண்டுவந்து உங்களிடம் கொடுக்கச் சொல்லுறன்”

எனக்கோ மனம் கொள்ளா மகிழ்ச்சி. தானே உதவுவதாகக் கூறுகிறார் என்கிறேன் மனிசனிடம். ஆரும் சும்மா வந்து மற்றவைக்கு உதவ முன்வரமாட்டினம். அதுவும் சிலோனில. ஏதோ திட்டத்தோடதான் ரதி அக்கா தான் பாக்கிறன் எண்டு சொல்லுறா என்கிறார் மனிசன்.

உங்களுக்கு எப்பவும் சந்தேகம்தான். யேர்மனியில இருக்கிற அவவின் சொந்தக்காரர் எல்லாம் நல்ல சனங்கள் தானே. அவ என்ன காணியைத் தன்ர பெயரில மாத்தி எழுதவா போறா? சும்மா எல்லாத்துக்கும் தடை சொல்லிக்கொண்டு. எங்களுக்கு வேறை வழி இல்லை இப்ப. பேசாமல் இருங்கோ என்கிறேன். ஏதோ நீயும் அவையும் பட்டபாடு என்று சொன்னதோடு அவர் எதுவும் கதைக்கவில்லை.

அந்த எலெக்ரீசியன் தம்பியை திறப்பை மச்சாளிடம் வாங்கிவந்து கொடுக்கமுடியுமா என்று கேட்க, சம்மதிக்கிறார். மச்சாளிடம் ஒரு வெளிக் கதவுச் சாவியும் பட அறைச் சாவியையும் மட்டும் கொடுக்கும்படி கூறுகிறேன். அதன்பின் கமராவில் அப்பப்ப பார்ப்பதும் அக்காவுடன் வைபரில் கதைப்பதுவுமாகப் போகிறது. ஒருநாள் அக்காவின் கணவர் சென்று பார்த்துவிட்டு எல்லாக் கன்றுகளுக்கும் தண்ணீர் போகவில்லை என்கிறார். அடுத்த நாளே சொட்டுநீர் பாசனம் செய்தவருக்கு போன் செய்ய, தான் நாளை சென்று பார்க்கிறன் என்கிறார்.  

அவர் வந்து பார்த்துவிட்டு என்னக்கா இது சில லைனை கழற்றி வீட்டிருக்கு. சிலதை பூட்டி வீட்டிருக்கு. ஆரும் சின்னப் பெடியள் வீட்டில இருந்தவையோ என்று கேட்கிறார். நான் ஓம் என்கிறேன். அவர்தான் கழட்டிப் பூட்டி விளையாடியிருக்கிறார். மீண்டும் அவர் இரண்டு மணிநேரம் நின்று எல்லாவற்றையும் சரி செய்கிறார்.

ஒரு வாரம் செல்ல ரதி அக்கா போன் செய்கிறார்.

“நிவேதா ஒரு எனக்குத் தெரிந்த பெடியன் இருக்கிறார். அவரைக் கேட்டனான். அவர் வீடு வந்து பாக்கிறன் எண்டவர்”

“தனிப் பெடியன் எண்டா பிரச்சனை அக்கா. அந்தப் பெடியன் வேலைக்குப் போறவரோ”  

“ஓம் ஒரு பால் கொம்பனியில வேலை செய்யிறவர்”

“அவருக்கு வீடு வாசல் இல்லையோ”

“சிறிய தாயோடைதான் இருக்கிறார், மற்றச் சகோதரங்களோட பிரச்சனை. அதுதான் உங்கட வீட்டை இருக்க ஓம் என்டிறார். நீங்கள் பயப்பிடாதைங்கோ. நான் பாத்துக்கொள்ளுறன். ஆள் முதல் வந்து இருக்கட்டும். நீங்கள் வந்து பார்த்து உங்களுக்கு ஓகே எண்டால் தொடர்ந்து இருக்கட்டும்”

“அவரின் போன் நம்பரை போட்டுவிடுங்கோ அக்கா”

“அவருக்கு ஸ்மாட் போன் இல்லை. மற்ற போன் தான் இருக்கு”

இந்தக் காலத்தில ஸ்மாட் போன் இல்லாத பெடியனா? நம்பவே முடியேல்லை அக்கா”

“நீங்கள் வரேக்கை ஒண்டைக் கொண்டுவந்து குடுங்கோவன்”

“உதெல்லாம் சரிவராதக்கா” நானே ஐந்து ஆண்டுகளா ஒரு போனை வச்சிருக்கிறன்”

“சரி நீங்கள் முதல் வாங்கோவன்”  

சரி அக்கா என்கிறன். இரண்டு வாரங்கள் அந்தப் பெடி ஸ்கூட்டியில் வருவதும் போவதுமாக இருக்க, ஒருநாள் பார்த்தால் நான் வாங்கி வைத்த 25 மீட்டர் கோஸ் பைப்பை எடுத்து வீட்டு கேற்றடியில் கன்றுகளுக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டிருக்க, அவரின் இலக்கத்துக்கு போன் செய்தால் போன் றிங் போனாலும் அவர் எடுக்கவில்லை. பின்னர் ரதி அக்காவுக்கு போன் செய்து சொட்டுநீர் பாசனம் செய்திருக்கு. பிறகு எதுக்கு உந்தப் பெடியன் பைப்பைப் பிடித்துத் தண்ணீர் விடுகிறார் என்று கேட்க, தான் அவனுக்குச் சொல்லுறன் என்கிறா அக்கா. இனிமேல் பைப் எதிலும் கை வைக்க வேண்டாம் என்று சொல்லுங்கோ என்கிறேன்.

அடுத்த வாரம் பார்த்தால் எம் வளவில் இரண்டு மாடுகள் மேய்ந்துகொண்டிருக்க, பார்த்த எனக்குப் பகீர் என்கிறது. உடனே ரதி அக்காவுக்குப் போன் செய்ய, அவர் இரண்டு மாடுகள் வளர்க்கிறார். அதுதான் கொண்டுவந்து கட்டியிருக்கிறார் என்கிறா.

அக்கா என்னைக் கேட்காமல் எதுக்கு வளவிலை மாடுகளைக் காட்டச் சொன்னீர்கள்? எனக்கு கன்றுகள் முக்கியம். பார்த்துப் பார்த்துக் கன்றுகளை நட்டிருக்கிறன். உடனடியா மாடுகளை வெளியேற்றச் சொல்லுங்கோ என்கிறேன். நீங்கள் கவலைப்படாதேங்கோ மாடுகளை எங்கள் வளவில கொண்டுவந்து கட்டச் சொல்லுறன் என்கிறா. அடுத்த நாளில் இருந்து மாடுகளைக் காணவில்லை ஆயினும் உவர் என் வளவுக்கு ஏற்ற ஆள் இல்லை என்று மனம் அடித்துக் கூற, வேறு வழியில்லை. நாம் ஊருக்குப் போகத்தான் வேண்டும் என்ற எண்ணம் வலுக்கிறது.

அதன்பின் அந்தப் பெடியன் வீட்டில் வந்து தங்கி இருக்க ஆரம்பிக்கிறார். இரவில் ஒன்பது மணிவரை லைட் எரிகிறது. சிலவேளைகளில் இன்னொரு பெடியும் வந்திருந்து கதைத்துவிட்டு போகிறது. நீ கமறாவைப் பார்க்காமல் இரு என்கிறார் கணவர்.

வேலை செய்யும் இடத்திலும் எனக்குப் பதிலாக வேலை செய்ய ஒருவரும் இல்லை என்று முதலாளி மறுக்க வேறு வழியின்றி யோசனையுடன் இரண்டு மாதங்கள் ஓடிப்போக, இனி நீர் விடுமுறையில் செல்வதனால் செல்லலாம் என்கிறார் முதலாளி.    

 

 

         

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

பின்னர் எழுப்பும் போது லட்சக் கணக்காக கொடுக்கிறார்கள்.

அதுவும் கனக்க நடக்கிதுதான். உண்மையில பாவம் செய்த சனங்கள் நாங்கள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் வீடுகட்டு ..வாடகைக்கு குடு என்றது...வில்லங்கமான விசயம் போலிருக்குது...நானும் அண்மயில் போயிருந்தேன்...எம்மை அவர்கள் கணக்கில் எடுப்பதில்லை என்பது அவர்களின் கதை காரியங்களில் இருந்து தெரியவருகிறது. அதுக்கு நாமென்ன ஏமாளிள..அவை எட்டை பாய்ந்தால் ..நாம பதினாறு அடி பாய்வம்...எனக்கும் ஒரு வீடு கட்ட ஆசை இருந்தது...உங்கடை கதை வாசித்தபின் ..அந்த ஆசையே விட்டிட்டுது..நல்ல அனுபவப் பகிர்வு.. நல்லயிருக்குது தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அதன்பின் அந்தப் பெடியன் வீட்டில் வந்து தங்கி இருக்க ஆரம்பிக்கிறார். இரவில் ஒன்பது மணிவரை லைட் எரிகிறது. சிலவேளைகளில் இன்னொரு பெடியும் வந்திருந்து கதைத்துவிட்டு போகிறது. நீ கமறாவைப் பார்க்காமல் இரு என்கிறார் கணவர்.

வடிவா பார்த்தநீங்களோ

பெடியோ? பெட்டையோ?

கதை தில்லாக இருக்கு.

இடைவெளி விடாம எழுதுங்கோ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, alvayan said:

இலங்கையில் வீடுகட்டு ..வாடகைக்கு குடு என்றது...வில்லங்கமான விசயம் போலிருக்குது...நானும் அண்மயில் போயிருந்தேன்...எம்மை அவர்கள் கணக்கில் எடுப்பதில்லை என்பது அவர்களின் கதை காரியங்களில் இருந்து தெரியவருகிறது. அதுக்கு நாமென்ன ஏமாளிள..அவை எட்டை பாய்ந்தால் ..நாம பதினாறு அடி பாய்வம்...எனக்கும் ஒரு வீடு கட்ட ஆசை இருந்தது...உங்கடை கதை வாசித்தபின் ..அந்த ஆசையே விட்டிட்டுது..நல்ல அனுபவப் பகிர்வு.. நல்லயிருக்குது தொடருங்கள்

வீடு நீங்களும் கட்டலாம். அதில ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் நீங்கள் போய் நிண்டு விலைகள் விசாரித்து நாட்கூலி கொடுத்துச் செய்வது இலாபம். ஆனால் அந்தப் பொறுமை உங்களுக்கு இருக்கவேண்டும். கொன்றாக் குடுக்கலாம். என்ன சில இலட்சங்கள் கூடக் கொடுக்க வேண்டும். அத்தோடு சீமெந்துக் கலவையை கலக்கும்போது நீங்கள் நின்று என்ன ரேசியோவில் போடுகிறார்கள் என்று கவனிக்கவேண்டும். மற்றும் முக்கியமான பொருட்கள் உங்கள் தெரிவாக இருக்கும்படி செய்தால் நல்ல வீடு கட்டலாம்.

7 hours ago, ஈழப்பிரியன் said:

வடிவா பார்த்தநீங்களோ

பெடியோ? பெட்டையோ?

கதை தில்லாக இருக்கு.

இடைவெளி விடாம எழுதுங்கோ.

இரண்டும் பெடிதான். நல்லா சூம் பண்ணிப் பார்த்தது. 😂

  • கருத்துக்கள உறவுகள்
On 30/3/2025 at 23:09, குமாரசாமி said:

ஊரிலை அரைக்கோவணத்தோட நிண்டு அறுவது ஏக்கர் மிளகாய் தோட்டம் செய்யிற சந்தோசம் வேற ஒண்டிலையும் வராது கண்டியளோ 🤣

எண்டாலும்....😎

பேர்லின் அலெக்ஸாண்ட்ரா சம்பவங்கள் ரஜினி மிளகாய் தோட்டத்திலும் நடக்க சாத்தியங்கள் வந்தாலும் வரலாம்.யார் கண்டார்? எல்லாம் மேல இருக்கிறவன் செயல் 😅

On 30/3/2025 at 23:09, குமாரசாமி said:

இரத்தக்கண்ணீர் எம் ஆர் ராதா மாதிரி கிழிஞ்ச சட்டை தாடி மீசையோட காட்சியளிக்கணும். லூசு மாதிரி அப்பப்ப கதைக்கணும்.ஓட்டை உடைசல் மாதிரி நடிக்கணும்..😂

பென்சன் ரெடி 🙃

IMG-8246.jpgவாழ்த்துக்கள் குமாரசாமி

Edited by Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kavi arunasalam said:

IMG-8246.jpgவாழ்த்துக்கள் குமாரசாமி

முழங்கால் வருதத்தை..வலு அழகாக சொன்னமாதிரி இருக்கு ..நான் நினைத்தது சரியா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, Kavi arunasalam said:

IMG-8246.jpgவாழ்த்துக்கள் குமாரசாமி

ச்...சா சொல்லி வேலை இல்லை.துரவுப்புட்டியள்ள தடக்குப்பட்டதெல்லாம் ஞாபகத்துக்கு வருதே...

சொப்பன வாழ்க்கை 😍

சொர்க்க வாழ்க்கை 🥰

இந்த வாழ்க்கை அருமை தெரியாதோர் 😁

ஆயுளில் 20 வருடம் இழந்தோர் ஆவர் 🙃

  • கருத்துக்கள உறவுகள்
On 1/4/2025 at 10:58, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நல்லா சூம் பண்ணிப் பார்த்தது. 😂

இது ஒருவகையில் உரிமை மீறல். வாடகைக்குக் கொடுத்துவிட்டு அவர்களின் செயல்களை கமராவில் கண்காணிப்பது ஏற்புடையதில்லை. யேர்மனியில் வீட்டை ஒருவருக்கு வாடகைக்குக் கொடுத்தால் , வாடகைக்கு இருப்பவர் அனுமதித்தால் மட்டுமே வீட்டின் உரிமையாளர் வீட்டுக்குள்ளே போக முடியும். நாங்கள் எங்கள் உரிமைக்காகப் போராடும் இனம் என்பதால் எங்களிடம் கூடுதல் தகுதி இருக்கிறதோ என்னவோ?

IMG-8247.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kavi arunasalam said:

இது ஒருவகையில் உரிமை மீறல். வாடகைக்குக் கொடுத்துவிட்டு அவர்களின் செயல்களை கமராவில் கண்காணிப்பது ஏற்புடையதில்லை. யேர்மனியில் வீட்டை ஒருவருக்கு வாடகைக்குக் கொடுத்தால் , வாடகைக்கு இருப்பவர் அனுமதித்தால் மட்டுமே வீட்டின் உரிமையாளர் வீட்டுக்குள்ளே போக முடியும். நாங்கள் எங்கள் உரிமைக்காகப் போராடும் இனம் என்பதால் எங்களிடம் கூடுதல் தகுதி இருக்கிறதோ என்னவோ?

IMG-8247.jpg

உண்மையில் மனித உரிமை மீறல்தான். ஆனால் எந்தநேரமுமா பார்த்துக்கொண்டு இருக்கிறோம். பார்த்தபடியால் தானே அவர்களின் தில்லுமுல்லு தெரிந்தது. இல்லாததற்கு ஆசை கொள்வது மனித இயல்பு தானே அண்ணா.

சட்டப்படி அவருக்கு வாடகை ஒப்பந்தம் எழுதவே இல்லையே . அதுவும் வீட்டுக்குள் அத்துமீறி நான் நுழையவே இல்லையே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏழு

 

கணவரை வரும்படி கேட்டால் மனிசன் கணக்குப் பார்த்திட்டு நீ மட்டும் போட்டுவா. நான் நெடுக லீவு எடுக்கேலாது என்றுவிட, எனக்கு மட்டும் ஏர் லங்காவில் டிக்கற் போடுகிறேன். நேரம் அதிகம் என்றாலும் 40 கிலோ கொண்டு போகலாம். அங்கு வருவதாக மச்சாளுக்கும் அன்ரிக்கும் மட்டும் சொல்கிறேன். ரதி அக்காவுக்கோ வீட்டில் இருக்கும் பெடிக்கோ எதுவும் சொல்லவில்லை.

விடியக் காலை ஐந்து மணிக்கு இணுவிலில் போய் இறங்கி குளித்து மச்சாள் வீட்டில் சென்று உணவருந்திவிட்டு ஓட்டோவில் மச்சாளிடம் திறப்புகளை வாங்கிக்கொண்டு என் வீட்டுக்குச் செல்கிறேன். கேற் பூட்டாமல் சாத்தியிருக்க திறந்துகொண்டு ஓட்டோக்காரரையும் உள்ளே வரும்படி கூறிவிட்டு செல்கிறேன்.

வீட்டுத்திண்ணையில் இருவர் கதைத்துக்கொண்டு இருக்கின்றனர். இதில் எவர் வீட்டில் இருப்பவர்? அனேகமா இவராகத்தான் இருக்கும் என்று எண்ண, அக்கா நீங்கள் வீட்டுக்காற அக்காவா வாங்கோ என்று மற்றவர் என்னை எழுந்து வரவேற்கிறார். இவர் என் நண்பர் அஜந்தன் என்று அறிமுகம் செய்தும் வைக்கிறார்.

“இவர் வேலைவெட்டிக்குப் போறதில்லையோ”

“நான் வேலைக்குப் போறதில்லை அக்கா. எட்டு மாடுகள் வளர்க்கிறன். அதோடையே நேரம் போயிடும்”

“ஓ அப்பிடியே”

ரஜிதன் – அவர்தான் என் வீட்டில் இருப்பவர், கதிரை ஒன்றைக் கொண்டுவந்து போட நான் ஓட்டோக்காரருக்கும் ஒரு கதிரை கொண்டு வாங்கோ என்கிறேன். ஒரு கதிரை தானக்கா இருக்கு என்கிறார். ஏன் நான் இரண்டு கதிரைகளை வெளியே வைத்துவிட்டுத்தானே சென்றேன் என்கிறேன். நான் இதிலேயே இருக்கிறேன் என்று திண்ணையில் அமர்கிறார் ஓட்டோக்காரர். அவர் எம்மூரவர். அவரின் ஓட்டோவில் தான் நாம் எப்போதும் திரிவது. கொஞ்சநேரம் வீட்டைப் பார்த்துவிட்டு அவருடனேயே திரும்பிப் போவதாக எண்ணம்.

ரஜிதன் தேநீர் போட்டுக்கொண்டு வருவதாகக் கூற வேண்டாம் என்கிறேன். பரவாயில்லை அக்கா குடியுங்கோ என்று என்வீட்டிலேயே என்னை உபசரிக்க, நான் சுற்றிவரப் பார்க்கிறேன். முன்பக்க வளவு சுத்தமாக இருக்க நான் என் பூங்கன்றுகள் மற்றும் வளவைச் சுற்றிப் பார்க்கிறேன். மீண்டும் வரத் தேனீரைக்  கொண்டுவந்து எல்லோருக்கும் தருகிறார்.

நீங்கள் வந்தது ரதி அன்ரிக்குத் தெரியுமோ என்கிறார். இன்னும் சொல்லவில்லை. போகும்போது அவவிடம் போய்விட்டுத்தான் போவேன் என்கிறேன். அவர் ஊற்றிய தேநீர் நன்றாக இருக்கிறது. ஓட்டோவை அனுப்பிவிடுங்கோவன் அக்கா என்கிறார். நான் ரதி அக்காவோட கதைச்சிட்டுப் போகபோறன். நாளை வாறன் என்கிறேன்.

நான் காலை ஆறரைக்கு வேலைக்குப் போய் 11 மணிக்கு வருவன். பிறகு 3 மணிக்குத் திரும்ப வேலை. 2.30 இக்கு போயிடுவன் என்கிறார். நீங்கள் உங்கள் அலுவலைப் பாருங்கோ. என்னட்டைத் திறப்பு இருக்கு. நான் என்பாட்டில வருவன் என்கிறேன். தனிய நிக்கப் பயம் இல்லையோ என்கிறார். என் வீட்டில் நிக்க என்ன பயம் என்றுவிட்டு தேநீர் கோப்பைக் கழுவ சமையலறைக்குச் செல்ல, என்னட்டைத் தாங்கோ அக்கா என்கிறார். நான் குடித்த கப்பை நானே கழுவிகொள்கிறேன் என்றபடி குசினுக்குள் செல்கிறேன். குசினி சுத்தமாக இருக்க மனம் நிம்மதியாகிறது.

அதன் பின்னர் ரதி அக்காவிடம் சென்று அவருடன் பேசிவிட்டு நாளை வருவதாகக் கூற, பெடியன் என்ன மாதிரி என்கிறா. ஒரு அரை மணித்தியாலம் பாத்து முடிவு செய்ய ஏலாது தானே அக்கா என்றுவிட்டுக் கிளம்புகிறேன்.

நாம் லண்டன் வரும்போது மனிசன் ஸ்கூட்டியின் பற்றியைக் கழற்றிவிட்டு வந்தார். முன் வீட்டில் இரண்டு ஆண்கள்  இருக்கின்றனர். அவர்களை பற்றியைப் பூட்டித் தரும்படி கேட்க, தமக்குத் தெரியாது என்கின்றனர். தாயார் முன்னால் வந்து ஓடுற வாகனம். அரைகுறையாய்ப் பூட்டி ஏதும் நடந்தாலும் வீண்பழி. எதுக்கும் மெக்கானிக் ஆரையன் கூப்பிட்டுப் பூட்டுங்கோ என்கிறா.

எனது ஸ்கூட்டியின் மெக்கானிக் சுண்ணாகத்தில் இருக்கிறார். அவருக்குப் போன் செய்ய, தான் எலெக்சன் வேலையில் மும்மரமாக இருப்பதாகக் கூற, எந்தப் பார்ட்டிக்கு ஆதரவாக வேலை செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு “நான் சுயேட்சையா நிக்கிறன் அக்கா. அதனால வேறு யாரையும் கூப்பிடுங்கோ” என்கிறார்.

அடுத்தநாள் மீண்டும் ஓட்டோவை அழைத்துக்கொண்டு வீட்டுக்குச் செல்கிறேன். போகும் வழியில் மருதனார் மடத்தில் உள்ள கடையில் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு செல்கிறேன். ஓட்டோவை மீண்டும் மாலை 5 மணிக்குவரும்படி கூறிவிட்டு கேற்றைத் திறந்து மீண்டும் பூட்டால் பூட்டிக்கொண்டு வீட்டையும் திறந்து உள்ளே செல்கிறேன்.

சுவாமி அறை, மற்ற அறை எல்லாம் சுத்தமாகவே இருக்கு. எங்கள் அறையைத் திறக்கிறேன். அது பூட்டி இருந்தபடியால் கொஞ்சம் காற்றோட்டம் இன்றி இருக்க யன்னல்களைத் திறந்துவிட்டு கூட்டுகிறேன். கட்டில் விரிப்பை அலம்பி வெளியே காயவிடச்  சென்றால் நாம் கட்டியிருந்த கயிற்றைக் காணவில்லை. ஒரு நிமிடம் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துவிட்டு 11.00 இக்கு பெடிப்பிள்ளை வருவார் தானே கேட்போம் என்றுவிட்டு அலுவல்களைப் பார்க்கிறேன். எமது இரண்டாவது அறையையும் திறந்து யன்னல்கள் எல்லாம் திறந்துவிட்டு மேலோட்டமாகப் பார்க்க எல்லாம் வைத்தது வைத்தபடி இருக்கிறது.

மீண்டும் கதவைப் பூட்டிவிட்டு வெளியே சென்று கன்றுகளைப் பார்க்க இரண்டு தென்னங்கன்றுகளை மாடு கடித்து மொட்டையாக்கிவிட்டிருக்கு. இரண்டு வாழைகள் குலையுடன் முறிந்துகிடக்கின்றன. பின்பக்கம் முழுதும் புற்கள் காடாய் வளர்ந்துபோய் கிடக்கின்றன.

11.30 மணி போல் பெடியன் வருகிறார். அக்கா என்ன சாப்பிடுறியள்? நானே சமைக்கிறன் என்கிறார். நான் வரும்போதே இடியப்பம் உமக்கும் சேர்த்து வாங்கி வந்தனான் என்கிறேன். நான் மத்தியானம் சோறுதான் சாப்பிடுறனான் என்கிறார். சரி நீர் உமக்கு மட்டும் சமையும். எனக்கு வேண்டாம் என்கிறேன்.

”நாளைக்கு கட்டாயம் என்ர கையாலதான் நீங்கள் சாப்பிடவேணும்”

“எனக்கு நான் சமைத்து சாப்பிடுவதுதான் விருப்பம்”

“அக்கா நான் லீவு எடுத்துவிட்டு உங்களை எங்க வேணுமெண்டாலும் என்ர ஸ்கூட்டியில கூட்டிக்கொண்டு போறன்”

“அதுக்கு அவசியமே இல்லை. என்னட்டையும் ஸ்கூட்டி இருக்கு”

“அப்ப உங்கட ஸ்கூட்டியிலேயே போவம்”

நான் மனிசனைத் தவிர வேறை யாருக்கும் ஸ்கூட்டியைக் குடுக்கமாட்டன். அதோடை எனக்கு ஒரிடமும் போகத் தெரியாது எண்டு நீர் எனக்கு ஊர் சுத்திக்காட்டப் போறீரோ? என்னைப் பற்றி உமக்குத் தெரியேல்லை” 

“இல்லை அக்கா நீங்கள் வெளிநாட்டிலை இருந்து வந்திருக்கிறியள்.. அதுதான்”

“அதுசரி பிலாமரத்துக்கும் மாமரத்துக்கும் இடையில கட்டியிருந்த கொடியைக் காணேல்லை. நான் பெட்சீற்றை அலம்பிப்போட்டுப் பார்த்தால் ஒண்டும் இல்லை”

“எனக்கு அதைப்பற்றித் தெரியாது அக்கா. நான் அந்தக் கறாச்சுக்குள்ளதான் கொடி கட்டி காயப் போடுறன்”

நான் கறாச்சுக்குள் போய் பார்க்கிறேன். இரு பக்கத் தூண்களிலும் வயர் கட்டியபடி இருக்கு. இந்த வயரை எங்கிருந்து எடுத்தீர் என்று கேட்க உதில் கொழுவி இருந்தது என்கிறார். என்னை ஒருக்காக கேட்டிருக்கலாமே. உது கமராவுக்குப் போடுற வயர். உதின்ர விலை தெரியுமே உமக்கு. அருமந்ததை வீணாக்கிப்போட்டீர். அப்பவும் உள்ளே கொண்டுபோய் வையுங்கோ எண்டு இந்த மனிசனுக்குச் சொன்னனான் என்கிறேன் கடுப்புடன்.

அவர் எதுவும் பேசாமல் அப்பால் செல்ல நான் சீற்றைக் காயவிட்டுவிட்டு உள்ளே வருகிறேன். வரும்போது பார்த்தால் மாமரத்தில் ஊஞ்சலையும் காணவில்லை. ஊஞ்சல் எங்கே என்று கேட்கத் தனக்குத் தெரியாது என்கிறார். முன்பு இருந்த சனங்கள் அதையும் அறுத்துக்கொண்டு போய்விட்டார்கள் போல என்று சொல்ல, இருக்கும் அக்கா என்கிறார்.

சரி தம்பி நீர் உம்மடை சமையல் அலுவலைப் பாரும் நான் ரதி அக்காவிடம் போட்டு வாறன் என்று சொல்லிவிட்டுக் கிளம்ப, அவருக்கு ஒரு போன் வருகிறது. “அக்கா வந்து நிக்கிறபடியால் நான் இண்டைக்கு வரேலாது. இப்ப நான் சமைக்கப்போறன் என்று அவர் சொல்வது எனக்குக் கேட்கிறது.       

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 31/3/2025 at 21:27, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கமராவைப் பார்க்காமல் இரு என்று கணவர் சொல்ல பல்லைக் கடித்துக்கொண்டு இரு வாரங்கள் இருக்கிறேன்.

சரி இன்று ஒருக்காப் பார்ப்போம் என்று போனில் கமராவைப் பார்த்தால் வீட்டின் முற்றத்தில் ஆறேழுபேர் நிற்கின்றனர். ஒரு ஓட்டோ, ஒரு சயிக்கிள், இரு ஸ்கூட்டிகள் என்பன நிற்கின்றன. என்னடா இது என்று கணவருக்கு போன் செய்தால் தான் பிசி. இப்ப கமராவைப் பார்க்க முடியாது என்கிறார். வீட்டின் கதவுகள் எல்லாம் திறந்திருக்கு. ஒரு ஓட்டோவும் நிக்குது. இருவர் ஆறேழு பலாப் பழங்களைக் கொண்டுவந்து ஓட்டோவில் வைக்கிறார். இன்னொருவர் இரண்டு உரைப் பைகளில் உரித்த தேங்காய்களைக் கொண்டுவந்து ஏற்றுகிறார்.

இஞ்சை வெளிநாடுகளில இருந்து கொண்டு ஊரிலை வீடு கட்டி,வீடு வைச்சிருக்கிற ஆக்களுக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும். இதுக்குள்ள வீட்டுக்குள்ள நடக்கிறத சூம் பண்ணி பாக்கினமாம்.🤣

நானும் ஊரில வீடு வைச்சிருக்கிறன்.ஆனால் சிஷ்டம் வேற 😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

இஞ்சை வெளிநாடுகளில இருந்து கொண்டு ஊரிலை வீடு கட்டி,வீடு வைச்சிருக்கிற ஆக்களுக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும். இதுக்குள்ள வீட்டுக்குள்ள நடக்கிறத சூம் பண்ணி பாக்கினமாம்.🤣

நானும் ஊரில வீடு வைச்சிருக்கிறன்.ஆனால் சிஷ்டம் வேற 😎

என்ன சிஸ்டம் எண்டு சொன்னால் நாங்களும் பயனடையலாம் எல்லோ😀

  • கருத்துக்கள உறவுகள்
On 3/4/2025 at 21:28, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கட்டில் விரிப்பை அலம்பி வெளியே காயவிடச்  சென்றால் நாம் கட்டியிருந்த கயிற்றைக் காணவில்லை.

IMG-8250.jpg

  • கருத்துக்கள உறவுகள்
On 3/4/2025 at 23:13, குமாரசாமி said:

நானும் ஊரில வீடு வைச்சிருக்கிறன்.ஆனால் சிஷ்டம் வேற 😎

அண்ணை எத்தனை வீடுகள் வைத்திருக்கிறீர்கள் சின்னா?? அல்லது பெரிது ??.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kavi arunasalam said:

IMG-8250.jpg

நாங்கள் அடிக்கடி போய்வராமல் இருந்தால் ஆற்றையன் வீட்டையும் கூடத் தூக்கிக்கொண்டு போகும் வல்லமை அங்குள்ளவர்களுக்கு இருக்குத்தான்.

படத்தைப் பார்த்தவுடன் சிரிப்பு வந்திட்டுது அண்ணா. இத்தனை அசிங்கமாகவா இருக்கிறேன் நான் ??????

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kavi arunasalam said:

IMG-8250.jpg

இந்தப் படம் அருமை...இதிலை ஒரு காவியத்தலைவியின் சாயலும் அடிக்குது.....நான் நினைத்தது சரிதானே கவி அய்யா

கதைஞரர் ...அம்மா ..உண்மையை சுவைபட கிராமிய ரீதியில் சொல்கின்றீர்கள்.

Edited by alvayan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எட்டு

ரதி அக்கா வீட்டுக்குப் போகிறேன். அவரின் முகத்தைப் பார்த்தாலே கடுகு போட்டால் வெடிக்கும் போல இருக்கு. அவருக்கு என்ன  பிரச்சனையோ என எண்ணியபடி அவருக்காகக் கொண்டுபோன Nescafe போத்தலையும் சொக்ளற் பிஸ்கற் அடங்கிய பையையும் நீட்டுகிறேன். அதன் பின்தான் இருங்கோ என்கிறார்.

“ரஜிதன் என்னவாம்”

“அவர் எனக்கும் சேர்த்து தான் சமைக்கப் போறன் எண்டவர். நான் வேண்டாம் எண்டிட்டன்”

“அவன் மூண்டு நேரமும் சாப்பிடுறதில்லை. ஒருநேரச் சாப்பாடுதான்.

“ஏனக்கா ஆள் வேலை செய்யிது தானே”

“ஓ மாதம் 40 ஆயிரம்தான் குடுக்கிறாங்கள்”

“சம்பளம் பத்தாட்டில் வேற வேலையும் செய்யப்போறதுதானே? வெளிநாட்டில ஓராள் இரண்டு மூன்று வேலைகள் கூடச் செய்கிறார்கள்”

“ஆளை வீட்டில இருத்துற முடிவில இருக்கிறியளோ”

“இன்னும் நான் முடிவு செய்யேல்லை அக்கா. எதுக்கும் ஒரு கிழமை பாக்கிறன். கட்டியிருந்த கொடியைக் கூடக் காணேல்லை”

“முந்தி இருந்ததுகள் அறுத்துக்கொண்டு போட்டுதுகளே?

“ஆர் அறுத்தது எண்டு தெரியேல்லை”

“ஏன் நீங்கள் கமராவில பாக்க ஏலாதே”

இந்த நாள் நடந்தது எண்டால் சுத்திப் பார்க்கலாம். எப்ப அறுத்தவை எண்டு தெரியாமல் உந்த நயிலோன் கயிறுக்காக இருந்து இரண்டு மாதக் கமராவைப் பார்க்க ஏலுமே. மாமரத்தில கட்டியிருந்த ஊஞ்சால் கயிறும் இல்லை”                 

“கள்ளச் சனங்கள். நாங்கள் போய் பாற்கேக்குள்ளையும் கயிறு இருக்கேல்லை”

“அந்தப் பெடியும் விஷயம் தெரியாமல் கமறாவுக்குப் போடுற வயரை எடுத்துக் கொடி கட்டி வச்சிருக்கு”

“அவன் பாவம். அவனுக்குத் தெரியாதுதானே, நீங்கள் எல்லாத்தையும் வடிவாச் சொல்லிக் குடுத்தால் அப்பிடியே செய்வன். அவனுக்கொரு எலெற்றிக் கேற்றில் வாங்கிக் குடுங்கோ. அவன் இப்ப வச்சிருக்கிறது நான் குடுத்தது”

“நான் நாளை வரேக்குள்ள உரும்பிராயில் உள்ள கடையில் வாங்கிவந்து குடுக்கிறன்”

“சரி அக்கா நாளை வாறன்” என்றபடி என் வீட்டுக்குச் செல்கிறேன்.

சமையல் வாசனை வீதிவரை வருகிறது. அக்கா சாப்பிடுங்கோவன் என்கிறார். நான் முதலே எனக்குச் சாப்பாடு வேண்டாம் எண்டு சொன்னான்தானே. இடியப்பத்தை எறியிறதோ? என்றுவிட்டு நான் என் கன்றுகளுடன் ஐக்கியமாகிவிடுகிறேன்.

திரும்ப வரும்போது “அக்கா நல்ல புல்லு இருக்கக்கா விளவில. என்ர மாட்டைக் கொண்டுவந்து கட்டட்டே அக்கா”

“ஏற்கனவே 2 தென்னங்கன்றுகளைக் கடிச்சுவச்சிருக்கு. மாட்டை உள்ளுக்குள்ள கொண்டுவர ஏலாது”

“அப்ப புல்லுகளை உப்பிடியே வளர விடப் போறியளோ”

“இல்லை. ஆரும் இருந்தால் சொல்லும். மருந்தை வாங்கி அடிப்பம்”

“இப்ப மருந்தை அடிக்க ஏலாது அக்கா. மழை நல்லாப் பெய்தால்தான் மருந்து வேரில சுவறும்”

“சரி அப்ப உமக்கு ஆரையும் புல்லுப் பிடுங்குகிற ஆட்களைத் தெரிந்தால் கூட்டிவாரும். நானும் ரதி அக்காட்டை கேட்டுப் பாக்கிறன்”

“இல்லை அக்கா நானே இரண்டு பேரைக் கூட்டிவாறன்”

சரி என்று நான் கிணற்றைப் பார்க்கப் போனால் கிணற்றின் மேலே கட்டியிருந்த உழண்டியை மட்டுமல்லாமல் கயிற்றையும் வாளியையும் கூடக் கிணற்றடியில் காணவில்லை. நான் திரும்பி வீட்டின் வாசலைப் பார்க்க ரஜிதன் என்னைப் பார்த்தபடி நிற்பது தெரிய,

“எங்க உழண்டியும் கயிறும் வாளியும்? கழற்றி வைத்திருக்கோ? “எனக்குத் தெரியாது அக்கா. நான் வரேக்குள்ள ஒண்டும் இருக்கேல்லை. இருந்த சனங்கள் கொண்டு போட்டுதுகள் போல”

“இன்னும் என்னென்ன காணேல்லை எண்டு போகப் போகத்தான் தெரியும். எழிய சனங்கள். கொஞ்சம் கூட மனச்சாட்சி இல்லை”

அதன் பின்னர் அவரைப்பற்றி விசாரித்தபின் நான் என் ஓட்டோவை அழைக்கிறேன். ஓட்டோவில் சென்றுகொண்டிருக்கும்போது ஸ்கூட்டிக்கு பற்றி கொழுவ வேண்டும். யாரையாவது தெரியுமா என்று கேட்க, தானே பூட்டிவிடுவதாகக் கூறுகிறார். வீட்டுக்குச் சென்று பற்றியைக் கொழுவியபின் அவரே ஸ்டார்ட் செய்து பார்த்துவிட்டு நீங்கள் நாளை இதிலேயே போகலாம் என்கிறார். அவர் வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல நான் 1000 ரூபாய்களைக் கொடுக்கிறேன்.

அடுத்தநாள் மச்சாளிடம் மிளகாய்த் தூளையும் கடையில் பலசரக்குப் பொருட்களையும் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தபின் நான் சமைப்பதற்கு ஆயத்தங்களைச் செய்கிறேன். தேநீர் ஒன்று போட்டுக் குடிப்போம் என்று கேற்றிலை எடுத்துக் கழுவி நீரை ஊற்றும்போது பார்த்தால் எமது கேற்றில் போலவே இருக்கிறது. அட அக்காவும் எமது கேற்றில் போலவே வாங்கியிருக்கிறா என்று எண்ணியபடி தேனீரை ஊற்றிக்கொண்டு வெளியே வந்து அமர்கிறேன். கேற்றில் ஒன்றை வாங்கிக்கொண்டு வந்திருக்கலாம். நாளைக்குக் கட்டாயம் வாங்கிக்கொண்டுவந்து அக்காட கேற்றிலைக் குடுத்திடவேணும் என எண்ணிக்கொள்கிறேன். நான் கடந்த தடவை வாங்கியது உள்ள கிடக்குத்தான். அது விலைகூடியது. அது நாம் வந்து இருக்கும்போது மட்டும் பாவிக்கலாம். இவர் பெடிபிள்ளைக்கு வேறு ஒன்றை வாங்கிக் குடுப்பம் எனவும் எண்ணிக்கொள்கிறேன்.   

புலுனிக் கூட்டம் ஒன்று சத்தமிட்டபடி பறந்துவந்து கீழே எதையோ பொறுக்குகின்றன. தேங்காய்ப் பாலுக்காக தேங்காயை எடுத்துக்கொண்டு வந்தால் எப்படி உரிப்பது என யோசனை ஓடுகிறது. மனிசனை நித்திரையால் எழுப்பிக் கேட்க, அந்தப் பெடியன் வரும்வரை பொறு என்கிறார்.

ரஜிதன் வந்ததும் நான் சமைக்கப்போறன். தேங்காய் உரிக்கத்தான் உங்களைப் பார்த்துக்கொண்டு நிக்கிறன் என்றவுடன் உரித்துத் தந்துவிட்டு நான் சமைக்கட்டோ அக்கா என்கிறார். நானே சமைக்கிறேன் என்றுவிட்டு எமது அடுத்த அறையைத் திறந்து கடுகு சீரகம் போன்றன போட்டு வைக்கும் வட்டமான சில்வர் பாத்திரத்தை எடுத்துவந்து கழுவிவிட்டு துடைத்து எல்லாவற்றையும் போட்டு முடிய அவரின் திருவுபலகையை எடுத்து வைத்து தேங்காய் துருவி முடிக்கிறேன்.

எமக்காக வைத்திருந்த இரண்டாவது அறையுள் அனைத்துப் பொருட்களையும் வைத்துப் பூட்டிவிட்டுச் சென்றிருந்தோம். அந்த அறையைத் திறந்து வைத்திருந்த காஸ்சிலிண்டர், அடுப்பு என்பனவற்றைக் கொண்டுவந்து சமையலறையில் வைத்துப் பொருத்தி விடுங்கோ தம்பி என்றால் “அக்கா நான் மண்ணெண்ணை அடுப்புத்தான் பாவிக்கிறனான். இதுபற்றித் தெரியாது என்று சொல்கிறார்.

அன்ரிக்கு போன் செய்து எப்படிப் பூட்டுவது என்று கேட்டுப் பூட்டி முடிய, கடந்தமுறை நானும் கணவரும் சென்றிருந்தபோது வாங்கிவந்த கிறைண்டறை எடுத்து தேங்காய்ப் பூவைப் போட்டு அடிப்போம் என்று அறைக்குள் சென்று தேடுகிறேன். அதைக் காணவில்லை. ரஜிதனும் வந்து அறைக்குள் எட்டிப் பார்த்துவிட்டு இவ்வளவு சாமான்கள் வைச்சிருக்கிறியளோ என்கிறார். எல்லாம் வச்சிருக்கத்தானே வேணும். பக்கத்து வீட்டுக்கு கடன் வாங்கப் போறதோ என்றபடி தேட என்ன அக்கா தேடுகிறீர்கள் என்று கேட்க கிறைண்டர் வாங்கி வச்சனான் காணேல்லை என்கிறேன்.

என்னுடன் சேர்ந்து அவரும் தேடிவிட்டு “ஒரு இடமும் காணேல்லையே அக்கா. வடிவா யோசிச்சுப் பாருங்கோ. நீங்கள் வாங்கினதுதானோ என்கிறார். நாம் இந்தியாவில் இருந்து இரண்டை வாங்கிவந்து ஒன்றை அங்கு வைத்துவிட்டு மற்றதை லண்டனுக்குக் கொண்டுவந்ததாக நினைவுவர அதை அவருக்குச் சொல்கிறேன். சிலவேளை ஒண்டுதான் வாங்கினீர்களோ? அண்ணனிட்டை ஒருக்காகக் கேளுங்கோ என்கிறார். சரி இப்ப உதைத் தேடாமல் கையால பிழிவம் என்றபடி சமையலை ஆரம்பிக்கிறேன்.

சமைத்து முடிய அவரையும் உண்ணவைத்து உண்டுமுடிய நாளை புற்களைப் பிடுங்க இருவர் வருகிறார்கள் என்று சொல்லிவிட்டு அவைக்கு நாளை சமைத்து கொடுப்போம் அக்கா என்கிறார். என் னால் முடியாது என்று கூற தானே சமைக்கிறன் அக்கா என்கிறார். கடையில வாங்கிக் குடுப்பம் என்றதற்கு சாப்பாடு குடுக்காட்டில் அவை வரமாட்டினம் அக்கா என்கிறார். அப்ப அவையை வரவேண்டாம் எண்டு சொல்லுங்கோ. கடைசச் சாப்பாடு சாப்பிட உடன்படுறவையைக் கூப்பிடுவம் என்றவுடன், நான் இன்னொருக்காக கதைக்கிறான் என்றுவிட்டு அவர் வெளியே செல்ல, நான் எல்லாக் கதவுகளையும் பூட்டிவிட்டு என் அறையைத் திறந்துகொண்டு வந்து கட்டிலில் அமர்ந்தபடி கணவருக்கு போன்  செய்கிறேன்.

நாங்கள் இரண்டு கிறைண்டர்கள் தான் வாங்கி ஒன்றை உங்கே வைத்துவிட்டு மற்றதை இங்கு கொண்டுவந்தோம் என்கிறார் கணவர். மீண்டும் அறையைத் திறந்து மேசைக்குக் கீழே எல்லாம் பார்த்தால் கிரைண்டர் இல்லை. கணவருக்கு போன் செய்ய கணவர் ஒவ்வொன்றாகச் சொல்கிறார்.

“சாச்சபிள் டோச் லைட் இரண்டும் கிடக்கோ பார்” என்று கூறத் தேடிப் பார்த்தால் காணவில்லை. “ஐக்கியாவில் வாங்கிய கத்தி செட் இருக்கோ பார்” அதையும் காணேல்லை. “டாய்லெட் கதவைத் திற” அதுக்குள்ள மூன்று மண்வெட்டிகள், ஒரு புத்துவெட்டி, ஒரு அலவாங்கு, சுவருக்கு துளையிடும் கருவி எல்லாம் இருக்கோ பார். அவையெல்லாம் இருக்கு. நாங்கள் வடிவா டாய்லெட் திறப்பையும் பூட்டி எங்கள் அறையுள் வைத்ததனால் அதெல்லாம் அப்படியே இருக்கு என்கிறேன்.

“உந்த அறை திறந்து கிடந்ததா?

“இல்லையே”

அப்ப எப்பிடிக் காணாமல் போயிருக்கும் பொருட்கள் என்று கேட்க எனக்கு எப்பிடித் தெரியும் என்றுவிட்டு முன்பு இருந்தவர்களைக் கூட்டி வந்த எம்மூரவரிடம் விடயத்தைச் சொல்லி போலீசுக்குப் போகப்போகிறேன் என்கிறேன். நான் ஒருக்கா அவர்களிடம் கேட்டுப் பார்க்கிறேன். ஆனால் அவை கதவை எப்பிடி அக்கா திறந்து எடுக்க முடியும் என்கிறார்.

அந்த நேரம் பார்த்து ரதி அக்கா போன் செய்கிறார். நான் கவலையுடன் எமது பொருட்கள் களவு போனது பற்றிக் கூறுகிறேன். ஆர் உவையைக் கொண்டுவந்து இருத்தினாரோ அவரைத்தான் கேளுங்கோ. உவையை நம்பி இருக்க விட்டதுக்கு உங்களுக்கு இந்த வேலை செய்யிறதே என்கிறா. சரி அக்கா நான் பிறகு வாறன் என்றுவிட்டு ரஜிதன் வேலைக்குச் சென்றபின்னர் மீண்டும் எமது அறைகள் இரண்டிலும் தேடுகிறேன். எங்கள் படுக்கை அறையுள் ஒரு சிறிய பொருட்கள் வைக்கும் அலுமாரியும் உண்டு. அதைத் திறந்து பார்க்க அங்கு கிறைண்டரின் மூன்று அரைக்கும் கப்புகளில் ஒன்றுமட்டும் கிடக்கிறது.    

  • கருத்துக்கள உறவுகள்

வீடு இருந்தாலும் கஸ்ரம், இல்லையென்றாலும் கஸ்ரம். ஊரில்  வீட்டை வாங்கி விட்டு வெளிநாட்டில் இருப்பவர்கள் நிம்மதியாக இருக்க முடியாது. கேட்டால், தேவையில்லாத பகை. இருந்த நிம்மதியும் வாங்கிய வீட்டால் போய்விட்டது. ம் ....... தொடருங்கள் பாப்போம்.

On 4/4/2025 at 08:13, குமாரசாமி said:

நானும் ஊரில வீடு வைச்சிருக்கிறன்.ஆனால் சிஷ்டம் வேற

உந்த விஷயம் வீட்டு அம்மாவுக்குத் தெரியுமோ? நானும் வீட்டைப்பாக்கப்போறேன் என்று வெளிக்கிட்டா என்றா சாமியாரின் கதை கந்தல். 

 

  • கருத்துக்கள உறவுகள்

நிம்மதிக்காக வீடு வாங்க

இருந்த நிம்மதியும் போயிடும் போல.

வாசிக்கவே பிபி எகிறுது.

On 3/4/2025 at 17:13, குமாரசாமி said:

நானும் ஊரில வீடு வைச்சிருக்கிறன்.ஆனால் சிஷ்டம் வேற

நிலக்கீழ் வீடு

மேலே தோட்டம்.

அத்தானை சீ பொத்தானை அழுத்தினால்

எல்லாமே திறபடும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, satan said:

வீடு இருந்தாலும் கஸ்ரம், இல்லையென்றாலும் கஸ்ரம். ஊரில்  வீட்டை வாங்கி விட்டு வெளிநாட்டில் இருப்பவர்கள் நிம்மதியாக இருக்க முடியாது. கேட்டால், தேவையில்லாத பகை. இருந்த நிம்மதியும் வாங்கிய வீட்டால் போய்விட்டது. ம் ....... தொடருங்கள் பாப்போம்.

 

வெளிநாட்டில் இருந்துகொண்டு சொந்த ஊரில் வீடு வாங்கினால் எந்தப் பயமும் இன்றி இருக்கலாம். நான் வேறு ஊரில் வாங்கியதுதான் பிரச்சனையே. இப்ப மூன்று ஆண்டுகளாக நிம்மதி இல்லா வாழ்வுதான். ஊரில் என்ன நடக்கிறதோ என்ற கவலை. இப்ப கமறா பார்ப்பதை நிறுத்தியதால் கொஞ்சம் நிம்மதி.

11 hours ago, ஈழப்பிரியன் said:

நிம்மதிக்காக வீடு வாங்க

இருந்த நிம்மதியும் போயிடும் போல.

வாசிக்கவே பிபி எகிறுது.

நிலக்கீழ் வீடு

மேலே தோட்டம்.

அத்தானை சீ பொத்தானை அழுத்தினால்

எல்லாமே திறபடும்.

உதுவும் நல்ல யோசனைதான். கன்றுகாலி நாட்டதுதான் இன்னும் பிரச்சனை. அது ஒன்றும்இல்லை என்றால் வீட்டைப் பூட்டிவிட்டு வந்துபோகலாம். எமது ஊரில் வீடு இருந்தாத்தான் அதுவும். இல்லை என்றால் உடைத்தும்விடுவார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.