Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் - அர்ச்சுனா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

சட்டத்தில் இருப்பதை விட மேலதிகமாக தேர்தல் ஆணையாளர் தனது இஸ்டத்துக்கு ஆணை பிறப்பித்துள்ளதாக மணிவண்ணன் குற்றம் சாட்டுகிறார்.

அதாவது ஒரு வேட்பாளர் தவறு செய்திருந்தால் அந்த வேட்பாளரை மட்டுமே நிராகரிக்க முடியும்.

ஒட்டுமொத்த குழுவையோ கட்சியையோ நிராகரிக்கக் கூடாது என்று சட்டத்தில் உள்ளதாக சொல்கிறார்.

கடந்த தேர்தல்களிலும் பலர் நிராகரிக்கப்பட்டார்கள்.

ஆனாலும் அவர்களை மாத்திரமே நிராகரித்தார்கள்.

இப்போது நல்லூரில் கையெழுத்தில்லாமல் தாக்கல் செய்த தமிழரசின் வேட்புமனு எப்படி ஏற்றுக் கொண்டார்கள்?

தமிழரசுக்கு ஒரு சட்டம் மற்றவர்களுக்கு ஒரு சட்டமா?

485946036_1175971360640046_4724629566778

தேசிய மக்கள் சக்தி சார்பாக, யாழ். மேயர் பதவிக்கு போட்டியிடும், யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் சுந்தரமூர்த்தி கபிலன் தனது வீட்டு விலாசத்தை.... தேசிய மக்கள் சக்தியின் கட்சி அலுவலகத்தின் முகவரியை கொடுத்து விண்ணப்பித்ததை ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளதாம்.

விதியின் படி... போட்டியிடுபவர் யாழ். மாநகரசபை எல்லைக்குள் வசிக்க வேண்டுமாம். இவர் அந்த விதிக்குள் அடங்காத படியால்... கட்சி அலுவலகத்தை, தனது வசிப்பிடமாக குறிப்பிட்டுள்ளாராம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kandiah57 said:

ஏன்?? என்ன காரணம்?? வேட்பாளர்கள் மனுக்களை தாயாரித்தது ...பரீசிலித்தது அவாவா.??? வேட்பாளர்கள் மனுக்கள். நிராகரித்ததுக்கு இவாவின். பிழை தான் காரணமா ??

இவை பற்றி எனக்கு தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kandiah57 said:

ஏன்?? என்ன காரணம்?? வேட்பாளர்கள் மனுக்களை தாயாரித்தது ...பரீசிலித்தது அவாவா.??? வேட்பாளர்கள் மனுக்கள். நிராகரித்ததுக்கு இவாவின். பிழை தான் காரணமா ??

வேட்புமனு தாக்கல் செய்த போது கெளசல்யா கையெழுத்திடவில்லையாம்.

இவர்களுக்கு உதவி செய்வதற்காக தனிஒரு மேசைபோட்டு ஒருவரை உட்கார வைத்துள்ளார்கள்.

கெளரவம் கருதி யாருமே இந்த மேசைப்பக்கம் போகவே இல்லையாம்.

ஒருஒருத்தர் டக்லஸ் மாத்திரம் இவரின் அறிவுரையைக் கேட்டு திருத்திய பின்பு வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.

நானொரு வக்கீல் சாதாரண கிளாக்கிடம் போய் சரிபிழை பார்ப்பது அவமானம் இல்லையா?

அத்துடன் முக்கியமாக யார்யார் வேட்பாளர்கள் என்பது பரமரகசியம்.

சரிபிழை பார்க்கப் போய் வேட்பாளர்கள் பற்றிய விபரங்கள் வெளிவந்துடுமே?

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, நியாயம் said:

யாழ் இந்து பழைய மாணவர்கள் குறிப்பிடப்பட்டு; இவர்கள் சிலர் தன்னை அரசியலில் ஓரங்கட்டுவதாக கங்கணம் கட்டியுள்ளதாகவும், கெளசல்யா ரரேந்திரனை மிக கேவலமான அளவில் திட்டமிட்ட வகையில் சமூக வலைத்தளத்தில் விமர்சித்ததாகவும் இந்த அழுத்தங்களின் வெளிப்பாடே கெளசல்யா ஒதுங்குவதற்கான காரணமாக அமையலாம் எனும்படியான அர்ச்சனா அவர்களின் ஒரு காணொளி பார்த்தேன்.

அர்ச்சுனா பெண்கள் மீது மேற்கொண்ட அதே இழிவான செயல் அவரது கட்சியை சேர்ந்த பெண் மீதும் மேற்கொள்ளபட்டுள்து கண்டனத்துக் குரியது

  • கருத்துக்கள உறவுகள்


கடமை தவறியுள்ளது தேர்தல் திணைக்களம்!

தேர்தல் திணைக்களம் தனது கடமையில் இருந்து தவறியுள்ளது  என வல்வெட்டித்துறை சுயேட்சைக்குழுவின் முதன்மை வேட்பாளர் முன்னாள் வல்வெட்டித்துறை நகரபிதாவுமான சபாரத்தினம் செல்வேந்திரா  குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் திணைக்களம் தனது கடமையில் இருந்து தவறியுள்ளது என வல்வெட்டித்துறை சுயேட்சைக்குழுவின் முதன்மை வேட்பாளர் முன்னாள் வல்வெட்டித்துறை நகரபிதாவுமான சபாரத்தினம் செல்வேந்திரா குறிப்பிட்டுள்ளார்.

யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்றைய தினம் (22) சனிக்கிழமை நடத்திய ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார் .

உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலத்திய போது வேட்புமனு தாக்கலின் போது சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் தொடர்பான அறிவுறுத்தலுக்கு அமைவாக அவற்றை தயார் செய்து சமர்ப்பித்திருந்தோம்.

வேட்புமனு தாக்கல் 17 ஆம் திகதி இடம்பெற இருந்த நிலையில் இறுதி நேரத்தில் 16 ஆம் திகதி வேட்பாளர்களது பிறப்பு சான்றிதழ்களின் மூலப்பிரதி கட்டாயம் இணைக்கப்பட வேண்டும் என திடீரென மாற்றம் செய்திருந்தனர்.

குறித்த மாற்றம் தொடர்பில் போதிய அறிவுறுத்தல் எதனையும் வழங்காதது அவர்களது தவறாகும்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சென்ற சமயத்தில் மாவட்ட செயலக வளாகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும் தரப்பினருக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் எமது ஆவணங்களையும் சரிபார்த்திருந்தார்கள். இதன்போது பிறப்பு சான்றிதழ் பிரதியில் சமாதான நீதவான் மூலம் உறுதிப்படுத்தி வழங்குமாறு அறிவுறுத்தியிருந்தார்கள்.

உடனடியாக அதனை செய்தே நாம் வேட்புமனு தாக்கல் செய்திருந்தோம்.

மேற்குறித்த மாற்றம் குறித்து உதவி வழங்குவதற்காக இருந்த உத்தியோகத்தர்கள் கூட எதனையும் எமக்கு தெரிவிக்கவில்லை. இந்த விடயத்தில் தேர்தல் திணைக்களம் தனது கடமையில் இருந்து தவறியுள்ளது என்றார்.

https://torontotamilnews.com/breifNews.php?newsID=331005&category=TamilNews&language=tamil

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.