Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

6 Mar, 2025 | 03:16 PM

image

பிரிட்டன் முன்வைத்துள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இலங்கையின் தேசிய பாதுகாப்பை பாதுகாப்பதற்காக வெளிநாட்டு அரசாங்கங்களால் அமைப்புகளால் துன்புறுத்தப்படு;ம் முன்னாள் ஆயுதப்படையினரை தற்போதை அரசாங்கம் உறுதியாக பாதுகாக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

விடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தின் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன என்ற நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் முன்னாள் முப்படைகளின் பிரதானி சவேந்திர சில்வா  முன்னாள் இராணுவதளபதி ஜகத் ஜெயசூரிய முன்னாள் கடற்படை தளபதி வசந்தகரணாகொட ஆகியோருக்கு எதிராக போக்குவரத்து தடைகள் சொத்துமுடக்கம் உட்பட தடைகளை அறிவித்துள்ளது.

2002 யுத்த நிறுத்த உடன்படிக்கை காணப்பட்டபோதிலும்,2002 பெப்ரவரி முதல்  செப்டம்பர் 2005 வரையான காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் 363 கொலைகளில் ஈடுபட்டனர்.

2005 நவம்பரில் நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட முதல் வாரங்களில் விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் தீவிரமடைந்தன.

இவற்றில் மிகவும் பாரதூரமான சம்பவங்களாக டிசம்பர் நான்காம், ஆறாம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதல்களை குறிப்பிடலாம்,2006ம் ஆண்டுஜனவரி 5ம் திகதிகடற்படை கலத்தின் மீது இடம்பெற்ற தாக்குதலையும்,2006ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் இராணுவதலைமையகத்திற்குள் இராணுவதளபதியை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையும் குறிப்பிடலாம்.

இவற்றிற்கு அப்பாலும் எனது அரசாங்கம் 2006 ஜனவரியிலும் ,ஜூன் மாதத்திலும் ஜெனீவாவிலும் ஒஸ்லோவிலும், விடுதலைப்புலிகளுடன் இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது,எனினும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு அந்த பேச்சுவார்த்தைகளில் இருந்து ஒருதலைப்பட்சமாக வெளியேறியது.

ஜூன் 2006ம் ஆண்டு விடுதலைப்புலிகள் கெப்பிட்டிகொல்லாவையில் பயணிகள் பேருந்தின் மீது மேற்கொண்ட தாக்குதலே எனக்கும் எனது அரசாங்கத்திற்கும் மிகவும் முக்கியமான தருணம், இந்த தாக்குதலில் 64 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 86 பேர் காயமடைந்தனர்.இவர்களில் பலர் சிறுவர்கள்.

ஜூலை 2006 இல் மாவிலாறு அணைக்கட்டை விடுதலைப்புலிகள் மூடி திருகோணமலை மாவட்டவிவசாயிகளிற்கான  நீர் விநியோகத்தை தடுத்ததை தொடர்ந்து யுத்தம் மீண்டும் ஆரம்பமானது.2009 மே மாதம் விடுதலைப்புலிகள் முற்றாக தோற்கடிக்கப்படும்வரை யுத்தத்தை நிறுத்தவில்லை.

இராணுவநடவடிக்கைகளின் போது பரந்துபட்ட அளவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக பிரிட்டன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை நான் நிராகரிக்கின்றேன்.

வெளிநாட்டு அரசாங்கங்களால் துன்புறுத்தப்படும் முன்னாள் ஆயுதப்படையினரை தற்போதை அரசாங்கம் உறுதியாக பாதுகாக்க வேண்டும் : மனித உரிமை குற்றச்சாட்டுகளையும் நிராகரித்தார் மகிந்த | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பிழம்பு said:

விடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தின் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன என்ற நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் முன்னாள் முப்படைகளின் பிரதானி சவேந்திர சில்வா  முன்னாள் இராணுவதளபதி ஜகத் ஜெயசூரிய முன்னாள் கடற்படை தளபதி வசந்தகரணாகொட ஆகியோருக்கு எதிராக போக்குவரத்து தடைகள் சொத்துமுடக்கம் உட்பட தடைகளை அறிவித்துள்ளது.

என்னடாப்பா இப்படி போட்டிருக்கு இலங்கை அரசாங்கம் தடை வித்தித்துள்ளது என்று >>>>பிரித்தானிய அரசாங்கம் தானே தடை வித்துள்ளது

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிழம்பு said:

விடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தின் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன என்ற நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்

இவற்றின் சூத்திரதாரிகளே நீங்கள்தான். மனித உரிமை மீறல்கள் நிரூபிக்கப்படவில்லையென்று அப்பாவி மக்களை ஏமாற்றுகிறீர்கள், சர்வதேசத்துக்கு வாக்குறுதிகளை கொடுத்திருக்கிறீர்கள், கால அவகாசம் கேட்டு இழுத்தடிக்கிறீர்கள், போரின்போது நடந்த சம்பவங்களை மக்கள் பார்க்காதபடி தடை விதிக்கிறீர்கள், சம்பந்தப்பட்ட நாடுகள் விசாரணையை ஆரம்பிக்க நாட்டை விட்டு தப்பியோடுகிறீர்கள், மின்சாரக்கதிரையில் ஏற்றப்போகிறார்கள் என்று சுய வாக்குமூலம் அளித்திருக்கிறீர்கள்,   விசாரணை குழுக்களை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். இவ்வளவும் செய்துபோட்டு நிரூபிக்கப்படவில்லையென்று எப்படி சொல்கிறீர்கள்?  ஏன், உங்கள் பெயரும் தடைப்பட்டியலின் முடிவில் வெளிவருவதற்காக காத்திருக்கிறது. நீங்கள் உங்களை, உங்கள் வார்த்தைகளை நிரூபிக்க மிக சிறிய வேலைதான் உண்டு. சர்வதேச விசாரணைக்கு ஒப்புக்கொண்டு ஒத்தாசை வழங்குங்கள், இல்லையெனில் குற்றவாளி என்பதை ஏற்றுக்கொண்டு தண்டனையை அனுபவியுங்கள். இல்லையெனில் மக்களே உங்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் கையளிப்பார்கள்.  

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.