Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

samayam-tamil-109712044.webp?resize=379%

அமைச்சர்களின் சம்பளத்தை 24 வீதம் உயர்த்தும் சட்டமூலம் நிறைவேற்றம்.

முதலமைச்சர், அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை சுமார் 24% வரை உயர்த்தும் 3 மசோதாக்கள் இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அமைச்சர்கள், சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்கள் 9 ஆண்டுகளுக்குப் பிறகு திருத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

காங்கிரஸ் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரும் இந்த மசோக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் அரசுக்கு சுமார் 24 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் எம்.எல்.ஏ.க்களின் மாத சம்பளம் ரூ.55,000-த்தில் இருந்து ரூ.70,000 ஆகவும், தொகுதிப் படி ரூ.90,000-த்தில் இருந்து ரூ.1.20 லட்சமாகவும், அலுவலகப் படி ரூ.30,000-த்தில் இருந்து ரூ.90,000 ஆகவும் தினப்படி ரூ.1,800-த்தில் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படும்.

முதலமைச்சரின் மாத சம்பளம் ரூ.95,000-த்தில் இருந்து ரூ.1.15 லட்சமாகவும், கேபினட் அமைச்சர்களின் சம்பளம் ரூ.80,000-த்தில் இருந்து ரூ.95,000 ஆகவும், அமைச்சர்களின் சம்பளம் ரூ.78,000-த்தில் இருந்து ரூ.92,000 ஆகவும் உயர்த்தப்படும்.

சபாநாயகரின் சம்பளம் ரூ.80,000த்தில் இருந்து ரூ.95,000 ஆகவும் துணை சபாநாயகரின் சம்பளம் ரூ.75,000-த்தில் இருந்து ரூ.92,000 ஆகவும் உயர்த்தப்படும்.

முதல் முறையாக எம்.எல்.ஏ.க்களாகப் பொறுப்பேற்பவர்களின் அடிப்படை ஓய்வூதியம் மாதத்திற்கு ரூ.36,000 லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது செலவு பணவீக்கக் குறியீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் திருத்தப்படும். அதே சமயம் எம்.எல்.ஏ.க்களுக்கான தண்ணீர் மற்றும் மின்சார மானியம் திரும்பப் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1426788

  • கருத்துக்கள உறவுகள்
On 30/3/2025 at 01:12, தமிழ் சிறி said:

அமைச்சர்களின் சம்பளத்தை 24 வீதம் உயர்த்தும் சட்டமூலம் நிறைவேற்றம்.

காங்கிரஸ் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரும் இந்த மசோக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

25 % என்றால் கண்ணில் குத்தும் என்று ஒரு வீதத்தை குறைத்து எல்லா ஊழலவாதிகளும் கடசி இனம் மத பேதம் இன்றி தங்கள் மடியை கனமாக்க வாக்குகள் போட்டு நிறைவேற்றி இருக்கிறார்கள்.

இதுவே ஒரு மக்கள் பிரச்சனையாக இருந்து இருந்தால் எததனை வாக்குவாதம் எத்தனைஇழுபறிகள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

25 % என்றால் கண்ணில் குத்தும் என்று ஒரு வீதத்தை குறைத்து எல்லா ஊழலவாதிகளும் கடசி இனம் மத பேதம் இன்றி தங்கள் மடியை கனமாக்க வாக்குகள் போட்டு நிறைவேற்றி இருக்கிறார்கள்.

இதுவே ஒரு மக்கள் பிரச்சனையாக இருந்து இருந்தால் எததனை வாக்குவாதம் எத்தனைஇழுபறிகள்?

அரசியல்வாதிகள் எல்லா இடமும், ஒரே மாதிரித்தான்.

ஊரை அடித்து... உலையில் போடுவது என்றால் ஒற்றுமையாகி விடுவார்கள்.

இதற்குள்... மக்களுக்கு சேவை செய்ய வந்தது என்று, வாய்கிழிய கதைப்பார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.