Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2021 , 2022 ஆம் ஆண்டு காலப்பகுதிகளின் நிலைமை இனியொருபோதும் ஏற்படாது – ஜனாதிபதி

April 1, 2025

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான உரிய திட்டங்களை செயற்படுத்தியுள்ளோம். 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு காலப்பகுதிகளின் நிலைமை இனியொருபோதும் ஏற்படாது. இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும். அதற்கான முன்மொழிவுகள் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் பெற்றுக்கொள்ளப்படும். மாவட்ட மட்டத்திலான தேவைகள் கோரப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை ஏப்ரல் 8 ஆம் திகதி நடத்தவே எதிர்பார்த்திருந்தோம். எதிர்கட்சிகளின் கோரிக்கைக்கு அமைவாகவே மே 06 ஆம் திகதிக்கு தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்தது. ஊழல்வாதிகளை நீதிமன்றமே தண்டிக்கும். இன்னும் ஓரிரு மாதங்களில் பல சிறந்த செய்திகளை மக்கள் அறிந்துக்கொள்வார்கள் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மொனராகலை புத்தல பகுதியில் திங்கட்கிழமை  நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த கால அரசாங்கங்களின் ஊழல் மோசடிகள் தொடர்பான அறிக்கைகள் தொடர்ச்சியாக கிடைக்கப்பெறுகின்றன. அண்மையில் ஒரு அறிக்கை கிடைத்துள்ளது.அதனை இன்னும் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கவில்லை. மே 09 சம்பவத்தின் போது தனமன்வில பகுதியில் வீடொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளரோ, காணியின் உரிமையாளரோ இழப்பீடு  பெற்றுக்கொள்ளவில்லை. இழப்பீட்டினை ராஜபக்ஷர்களில் ஒருவர் பெற்றுக்கொள்வார்.இந்த விடயம் வெகுவிரைவில் வெளிவரும்.

அரசியல் பலம், ஊடக பலம் ஆகியன எமக்கு எதிரான இருந்த போது மக்கள் பலத்துடன் ஆட்சியமைத்துள்ளோம்.ஆகவே எமது ஆட்சியை வீழ்த்த முடியாது. வீழ்த்தவும் யாருமில்லை.நாட்டை கட்டியெழுப்பியதன் பின்னரே எமது பயணத்தை பின்னோக்கிப் பார்ப்போம். நிறைவடைந்துள்ள ஆறுமாத காலப்பகுதியில் எந்த அரசாங்கங்களும் செய்யாத பல விடயங்களை நாட்டுக்காக நாங்கள் செயற்படுத்தியுள்ளோம்.

பொருளாதார நெருக்கடியினால் இடைநிறுத்தப்பட்டிருந்த வெளிநாட்டு முதலீடுகளுடனான அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்ட அபிவிருத்திகளுக்கான ஒதுக்கப்பட்டுள்ள நிதியை முறையாக பயன்படுத்த வேண்டும்.இல்லையேல் அந்த நிதியை திறைச்சேரிக்கு  அனுப்ப வேண்டும். அத்துடன் நிதி பயன்படுத்தாமைக்கான காரணத்தையும் குறிப்பிட வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்வோம். தற்போது வழங்கப்படும் 10 இலட்சம் ரூபா காப்புறுதி கொடுப்பனவை 250000 ரூபாவாக வரையறுப்போம்.வாகன அனுமதிப்பத்திரம் ஏதும் வழங்க போவதில்லை.அமைச்சரவை அமைச்சர்களின் கொடுப்பனவு மற்றும் சலுகைகளை வரையறுத்து அரச செலவுகளை குறைப்போம்.

பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படும் ஓய்வூதிய கொடுப்பனவு எனக்கு வேண்டாம் என்று பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு  எழுத்துமூலமாக அறிவித்துள்ளேன். நாட்டை கட்டியெழுப்பும் பணிகளை எம்மில் இருந்து ஆரம்பித்துள்ளோம். ஆகவே அரச சேவையாளர்கள்  மக்களுக்காக வினைத்திறனுடன் செயற்பட வேண்டும்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். எதிர்வரும் ஜீன் மாதம் 4 இலட்சம் குடும்பங்களுக்கு முதல் பட்டியலுக்கு அமைய அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படும். விவசாய துறையை மேம்படுத்துவதற்காக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பொருளாதார பாதிப்பு என்று குறிப்பிட்டுக் கொண்டு எந்நாளும் இருக்க முடியாது. 2028  ஆம் ஆண்டு வெளிநாட்டு கடன்களை மீள செலுத்த வேண்டும்.

வெளிநாட்டு கையிருப்பியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். சுற்றுலாத்துறை, ஏற்றுமதி மற்றும் அந்நிய செலாவணி ஆகிய துறைகள் ஊடாக வெளிநாட்டு கையிருப்பு அதிகளவில் ஈட்டிக்கொள்ளப்படும்.

தேசிய உற்பத்திகளை சிறந்த முறையில் மேம்படுத்திக் கொண்டால் இறக்குமதி செலவுகளை கட்டுப்படுத்திக் கொள்ளலாம். தேசிய உற்பத்தி மேம்பாட்டுக்காக வரவு செலவுத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் 25 ஆயிரம் ஹேக்கர் நிலப்பரப்பில் தெங்கு பயிர்ச்செய்கைக்கு 5000 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சீனி இறக்குமதிக்கு அதிகளவில் டொலர் செலவிடப்படுகிறது.செவலனல, பெலவத்த மற்றும் ஹிங்குரான ஆகிய சீனி கைத்தொழிற்சாலைகள் துரிதமாக அபிவிருத்தி செய்யப்படும்.

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான உரிய திட்டங்களை செயற்படுத்தியுள்ளோம். 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு காலப்பகுதிகளின் நிலைமை இனியொருபோதும் ஏற்படாது. இந்த நாட்டை நாங்கள் சிறந்த முறையில் கட்டியெழுப்புவோம். தேசிய பொருளாதாரத்தை  கட்டியெழுப்ப வேண்டுமாயின் கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். ஆகவே அதற்கு உள்ளுராட்சிமன்ற அதிகாரத்தை எமக்கு தாருங்கள். இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும்.அதற்கான முன்மொழிவுகள் எதிர்வரும் ஜீன் மாதம் முதல் பெற்றுக்கொள்ளப்படும்.மாவட்ட மட்டத்திலான தேவைகள் கோரப்படும்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை ஏப்ரல் 8 ஆம் திகதி நடத்தவே எதிர்பார்த்திருந்தோம்.வரவு செலவுத் திட்டம் நிறைவடையும் வரை தேர்தல் திகதியை பிற்போடுமாறு எதிர்க்கட்சிகள்  தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தின.  இதனால் தான் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் மே மாதம் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது. காலத்தை இழுத்தடித்துக் கொண்டிருக்க முடியாது என்பதற்காகவே ஜுலை மாதம் 2 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளுராட்சிமன்ற அதிகார  சபைகளை ஸ்தாபிக்க வேண்டும் என்று வர்த்தமானியில் அறிவித்துள்ளோம்.

ஊழல் மோசடியாளர்களை தண்டிக்கும் அதிகாரம் அரசாங்கத்துக்கு கிடையாது. முறையான விசாரணைகளுக்குரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்போம். நீதிமன்றம் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.கடந்த காலங்களில் சர்ச்சைக்குரிய ஊழல் மோசடிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அனைவருக்கும் சட்டம் பொதுவானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளேன். இன்னும் ஓரிரு மாதங்களில் மக்களுக்கு தேவையான சிறந்த செய்திகள் கிடைக்கும் என்றார்.

https://www.ilakku.org/the-situation-of-2021-and-2022-will-never-happen-again-president/

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்பொரு நாளும் அநுர ஒரு செய்தியுடன் வருகிறார். எந்தளவு தூரம் இவர் சொல்வது உண்மை என சில காலத்தில் தெரிந்து விடும்.

உள்ளூராட்சி தேர்தலுக்காக இப்படி அறிக்கைகளை விடுகிறார் போல உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு காலப்பகுதிகளின் நிலைமை இனியொருபோதும் ஏற்படாது.

ஏற்படாது நீங்களும் உங்கன்ட கட்சியும் ஆட்சிக்கு வந்தாச்சல்லோ...இனி போராட்டம்,கலகம் நடத்த ஆட்கள் இல்லை...

அரிவாளும் சுத்தியலும் சீனாக்காரன் தருவான் புகுந்து விளையாடுங்கள் ...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.