Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தையிட்டி சட்டவிரோத விகாரை முன் போராட்டம் – கஜேந்திரகுமார் உள்ளிட்ட 27 பேருக்கு தடை!

adminJune 10, 2025

Thaiyiddy5.jpg?fit=1170%2C658&ssl=1

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட 27 நபர்கள் மற்றும் அமைப்புக்களுக்கு எதிராக பலாலி பொலிஸாரினால் கட்டளை பெறப்பட்டுள்ளது.

தையிட்டியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (10.06.25)  நடைபெறவுள்ள பொசன் பௌர்ணமி வழிபாட்டுக்காக ஆயிரக்கணக்கான சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

இந்நிலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரியும், விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் வழங்குமாறு வலியுறுத்தியும் நேற்றைய தினம் (09.06.25) திங்கட்கிழமை போராட்டம் ஆரம்பமான போராட்டம் இன்றைய தினம் மாலை வரையில் நடைபெறவுள்ளது.

போராட்டம் ஆரம்பமான சில நிமிடங்களில் காவற்துறையினரின் தண்ணீர் பாய்ச்சும் இயந்திரம் அப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன் கலகமடக்கும் காவற்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

Thaiyiddy1.jpg?resize=800%2C514&ssl=1Thaiyiddy2.jpg?resize=800%2C600&ssl=1Thaiyiddy3.jpg?resize=800%2C450&ssl=1Thaiyiddy4.jpg?resize=800%2C450&ssl=1

https://globaltamilnews.net/2025/216568/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் சட்டத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டுமாக இருந்தால் சட்ட விரோத கட்டிடம் அகற்றப்பட வேண்டும்!

adminJune 10, 2025

Selvarasa-Gajan-1.jpg?fit=1170%2C658&ssl

தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் இந்த சட்டவிரோத விகாரை தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் சட்டத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டுமாக இருந்தால் அந்த சட்ட விரோத கட்டிடம் அகற்றப்பட வேண்டும். என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.

தையிட்டி சட்டவிரோத விகாரையான திஸ்ஸ விகாரையை அகற்றகோரி இடம்பெற்ற போராட்டத்தில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களுக்கு அனுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கத்தில் நம்பிக்கை கிடையாது. எங்கள் உரிமைகளை போராடிய பெற வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். இதில் உணர்வு ரீதியான விடயம் என்ற பேச்சுக்கே இடமில்லை. சட்டவிரோதம் என்றால் சட்டவிரோதம் தான் சிங்கள மக்களுக்கு என்றால் ரத்தமும் தமிழர்களுக்கு தக்காளி சட்னி என்று இருக்க முடியாது.தையிட்டி போராட்டம் சிங்கள மக்களுக்கோ பௌத்த மக்களுக்கோ எதிரானது அல்ல. இது சட்டவிரோத கட்டிடத்திற்கு எதிரானது.

யாழ்ப்பாணம் நகரின் மையத்தில் ஆரியகுளம் நாகவிகாரை இருக்கிறது. அங்கு ஒவ்வொரு மாதமும் பல்லாயிரக்கணக்கான சிங்களவர்கள் வருகிறார்கள். லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். நயினாதீவு விகாரை இருக்கிறது. அங்கு பலரும் வந்து செல்கிறார்கள். அங்கே எந்த தமிழ் மக்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அங்கு நடக்கின்ற நிகழ்வுகளை தமிழ் மக்கள் சென்று பார்வையிடுகிறார்கள்.

தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் இந்த சட்டவிரோத விகாரை தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் சட்டத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டுமாக இருந்தால் அந்த சட்ட விரோத கட்டிடம் அகற்றப்பட வேண்டும்.

குரல் இல்லாத மக்களுக்கு அரசியல்வாதிகள் குரல் கொடுக்கின்றார்கள். ஆனால் ஜனாதிபதி போராட்டத்திற்கு பின்னால் அரசியல் இருப்பதாக கூறுகின்றார். அந்த மக்களுடைய போராட்டத்தின் உண்மைத்தன்மை உள்ளதா என்பதை பார்த்து அதற்கு தீர்வை வழங்க வேண்டுமே தவிர அங்கு அரசியல் இருப்பதாக கூறுவதாக இருக்ககூடாது.

இராணுவ புலனாய்வுப் பிரிவினர் இங்கு அச்சுறுத்தும் வகையில் செயற்படுகின்றனர். மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமையில் அதற்காகவே மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்கிறார்கள். எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம்.
இரண்டு வருடங்களாக சிங்கள மக்கள் தையிட்டிக்கு வருகிறார்கள். அவர்கள் யாருக்கும் நாங்கள் ஆபத்தை ஏற்படுத்தவில்லை.

ஜனாதிபதி பங்கேற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தையிட்டி விவகாரத்திற்கு ஜனாதிபதியினால் பதிலளிக்க முடியவில்லை. ஏனென்றால் அது சட்டவிரோதம் என்பது ஜனாதிபதிக்கு தெரியும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு காவற்துறையினர் எதிராக செயல்படுகிறார். மக்கள் போராடும் போது அப்பட்டமான குற்றச்சாட்டுகளை சுமத்தி வேறு வேறு வழக்குகளில் சிக்க வைத்து காணி உரிமை தொடர்பான போராட்டத்தை மௌனிக்க வைக்க முயற்சி செய்கிறார்கள். அதனை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க முடியாது – என்றார்

https://globaltamilnews.net/2025/216566/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தையிட்டி சட்டவிரோ விகாரைக்கு அழைத்துவரப்பட்ட சிங்கள மக்கள்; போராட்டகாரர்களுக்கு தடை விதிப்பு கலகமடக்கும் பொலிசார் குவிப்பு

thaiyedee-780x470.jpg

சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரியும், விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் வழங்குமாறு வலியுறுத்தியும்

நேற்று போராட்டம் நடைபெற்றது. குறித்த போராட்டம் இன்றும் நடைபெறவுள்ளது.

திஸ்ஸ விகாரையில் இன்று நடைபெறவுள்ள பொசன் பௌர்ணமி வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக

ஆயிரக்கணக்கான சிங்கள மக்கள் கொண்டுவரப்படவுள்ளனர்.

இந்நிலையில் தையிட்டி விகாரை பகுதியில் குழப்பமான சுழல் உருவாகலாம் என்ற முன்னெச்சரிக்கையின் அடிப்படையில் பொலிஸாரின் தண்ணீர் பாய்ச்சும் இயந்திரம் நேற்று கொண்டு வரப்பட்டுள்ளதுடன் கலகமடக்கும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை பலாலி பொலிஸாரினால் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் கட்டளையொன்றும் பெறப்பட்டு போராட்ட பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட 27 நபர்கள் மற்றும் அமைப்புக்களுக்கு எதிராகவே குறித்த கட்டளை பெறப்பட்டுள்ளது.

17495231390.png

17495231391.png

17495231392.png

17495231393.png

17495231394.png

17495231395.png

https://akkinikkunchu.com/?p=328238

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

திஸ்ஸ விகாரையில் இன்று நடைபெறவுள்ள பொசன் பௌர்ணமி வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக

ஆயிரக்கணக்கான சிங்கள மக்கள் கொண்டுவரப்படவுள்ளனர்.

இந்நிலையில் தையிட்டி விகாரை பகுதியில் குழப்பமான சுழல் உருவாகலாம் என்ற முன்னெச்சரிக்கையின் அடிப்படையில் பொலிஸாரின் தண்ணீர் பாய்ச்சும் இயந்திரம் நேற்று கொண்டு வரப்பட்டுள்ளதுடன் கலகமடக்கும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய இனவாத அரசுகளுக்கும் இந்த அரசுக்கும் எந்த வித வித்தியாசமும் இல்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.