Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

19 JUN, 2025 | 03:33 PM

image

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் படத்தை பயன்படுத்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தடை விதிக்க கோரிய மனு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் எல்.கே.சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ள சீமான், கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசுக்கு இடையிலான சண்டையின் போது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரனை, போர் முனையில் சந்தித்து பேசியதாகவும், அதன் பிறகு ஏகே 47 ரக துப்பாக்கியால் போர் பயிற்சி எடுத்ததாகவும் தமிழகத்தில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்ட பிறகு, விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் இலங்கை போர் தொடர்பான மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு சீமான் வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்பட்டு வருகிறார்.

குறிப்பாக தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவரான பிரபாகரனின் படத்தை தனது அரசியல் ஆதாயங்களுக்காக தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்தி வருகிறார். எனவே, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் படத்தை பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்க வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு முன்பு இன்று (ஜூன் 19) விசாரணைக்கு வந்தது. அப்போது , இந்த விவகாரம் தொடர்பாக அரசுக்கு மனு அளித்த 15 நாட்களுக்குள் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசுத் தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் தர வேண்டாமா என தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியது. இதையடுத்து, வழக்கை திரும்பப் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்று, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

https://www.virakesari.lk/article/217916

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இனியும் தொடர்ந்து பிரபாகரனை லோக்கல் கட்சி அரசியலுக்காக பாவிக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, island said:

அப்ப இனியும் தொடர்ந்து பிரபாகரனை லோக்கல் கட்சி அரசியலுக்காக பாவிக்கலாம்.

திமுக,அதிமுக பிரபாகரன் படத்தை தூக்கினால் பரவாயில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, island said:

அப்ப இனியும் தொடர்ந்து பிரபாகரனை லோக்கல் கட்சி அரசியலுக்காக பாவிக்கலாம்.

தலைவர் மீதான உங்கள் பக்தி மெய்சிலிர்க்க வைக்கிறது. என்னே ஆர்வம்? என்னே தவிப்பு?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

தலைவர் மீதான உங்கள் பக்தி மெய்சிலிர்க்க வைக்கிறது. என்னே ஆர்வம்? என்னே தவிப்பு?

இல்லை. அரசியலோ, அரசியல் உரிமை போராட்டமோ என்பது என்றுமே பக்திக்குரியது அல்ல. அதீத தலைமை பக்தி வைப்பவர்கள் அல்லது அவ்வாறு பக்தி வைப்பது போல் நடித்து அந்த தலைவனை அவரது தகுதிக்கு மேல் பப்பாவில் ஏற்றுபவர்கள் மக்களதும் அந்த தலைவனதும் அழிவுக்கு முதன்மை காரணியாவார். ஆகவே அப்படியன பக் தியை நான் ஊக்குவிப்பதில்லை.

8 hours ago, குமாரசாமி said:

திமுக,அதிமுக பிரபாகரன் படத்தை தூக்கினால் பரவாயில்லையா?

பக்திக்கு அப்பால் ஒரு சிறந்த ஆயுத விடுதலைப் போராளியாக இருந்த பிரபாகரனை வைத்து தமமு பிழைப்பை நடத்துபவர்கள் யாராயினும் அவர்கள் மக்கள் விரோதிகளாகவே இருப்பர்.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, island said:

இல்லை. அரசியலோ, அரசியல் உரிமை போராட்டமோ என்பது என்றுமே பக்திக்குரியது அல்ல. அதீத தலைமை பக்தி வைப்பவர்கள் அல்லது அவ்வாறு பக்தி வைப்பது போல் நடித்து அந்த தலைவனை அவரது தகுதிக்கு மேல் பப்பாவில் ஏற்றுபவர்கள் மக்களதும் அந்த தலைவனதும் அழிவுக்கு முதன்மை காரணியாவார். ஆகவே அப்படியன பக் தியை நான் ஊக்குவிப்பதில்லை.

பக்திக்கு அப்பால் ஒரு சிறந்த ஆயுத விடுதலைப் போராளியாக இருந்த பிரபாகரனை வைத்து தமமு பிழைப்பை நடத்துபவர்கள் யாராயினும் அவர்கள் மக்கள் விரோதிகளாகவே இருப்பர்.

ஆடு நனைகின்றது என்று ஓநாய் கவலைப்படுவது நடைமுறையில் உள்ளது தான். ஆனால் சீமான் என்றவுடன் பிரபாகரன் என்ற தடியையும் நீங்கள் தூக்குவது தான் யாழில் புரிந்து கொள்ள முடிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பா இந்த ஐலண்ட் என்கிற பக்திமான். அதீத சிங்கள தேசியவுணர்வில் ஊறிக்கிடக்கிறார் போலத் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

ஆடு நனைகின்றது என்று ஓநாய் கவலைப்படுவது நடைமுறையில் உள்ளது தான். ஆனால் சீமான் என்றவுடன் பிரபாகரன் என்ற தடியையும் நீங்கள் தூக்குவது தான் யாழில் புரிந்து கொள்ள முடிகிறது.

அந்த தடியை பத்துவருடங்களாக யூஸ் பண்ணியும் கட்டுப்பணம் கூட எடுக்க முடியவில்லை. அப்படி ஒரு இடத்திலாவது கட்டுப்பணம் கிடைக்கும் போது சீமான் என்ற தடியை யூஸ் பண்ணவேண்டிய காலம் வந்துவிடும். ஆனால் அந்த தடி இத்துப்போன தடியாதலால் தற்குறித்தம்பிகள்ளே அந்த தடியை தூக்கி வீதிவிடுவர். 😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, island said:

அந்த தடியை பத்துவருடங்களாக யூஸ் பண்ணியும் கட்டுப்பணம் கூட எடுக்க முடியவில்லை. அப்படி ஒரு இடத்திலாவது கட்டுப்பணம் கிடைக்கும் போது சீமான் என்ற தடியை யூஸ் பண்ணவேண்டிய காலம் வந்துவிடும். ஆனால் அந்த தடி இத்துப்போன தடியாதலால் தற்குறித்தம்பிகள்ளே அந்த தடியை தூக்கி வீதிவிடுவர். 😂😂😂

36 லட்சம் அதுவும் இளைய தலைமுறையினர் என்பது ஒட்டுமொத்த இலங்கை தமிழர்களின் இரு மடங்கு. எனவே தடி பலமாக வேரூன்றி விட்டது உங்களுக்கு கொஞ்சம் அருந்த கடினமானது தான். ஆனால் அந்த தடி பற்றி தரக்குறைவாக தமிழகத்தில் எவனும் கதைக்க முடியாது என்பது தான் தடிக்கு தமிழகம் தந்திருக்கும் முதல் அங்கீகாரம். கூட்டு இல்லை என்பதால் மட்டுமே கட்டுக்காசு இழப்பு. 2026 இற்கு பின்னர் அதுக்கும் பதில் உங்களுக்கு கிடைக்கும். எனவே தடியை இன்னும் பலமாக பிடிக்க தயாராகுங்கள்.

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, விசுகு said:

36 லட்சம் அதுவும் இளைய தலைமுறையினர் என்பது ஒட்டுமொத்த இலங்கை தமிழர்களின் இரு மடங்கு. எனவே தடி பலமாக வேரூன்றி விட்டது உங்களுக்கு கொஞ்சம் அருந்த கடினமானது தான். ஆனால் அந்த தடி பற்றி தரக்குறைவாக தமிழகத்தில் எவனும் கதைக்க முடியாது என்பது தான் தடிக்கு தமிழகம் தந்திருக்கும் முதல் அங்கீகாரம். கூட்டு இல்லை என்பதால் மட்டுமே கட்டுக்காசு இழப்பு. 2026 இற்கு பின்னர் அதுக்கும் பதில் உங்களுக்கு கிடைக்கும். எனவே தடியை இன்னும் பலமாக பிடிக்க தயாராகுங்கள்.

வாழ்ககை முழுவதும் மண்குதிரைகளை நம்புவதற்கான முழு உரிமையும் உங்களுக்கு உள்ளது. 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

வாழ்ககை முழுவதும் மண்குதிரைகளை நம்புவதற்கான முழு உரிமையும் உங்களுக்கு உள்ளது. 😂

மண் குதிரைக்காக மட்டும் இரவு பகல் பாராமல் நேரம் ஒதுக்கி பாடுபடும் உரிமை உங்களுக்கு உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, விசுகு said:

மண் குதிரைக்காக மட்டும் இரவு பகல் பாராமல் நேரம் ஒதுக்கி பாடுபடும் உரிமை உங்களுக்கு உள்ளது.

மண்குதிரைக்காக அல்ல, மண்குதிரையை காட்டி மக்களை ஏமாற்றும் அற்ப பதர்களை இனம்காட்டவும் அரசியல் என்பது அறிவு ரீதியனதேயொழிய பக்தி ரீதியானது அல்ல என்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவுமே எனது கருத்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

மண்குதிரைக்காக அல்ல, மண்குதிரையை காட்டி மக்களை ஏமாற்றும் அற்ப பதர்களை இனம்காட்டவும் அரசியல் என்பது அறிவு ரீதியனதேயொழிய பக்தி ரீதியானது அல்ல என்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவுமே எனது கருத்துக்கள்.

எவ்வளவு நிதானமாக மரியாதையான சொற்களுடன் உங்களுக்கு பதில் எழுதிக்கொண்டு இருக்கிறேன். உங்களுக்கு இதற்கு மேல் நற்சொற்கள் வராது என்று தெரியும். சக மனிதர்களை அற்பர்கள் என்றபடி அறிவு மற்றும் விழிப்புணர்வு பற்றி பேசும் தகுதியுடையவர்கள் அன்று. அவர்களுக்கு வேறு பெயர்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

எவ்வளவு நிதானமாக மரியாதையான சொற்களுடன் உங்களுக்கு பதில் எழுதிக்கொண்டு இருக்கிறேன். உங்களுக்கு இதற்கு மேல் நற்சொற்கள் வராது என்று தெரியும். சக மனிதர்களை அற்பர்கள் என்றபடி அறிவு மற்றும் விழிப்புணர்வு பற்றி பேசும் தகுதியுடையவர்கள் அன்று. அவர்களுக்கு வேறு பெயர்.

நீங்கள் நிதானமாகவோ மரியாதையாகவோ கருதெழுதுபவர் அல்ல. இங்கு கூட சக மனிதர்களை ஓநாய்கள் என்று எழுதியது நீங்கள் தான். மற்றய பலதிரிகளில் கூட தரக்குறைவான வார்த்தைகளை எழுதியுள்ளீர்கள். தமிழர் அரசியலை அறிவுபூர்வமாக முன்னெடுப்பதை எதிர்தது உணர்ச்சி வசப்படுத்தும் அழிவு அரசியலை ஊக்குவிப்போரை அப்படித்தான் அழைக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, island said:

நீங்கள் நிதானமாகவோ மரியாதையாகவோ கருதெழுதுபவர் அல்ல. இங்கு கூட சக மனிதர்களை ஓநாய்கள் என்று எழுதியது நீங்கள் தான். மற்றய பலதிரிகளில் கூட தரக்குறைவான வார்த்தைகளை எழுதியுள்ளீர்கள். தமிழர் அரசியலை அறிவுபூர்வமாக முன்னெடுப்பதை எதிர்தது உணர்ச்சி வசப்படுத்தும் அழிவு அரசியலை ஊக்குவிப்போரை அப்படித்தான் அழைக்க முடியும்.

நான் ஓநாய் என்று யாரையும் குறிப்பிட்டு எழுதியதாக ஞாபகம் இல்லை ஆனால் அவ்வாறு எழுதியிருந்தால் அவர் அதை விட கடுமையான வார்த்தைகளை என் மீது பாவித்திருப்பார். என் ஆயுதம் நீங்கள் காட்டுவது தான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.