Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தின் மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கை மக்களுக்காக கட்டப்பட்ட வீடுகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

இந்த நிகழ்வானது இன்று(7) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீடுகள் 

இந்த நிலையில், தமிழகத்தின் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை மக்களுக்காக, விழிப்புரம், விருதுநகர், திருப்பூர், தருமபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் சுமார் 729 வீடுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியாவில் புதிய வீடுகள் | Home In India For Sri Lankan Tamils

குறித்த வீடுகள் சுமார் 38 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்தியாவில் சிறைத்தண்டனையின் பின்னரான நாடுகடத்தலை தடுக்குமாறு இலங்கைத் தமிழர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://tamilwin.com/article/home-in-india-for-sri-lankan-tamils-1751881957

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர்களுக்கு ரூ.39 கோடியில் 729 வீடுகள்: தமிழகமுதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

08 JUL, 2025 | 10:19 AM

image

சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ரூ.38.76 கோடியில் கட்டப்பட்ட 729 வீடுகளை தமிழகமுதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பான கவுரவமானஇமேம்படுத்தப்பட்ட வாழ்க்கை உறுதி செய்யப்படும். இலங்கை அகதிகள் முகாம் என்பது இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது என்பது உட்பட பல்வேறு அறிவிப்புகளை சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

அதன் ஒரு பகுதியாகஇ 26 மாவட்டங்களில் உள்ள 67 முகாம்களில் பழுதடைந்த 7469 வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்ட ஆணை வழங்கப்பட்டு புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் ஏற்கெனவே 18 மாவட்டங்களில் உள்ள 32 முகாம்களில் கட்டி முடிக்கப்பட்ட 2781 புதிய வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாகஇ பொது மற்றும் மறுவாழ்வு துறை சார்பில் விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு திருப்பூர் - திருமூர்த்தி நகர் சேலம் தம்மம்பட்டி தருமபுரி - நாகாவதி அணை கேசர்குளி அணை விருதுநகர் - கண்டியாபுரம் ஆகிய இடங்களில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் ரூ.38.76 கோடியில் கட்டப்பட்டுள்ள 729 வீடுகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

https://www.virakesari.lk/article/219454

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-101.jpg?resize=750%2C375&ssl

தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில் இலங்கைத் தமிழர்களுக்காக 729 புதிய வீடுகள்!

தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, ஐந்து மாவட்டங்களில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் புதிதாகக் கட்டப்பட்ட 729 வீடுகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (07) திறந்து வைத்தார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தலைமைச் செயலாளர் என். முருகானந்தம் ஆகியோர் முன்னிலையில், தமிழக மாநில செயலகத்திலிருந்து காணொளி மூலமாக இந்த திறப்பு நிகழ்வு இடம்பெற்றது.

GvP5osEb0AARQUe?format=jpg&name=large

38.76 கோடி இந்திய ரூபா செலவில் கட்டப்பட்ட இந்த வீடுகள் விழுப்புரம், திருப்பூர், சேலம், தர்மபுரி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அகதிகள் முகாம்களில் அமைந்துள்ளன.

இந்த வீடுகள், மாநிலம் முழுவதும் பரவியுள்ள இலங்கைத் தமிழ் முகாம்களில் உள்கட்டமைப்பு மற்றும் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, 2021 ஆகஸ்ட் மாதம் மாநில சட்டமன்றத்தில் விதி 110 இன் கீழ் அறிவிக்கப்பட்ட தமிழக அரசின் பரந்த மறுவாழ்வு முயற்சியின் ஒரு பகுதியாகும்.

அரசாங்கத்தின் நீண்டகால திட்டத்தின்படி, 35 மறுவாழ்வு முகாம்களில் மொத்தம் 180.34 கோடி இந்திய ரூபா மதிப்பீட்டில் 3,510 வீடுகள் கட்டப்பட உள்ளன.

இதில், 18 மாவட்டங்களில் உள்ள 32 முகாம்களில் 2,781 வீடுகள் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக இந்த முகாம்களில் உள்கட்டமைப்பு மேம்பாடுகளையும் அரசு மேற்கொண்டுள்ளது.

இதில் புதிய உள் வீதிகள், மேம்படுத்தப்பட்ட மின்சார இணைப்பு வசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட குடிநீர் விநியோக வசதிகள் ஆகியவை அடங்கும்.

தமிழ்நாட்டின் 26 மாவட்டங்களில் உள்ள 67 அரசு முகாம்களில் பல தசாப்தங்களாகத் தங்கள் தாயகத்தில் இன மோதலில் இருந்து தப்பி ஓடிய இலங்கைத் தமிழர்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை வழங்குவதற்கான திமுக அரசின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக இந்த மறுவாழ்வுத் திட்டம் இருப்பதாக அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2025/1438462

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில் இலங்கைத் தமிழர்களுக்காக 729 புதிய வீடுகள்!

வீடு கட்டி கொடுப்போம்.

ஆனால் படித்து வேலை பார்க்க விட மாட்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

வீடு கட்டி கொடுப்போம்.

ஆனால் படித்து வேலை பார்க்க விட மாட்டோம்.

இப்படி தடுப்பது மத்திய பாஜக அரசு.

அதனோடு கூட்டணியில் இருக்கும் எடப்பாடி,

அவரோடு சித்தப்பா முறை கொண்டாடும் சீமானை நோக்கி எழுப்ப பட வேண்டிய கேள்வி இது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இப்படி தடுப்பது மத்திய பாஜக அரசு.

அதனோடு கூட்டணியில் இருக்கும் எடப்பாடி,

அவரோடு சித்தப்பா முறை கொண்டாடும் சீமானை நோக்கி எழுப்ப பட வேண்டிய கேள்வி இது.

ஏன் இதற்கு முதல் காங்கிரசும் முண்டு கொடுத்த திமுக வும் தானே ஆட்சியில் இருந்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

ஏன் இதற்கு முதல் காங்கிரசும் முண்டு கொடுத்த திமுக வும் தானே ஆட்சியில் இருந்தார்கள்.

அவர்கள் CAA சட்டத்தை கொண்டு வரவில்லை.

அப்போ வெளிநாட்டில் இருந்து வந்த அனைவருக்கும் ஒரே விதி.

இப்போ அப்படி அல்லவே?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.