Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

chinaaa.jpg?resize=689%2C375&ssl=1

சீனாவின் ஜனாதிபதியாக ஜி ஜின்பிங் தொடர்வதில் சிக்கல்!

சீனாவின் ஜனாதிபதியாக ஜி ஜின்பிங் (Xi Jinping) தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் (Xi Jinping) அண்மைக்காலமாக பொது வெளிகளில் தோன்றுவதைத் தவிர்த்து வருகின்றார்.  சீனாவில் ஜனாதிபதியாக  இருக்கும் நபர் பொதுவெளியில் தோன்றவில்லை என்றால் அதிகார மாற்றம் ஏற்படும் என்பது கடந்த கால வரலாறு.

இதனால் அவர்  விரைவில் ஜனாதிபதி  பதவியில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது நடக்கும் பட்சத்தில் சீனாவின் புதிய ஜனாதிபதியாக  யார் வருவார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சீனாவில் ஒற்றை கட்சி ஆட்சி முறை உள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சி தான் பிரதானமாக உள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருப்பவரே சீனாவின் ஜனாதிபதி ஆவார். மேலும் சீன ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும். அந்தவகையில் சீன ஜனாதிபதியாக ஜி ஜின்பிங்  2012, 2018, 2023 என தொடர்ச்சியாக 3 தடவைகள் ஜனாதிபதியாக செயற்பட்டு வருகின்றார்.  அவரது பதவிக்காலம் 2028 ம் ஆண்டு வரை உள்ளது.

எவ்வாறு இருப்பினும் கடந்த மே மாதம் இறுதி முதல் 2 வாரம் வரை ஸி ஜின்பிங் திடீரென்று மாயமானார். இதனால் தற்போது சீனாவில் ஜி ஜின்பிங் ஜனாதிபதி பதவிக்கு முடிவுரை எழுதப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதுமட்டுமின்றி ஒருவேளை ஜி ஜின்பிங் ஜனாதிபதி  பதவியில் இருந்து விலகும் பட்சத்தில் அந்த பதவிக்கு 2 பேரின் பெயர்கள் முன்னிலையில் உள்ளன. அதில் முதல் இடத்தில் இருப்பவர் தான் மத்திய ராணுவ கமிஷன் துணை தலைவரான ஜெனரல் ஜாங் யூக்ஸியா. இவர் ஜி ஜின்பிங்கின் தீவிர ஆதரவாளராக இருந்தார். ஜி ஜின்பிங் முதல் முதலாக ஜனாதிபதியாக இவர் பெரும் பங்கு வகித்தார்.

இதனால் தான் ஜாங் யூக்ஸியாவிற்கு முக்கிய பொறுப்பை வழங்கினார். மேலும் ஜி ஜின்பிங் நாட்டில் இல்லாதபோது ஜாங் யூக்ஸியா கட்டுப்பாட்டில் தான் சீனா செயல்படும். தற்போதும் அவர் கட்டுப்பாட்டில் தான் சீனா இயங்கி வருவதாக கூறப்படுகிறது.

மறுபுறம் இந்த பட்டியலில்  2வது இடத்தில் உள்ளவர் தொழில்நுட்ப வல்லுநர் வாங் யாங். இவர் ஜி ஜின்பிங்கின் செல்லப்பிள்ளை என்று சொல்லப்படுகிறது.  வாங் யாங்கை ஜனாதிபதி  பதவியில் வைத்து கொண்டு மறைமுக ஜனாதிபதி  செயல்பட ஜி ஜின்பிங் முடிவு செய்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான வேலைகளில் அவர் இறங்கி உள்ளதாகக் கூறப்படுகின்றமை குறிப்பித்தக்கது.

இந்நிலையில் சீன அரசியல் விவகாரம் தற்போது உலகளவில் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றமை குறிப்பிடத் தக்கது.

https://athavannews.com/2025/1438407

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவில் ஒரு பிரபலர் பொதுவெளியில் இருந்து குறிப்பிட்ட காலம் மாயமானார் எனில், ஆட்டம் ஓவர் என்பதே பொதுவான வரலாறு.

ஜக் மா முதல் முன்னைநாள் பிரதமர் என பலரின் வரலாறு இதுவே.

ஆனால் ஷி முன்னோர்களை விட அதிகாரத்தை தன் வசம் குவித்து வைத்துள்ளார்.

அவ்வளவு இலகுவில் விலக்க முடியாது.

பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவில் தலைமை பொறுப்பை தீர்மானிப்பது, அதில் வரும் பிரகணைகளை தீர்ப்பது இப்படித்த்தான்.

முதல் 3 தடவை க்ஸி யும், அதுகு முதல் தலைமை பொறுப்பை ஏற்றவர்களும் பகிரங்க அரசாங்க / நிர்வாக தளத்தில் இருந்து விலத்துவது அவ்வப்போது இப்படி நடந்தது.

க்ஸி ஊழலை இருப்பதில் முதல் குறி, எனவே க்ஸி உடன் மிகவும் நெருக்கமானவர்கள் என்றாலும், ஊழலை ஒழிக்கும் செயற்குழு நடவடிக்கையில் தலையிடுவதில்லை. (சிலவேளைகளில் அது பிரச்சனைகளை உருவாக்கி இருக்கலாம்)

க்ஸி ஊழலை கடுமையாக எதிர்ப்பதன் ஒரு காரணம் , CIA ஊழலை பாவித்து க்ஸி இன் உப தலைமை பொறுப்பு இருந்தபோது, தலைமை பொறுப்பு பீடதில் என்ன நடக்கிறது, எந பேசப்படுகிறது, அலசப்படுகிறது என்பதை நேரடியாக, உடனடியாக உளவு அனுப்புவார்கள் (இவர்கள் அந்த இலாகா நிர்வாகத்தில் தொழில்) மூலம் உடனடியாக அறிந்து கொள்கிறது என்பது, ஈரானில் cia இன் உளவாளிகளோடு தொடர்பு கொள்ளும் முறையை இரான், சீனாவின் துறைசார் மமற்றும் தொழிநுட்ப தேவியை கொண்டு உடைத்தாததால் சீனாவுக்கு தெரியா வந்தது.

அதை தொடர்ந்து, 2010 -2012 இல் பல cia உளவாளிகள் சீனாவில் தொடர்சியாக பிடிக்கப்பட்டனர் அல்லது கொல்லப்பட்டனர்.

சீன, ஒரு உதாரணம் காட்டுவதற்கு, அமெரிக்கா தூதரகதுக்கு சென்று விட்டு வெளியே வெளியே வந்த சீனப் பிரஷையானா cia உளவாளி ஒருவர் அந்த இடத்தில குரூரமாக கொல்லப்பட்டார். இது அமெரிக்காவுக்கு, cia க்கு கடும் செய்தியை கொடுப்பது என்ற குறியீடாக செய்யப்பட்டது.

மற்றது,சீன மொழி அறிவித்தலை மேட்ற்கு ஊடகங்கள் மொழிபெயர்பதிலும், அவற்றின் சீனா நலிவடைய வேண்டும் என்ற வெளியில் சொல்லப்படாத நோக்கத்தாள் பிறழ்வது.

ஆங்கிலத்தில் ஒருவர் சொல்லுவதை அல்லது கருத்தை எப்படி pour cold water on என்பதை பாவித்து நிராகரிப்பது போல, சீன மொழியில் ஏவுககனைகள் வேலை செய்யாது என்பதை சீன நிராரித்தது, என்பதே உண்மையான சீன மொழி செய்தி.

ப்ளூம் பெர்க், அந்த செய்தியை, சீன ஏவுகணைகள் குளிர் தண்ணீரால் நிரப்பப்பட்டு இருக்கின்றன என்று மொழிபெயர்த்து கரிபூசிக்கொண்டது.

இந்த செய்தி மேட்ற்கு ஊடகங்களில் வந்து, கிட்டத்தட்ட 1 மாதத்தில் சீன பசிபிக் சமுத்திரத்தில் ஏவுகணை குறிபார்த்து ஏவி அடிப்பது 1 மீட்டரறிலும் குறைவான வட்டத்துக்குள் ஏவுகணையாகில் துல்லியமாக இலக்கை அடிக்கும் என்பதை சோதனை செய்து காட்டியது.

அனால், இது சிலவேளையில் முன்பே திட்டமிடப்பட்டு இருக்கலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.