Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Ponzi-scheme.webp?resize=750%2C375&ssl=1

பிரமிட் திட்டங்களின் பரவலுக்கு எதிரான தேசிய விழிப்புணர்வு வாரம் நாளைமுதல் ஆரம்பம்!

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களின் பரவலுக்கு எதிரான தேசிய விழிப்புணர்வு வாரத்தை நாளை (14) முதல் ஜூலை 18 வரை நடத்த இலங்கை மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.

“பெருங்கவலையின் உச்சகட்டம் சூழ்ச்சியான பிரமிட் திட்டம்” என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தற்போது இந்த பிரமிட் திட்டங்கள் வேகமாக பரவி வருவதைக் கருத்தில் கொண்டு, நாளை முதல் ஒரு வார காலத்திற்கு இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்படும் என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் நிதி நுகர்வோரின் நல்வாழ்வை மேம்படுத்தும் மத்திய வங்கியின் செயற்பாடுகளுக்கு அமைய, தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் மற்றும் அவை தனிநபர்களுக்கும் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் ஏற்படுத்தும் குறிப்பிடத்தக்க அபாயங்கள் குறித்து பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த தேசிய நிகழ்ச்சியின் இலக்காகும்.

https://athavannews.com/2025/1438963

  • கருத்துக்கள உறவுகள்

சட்டவிரோத பிரமிட் திட்டங்கள் தொடர்பில் விசேட வௌிப்படுத்தல்

Jul 18, 2025 - 17:11

சட்டவிரோத பிரமிட் திட்டங்கள் தொடர்பில் விசேட வௌிப்படுத்தல்

நாட்டில் 50க்கும் மேற்பட்ட அடையாளம் காணப்படாத சட்டவிரோத பிரமிட் திட்டங்கள் செயல்பட்டு வருவதாக இலங்கை மத்திய வங்கியின் நிதி மற்றும் நுகர்வோர் உறவுகள் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் சட்டத்தரணி யானக ரணவீர தெரிவித்துள்ளார். 

டி.வி தெரணவில் ஒளிபரப்பான "ரீ பில்ட் சிறிலங்கா" நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், இதுவரை 22 பிரமிட் திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறினார். 

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், 

"இருபத்தி இரண்டு பிரமிட் திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

இவை குறித்த மேலதிக விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. 

நாங்கள் அடையாளம் கண்டிருப்பது அவ்வளவுதான். இந்த நேரத்தில் கூட இந்த பிரதேசத்திற்குள் மிகப் பெரிய எண்ணிக்கையிலானவர்கள் செயல்படுகிறார்கள். 

ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் இருப்பதாகச் சொல்வது சரியாக இருக்கும். 

முதற்கட்ட விசாரணைகளை நடத்துவதற்காக 50க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் எங்களுக்கு வந்துள்ளன.'' என்றார். 

மேலும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இலங்கை மத்திய வங்கியின் மாத்தளை பிராந்திய அலுவலகத்தின் முகாமையாளர் யாசினி ராஜபக்ஷ, பிரமிட் திட்டத்தில், இறுதி வாடிக்கையாளரை அடையாளம் காண முடியாது என்றும், இந்தத் திட்டத்தில் விற்பனைக்குப் பிந்தைய சேவை இல்லை என்றும் கூறினார். 

மேலும் கருத்து தெரிவித்த அவர், 

''பிரமிட் திட்டங்களால் வாக்குறுதியளிக்கப்பட்ட நன்மைகள் உண்மையில் நடைமுறைக்கு சாத்தியமற்றது. அதை நம்புவது கடினம். 

உதாரணமாக, இந்த பிரமிட் திட்டத்தில், நாங்கள் முதலீடு செய்யும் பணம் மிகக் குறுகிய காலத்தில் இரட்டிப்பாக்கப்படும் அல்லது மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள். 

ஒரு தயாரிப்பு விற்பனை அமைப்பில் ஒரு பொருளை வாங்குவதன் மூலமும் நீங்கள் இதில் சேரலாம். 

மேலும், பிரமிட் திட்டத்தில் இறுதி வாடிக்கையாளரை நாங்கள் அடையாளம் காணவில்லை. 

"ஒரு பிரமிட் திட்டத்தில் உங்களுக்கு உண்மையில் விற்பனைக்குப் பிந்தைய சேவை கிடைக்காது." என்றார்.

https://adaderanatamil.lk/news/cmd8r0pp101c2qp4kjm9crrth

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.