Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-7.jpg?resize=750%2C375&ssl=1

இந்தியாவின் ரஷ்ய எண்ணெய்க் கொள்வனவு குறித்து அமெரிக்கா கோபத்தில்!

உக்ரேனில் மொஸ்கோவின் போர் முயற்சிகளைத் தக்கவைக்க இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவது உதவுவதாகவும், வொஷிங்டனுடனான புது டெல்லியின் உறவில் இது பாதிப்பினை ஏற்படுத்து விடயமாக அமைந்துள்ளதாகவும் அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ வியாழக்கிழமை (ஜூலை 31) தெரிவித்தார்.

ஃபாக்ஸ் ரேடியோவுக்கு அளித்த செவ்வியில் அவர்,

உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் முயற்சிக்கு நிதியளிக்க உதவும் வகையில் இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை தொடர்கிறது என்பதில் அமெரிக்க ஜனாதிபதி விரக்தியடைந்துள்ளார்.

இந்தியாவிற்கு மிகப்பெரிய எரிசக்தி தேவைகள் உள்ளன, அதில் எண்ணெய், நிலக்கரி, எரிவாயு மற்றும் ஒவ்வொரு நாட்டையும் போலவே அதன் பொருளாதாரத்தை ஆற்றுவதற்குத் தேவையான பொருட்களை வாங்கும் திறன் அடங்கும்.

மேலும் ரஷ்ய எண்ணெய் அனுமதிக்கப்பட்டதாகவும் மலிவாகவும் இருப்பதால் இந்தியா ரஷ்யாவிலிருந்து அதை வாங்குகிறது.

துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவின் இந்த நடவடிக்கை உக்ரேன் மீதான ரஷ்ய போர் முயற்சியைத் தக்கவைக்க உதவுகிறது.

எனவே இது இந்தியாவுடனான எங்கள் உறவில் நிச்சயமாக எரிச்சலை ஏற்படுத்தும் ஒரு புள்ளியாகும் என்றும் அவர் கூறினார்.

https://athavannews.com/2025/1441427

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இனி எரிபொருள் வாங்காது என கேள்விப்பட்டேன்; அது நல்லது: ட்ரம்ப்

03 AUG, 2025 | 12:21 PM

image

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இனி எரிபொருட்களை வாங்காது என்று கேள்விப்பட்டேன். அது ஒரு நல்ல நடவடிக்கை" என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ரஷ்யாவிடம் இருந்து இனி இந்தியா எரிபொருள் வாங்காது என்று புரிந்து கொள்கிறேன். அதைத்தான் கேள்விப்பட்டேன். சரியா தவறா என எனக்குத் தெரியாது ஆனால் அது ஒரு நல்ல நடவடிக்கை. என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்.” என தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலை நிறுத்துவதில் டொனால்ட் ட்ரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். இதற்கான முயற்சியாக ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் பிற நாடுகளையும் அது எச்சரித்து வருகிறது.

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி இந்தியா சீனா உள்ளிட்ட சில நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து எரிபொருட்களை வாங்கி வருகின்றன. சந்தை விலையை விட ரஷ்யா குறைவாக விற்பதால் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்குவதில் இந்தியா ஆர்வம் காட்டி வருகிறது.

இதை தடுக்கும் நோக்கில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25மூ வரி விதிக்கப்படும் என டொனால்ட் ட்ரம்ப் கடந்த புதன் கிழமை அறிவித்தார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் “இந்தியா எங்கள் நண்பர். எனினும் பல ஆண்டுகளாக நாங்கள் அவர்களுடன் சிறிய அளவிலான வர்த்தகத்தையே மேற்கொண்டு வருகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஏனெனில் அமெரிக்க பொருட்களுக்கு இந்தியாவின் வரி விதிப்பு மிக அதிகமாக உள்ளது. அமெரிக்க பொருட்களுக்கு உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா உள்ளது. இதனால்தான் அவர்களுடனான எங்களது வர்த்தகம் குறைந்த அளவில் உள்ளது. மேலும் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு. அவர்கள் கடுமையான பணம் சாரா வர்த்தக தடைகளையும் அமல்படுத்துகின்றனர்.

உக்ரைனில் மேற்கொண்டு வரும் கொலைவெறித் தாக்குதலை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்று அனைவரும் விரும்பும் நேரத்தில்இ அந்த நாட்டிடமிருந்து தங்களுக்கு தேவையான ராணுவ உபகரணங்களை அதிக அளவில் இந்தியா வாங்கியுள்ளது. சீனாவுடன் சேர்ந்த ரஷ்யாவின் மிகப்பெரிய எரிசக்தி இறக்குமதியாளராகவும் இந்தியா உள்ளது. இவை அனைத்தும் சரியான விஷயங்கள் அல்ல.” என தெரிவித்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக ட்ரம்ப் வெளியிட்ட மற்றொரு பதிவில் “ரஷ்யாவுடன் இந்தியா வைத்துள்ள உறவு குறித்து எனக்கு கவலை இல்லை. ஆனால் அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா விதிக்கும் வரிகள்தான் உலகிலேயே மிக அதிகமாக உள்ளது. எனவேதான் அவர்களுடன் ஒப்பீட்டளவில் சிறிய வணிகத்தையே செய்து வருகிறோம். அதேநேரம் ரஷ்யாவுடன் அமெரிக்க வர்த்தக உறவு கொண்டதில்லை. இந்தியா மற்றும் ரஷ்யாவும் செயலிழந்துபோன தங்களின் பொருளாதாரங்களை இன்னும் நாசமாக்கட்டும்” என்று கடுமையாக கூறியிருந்தார்.

இந்நிலையில் ரஷ்யாவுடன் வர்த்தக உறவில் ஈடுபடும் நிறுவனங்கள் அமெரிக்காவில் வர்த்தகத்தில் ஈடுபட தடை விதிப்பதற்கான நடவடிக்கைகளையும் ட்ரம்ப் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதனால் சில இந்திய நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருட்களை வாங்குவதை நிறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. எனினும் இது தொடர்பாக மத்திய அரசு எவ்வித தகவல்களையும் தெரிவிக்கவில்லை. இந்த பின்னணியில் டொனால்ட் ட்ரம்ப்பின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/221686

  • கருத்துக்கள உறவுகள்

மோடிஜியின் இந்தியாவில் தயாரிப்பு கொள்கை (Make in India) எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை என கூறப்படுகிற்து, மலிவு விலையில் பெற்ற எண்ணெயின் மூலமும் அதனை சுத்திகரித்து ஏற்றுமதி செய்து அதன் மூலம் ஈட்டிய இலாபத்தினை பார்த்து அமெரிக்காவினை எதிர்த்து இந்தியா செல்லாது, இந்தியாவினை விட சில கிழக்காசிய நாடுகளில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு உள்ள சாதகமான நிலையினை கருத்தில் கொண்டு பன்னட்டு நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டால் இந்தியாவின் பொருளாதாரம் பெரிய பாதிப்புள்ளாகலாம்.

இந்தியா இரஸ்சிய எரிபொருள் வாங்குவதனை நிறுத்தினாலும் சீனா இரஸ்சிய எரிபொருளை தொடர்ந்தும் வாங்கும் நிலை காணப்படும், ஆனால் இந்தியா ஐரோப்பா போல அமெரிக்க எரிபொருளை பல் மடங்கு விலையில் வாங்காது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-46.jpg?resize=750%2C375&ssl=

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் கொள்வனவு; அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் இந்தியா!

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவிலிருந்து வரும் பொருட்களுக்கான வரிகளை உயர்த்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (04) மீண்டும் அச்சுறுத்தல் விடுத்தார்.

அதேநேரத்தில், புது டெல்லி அவரது தாக்குதலை “நியாயமற்றது” என்று கூறியதுடன், அதன் பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதாக சபதம் செய்து, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பிளவை ஆழப்படுத்தியது.

இது குறித்த சமூக ஊடப் பதிவில் டரம்ப்,

இந்தியா ரஷ்ய எண்ணெயை பெருமளவில் வாங்குவது மட்டுமல்லாமல், வாங்கிய எண்ணெயில் பெரும்பகுதியை திறந்த சந்தையில் பெரிய இலாபத்திற்கு விற்கிறது.

உக்ரேனில் ரஷ்ய போரினால் எத்தனை பேர் கொல்லப்படுகிறார்கள் என்பது அவர்களுக்கு கவலையில்லை.

இதன் காரணமாக, அமெரிக்காவிற்கு இந்தியா செலுத்தும் வரியை நான் கணிசமாக உயர்த்துவேன் – என்று பதிவிட்டார்.

இதற்கு பதிலளித்துள்ள புது டெல்லியின் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர்,

இந்தியா அதன் தேசிய நலன்களையும் பொருளாதார பாதுகாப்பையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.

இந்தியாவை குறிவைப்பது நியாயமற்றது – என்றார்.

உக்ரேனுடனான 3-1/2 ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவர மொஸ்கோ நடவடிக்கை எடுக்காவிட்டால், வெள்ளிக்கிழமை முதல் ரஷ்யா மீதும் அதன் எரிசக்தி ஏற்றுமதியை வாங்கும் நாடுகள் மீதும் புதிய தடைகளை விதிக்கப்போவதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.

காலக்கெடு இருந்தபோதிலும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தனது நிலைப்பாட்டை மாற்றுவதற்கான எந்த பொது அறிகுறியையும் காட்டவில்லை.

வார இறுதியில், இரண்டு இந்திய அரசாங்க வட்டாரங்கள் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் ட்ரம்பின் அச்சுறுத்தல்களை மீறி இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதைத் தொடரும் என்று தெரிவித்தன.

2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்யா உக்ரேனை ஆக்கிரமித்ததிலிருந்து, மொஸ்கோவிலிருந்து தன்னைத் தூர விலக்கிக் கொள்ளுமாறு மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்தை இந்தியா எதிர்கொண்டுள்ளது.

ரஷ்யாவுடனான அதன் நீண்டகால உறவுகள் மற்றும் பொருளாதாரத் தேவைகளை மேற்கோள் காட்டி, புது டெல்லி இதை எதிர்த்தது.

ஜூலை மாதத்தில் ட்ரம்ப் ஏற்கனவே இந்திய இறக்குமதிகளுக்கு 25% வரிகளை அறிவித்திருந்தார்.

மேலும், அமெரிக்க அதிகாரிகள் அமெரிக்க-இந்தியா வர்த்தக ஒப்பந்தத்திற்கு இடையூறாக நிற்கும் பல்வேறு புவிசார் அரசியல் பிரச்சினைகளை மேற்கோள் காட்டியுள்ளனர்.

வளரும் நாடுகளின் பரந்த பிரிக்ஸ் குழுவை அமெரிக்காவிற்கு விரோதமானது என்றும் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

அந்த நாடுகள் அவரது குற்றச்சாட்டை நிராகரித்துள்ளன.

அந்தக் குழு அதன் உறுப்பினர்கள் மற்றும் வளரும் நாடுகளின் நலன்களை பெருமளவில் மேம்படுத்துவதாகக் கூறுகின்றன.

ரஷ்யாவிலிருந்து கடல்வழி மசகு எண்ணெயை வாங்கும் மிகப்பெரிய நாடாக இந்தியா உள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை ஒரு நாளைக்கு சுமார் 1.75 மில்லியன் பீப்பாய்கள் ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது.

இது ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 1% அதிகமாகும் என்று வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2025/1441842

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.