Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏன் சிங்கள இனவெறி அரசியல் தலைமைகள் அழிக்கப்படக் கூடாது??????

Featured Replies

2001ம் ஆண்டு சிங்கள இனவெறி தரப்பிற்கும் தமிழர் தரப்பிற்கும் யுத்த நிறுத்தம் ஏற்பட்டது முதல் இன்று வரை ஏராளமான தமிழ் அரசியல்துறைச் செயற்பாட்டாளர்கள், புனர்வாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட தொண்டர்கள் என பலர் சிங்கள இனவெறி அரசின் இயந்திரங்களினால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அன்று மட்டு/அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் கவுசல்யன், முன்னால் அம்பாறை அரசியல் பொறுப்பாளர் பாவா எனத் தொடங்கி ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் என்று பலரையும் சேர்த்து இன்று தமிழ்ச்செல்வனில் முடிந்திருக்கின்றது

இவைகள் மிகத் தெளிவாக சிங்கள அதிகார இயந்திரங்களினால் இனங்காணப்பட்டு, தேர்தெடுக்கப்பட்டு படுகொலைகள் நடந்தேறியுள்ளன. இப்படுகொலைகளின் நோக்கமே தமிழர்களின் தேசியத்தை நோக்கிய அரசியல் சக்திகளை இல்லாது ஒழிப்பதே. அது மட்டுமல்லாது ஈழத்தமிழர்களது பேச்சுவார்த்தை மூலமான நகர்வுகளை இல்லாதொழிப்பதும் ஆகும்.

இன்று எம்முன் உள்ள கேள்வி என்னவென்றால், நாமும் ஏன் சிங்கள இனவெறி அரசியல் தலைமைகளை அழித்தொழிக்கக் கூடாது?என்பதே!

"முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்", எதிரிக்கு புரியும் பாஷையில் பதிலளித்தாலே, அவன் தேர்ந்தெடுத்த இலக்கு பிழையென்று அவனுக்குப் புரியும். சர்வதேசம் எனும் மாயையை ஒரு புறம் தள்ளி வைத்து விட்டு, எதிரிக்குப் பதிலளிக்க வேண்டும்.

தற்போது இலங்கைத் தீவில் நடைபெறுவது வெறுமனே சிங்கள பேரினவாத அரசுக்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல. தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை ஏற்கவைக்க சர்வதேச சமூகத்தினுடனான போராட்டமே. போராட்டம் சிங்களர்களுக்கு மட்டுமே அடித்த காலம் எப்பொழுதோ முடிந்துவிட்டது. அதை விட்டு நீங்கி இப்பொழுது எமது உரிமைகளை ஏற்குமாறு பல்வேறு நாடுகளுடனும் நடைபெறும் "சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்குமாறு" நிர்ப்பந்திக்கும் போராட்டமே இப்பொழுது நடைபெறுகிறது.

சிங்களம் எதிர்பார்ப்பதும், நம்மில் பலர் ஆத்திரத்தில் எதிர்பார்ப்பதும் ஒரு விடயத்தையே. சிங்களர்க்கு கண்மண் தெரியாமல் அடி என்பதுதான் அது. உண்மையில் சிங்களம் இதை எதிர்பார்ப்பது நயவஞ்சகத்துடன். போராட்டம் அதன் தற்போதைய நிலையில் இருந்து கீழ்நிலையை அடைவதையே சிங்களம் விரும்புகிறது. நாம் ஆத்திரத்தினால் அதன் விளைவுகளை அறியாமல் இதை விரும்புகிறோம்.

உண்மையில், புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் இருக்கும் நாம் 10 விழுக்காடு தன்னும் செயலாற்றாமல் இருக்கிறோம். நாம் ஒவ்வொருவரும் எமது நேர்மையான போராட்ட நியாயங்களை எம்முடன் ஊடாடும் அந்தந்த நாட்டு மக்களுக்கு, தலைவர்களுக்கு சிறிது சிறிதாக அவர்கள் மூளையில் ஏற்ற வேண்டும். வெறுமனே ஊர்வலம் செய்வதும் ஓய்ந்து விடுவதும் போதாது. சிறுகச் சிறுக ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டிய காலம் இது.

நாம் செயலாற்றாமல் இருப்பதால், தாயகத்தில் இழப்புக்களும் அவலங்களும் தொடரவே செய்யும்.

நமாறியாததா.... சோழன். எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு.... :icon_idea: உலகை இப்போ உலகமொழியால் வெல்லவேண்டும்... இல்லையேல் ... எல்லாபோராளிகளுக்கும்....நாடுக ளுக்கும்... உள்ளது தனிமொழி....(தான் :icon_idea: ) :icon_idea::)

Edited by Netfriend

இன்று எம்முன் உள்ள கேள்வி என்னவென்றால், நாமும் ஏன் சிங்கள இனவெறி அரசியல் தலைமைகளை அழித்தொழிக்கக் கூடாது?என்பதே!

சிங்கள அரசியல் தலைமைகள் சிங்கள மக்களினால் காலத்திற்கேற்றவாறு தீர்மானிக்கப்படும். ரணில் ஒரு காலப்பகுதியில் அவர்களுக்குச் சிறந்த தலைவராக இருந்தார். இப்போது ராஜபக்ஸ அவ்வாறு தோற்றமளிக்கிறார். இனிவரும் காலங்களில் வேறு யாராவது தலைமைப் பொறுப்பை ஏற்கலாம்.

சிங்கள அரசியல் தலைமைகளை அழிப்பதால் அந்த வெற்றிடம் விரைவில் நிரப்பப்படுமே ஒழிய இனவாத அசியலில் எந்த மாற்றமும் ஏற்படாது. தமிழின ஒழிப்பை முன்னெடுப்பதற்கு புதிது புதிதாக அரசியல்வாதிகள் முளைப்பார்களே தவிர எமக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை. சிங்கள அரசியலிலும் எந்தவிதமான பின்னடைவும் ஏற்படப் போவதில்லை.

மாறாக சர்வதேச மாயையை சிங்கள அரசாங்கத்திற்கெதிராக திருப்ப முடியாவிடினும் எமக்கெதிராக இயங்க முடியாமல் செய்வதே புத்திசாலித்தனம்.

பேரினவாதம் ஒடுக்கப்படத்தான் வேண்டும். அதற்குத் தருணமும் உண்டு. ஆத்திரப்படும் போது ஆபத்துக்குள் விழுந்துவிடும் சந்தர்ப்பமுண்டு. தமிழ்ச்செல்வனின் இழப்பு பேரிழப்புத்தான். ஆனால் தமிழ்ச் சமுதாயம் அடையப்போகும் தீர்வுpற்கு தற்போதைய செயற்பாடுகள் தடையாகக் கூடாது.

புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்.

  • கருத்துக்கள உறவுகள்

நிலமை கனிந்துவரும் வேளை இழந்துவிட்டோமே ஒரு நாயகனை.

ஊடகவியலாளர்களின் கேள்விக்கும், சர்வதேஷ பிரமுகர்களின் கண்டனங்களிற்கும் உன் புன்னகையே பல்லாயிரம் பதில்களை கொடுத்ததே ஆனால் இன்று நீயுமில்லை, உன்புன்னகையுமில்லை மிஞ்சியிருப்பதோ உன் நினைவுகள் மட்டும்தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலமை கனிந்துவரும் வேளை இழந்துவிட்டோமே ஒரு நாயகனை.

ஊடகவியலாளர்களின் கேள்விக்கும், சர்வதேஷ பிரமுகர்களின் கண்டனங்களிற்கும் உன் புன்னகையே பல்லாயிரம் பதில்களை கொடுத்ததே ஆனால் இன்று நீயுமில்லை, உன்புன்னகையுமில்லை மிஞ்சியிருப்பதோ உன் நினைவுகள் மட்டும்தான்.

உண்மைதான்...அந்தப்புன்னகை தவழும் முகமும் எந்த சலனத்தையும் வெளிக்காட்டிக்கொள்ளாத பாங்குமே தமிழ்ச்செல்வன் அண்ணாவின் பலம்.! எப்போதும் எம் இதயத்தில் அவர் நிறைந்தே இருப்பார்!

ஆற்ற முடியாத் துயர் நெஞ்சை அழுத்துகின்றது இருப்பினும் நல்லதே நடக்கும்!...எங்கள் தலைமை விரைவில் விளக்கம் கொடுக்கும்!.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போதய சிங்களத் தலைமையை அழிப்பதென்பது, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தலைமை எடுத்த முடிவுக்கு மாறானதல்லவா?

எமது தேசியத்தலைவர் நினைத்தால் சிங்களத் தலைமைகளை அழிப்பதொன்றும் பெரிய விடயமல்ல. தலைவர் அவர்களின் நோக்கம் எதிரியை அழிப்பதுவோ, பழிக்குப் பழி வாங்குவதோ அல்ல. இன்று எதிரிகளாக இருப்பவர்கள் எமது அண்டைநாடாகும் காலம் வெகு தூரத்திலில்லை. இவ்வளவு வருடங்கள் பொறுத்த நாம் இன்னும் கொஞ்சம் பொறுப்போமே!!! இன்னும் 25 நாட்களில் அவரின் முடிவை எமக்குத் தெரியப்படுத்துவார். பொறுத்திருந்து கேட்போம்.

பழிக்கு பழி கொடுத்ததால் தான் புரியும் இல்லாவிட்டால் புரியாது.

  • தொடங்கியவர்

சர்வதேசம்! சர்வதேசம்!! சர்வதேசம்!!! .... எல்லாம் ஒரு மாயை. சில உதாரணங்களைப் பார்ப்போமாயின் ....

அன்று சர்வதேசத்தால்(மேற்குலகால்) சர்வதேசத்தின் பயங்கரவாதிகளாக(இன்று பின் லாடனை எவ்வாறு மேற்கு நோக்குகிறதோ, அவ்வாறே) சித்தரிக்கப்பட்ட நெல்சன் மண்டேலாவோ, யாஷீர் அரபாத்தோ, இன்று சர்வதேச கதாநாயகர்கள். மேற்கினால் சில வருடங்களுக்கு முன் பிசாசாக சித்தரிக்கப்பட்ட கடாபி இன்று மேற்கின் நண்பன்.

ஒண்றை உற்று நோக்கின் தெரியும், மேற்கு அங்கீகரிக்க முற்பட்ட போராட்டங்களை விட தம்மைத்தாமே அங்கீகரித்த போராட்டங்களே கூடுதலாக நாடுகளாக மலர்ந்துள்ளன. இதற்கு எரித்திரியா ஓர் சிறந்த உதாரணம். ஆனால் மேற்கினால் அங்கீகரிக்க முற்பட்ட தென் சூடானோ, டாவூரோ, கொசோவோவோ இன்னும் நாடுகளாக சுதந்திரம் பெற முடியவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக இன்று மேற்கினால் பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்தப்பட்டு, அழித்தொழிக்க முற்பட்ட தலபானை நோக்கி மேற்கிலிருந்து சில மாறுதல்கள் தெரிய முற்படுகிறது. தலபானுடன் பேசித்தான் தீர்க்க வேண்டும் என்ற சத்தங்கள் அதிகமாக ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. இது தலபானின் உறுதி, தொடர்ந்து போராட்டத்தை கொண்டு செல்லுதல், ... என்று பல காரணங்களாக இருக்கலாம். இதை இந்திய படையினர் எம்மீது தொடுத்து விட்டுச் சென்ற காலத்தோடு ஒப்பிடலாம்.

மேலாக இன்று இலங்கையை விற்றால், வருவதை பிரித்தால் அதில் மூன்றில் இரண்டுக்கு கூடுதலான பங்கு மேற்குக்கோ, யப்பானுக்கோ சொந்தமானது. அவர்கள் இன்று ஏன் தலை கீழாக நிற்கிறார்களெனில், இன்று அங்கிருந்து ஒன்றும் வராவிடினும் தமது முதல் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்கே தலை கீழாக நின்று தாண்டவமாடுகிறார்கள். நாளை முதலும் காப்பாற்றப்பட மாட்டாது எனும் நிலை வர, முதலை காப்பாற்ற இண்று கொடுக்கும் விலைகளை இடை நிறுத்துவார்கள்.

இவற்றை பலம் தான் தீர்மாணிக்கும். அதை விட தெற்கில் நிரந்தரமற்ற சூழ்நிலை, பாதுகாப்பற்ற நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்.

அதை விடுத்து சர்வதேசத்தை முற்று முழுதாக நம்பி நாம் ஏதும் சாதித்து விடப் போவதில்லை. சர்வதேசம் எங்கு பலமோ, அதனோடே நிற்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.