Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

541458093_1352205133137951_6524796394563

சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் அடியார்க்கு அமுதளிக்கும் வள்ளல்
கலாநிதி செ.மோகனதாஸ் சுவாமிகள் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
வல்வை மண்ணின் மகத்தான புதல்வன், சந்நிதியான் அருளில் திகழும் தொண்டர், “அடியார்க்கு அமுதளிக்கும் வள்ளல்” எனப் புகழப்படும் கலாநிதி செ. மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் நாளை (31.08.2025) தனது 76ஆவது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.
🌺 சந்நிதியான் சுவாமியின் பணி
பெரியபுராண நாயன்மார்களின் வழியில், “அடியார்க்கு அமுதூட்டல் தான் உயர்ந்த தர்மம்” என்ற கருத்தை வாழ்வின் கடமையாக ஏற்று நிற்கும் மோகன் சுவாமி, 1989 ஆம் ஆண்டில் தொண்டைமானாற்றில் சந்நிதியான் ஆச்சிரமத்தை நிறுவினார்.
அன்று தொடங்கிய அந்த தர்மம் இன்றும் 37ஆண்டுகளாக, வருடம் 365 நாட்களும், தினம் மூன்று வேளையும் அன்னதானமாக தொடர்கிறது...
சந்நிதிக்கு வரும் அடியவர்கள் எவரும் பசியோடு செல்லக்கூடாது எனும் உயரிய சிந்தனையில் சந்நிதியான் ஆச்சிரமத்திலிருந்து அன்னதானப் பணியை அரும்பணியாக செய்து வருகிறார்.
அன்னதானப்பணியுடன் நின்று விடாது சந்நிதியான் ஆச்சிரமம் ஊடாக பல சமூக, சமய பணிகளையும் ஆற்றுகின்றார்.
65 முதியோருக்கு உடை, உணவு, மருத்துவம்,
கல்விக்கான உதவித்தொகை மற்றும் கற்றல் உபகரணங்கள்,
சமூக நலத்திற்கான வீடமைப்பு, கிணறு அமைப்பு, மருந்து வழங்கல் என பரந்து விரிந்த அறப்பணிகளின் பெருங்கடலாக வளர்ந்து நிற்கிறது.
தன்னடக்கம் மிக்க தொண்டர்
அவரை எவ்வளவு பாராட்டினாலும், சுவாமி தன் வாக்கில் தாழ்மையுடன் –
“நான் ஒன்றும் செய்யவில்லை; சந்நிதியான்தான் செய்கிறான்; நான் வெறும் கருவிதான்” என்று கூறுவர்.
இத்தகைய தன்னடக்கமே அவரை அடியார்க்கு அடியார் என்ற உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.
🌺 சைவக் கலாச்சாரச் சேவைகள்
1992 இல் தொடங்கிய சைவகலை பண்பாட்டுப் பேரவை,
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சைவ நிகழ்வுகளை நடத்தி வருகின்றது.
1998 முதல் மாதந்தோறும் வெளிவரும் “ஞானச்சுடர்” ஆன்மிகச் சஞ்சிகை ஆயிரக்கணக்கானோரின் இல்லங்களுக்குச் சென்று சந்நிதியான் அருள்வாக்கினை பரப்பி வருகின்றது.
இந்தச் சேவைகளின் இயக்குனர் கலாநிதி மோகனதாஸ் சுவாமி.
🌺 மலையகத்திற்கான கரம் நீட்டல்
2014 அக்டோபர் 29 மீரியப்பொத்த மண்சரிவு மலையக உறவுகளை சோகத்தில் ஆழ்த்தியபோது, முதலில் உதவிக்கரத்தை நீட்டியவர் மோகன் சுவாமி.
அதன்பின் பதுளை, கெக்கிராவ, முல்லைத்தீவு என எங்கு துயரம் ஏற்பட்டாலும் அங்கு அவர் ஆச்சிரமத்தோடு விரைந்து சென்று உணவு, மருந்து, கல்வி, வாழ்வாதார உதவி வழங்கும் பணியில் முன்னிலை வகித்து வருகிறார்.
விருதுகள் மற்றும் கௌரவங்கள்
அவரது தொண்டுகளை உலகம் பாராட்டியதன் சின்னமாக,
அமுதவாரிதி விருது,
அறப்பணி அரசு விருது,
சமூகச் சுடர் விருது,
2017 இல் இந்தியப் பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டம்,
2018 இல் யாழ்ப்பாண மாநகரசபையின் “யாழ் விருது”
என பல கௌரவங்கள் அவரை அணிந்துள்ளன.
ஆனால் மக்களின் நம்பிக்கையே மிகப்பெரிய விருது என்று கருதுபவர் தான் மோகன் சுவாமி.
வாழ்த்துப் பிரார்த்தனை
“சமயம் என்பது சமூக நலனாகவே வெளிப்பட வேண்டும்” என்பதை தன் வாழ்க்கையால் நிரூபித்துக் காட்டும் வள்ளல் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் இன்னும் பல்லாண்டுகள் ஆரோக்கியமும் ஆனந்தமும் நிறைந்த வாழ்வுடன், அடியார்க்கு அமுதளிக்கும் அறப்பணியில் பல்லாண்டு சிறக்க சந்நிதியான் அருள்புரியப் பிரார்த்திப்போம்.
(நன்றி பாபுஜி)

நம்ம யாழ்ப்பாணம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.