Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காங்கேசன் துறைமுகத்தை வணிகத்துறைமுகமாக அபிவிருத்தி செய்ய முடியாது - அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

914222972.jpg

யாழ். காங்கேசன் துறைமுகத்தை வணிகத் துறைமுகமாக அபிவிருத்தி செய்ய மாட்டோம் என தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க இந்தியா ஒதுக்கிய பணமும் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு போதாது என தெரிவித்தார்.

நேற்று யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற  போக்குவரத்து துறைமுகங்கள் தொடர்பான மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின் போது நாடாளுமன்ற உறுப்பினர்  சிறிதரன் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் வழங்கினார். 

குறித்த கலந்துரையாடலில் காங்கேசன் துறைமுத்தின் அபிவிருத்திகள் துரிதப்படுத்தப்படுவதோடு யாழ். பலாலி விமான நிலைய பாதுகாப்புக்காக சுபிகரித்து வைத்துள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் துறைசார் அமைச்சர் விமல் ரட்நாயக்காவிடம் கோரிக்கை முன்வைத்தார்.

இதன்போது பதிலளித்த அமைச்சர் விமல் ராநாயக்க, 

யாழ். காங்கேசன் துறைமுகத்தை வணிகத்துறை மூலமாக அபிவிருத்தி செய்ய மாட்டோம். 

ஏனெனில் வணிகத்துறை முகமாக அபிவிருத்தி செய்வதற்கு பொருத்தமான காரணிகள் ஏதுவாக இல்லாத நிலையில் அம்பாந்தோட்டை மற்றும் ஒலிவில் துறைமுகங்கள் போன்று காங்கேசன் துறைமுகத்தை மாற்ற எமது அரசாங்கம் விரும்பவில்லை.

அதுமட்டுமல்லாது காங்கேசன் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா வழங்கிய நிதி போதாது என தெரிவித்தார். 

இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இந்தியாவிடம் வேண்டுமானால் நாங்கள் பேசி மேலதிக நிதியை பெற்று தருகிறோம். துறைமுகத்தை அபிவிருத்தி செய்யுங்கள் என கூறினார். 

பதில் வழங்கிய அமைச்சர், இந்தியாவிடம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல தடவைகள் பேசி உள்ளார். நாங்களும் பேசியுள்ளோம். ஆனால் வணிகத் துறைமுகமாக அதை மாற்றுவதற்கு முடியாது என தெரிவித்தார். 

இதன்போது கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்  சிறிதரன், நீங்கள் எவ்வாறு ஆய்வு செய்யாமல் பொருத்தமில்லை என கூற முடியும் என்றார்.

பதில் வழங்கிய அமைச்சர், ஆய்வறிக்கை இருக்கிறது நாடாளுமன்றத்தில் உங்களுக்கு வழங்குகிறேன் என பதில் வழங்கினார். 

யாழ்ப்பாண விமான நிலைய பாதுகாப்புக்காக சுவீகரிக்கப்பட்ட பொது மக்களின் காணிகளை எப்போது விடுவிப்பீர்கள் ஏற்கனவே சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு ஏன் நட்ட வீடு வழங்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மீண்டும் கேள்வி எழுப்பினார். 

மக்களின் காணிகள் மக்களுக்கு என்பது எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு யாழ்பாண விமான நிலைய பாதுகாப்புக்காக கைப்பற்றிய காணி விடுவிப்பு தொடர்பில் தற்போது கூற முடியாது பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடியே பதில் வழங்க முடியும் என அமைச்சர் தெரிவித்தார். 

https://newuthayan.com/article/காங்கேசன்_துறைமுகத்தை_வணிகத்துறைமுகமாக_அபிவிருத்தி_செய்ய_முடியாது_-_அமைச்சர்_பிமல்_ரத்நாயக்க!

  • கருத்துக்கள உறவுகள்

வட மாகாண காணிகள் அரசியல் இலாபத்திற்காக விடுவிக்கப்படாது

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

பாதுகாப்பு காரணங்களுக்காக அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட வட மாகாணத்தில் உள்ள காணிகள் அரசியல் இலாபத்திற்காக விடுவிக்கப்படாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

நேற்று (18) நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

காணி பிரச்சினைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரனுக்கும் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கும் இடையே நடந்த விவாதத்தின்போது, கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இவ்வாறு நடைபெற்றது.

இதில் பங்கேற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன், வடக்கில் காணிகள் விடுவிப்பது உட்பட பல பிரச்சினைகளை தொடர்ந்து எழுப்பினார்.

https://adaderanatamil.lk/news/cmfql3p3d00j0o29nwy41jo85

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.