Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

02 Oct, 2025 | 04:44 PM

image

(நா.தனுஜா)

இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கைக்கு ஆதரவான ஏனைய சில நாடுகளின் வேண்டுகோளுக்கு அமைவாகவே 'இனப்பிரச்சினை' எனும் சொல்லுக்குப் பதிலாக 'மோதல்' எனும் பதம் சேர்க்கப்பட்டதாகவும், சொற்களில் மாற்றங்கள் செய்யப்பட்டாலும் அதுசார்ந்து நிற்கும் பொருளில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் இணையனுசரணை நாடுகளுக்குத் தலைமை வகிக்கும் பிரிட்டன் விளக்கமளித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரின் நிறைவேற்றும் விதமாக பிரிட்டன் தலைமையில் கனடா, மாலாவி, மொன்டெனீக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளால் 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான புதிய பிரேரணையின் முதலாவது வரைவு கடந்த மாதம் 9 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

அதனையடுத்து அப்பிரேரணை தொடர்பில் கடந்த மாத நடுப்பகுதியில் நடைபெற்ற உத்தியோகப்பற்றற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற இலங்கையின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினர், தமது மாற்று அபிப்பிராயங்களை முன்வைத்தனர். அதன் பிரகாரம் இலங்கை தொடர்பான இணையனுசரணை நாடுகளின் புதிய பிரேரணை முதலாம் கட்ட மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு, திருத்தங்கள் உள்வாங்கப்பட்ட பிரேரணை கடந்த மாத இறுதியில் வெளியிடப்பட்டது.

அத்திருத்தப் பிரேரணையில் 'மோதல்கள்' எனும் சொல்லின் மூலம் 'இனப்பிரச்சினை' என்ற சொற்பதம் பதிலீடு செய்யப்பட்டிருந்ததுடன், சர்வதேச மனிதாபிமானச்சட்டத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட சட்டவாதியின் பங்கேற்புடனான பிரத்யேக நீதித்துறைப் பொறிமுறையொன்றை நிறுவுவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தவேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்த விடயம் முற்றாக நீக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் இதுபற்றி இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் மற்றும் ஜெனிவாவில் உள்ள பிரித்தானிய பிரதிநிதிகளிடம் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கேட்டறிந்துள்ளார்.

அதற்குப் பதிலளித்த அப்பிரதிநிதிகள் பிரேரணையில் 'இனப்பிரச்சினை' எனும் சொல்லுக்குப் பதிலாக 'மோதல்கள்' என்ற பதத்தைப் பயன்படுத்துமாறு இலங்கை அரசாங்கமும், இலங்கைக்கு ஆதரவான வேறு சில நாடுகளும் தம்மிடம் கோரியிருந்ததாகத் தெரிவித்துள்ளனர். அத்தோடு பிரேரணையில் சொற்பதங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பினும், அவை பிரதிபலிக்கும் பொருளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்றும் அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

இருப்பினும் இம்முறை பேரவையில் நிறைவேற்றப்படக்கூடிய பிரேரணை கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளை விட மிகவும் வலுவாக அமையவேண்டியது அவசியம் என்று தாம் ஏற்கனவே வலியுறுத்தியதை நினைவுகூர்ந்த சுமந்திரன், அவ்வாறிருக்கையில் முன்னைய தீர்மானங்களில் உள்வாங்கப்பட்டிருந்த விடயங்களையும் நீர்த்துப்போகச்செய்யும் வகையில் இப்பிரேரணை அமையக்கூடாது எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.  

அதுமாத்திரமன்றி பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்கனவே வெகுவாக அதிருப்தியடைந்திருக்கும் பின்னணியில், பிரேரணையில் உள்வாங்கப்பட்டிருக்கும் சொற்களும் இவ்வாறு நீர்த்துப்போனால், அது அம்மக்களின் நம்பிக்கையிழப்புக்கே வழிவகுக்கும் என்றும் அவர் எடுத்துரைத்துள்ளார்.

இந்நிலையில் மீண்டும் அப்பிரேரணையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமா என உறுதியாகத் தெரியாத பின்னணியில், அப்பிரேரணை எதிர்வரும் 6 ஆம் திகதி பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, பெரும்பாலும் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படவுள்ளது.     

இனப்பிரச்சினை எனும் பதத்தை மாற்றும்படி இலங்கை கோரியது - அதற்கமையவே மோதல்கள் எனும் சொல் சேர்க்கப்பட்டதாக பிரிட்டன் விளக்கம் | Virakesari.lk

இனப்படுகொலை போர்க்குற்றமாகி, பின் போர்க்குற்றம், இனப்பிரச்சினை ஆகி, இப்ப இனப்பிரச்சினை வெறும் மோதல் என்ற நிலைக்கு வந்துள்ளது.

நாளை இதுவும் நீர்த்துப் போய் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக எந்த விடயமும் நிகழவில்லை எனும் நிலைக்கு வந்து விடும்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பிழம்பு said:

02 Oct, 2025 | 04:44 PM

image

(நா.தனுஜா)

இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கைக்கு ஆதரவான ஏனைய சில நாடுகளின் வேண்டுகோளுக்கு அமைவாகவே 'இனப்பிரச்சினை' எனும் சொல்லுக்குப் பதிலாக 'மோதல்' எனும் பதம் சேர்க்கப்பட்டதாகவும், சொற்களில் மாற்றங்கள் செய்யப்பட்டாலும் அதுசார்ந்து நிற்கும் பொருளில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் இணையனுசரணை நாடுகளுக்குத் தலைமை வகிக்கும் பிரிட்டன் விளக்கமளித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரின் நிறைவேற்றும் விதமாக பிரிட்டன் தலைமையில் கனடா, மாலாவி, மொன்டெனீக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளால் 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான புதிய பிரேரணையின் முதலாவது வரைவு கடந்த மாதம் 9 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

அதனையடுத்து அப்பிரேரணை தொடர்பில் கடந்த மாத நடுப்பகுதியில் நடைபெற்ற உத்தியோகப்பற்றற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற இலங்கையின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினர், தமது மாற்று அபிப்பிராயங்களை முன்வைத்தனர். அதன் பிரகாரம் இலங்கை தொடர்பான இணையனுசரணை நாடுகளின் புதிய பிரேரணை முதலாம் கட்ட மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு, திருத்தங்கள் உள்வாங்கப்பட்ட பிரேரணை கடந்த மாத இறுதியில் வெளியிடப்பட்டது.

அத்திருத்தப் பிரேரணையில் 'மோதல்கள்' எனும் சொல்லின் மூலம் 'இனப்பிரச்சினை' என்ற சொற்பதம் பதிலீடு செய்யப்பட்டிருந்ததுடன், சர்வதேச மனிதாபிமானச்சட்டத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட சட்டவாதியின் பங்கேற்புடனான பிரத்யேக நீதித்துறைப் பொறிமுறையொன்றை நிறுவுவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தவேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்த விடயம் முற்றாக நீக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் இதுபற்றி இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் மற்றும் ஜெனிவாவில் உள்ள பிரித்தானிய பிரதிநிதிகளிடம் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கேட்டறிந்துள்ளார்.

அதற்குப் பதிலளித்த அப்பிரதிநிதிகள் பிரேரணையில் 'இனப்பிரச்சினை' எனும் சொல்லுக்குப் பதிலாக 'மோதல்கள்' என்ற பதத்தைப் பயன்படுத்துமாறு இலங்கை அரசாங்கமும், இலங்கைக்கு ஆதரவான வேறு சில நாடுகளும் தம்மிடம் கோரியிருந்ததாகத் தெரிவித்துள்ளனர். அத்தோடு பிரேரணையில் சொற்பதங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பினும், அவை பிரதிபலிக்கும் பொருளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்றும் அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

இருப்பினும் இம்முறை பேரவையில் நிறைவேற்றப்படக்கூடிய பிரேரணை கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளை விட மிகவும் வலுவாக அமையவேண்டியது அவசியம் என்று தாம் ஏற்கனவே வலியுறுத்தியதை நினைவுகூர்ந்த சுமந்திரன், அவ்வாறிருக்கையில் முன்னைய தீர்மானங்களில் உள்வாங்கப்பட்டிருந்த விடயங்களையும் நீர்த்துப்போகச்செய்யும் வகையில் இப்பிரேரணை அமையக்கூடாது எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.  

அதுமாத்திரமன்றி பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்கனவே வெகுவாக அதிருப்தியடைந்திருக்கும் பின்னணியில், பிரேரணையில் உள்வாங்கப்பட்டிருக்கும் சொற்களும் இவ்வாறு நீர்த்துப்போனால், அது அம்மக்களின் நம்பிக்கையிழப்புக்கே வழிவகுக்கும் என்றும் அவர் எடுத்துரைத்துள்ளார்.

இந்நிலையில் மீண்டும் அப்பிரேரணையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமா என உறுதியாகத் தெரியாத பின்னணியில், அப்பிரேரணை எதிர்வரும் 6 ஆம் திகதி பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, பெரும்பாலும் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படவுள்ளது.     

இனப்பிரச்சினை எனும் பதத்தை மாற்றும்படி இலங்கை கோரியது - அதற்கமையவே மோதல்கள் எனும் சொல் சேர்க்கப்பட்டதாக பிரிட்டன் விளக்கம் | Virakesari.lk

நம்ம சிறீதரன் ஜெனிவாவில் முழங்கியதெல்லாம் பொய்யா கோபாலு

  • கருத்துக்கள உறவுகள்+

அம்மன் சல்லிக்கு பயனில்லை. முற்றாக நீர்த்துவிட்டது

மே 14, 2009 சிங்கள அரசாங்கத்திற்கு ஐநா பாராட்டு விழா வைத்தது: புலிகளை தூற்றியது.

அன்றே நாம் தூக்கியெறியப்பட்டுவிட்டோம்!

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் நமது தமிழ் அரசியல்வாதிகளின் நீண்டகால குறிக்கோள் அற்ற சிந்தனைகளாலும், அவர்களின் சுயநல அரசியல் நகர்வுகளாலும், தமது இனத்தின் நலன் கருதி ஒற்றுமையாக தமது குரலை சர்வதேசத்திற்கு ஆணித்தரமாக சொல்ல முன்வராமையாலும் ஏற்பட்ட விபரீதம் இது.

இன்னும்… இந்தியா தீர்வு பெற்றுத் தரும் என்று, கிணத்துத் தவளை மாதிரி நம்பிக் கொண்டு இருக்கும் மர மண்டை அரசியல்வாதிகளை வைத்துக் கொண்டு… தமிழ் இனத்தின் விடிவு என்பது எட்டாக்கனிதான்.

இத்துப்போன இவர்களை வைத்துக் கொண்டு இனி பிரயோசனம் இல்லை.

ஈழத் தமிழ் இனம் மாற்றுவழிகளை யோசிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

குற்றவாளியின் கோரிக்கைகள் மதிப்பளிக்கப்படுகின்றன, ஏற்றுக்கொள்ளப்படுகின்றன, நிறைவேற்றப்படுகின்றன. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்கள், கோரிக்கைகள் கவனிப்பாரின்றி இழுத்தடிக்கப்படுகின்றன. சொல்லில் மாற்றமேயொழிய பொருளில் மாற்றமில்லையென்றால்; ஏன் அதை மாற்ற வேண்டுமென்று கோரிக்கை வைக்கிறார்கள், அதை ஏற்றுக்கொள்கிறார்கள்? ஏக்கிய ராஜ்ய ஏமாற்றுக்கதைதான். எங்கள் விடுதலையை நாங்களே போராடி பெற்றுக்கொள்ள விட்டிருக்க வேண்டும். இல்லையேல் தாம் அதை பெற்றுத்தந்திருக்க வேண்டும். தங்கள் தேவைக்கு, பொழுதுபோக்கிற்கு ஒரு சபை, இது கலைக்கப்படவேண்டும். இது பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றுகிறது. இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்று இனி கனடா சொல்ல முடியாது என இலங்கை எதிர்பார்க்கிறது. தமிழ் இனம் என்கிற ஒரே காரணத்திற்காகவே, இவ்வளவு அவலங்களை நம் இனம் சந்தித்தது. அதை மாற்றியமைக்க இவர்களுக்கு என்ன அதிகாரமிருக்கிறது? இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க நம் பக்கம் யாருமில்லை, சந்திப்புகள் இல்லை, விளக்கம் அளிக்க ஒருவருமில்லை. இலங்கைக்கு கால அவகாசம் வேண்டிக்கொடுக்க பலர் நம்பக்கமேயுண்டு. இந்த சொல் இலங்கைக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது என்பது மட்டும் உண்மை. இதை விட கொடூரமான சொல் பயன்படுத்தப்படுவதுதான் பொருத்தமானது. காரணம் ஒரு இனத்தை அழித்து, மவுனமாக்கி விட்டு எதுவுமே நடக்காத மாதிரி, விடுதலை வேண்டியவர்களை மட்டும் குறி வைத்து தடைகளை ஏற்படுத்துவதும் குற்றம் சாட்டுவதும் எந்த வகையில் நிஞாயமானது? இவர்கள் எல்லாம் எங்களுக்கு நிவாரணம், நிஞாயம் பெற்றுத்தரப்போகிறார்களாம் நம்புவோம். இனி இனிப்பிரச்சனை ஒன்று இலங்கையில் நடைபெறவில்லை, பொருளாதார பிரச்சனை மட்டுமேயுண்டு, அதற்கான அபிவிருத்தி ஏர்படுத்தப்படுமென அறிவிக்கப்படும். ஐ. நா. இலங்கை பிரச்சனை பற்றி இனி விவாதிக்கப்போவதில்லை. எது நடந்ததோ அதுவே தொடர்ந்தும் நடைபெறும். போராட யாரும் இல்லை. இது தான் சர்வதேசத்தின் நடுவு நிலை. இதைத்தான் நம் தலைவர்கள் மௌனமாக இருந்து சேர்ந்தியங்கி சாதித்தது. இனிமேல் இவர்களுக்கு அரசியல், பதவி, பணம் எதுவுமிருக்கப்போவதில்லை. அப்பப்போ குரல் எழுப்பி விட்டு போக வேண்டியதுதான்!

இது ஒரு சர்வாதிகார ஆட்சியாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நல்லாட்சி மஹிந்தவை காப்பாற்றியது, இந்த ஆட்சி இனப்பிரச்சனை நடைபெறவேயில்லை என சாதிக்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.