Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-334.jpg?resize=750%2C375&ssl

இலங்கையின் முதியோர் தொகை 18% ஆக அதிகரிப்பு!

ஆசிய பிராந்தியத்தில் வேகமாக வளர்ந்து வரும் முதியோர் மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

2012 ஆம் ஆண்டில், இலங்கையின் முதியோர் மக்கள் தொகை மொத்த மக்கள் தொகையில் 12% ஆக இருந்ததாகவும், 2024 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 18% ஆக அதிகரித்துள்ளதாகவும் ஆலோசகர் சமூக வைத்தியர் நிஷானி உபேசேகர தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் மேலும் உரையாற்றிய அவர், 

2012 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மக்கள் தொகையில் 12% பேர் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள். 

2024 மக்கள் தொகை கணக்கெடுப்பில், இது 18% ஆக உயர்ந்துள்ளது.

2040 ஆம் ஆண்டுக்குள், மக்கள் தொகையில் 25% – அதாவது, ஒவ்வொரு நான்கு பேரில் ஒருவர் – முதியவர்களாக இருப்பார்கள் என்று நாங்கள் கணித்துள்ளோம்.

ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது, இலங்கை அதன் முதியோர் மக்கள்தொகையில் அதிக வளர்ச்சி விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த நிலைமை முக்கியமாக பிறக்கும் போது ஆயுட்காலம் அதிகரிப்பதாலும் பிறப்பு விகிதங்கள் குறைவதாலும் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

https://athavannews.com/2025/1451563

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தமிழ் சிறி said:

ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது, இலங்கை அதன் முதியோர் மக்கள்தொகையில் அதிக வளர்ச்சி விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த நிலைமை முக்கியமாக பிறக்கும் போது ஆயுட்காலம் அதிகரிப்பதாலும் பிறப்பு விகிதங்கள் குறைவதாலும் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இது இலங்கையில் ஏற்படும் மூளைவறட்சியால் ஏற்பட்டதாக இருக்காதா ....?
இள வயது தொழில்முனைவோர் முதல் கல்விமான்கள் வரை வெளிநாட்டிற்கு ஓடித்தப்பிக்கொண்டிருக்க வெளிநாடுகளுக்கு பிரயோசனமற்ற முதியவர்கள் தப்பிக்க வழியேதும் இன்றி நாட்டில் தேங்குவதால் இந்த நிலை ஏற்படக்கூடுமல்லவா ....? சடுதியான அதிகரிப்பு என்பது குடிமக்களின் பாரிய அளவிலான இடப்பெயர்வால் நடந்துள்ளதாகவே தெரிகிறது

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் புலம்பெயர அல்லது வலொற்றுகரமாக புலம் பெயரர வைக்க (சிங்களம் உருவாக்கிய) ஏதுநிலைகள், இதன் மிகப் பிரதான காரணம்

(சிங்களத்தை பொறுத்தவரை அதன் சிந்தனைகள் இலங்கைதீவு மூலக சிங்கள பெரும்பான்மை ஆக்குவது, காலம் போக சிலாபம், நீர்கொழும்பு போல சிங்களம் ஆகிவிடும், (அனால் இப்போதும் அங்கெ உள்ளவர்கள் சைவசமயத்தை பெரும்பாலும் பின்பற்றுவது.)

ஆயினும், முதுமை அடையும் சமூகம் / நாடுகள் இப்போது உலகளாவிய பிரச்சனை.

நான் நினைக்கிறன். தமிழரில் மேலும் கூடாவாக இருக்கும்.

மேற்கு நாடுகள் வளர்ந்த பின்பே, முதுமை அடைதல் எதிர் நோக்குகின்றன.

பொதுவாக ஆபிரிக்காவை தவிர, ஏனைய நாடுகள் வளரும் போது.

Edited by Kadancha

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.