Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

31 Oct, 2025 | 04:40 PM

image

திருகோணமலை, குச்சவெளி பிரதேச தவிசாளர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் இன்று வெள்ளிக்கிழமை (31) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

நிலாவெளி இக்பால் நகர் பகுதியில் வைத்து பெண் ஒருவரிடமிருந்து ஐந்து இலட்சம் ரூபா இலட்சம் பெற்றுக்கொண்ட போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

நிலாவெளியில் உள்ள காணியில் ஹோட்டல் ஒன்று அமைப்பதற்காக காணி உரிமையாளர் காணிக்கான அனுமதிப்பத்திரம் பெற முயற்சித்தபோது அனுமதிப்பத்திரம் பெற்றுத்தருவதாகக்கூறி காணி உரிமையாளரான பெண்ணிடமிருந்து குச்சவெளி பிரதேச தவிசாளரான ஏ.முபாரக் இலஞ்சம் கோரியதாகவும் இரண்டு இலட்சத்தில் இருந்து பேரம்பேசப்பட்டதாகவும் இறுதியில் ஐந்து இலட்சத்திற்கு உடன்பட்டிருந்ததாகவும் தெரியவருகிறது.  

கைது செய்யப்பட்ட பின்னர் நிலாவெளி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது. இதுவரை கைது செய்வதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உத்தியோகத்தர்கள் அங்கே பல நாட்களாக தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலஞ்சம் வாங்கிய திருகோணமலை குச்சவெளி பிரதேச தவிசாளர் கைது | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

572788552_1257977459679209_5377274756952

குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் முபாரக் இலஞ்ச விவகாரத்தில் சிக்குபட்டார்...📍
இடத்திற்கான உரிமத்தை பெற்றுதருவதாகக் கூறி ஐந்து இலட்சம் ரூபா இலஞ்சப் பணத்தை பெற்ற சந்தர்ப்பத்தில், குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ.பி. முபாரக் இன்று (31) முற்பகல் குச்சவெளி பிரதேசத்தில் வைத்து இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சுற்றிவளைப்பு பிரிவின் பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
குறித்த பிரதேச சபை தவிசாளர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சபைக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
அத்துடன், இலங்கை தமிழரசு கட்சியின் ஆதரவுடன் அவர் தவிசாளராக தெரிவு செய்யபட்டதுடன், சபையையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Lanka Truth தமிழ் ·

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

572788552_1257977459679209_5377274756952

குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் முபாரக் இலஞ்ச விவகாரத்தில் சிக்குபட்டார்...📍
இடத்திற்கான உரிமத்தை பெற்றுதருவதாகக் கூறி ஐந்து இலட்சம் ரூபா இலஞ்சப் பணத்தை பெற்ற சந்தர்ப்பத்தில், குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ.பி. முபாரக் இன்று (31) முற்பகல் குச்சவெளி பிரதேசத்தில் வைத்து இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சுற்றிவளைப்பு பிரிவின் பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
குறித்த பிரதேச சபை தவிசாளர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சபைக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
அத்துடன், இலங்கை தமிழரசு கட்சியின் ஆதரவுடன் அவர் தவிசாளராக தெரிவு செய்யபட்டதுடன், சபையையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Lanka Truth தமிழ் 

இதுதான் செய்தி சிறியர்.....முதலில் பெயர் போடாது மறைத்தவுடனேயே புரிந்து கொண்டேன்..

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

அத்துடன், இலங்கை தமிழரசு கட்சியின் ஆதரவுடன் அவர் தவிசாளராக தெரிவு செய்யபட்டதுடன், சபையையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

55 minutes ago, alvayan said:

இதுதான் செய்தி சிறியர்.....முதலில் பெயர் போடாது மறைத்தவுடனேயே புரிந்து கொண்டேன்..

லஞ்சம் வாங்கிப் பிடிபட்ட குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் முபராக்கிற்கு, தமிழரசு கட்சிதான் ஆதரவு கொடுத்து இருந்ததை கவனித்தீர்களா அல்வாயன்.

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் நடந்து ஒருவருடம் கூட ஆகவில்லை.

பிடிபட்டது 5 லட்சம்

பிடிபடாதது எவ்வளவோ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

லஞ்சம் வாங்கிப் பிடிபட்ட குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் முபராக்கிற்கு, தமிழரசு கட்சிதான் ஆதரவு கொடுத்து இருந்ததை கவனித்தீர்களா அல்வாயன்.

ஒண்டுக்கை ஒண்டு ...சிறியர்....அந்தக் காலத்திலேயே ...புட்டும் தேங்காய்பூவுமல்லோ..

2 hours ago, ஈழப்பிரியன் said:

தேர்தல் நடந்து ஒருவருடம் கூட ஆகவில்லை.

பிடிபட்டது 5 லட்சம்

பிடிபடாதது எவ்வளவோ?

இனி வரும் ...ஆரம்பமஐகிவிட்டது....செவ்வந்தி கேசை பார்த்தியள்தானே..

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே இவர் கொள்ளைக்காரன் என்று தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் சொல்லியும்

சுமந்திரன் இவருக்கு ஆதரவு அளிக்கும்படி ஆணையிட்டுள்ளார்.

அதையும் மீறி மானமுள்ள உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்துள்ளனர்.

மேலதிக விபரங்களுக்கு மேலுள்ள காணொளியைப் பாருங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.