Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கல்மேகி சூறாவளி : பிலிப்பைன்ஸில் வெள்ளப்பெருக்கால் 58 பேர் பலி

05 Nov, 2025 | 09:43 AM

image

மத்திய பிலிப்பைன்ஸின் சில பகுதிகளில் கல்மேகி சூறாவளி தாக்கியதால் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால்  58 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

மேலும் 13 பேர் காணாமல் போயுள்ளதுடன் 200,000 க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கி சுமார் 300 வீடுகள் சேதம் அடைந்தன. பல வாகனங்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க சென்ற ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் ஆறு இராணுவ வீரர்களும் உயிரிழந்தவர்களில் அடங்குவர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

இந்த கல்மேகி சூறாவளி புதன்கிழமை (05) தென் சீனக் கடலை நோக்கிச் நகர்ந்து சென்றது.

ap25308514692721.webp

https://www.virakesari.lk/article/229523

weather-2025-11-04.jpg

05-11-manila.jpg

  • கருத்துக்கள உறவுகள்

download-5.jpg?resize=275%2C183&ssl=1

பிலிப்பைன்ஸில் கல்மேகி சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66ஆக அதிகரிப்பு!

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கியுள்ள கல்மேகி என்ற சூறாவளி காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆறு இராணுவ வீரர்களும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளத்தில் சிக்கி சுமார் 300 வீடுகள் சேதம் அடைந்துள்ளதுடன் பல வாகனங்கள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

பிலிப்பைன்ஸ் நாட்டின் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் தொலைத்தொடர்பு சேவைகளும் செயலிழந்துள்ளன.

சூறாவளி காரணமாக 180க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

வெள்ள மீட்புப் பணிக்காக சென்ற வானூர்தி ஒன்று மோசமான வானிலையால் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த வானூர்தியிர் சென்ற ஆறு இராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த அனர்த்தத்தில் சிக்கி 13 பேர் காணாமல் போயுள்ளதாக பேரிடர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சூறாவளி நாளை இரவு(06) வியட்நாமின் மத்தியப் பகுதிகளில் கரையைக் கடக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

கல்மேகி சூறாவளி மணிக்கு 120 கிமீற்றர் தொடக்கம் 165 கிமீற்றர் வேகத்திலும் வீசிய வருவதுடன் இந்த ஆண்டில் மட்டும் பிலிப்பைன்ஸைத் தாக்கும் 20வது புயலாக கல்மேகி உருவாகியுள்ளது.

இதனையடுத்து வியட்நாம் அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமான முன்னெடுத்துள்ளது.

மீட்புப் பணியாளர்கள் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காதகா வானம் தெளிவாகும் வரை காத்திருப்பதாக சிவில் பாதுகாப்பு அலுவலகத்தின் துணை நிர்வாகி ரஃபேலிட்டோ அலெஜான்ட்ரோ தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1452026

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கல்மேகி சூறாவளியால் 114 பேர் பலி; பிலிப்பைன்ஸில் அவசரநிலை அறிவிப்பு

06 Nov, 2025 | 11:24 AM

image

மத்திய பிலிப்பைன்ஸின் சில பகுதிகளை தாக்கிய கல்மேகி சூறாவளியில் சிக்கி 114 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அந்த நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய பிலிப்பைன்ஸை நேற்று புதன்கிழமை (05) தாக்கிய சூறாவளி, இந்த ஆண்டு இப்பகுதியில் தாக்கிய மிக வலிமையான சூறாவளி என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கல்மேகி சூறாவளியால், பிராந்தியத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட தீவான செபு நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், 71 பேர் உயிரிழந்துள்ளதோடு, 127 பேர் காணாமல் போயுள்ளனர் மற்றும் 82 பேர் காயமடைந்துள்ளனர்.

நீரில் மூழ்கியதால் பெரும்பாலான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது.

மேலும், கல்மேகி சூறாவளி இன்று வியாழக்கிழமை (06) காலை பிலிப்பைன்ஸை விட்டு வெளியேறி மத்திய வியட்நாமை நோக்கி நகர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

https://www.virakesari.lk/article/229614

2025-11-06-two-strom.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கல்மேகி புயலின் தாக்கம் - பிலிப்பைன்ஸ், வியட்நாம் நாடுகளில் சுமார் 200 பேர் பலி! 

07 Nov, 2025 | 02:10 PM

image

பிலிப்பைன்ஸில் பாரிய சேதத்தையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்திய கல்மேகி புயல் வியட்நாமில் கரையை கடக்கத் தொடங்கியுள்ள நிலையில், இந்த அனர்த்தத்தில் சிக்கி இதுவரை சுமார் 5 பேர் உயிரிழந்ததாகவும் பிலிப்பைன்ஸில் பலியான 188 பேரையும் சேர்த்து, கல்மேகி புயல் சுமார் 200 பேரை காவு வாங்கியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த புயலின் பெரும் தாக்கத்தினால் மத்திய வியட்நாமில் நேற்று வியாழக்கிழமை (6) மண்சரிவு ஏற்பட்டதோடு, பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. நிறைய வீடுகள் சேதமடைந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்தனர். 

கல்மேகி புயலின் தாக்கத்தால் 7 பேர் காயமடைந்ததாகவும் சுமார் 2800 வீடுகள் சேதமடைந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

பசுபிக் கடலில் உருவான கல்மேகி புயல் கடந்த புதன்கிழமை (5) பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியை கடந்து, தென் சீனக் கடலை நோக்கி நகர்ந்தது. 

இதில் மத்திய பிலிப்பைன்ஸில் உள்ள சில தீவுப் பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்று வீசியதுடன் கனமழை பெய்ததையடுத்து, நீக்ரோஸ் ஆக்சிடென்டல், செபு முதலிய மாகாணங்கள் வெள்ளக்காடாயின. 

வீதியோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், கடற்கரையோர வீடுகள், பெரிய அளவிலான கப்பல் கொள்கலன்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த புயல் இன்று வியட்நாமின் மத்திய பகுதியை நெருங்கி பெரிதளவில் சேதம் ஏற்படுத்தி வருகிறது.   

கடந்த வியாழக்கிழமை மத்திய வியட்நாம் வழியாக மணிக்கு 149 கி.மீ வேகத்தில் வீசிய கல்மேகி புயல், தற்போது மேற்கு நோக்கி கம்போடியா, லாவோஸை பகுதிகளில் நகர்கிறது. 

நேற்று இரவு முழுவதும் வீசிய புயல் காற்று காரணமாக இன்று காலை வியட்நாமின் மத்திய கடற்கரையோரப் பகுதிகள் முழுவதும் சேதமடைந்து, குப்பைகளால் சூழ்ந்து காணப்படுகிறது. 

இந்நிலையில், இன்று (7) இரவு மத்திய வியட்நாமை கல்மேகி புயல் கடுமையாக தாக்கக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் அந்நாட்டு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/229714

weather-2025-11-08.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிலிப்பைன்ஸில் பங்-வோங் சூறாவளி தாக்கியதில் இருவர் பலி; 14 இலட்சம் மக்கள் இடம்பெயர்வு!

10 Nov, 2025 | 11:41 AM

image

பிலிப்பைன்ஸின் கிழக்கு கடற்கரையோர பகுதியில் பங்-வோங் சூறாவளி தாக்கியதில் இதுவரை 14 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் இருவர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பங்-வோங் சூறாவளி மணித்தியாலத்திற்கு 185 கி.மீ முதல் 230 கி.மீ வரை வீசியதால் பிலிப்பைன்ஸின் கிழக்கு கடற்கரையோர பகுதிகளில் வாழும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிலிப்பைன்ஸில் பாரிய சேதத்தையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்திய கல்மேகி புயலுக்குப் பிறகு, தற்போது பங்-வோங் சூறாவளி தாக்கி வருகிறது.

கல்மேகி புயல் தாக்கியதில் பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமில் அதிகளவானோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பிலிப்பைன்ஸின் கிழக்கு கடற்கரையோர பகுதிகளை தாக்கிய பங்-வோங் சூறாவளி ஞாயிற்றுக்கிழமை (9) இரவு லூசோன் தீவின் அரோரா மாகாணத்தின் கரையைக் கடந்தது.

இதன் காரணமாக லூசோன் தீவின் பல பகுதிகளில் வாழும் மக்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

1.jpg

https://www.virakesari.lk/article/229965

Weather-2025-11-10.jpg

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.