Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

250911-Rajapaksa-leaves-7-scaled.jpeg?re

21ஆம் திகதி பேரணியில் என்னால் கலந்து கொள்ள முடியாது – மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசாங்கத்துக்கு எதிராக 21 ஆம் திகதி எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த நுகேகொடை எதிர்ப்பு பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என்று  தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி பங்கேற்காததற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாகக் கூறியுள்ளார்.

தங்காலையில் தினமும் தன்னைப் பார்க்க வரும் மக்களைத் தவறவிட முடியாது என்பதாலும், தங்காலையில் இருந்து நுகேகொடை வரை பயணம் செய்வதில் கூடுதல் நேரத்தைச் செலவிட வேண்டியிருப்பதாலும் நுகேகொடை எதிர்ப்பு பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என்று மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இருப்பினும், அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த போராட்டப் பேரணியில் தனக்கு எந்த வெறுப்பும் இல்லை என்றும், அதில் தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் தான் பங்கேற்காதது சிலரால் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம் என்று மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளார்.

இருப்பினும், 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறும் கூட்டத்திற்கு மக்களைத் திரட்டும் நோக்கில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ நேற்று (10) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் ஒரு கலந்துரையாடலை நடத்தினார்.

இந்தக் கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய நாமல் ராஜபக்ஷ, எதிர்க் கட்சிகளால் நுகேகொடையில் நடைபெறும் கூட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறினார்.

வரவிருக்கும் கூட்டத்தை வெற்றிகரமாக்கவும், கட்சி உறுப்பினர்களை ஒன்றிணைக்க தேவையான வேலைத்திட்டம் குறித்து விவாதிக்கவும் தான் வந்ததாக அவர் கூறினார்.

https://athavannews.com/2025/1452470

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

sm-marikkar.webp?resize=710%2C375&ssl=1

21 பேரணியில் ஜக்கிய மக்கள் சக்தியினர் கலந்து கொண்டாலும் தான் பங்கேற்கப்போவதில்லை – எஸ்.எம்.மரிக்கார்.

நுகேகொடயில் எதிர்வரும் 21ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில், ஜக்கிய மக்கள் சக்தியினர் கலந்து கொண்டாலும் அதில் தான் பங்கேற்கப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

அரசாங்கத்திற்கு எதிராக எதிர்த்தரப்பினர் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளமைக்கு நாம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

கட்சி என்ற ரீதியில் தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. நான் கட்சியின் முகாமைத்துவக்குழு உறுப்பினராகவும் செயற்படுகின்றேன்.மத்திய குழு உறுப்பினராகவும் உள்ளேன்.

எனக்கு தெரிந்தவரையில் 21ஆம் திகதி நுகேகொட பேரணியில் ஜக்கிய மக்கள் சக்தி பங்கேற்க போவதில்லை என்ற தீர்மானமே எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் பின்னர் பேரணியில் பங்கேற்பதற்கு கட்சி ரீதியாக தீர்மானம் எடுக்கப்பட்டாலும் நான் அதில் பங்கேற்கமாட்டேன்.

நீதிமன்ற வழக்குகள் உள்ளவர்கள் அதேபோன்று விரைவில் சிறைக்கு செல்லும் நிலையில் உள்ள சிலருக்கு இந்த பேரணியை செய்வதற்கான அவசரம் உள்ளது.எமக்கு அவ்வாறு எந்த அவசரம் இல்லை.

அவர்களின் தேவைக்கேற்றவாறு செயற்படுதற்கு நாம் தயாரில்லை.

https://athavannews.com/2025/1452535

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

sm-marikkar.webp?resize=710%2C375&ssl=1

21 பேரணியில் ஜக்கிய மக்கள் சக்தியினர் கலந்து கொண்டாலும் தான் பங்கேற்கப்போவதில்லை – எஸ்.எம்.மரிக்கார்.

நுகேகொடயில் எதிர்வரும் 21ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில், ஜக்கிய மக்கள் சக்தியினர் கலந்து கொண்டாலும் அதில் தான் பங்கேற்கப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

அரசாங்கத்திற்கு எதிராக எதிர்த்தரப்பினர் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளமைக்கு நாம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

கட்சி என்ற ரீதியில் தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. நான் கட்சியின் முகாமைத்துவக்குழு உறுப்பினராகவும் செயற்படுகின்றேன்.மத்திய குழு உறுப்பினராகவும் உள்ளேன்.

எனக்கு தெரிந்தவரையில் 21ஆம் திகதி நுகேகொட பேரணியில் ஜக்கிய மக்கள் சக்தி பங்கேற்க போவதில்லை என்ற தீர்மானமே எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் பின்னர் பேரணியில் பங்கேற்பதற்கு கட்சி ரீதியாக தீர்மானம் எடுக்கப்பட்டாலும் நான் அதில் பங்கேற்கமாட்டேன்.

நீதிமன்ற வழக்குகள் உள்ளவர்கள் அதேபோன்று விரைவில் சிறைக்கு செல்லும் நிலையில் உள்ள சிலருக்கு இந்த பேரணியை செய்வதற்கான அவசரம் உள்ளது.எமக்கு அவ்வாறு எந்த அவசரம் இல்லை.

அவர்களின் தேவைக்கேற்றவாறு செயற்படுதற்கு நாம் தயாரில்லை.

https://athavannews.com/2025/1452535

இந்த இன எம்பிகளுள் ஒரு ஒப்பந்தம் இருக்கிறது ஒவ்வொரு மாதமும் அகில இலங்கை ஜமாத் நிவாகிகளும் , பிரதி அமைச்சர் முளப்பர் தலைமையில் என்.பி.பி...அமச்சர்களுடன் பேச்சு வார்த்தை நடாத்தி தங்கள் கோரிக்கைகளை வைத்து பெற்றுக் கொள்வர்கள் .. இது இவர்களூடைய இரகசிய நடவடிக்கை ...எப்படி ஊர்வலம் நடந்தாலும் ஒரு முசுலிம் எம்ப்யும் போகமாட்டார்கள் .. கக்கீம் , புல்லா ,ரிசாத்து உட்பட எல்லா எம்பிமார்டமும் ஊழல் மலிந்திருக்கு ..ஒரு நடவடிக்கையும் ஒரு வருடமாயிற்று நடந்ததா..இல்லை ..இதைவிட அண்மையில் ஞானசார தேரர் முள்ப்பர் மீது காய்ந்து துப்பியது இதற்குத்தான் ...விளங்கினால் சரி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

இந்த இன எம்பிகளுள் ஒரு ஒப்பந்தம் இருக்கிறது ஒவ்வொரு மாதமும் அகில இலங்கை ஜமாத் நிவாகிகளும் , பிரதி அமைச்சர் முளப்பர் தலைமையில் என்.பி.பி...அமச்சர்களுடன் பேச்சு வார்த்தை நடாத்தி தங்கள் கோரிக்கைகளை வைத்து பெற்றுக் கொள்வர்கள் .. இது இவர்களூடைய இரகசிய நடவடிக்கை ...எப்படி ஊர்வலம் நடந்தாலும் ஒரு முசுலிம் எம்ப்யும் போகமாட்டார்கள் .. கக்கீம் , புல்லா ,ரிசாத்து உட்பட எல்லா எம்பிமார்டமும் ஊழல் மலிந்திருக்கு ..ஒரு நடவடிக்கையும் ஒரு வருடமாயிற்று நடந்ததா..இல்லை ..இதைவிட அண்மையில் ஞானசார தேரர் முள்ப்பர் மீது காய்ந்து துப்பியது இதற்குத்தான் ...விளங்கினால் சரி

சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன் போன்ற நம் இன பா.உக்கள் ஊழலே அற்றவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்! உண்மை தான் போலிருக்கு😂!

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Justin said:

சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன் போன்ற நம் இன பா.உக்கள் ஊழலே அற்றவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்! உண்மை தான் போலிருக்கு😂!

அவைக்கு சுருக்குப் போட்டிருக்கு இன்னும் இறுக்கவில்லை...ஆனால் இவைக்கு எதுவுமே இல்லை ..செங்கம்பள வரவேற்பல்லோ கிடைக்குது...கிழக்கப் பொறுத்தவரை பிள்ளையான்தான்...பரிசோதனை எலி..அவ்வளவே

  • கருத்துக்கள உறவுகள்

21 எதிர்ப்பு பேரணியில் பங்கேற்பதாக மஹிந்த அறிவிப்பு

Nov 18, 2025 - 09:44 PM

21 எதிர்ப்பு பேரணியில் பங்கேற்பதாக மஹிந்த அறிவிப்பு

எதிர்வரும் 21ஆம் திகதி ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஒழுங்கு செய்துள்ள பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவும் கலந்துகொள்ள உள்ளார். 

தனது பிறந்தநாளை முன்னிட்டு ஆசீர்வாதம் பெறுவதற்காக கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்தபோது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வரும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்ட வேண்டும் என்றும் அவர் கூறினார். 

முன்னதாக இந்த பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பங்கேற்கமாட்டார் என நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmi4rx2mg01r6o29nnrvhgnlp

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

21 எதிர்ப்பு பேரணியில் பங்கேற்பதாக மஹிந்த அறிவிப்பு

Nov 18, 2025 - 09:44 PM

21 எதிர்ப்பு பேரணியில் பங்கேற்பதாக மஹிந்த அறிவிப்பு

எதிர்வரும் 21ஆம் திகதி ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஒழுங்கு செய்துள்ள பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவும் கலந்துகொள்ள உள்ளார். 

தனது பிறந்தநாளை முன்னிட்டு ஆசீர்வாதம் பெறுவதற்காக கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்தபோது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வரும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்ட வேண்டும் என்றும் அவர் கூறினார். 

முன்னதாக இந்த பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பங்கேற்கமாட்டார் என நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmi4rx2mg01r6o29nnrvhgnlp

இந்திய துணைத்தூதுவர் இன்றீ சந்திதவர் அல்லோ....

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.