Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண கோட்டை மீளமைப்பு தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆய்வு!

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் M. A. சுமந்திரன், முன்னாள் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான செலஸ்ரின் அவர்களின் வேண்டுகோளின் பேரில் நேற்று (26) யாழ்ப்பாணக் கோட்டையைப் பார்வையிட்டார். 

16 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் கட்டிய இந்தக் கோட்டை, பின்னர் டச்சு மற்றும் பிரித்தானியர் காலனிய ஆட்சியில் விரிவுபடுத்தப்பட்டது. பல போர்களும், நீண்டகால அலட்சியமும் காரணமாக கோட்டை பெருமளவில் சேதமடைந்துள்ளது. 

கோட்டையின் உள்ளே அமைந்துள்ள Our Lady of Miracles (அற்புத மாதா) ஆலயம் காலப்போக்கில் ஏற்பட்ட சேதத்திலிருந்து இதுவரை சரியான முறையில் புதுப்பிக்கப்படவில்லை. ஆலயத்தின் சிதிலமடைந்த பகுதிகள் இன்றும் தெளிவாகக் காணப்படும் நிலையில் உள்ளது. 

புத்தசாசன அமைச்சின் கீழ் செயல்படும் தொல்லியல் துறை, கோட்டையின் உண்மையான எல்லைகளைத் தாண்டி பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள நிலங்களில் கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. யாழ்ப்பாண மாநகர சபைக்கு சொந்தமான முற்றவெளி விளையாட்டு மைதானம், முனீஸ்வரன் ஆலயம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், உள்ளூராட்சி அல்லது பொதுமக்களுடன் ஆலோசனை செய்யாது எல்லைச் சுவர்கள் அமைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளது. 

கோட்டையை வரலாற்று அடையாளத்துடன் மீளமைக்க அரசு, முன்னாள் காலனிய நாடுகள், யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் யாழ்ப்பாண மக்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், கோட்டை வடக்கு மாகாணத்தின் முக்கிய சுற்றுலா தளமாக மேம்படுத்தப்பட வேண்டும் சுமந்திரன் அவர்களிடம் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் செலஸ்டின் அவர்கள் வலியுறுத்தினார். கடந்த சில வாரங்களில் கோட்டையின் வரலாற்றுச் சுவர்களிலிருந்து தூரமாக அமைக்கப்பட்டிருந்த Concrete தூண்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 

பல மத மற்றும் பல பண்பாட்டு மரபுகள் இணைந்துள்ள வரலாற்றுத் தளங்களை புத்தசாசன அமைச்சின் கீழ் உள்ள தொல்லியல் துறை நிர்வகிக்கக் கூடாது; சுயாதீனமாக செயல்பட வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. 

இக்கருத்துகளை சுமந்திரன் அவர்கள் பொறுமையாகக் கேட்டு, கோட்டையின் பராமரிப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடனும் கலந்துரையாடினார்.

https://adaderanatamil.lk/news/cmkw75asj04gto29n74r9shmn

  • கருத்துக்கள உறவுகள்

மூஞ்சுத்துக்கு போக வழியில்லையாம் அடுப்புக்குள்ள விழுந்த கதையா போயிட்டுது .

அங்கை இருக்கிற சனத்துக்கு நிம்மதியான வாழ்க்கையை அமைத்து கொடுக்க இந்த கோடாலி காம்பால் முடியலை ஆய்வு செய்கிரராம் விட்டால் செவ்வாய் கிரகத்தையும் ஆய்வு செய்வார் .

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்தவரையில் யாழ்ப்பாண கோட்டை விடுதலை புலிகள் அமைப்பினால் அடிமையின் சின்னமாக கருதப்பட்டதாலேயே இராணுவம் வெளியேறியதும் பகுதி பகுதியாக இடிக்கப்பட்டது.

பல நூறு போராளிகள் இந்த யாழ் கோட்டையை தகர்ப்பதற்காக தமது உயிர்களை தியாகம் செய்தார்கள். இந்த கோட்டை துயரத்தின் அடையாளம்.

கோட்டையில் கொட்டும் பணத்தை, வளத்தை வீடு, மலசலகூடம் இல்லாத மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற செலவிடலாமே.

  • கருத்துக்கள உறவுகள்

சங்கிலிய மன்னனின் மந்திரிமனை... சென்ற வருடம் கவனிப்பாரற்று இடிந்து விழுந்து விட்டது. அதனை காப்பாற்ற எந்த அரசியல்வாதியும் அக்கறை செலுத்தவில்லை.

இப்ப... கோட்டையை ஆய்வு செய்கிறார்களாம்.

தேர்தல் வருகிறது என்றால்.... சுத்து மாத்து அரசியல்வாதிகள் போடும் வேடங்கள் அநேகம்.

முதலில்... உங்கள், தமிழரசு கட்சி, இடிந்து விழுந்து கொண்டு இருக்கின்றது.

அதை காப்பாற்றுகின்ற வழியை பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நியாயம் said:

நான் அறிந்தவரையில் யாழ்ப்பாண கோட்டை விடுதலை புலிகள் அமைப்பினால் அடிமையின் சின்னமாக கருதப்பட்டதாலேயே இராணுவம் வெளியேறியதும் பகுதி பகுதியாக இடிக்கப்பட்டது.

யாழ் மக்களிடம் அதனை வரலாற்றின் அடையாளமாக பார்க்கும் நிலை இருந்த்தநிலையில் பாதுகாப்பு காரணங்களிற்காக உடைக்கப்பட்ட போது அதற்கு கூறப்பட்ட காரணமாக இருந்திருக்கலாம் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நியாயம் said:

நான் அறிந்தவரையில் யாழ்ப்பாண கோட்டை விடுதலை புலிகள் அமைப்பினால் அடிமையின் சின்னமாக கருதப்பட்டதாலேயே இராணுவம் வெளியேறியதும் பகுதி பகுதியாக இடிக்கப்பட்டது.

பல நூறு போராளிகள் இந்த யாழ் கோட்டையை தகர்ப்பதற்காக தமது உயிர்களை தியாகம் செய்தார்கள். இந்த கோட்டை துயரத்தின் அடையாளம்.

கோட்டையில் கொட்டும் பணத்தை, வளத்தை வீடு, மலசலகூடம் இல்லாத மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற செலவிடலாமே.

8 hours ago, vasee said:

யாழ் மக்களிடம் அதனை வரலாற்றின் அடையாளமாக பார்க்கும் நிலை இருந்த்தநிலையில் பாதுகாப்பு காரணங்களிற்காக உடைக்கப்பட்ட போது அதற்கு கூறப்பட்ட காரணமாக இருந்திருக்கலாம் என நினைக்கிறேன்.

துரத்தப் பட்ட இராணுவம் எதிர்காலத்தில் திரும்பவும் வந்து குந்தி விடக் கூடாதென்ற பாதுகாப்புக் காரணம் தான் கோட்டை மிகக் கஷ்டப் பட்டு பகுதி பகுதியாக உடைக்கப் படக் காரணம்.

கோட்டைக்கு அண்மையில் இருந்த பாரிய யாழ் பிரதான தபாலகக் கட்டிடம், தளபாடங்கள் எல்லாம் புலிகளால் அகற்றப் பட்ட பின்னர் எரியூட்டப் பட்டும், உடைக்கப் பட்டும் யாரும் பயன்படுத்த இயலாத நிலையில் கைவிடப் பட்டதும் இதே பாதுகாப்புக் காரணமாகத் தான்.

அடிமைச் சின்னம் தான் கோட்டை என்றால், அதைப் பார்வையாளர்களுக்கு சுட்டிக் காட்டும் படியான தகவல் பலகைகள் வைத்து எங்கள் வரலாற்றை பிறர் அறியச் செய்த படியே சுற்றுலாப் பயணிகளிடம் பணமும் வசூலிக்கலாம்.

அல்லது, எங்களுக்கு உள்ளூர் மக்களுக்கு உதவக் கூடிய சுற்றுலாத் துறை வருமானத்தை விட "உணர்ச்சி பூர்வமான சாகசங்கள்" தான் முக்கியம் என்றால் பகுதி பகுதியாக உடைத்து அகற்றி விட்டு, அதை சிங்களவர் வந்து விகாரை கட்ட அனுமதிக்கலாம்😇!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.